Wednesday, July 29, 2009

வைரமுத்துவுடன் போட்டி போட்டு சினிமாவுக்கு பாட்டு

வைரமுத்துவுடன் போட்டி போட்டு சினிமாவுக்கு பாட்டு எழுதினவனாக்கும் என்று
கித்தாப்பாக சொல்லிக்கொள்ள முடியுமாக்கும்.அது எப்படினு இந்த பதிவுல சொல்லத்தான் போறேன்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்தகுடி தமிழ் குடினு சொல்றோமே..அப்படிப்பட்ட தமிழ் குடியில பிறந்த என் தாத்தா ஆரணி துரைசாமி முதலியார் அங்கிட்டு
பிழைக்க முடியாம சித்தூர் வந்துட்டாராம்.(இங்கயும் ஒன்னும் பிழைச்சமாதிரி தெரியலை. அரசியல் வாதி மாதா மாதம் கறை வேட்டி (த பார்ரா ! அரசியல் வாதிக்கு கைலதான் கறைன்னா வேட்டிலயும் அதே இழவு) மாத்தின மாதிரி வியாபாரத்தை மாத்தினா எப்படி பிழைக்க முடியும். பாட்டிதான் இட்லி சுட்டு அப்பனை "கவர்மிட்டு " வேலை பண்ணி வச்சாளாம். அப்பாவுக்கு கவர் மிட்டு வேலை வர ஒரு பெண் காரணம்.அவள் கலெக்டர் மகளாம். எங்க அப்பனுக்கு க்ளாஸ் மேட், (பார்த்திங்களா ! அந்த காலத்துல கலெக்டர் மகளும், இட்லி விக்கிறவ மகனும் ஒரே ஸ்கூல்ல படிச்சுருக்காங்க ..

ஆக தமிழ்குடியான நாங்க எப்படி ஆந்திரா பக்கம் வந்துட்டோம்னு சொல்லியாச்சில்ல ..இப்போ வைரமுத்துவோட போட்டி போட்டு சினிமா பாட்டு எழுதின கதைய சொல்றேன். வைர முத்து அடிக்கடி அழுதுக்கிட்டு (இரவு முழுதும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது) தமிழ் திரையுலகத்தின் ஆஸ்தான கவிஞராக கோலோச்சினாலும் அப்பபோ டப்பிங் படத்துக்கும் பாட்டு எழுதுவாரு. உதாரணம்: சலங்கையொலி .

அப்படியாக அவர் சிரஞ்சீவியின் ராட்சஸுடு என்ற படத்துக்கும் பாட்டு எழுதினார். அந்த படம் தெலுங்குல வந்து சில காலம் கழிச்சுத்தானே தமிழ்ல டப் ஆயிருக்கும்.

ஆனால் புதுசா பாட்டெழுத ஆரம்பிச்சிருந்த நான் ஆடியோ ரிலீஸான அன்னைக்கே எல்லாப்பாட்டையும் டப் பண்ணிருவேன்.அப்படித்தான் ராட்சசன் படத்துல வர்ர "மள்ளி மள்ளி இதி ரானி ரோஜு" என்ற பாட்டுக்கும் தமிழ்ல எழுதினேன்.

தெலுங்குல இப்படி தமிழ்ல இருந்து வர டப்பிங் படத்துக்கு எழுதறதுக்குன்னே ஒரு ஆசாமி உண்டு அவர் பேர் வீட்டூரி சுந்தரரமமூர்த்தி. தெலுங்கு ஃபீல்டுல ஒரிஜினல் பாட்டு எழுதுறவர் பேரு வேட்டூரி சுந்தரராமமூர்த்தி
அந்த வரிகள் இன்னம் ஞா இருக்கு. நீங்க எப்பயாவது தமிழ்ல வெளி வந்த ராட்சசன் பட ஆடியோவை கேட்டிருந்தா வைரமுத்துவோட பாட்டு வரிகளையும்,கீழே
கொடுக்கப்பட்டிருக்கும் என்னோட பாட்டுவரிகளையும் ஒப்பிட்டு ஒரு வரி எழுதினால் "புளங்காகிதம்" எய்துவேன்.

"மீண்டும் மீண்டும் இந்த நாள் வராது
எங்கு சென்றாய் கண்ணே தேன் தராது
நந்தவனம் மங்கை சொந்த மனம் தேறி விடும் இந்த மன்னன் மனம்.
கண்ணே இந்த நேரமே..கண்ணில் ஒரு தாகமே
பூவே உன்னை தொட்டால்
கன்னமெல்லாம் வர்ணஜாலம் கோலம் போடும்
கன்னியுன்னால் உள்ளம் பாடாதோ ஜீவனுள்ள புது கீதம்
கண்களில் காண்கிறேன் காந்தமே (மீண்டும்

பூக்கள் கோடியிருந்தால் என்ன பாரிஜாதம் நீ எங்கே ?
பாக்கள் கோடியிருந்தால் என்ன கண்ணதாசன் கவியெங்கே ?
வெண்ணிலா வாழ்வது கன்னியுன் கண்ணிலா
(மீண்டும்
குறிப்பு:
ஆனால் ஒன்னுங்க தமிழ்,தெலுங்கு ரெண்டும் தெரிஞ்சவங்கிற முறையில சொல்றேங்க ..
கண்ணதாசன் காலத்துக்கப்புறம் தமிழ் திரை இலக்கியம் சோனியாயிருச்சு. சோனியாவே
கிடக்கு . ஆமா தில்லில சோனியாம்மா பவர் ஃபுல் லேடியாயிட்டாங்களே இன்னம் ஏன்
சோனியான்னு சோனியான பேரு