Wednesday, July 29, 2009

பணம் பற்றிய ரகசியங்கள்

சச்சித்தானந்த ஸ்வரூபனின் உண்மை வாரிசுகளே !

பணம் பற்றிய மர்மங்களை இந்த பதிவில் படிக்க முனைந்திருப்பதே நான் மேற்சொன்ன சத்தியத்துக்கான சாட்சி ! ஏனென்றால் பணத்தால் ஆனந்தம் கிட்டும். இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிருமே ஆனந்தத்தை வேண்டுகிறது. காரணம் இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிரும் சச்சித்தானந்த ஸ்வரூபனின் உண்மை வாரிசுகளே உங்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறீர்கள். பணம் இல்லாதவர்கள் கூட இருக்கின்றனர். ஆனால் பணத்தேவை இல்லாதவர்கள் மட்டுமில்லை.காரணம் உங்களில் (பதிவை படிக்க முன் வந்திருப்பவர்களில்) ஒவ்வொருவரும் ஆனந்தத்தை கோருகிறீர்கள் அந்த ஆனந்தம் பணத்தால் கிட்டும் என்று நம்புகிறீர்கள். அதனால்தான் பணம் பற்றிய ரகசியங்கள் குறித்த இந்த பதிவை படிக்க முன் வந்துள்ளீர்கள். பணவிஷயத்தில் அப்படி என்ன ரகசியம் வாழ்கிறது. என்று அலுத்துக்கொள்ளாதீர்கள் . பணம் என்பதே ரகசியத்தின் மறு பெயர்தான் .அது எப்போர்து வரும் ? வந்தாலும் எத்தனை நிமிடம் நம்மிடம் இருக்கும் . எப்போது போகும்? போனால் திரும்பி வருமா ? இப்படி எல்லாமே ரகசியம் தான். பணம் இப்படி நம்மை நிச்சயமற்ற தன்மையில் (நினைத்தாலே இனிக்கும் படத்துல ஜெயப்ரதா மாதிரி) வைத்திருப்பதால் தான் பணம் பற்றிய ரகசியங்கள் என்ற இந்த பதிவை இதுவரை படித்து படித்துவிட்டீர்கள். இதற்கு மேலும் உங்கள் பொறுமையை சோதிப்பதாயில்லை. பணம் பற்றிய முழு உண்மைகளை இந்த பதிவில் உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் போகிறேன்.

ஆமாம் பணத்தின் மீது மனிதனுக்கு ஏனித்தனை கவர்ச்சி என்று நான் கேட்டல் பணம் என்பது அத்யாவசியம் ,தேவைகளை தீர்த்து வைக்கிறது என்பீர்கள். நான் கேட்கிறேன் நீங்கள் கூறுவது உண்மை என்றால் ஒவ்வொருவரும் அவருக்கு எத்தனை பணம் தேவையோ அத்தனை பணத்தை மட்டும் தானே சம்பாதிக்கவேண்டும். உண்மை நிலை அப்படி இல்லையே ! தேவையற்றவன் தானே மேலும் மேலும் சம்பாதிக்கிறான். தன் தேவைகளை /அத்யாவசிய தேவைகளை தீர்த்துக்கொள்ளாது பிணம் காக்கும் பூதம் போல் பணத்தை ஈட்டி காக்கின்றானே ஏன்? இந்த செயலுக்கு பின்னுள்ள காரணம் தான் என்ன ?

நம்மில் ஒவ்வொருவரும் பில்கேட்ஸ்,அம்பானி ரேஞ்ச்சுக்கு சம்பாதிக்காவிட்டாலும் கொஞ்சமோ நஞ்சமோ சம்பாதித்து கொண்டே தானே இருக்கிறோம். அட நம்மை விடுங்கள் ஸ்கூலுக்கு போகும் உங்கள் மகனுக்கு ஒரு நாள் பாக்கெட் மணி இல்லேனு சொன்னா அவன் என்னமா ஆர்பாட்டம் பண்றான் ? புரண்டு புரண்டு அழறான். எதுக்கு ?

தேவைகளை நிறைவேற்றுகிறது என்று நாம் கூறிக்கொள்ளும் பணம் , செலவழிக்கத்தான் என்று கூறிக்கொள்ளும் பணம் பல நேரங்களில், பல மனிதர்கள் விசயத்தில் உப்பு ஜாடிகளிலும், புடவைகளின் கீழும், டப்பாக்களிலும், வங்கி கணக்குகளிலும்,இரும்புப்பெட்டிகளிலும் தூங்கிக்கொண்டுதானே இருக்கிறது. இப்படி செத்து சுண்ணாம்பாகி ,தேவைக்காக ஈட்டிய பொருளை கூட மக்க வைக்கச்செய்யும் சைக்காலஜியின் மர்மம் என்ன?

பணம் மனித வாழ்விலானபிரிக்க முடியாத அங்கமாகி பல காலமாகிவிட்டது. ஒரு பொருளை ப்பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ளாது அதை கைப்பற்றுவதோ, பற்றியதை பிடித்து வைப்பதோ முடியாதவேலை.மனிதன் உருவாக்கிய பணம் இன்று மனிதனையே ஆட்டிப்படைக்கிறதே அது ஏன் ? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சரித்திரத்திலும் இல்லை,பொருளாதாரவியலிலும் இல்லை. பின் எங்கே இருக்கிறது என்றால் படைப்பின் ஆரம்பத்தில் இருக்கிறது.

எனவே நாம் படைப்பின் ஆரம்பத்தில் இருந்து இந்த பதிவை தொடங்காவிட்டால் பணத்தின் தோற்றம், அது மனிதனை ஆட்டிப்படைக்கும் நிலைக்கு வந்தது எப்படி போன்ற விசயங்களை தெரிந்து கொள்ளவே முடியாது.

இந்த படைப்பு ஒரு மகா வெடிப்பில் துவங்கியது ..வெடிப்புக்கு பல கோடி ஆண்டுகளுக்கு பின் அந்த வெடிப்பால் ஏற்பட்ட சொல்லொணாத வெப்பம் தணிந்த பின் சமுத்திரத்தில் அமீனோ அமிலங்களின் சேர்க்கையால் முதல் முதலாக ஒரு செல் அங்க ஜீவி ஒன்று தோன்றியது அதுதான் அமீபா. அது கொழுத்து இரண்டாக பிளந்தது. இரண்டு உடல். இரண்டு உயிரானது . ஒரு செல் மற்றொரு செல்லை பிரதியெடுப்பதில் ஏற்பட்ட தவறுகள் காரணமாய் புதிய புதிய ஜீவ ராசிகள் தோன்றின. குரங்கு ஏற்பட்டது. குரங்கிலிருந்து மனிதன் உருவானான்.

ஒரு செல் அங்கஜீவியில் இருந்த அதே உயிர்தான் இன்று பல லட்சம் கோடி உயிர்களிலும் இருக்கிறது . ஒரே உயிராய், ஒரே உடலாய் இருந்த அந்த காலம், அதில் இருந்த அமைதி,போட்டியின்மை,அச்சம்,இலக்கற்ற தன்மை ,காலமற்ற தன்மை எல்லா உயிர்களிலும் பசுமை நிறைந்த நினைவுகளாக இருக்கிறது. அந்த நினைவுகள் உயிர்களை பரஸ்பரம் இணைந்து ஓருயிராக தூண்டுகின்றன. இயற்கையுடன் இணைய தூண்டுகின்றன. இந்த தூண்டுதல் மிருகங்கள் விசயத்தில் Success ! Success ! என்ற ஏ.வி.எம் பட ஓப்பனிங்க் சீனாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. வளர்ப்பு பிராணிகள் உட்பட வெவ்வேறு ஆட்களால் வளர்க்கப்பட்டாலும் அவை ஒரே உயிராய் செயல்படுகின்றன. அவற்றின் செயல்பாட்டில் பயாலஜிக்கல் க்ளாக்கில் எவ்வித வேறுபாடும் ஏற்படுவதில்லை. பூகம்பம், கிரகணம் போன்ற இயற்கை நிகழ்வுகளின் போது அவற்றின் செயல்பாடுகள் ஒன்றே போல் உள்ளன. இதற்கு காரணம் தான் என்ற எண்ணம், அகந்தை, ஈகோ என்பது அவற்றில் இல்லை.
ஆனால் மனிதன் விசயத்தில் மட்டும் இந்த இணைப்பு துடிப்பு இருக்கிறதே தவிர...செயல்பாட்டுக்கு வரும்போது வெவ்வேறாக மாறிவிடுகிறது.காரணம் இந்த பூமிக்கு அகந்தை என்பது எள்ளளவும் இல்லாத யூனிவர்சல் மைண்டுடன் வரும் மனிதனில் அவனது பெற்றோரும்,ஆசிரியர்களும் அகந்தையை உற்பத்தி செய்கிறார்கள் .இந்த அகந்தை அவனை இயற்கையிலிருந்து பிரிப்பதோடு, இணையத்துடிக்கும் ஆழ் மனதுக்கும் தவறான வழியை காட்டிவிடுகிறது. ஆம்
மனிதன் இயற்கையுடனான தன் இணைப்புக்கு, ஓருயிராக மாறுவதற்கு தன் உடலே தடை என்று தவறாக நினைத்து விடுகிறான். அந்த உடலை உதிர்த்துப்போட தற்கொலை,கொலை என்று இறங்கி விடுகிறான். ஆடு ,கோழி, மீன் , நண்டு என்று உள்ளே தள்ளுபவனின் உள் நோக்கமும் இதுவே.அவற்றை , அதாவது அவற்றின் உடல்களை தன்னுள் ஐக்கியம் செய்து கொண்டால் அவை ஓருயிராக மாறும் என்ற பிரமையே அவனை இப்படி செய்யத்தூண்டுகிறது.ஒரேயடியாய் தற்கொலை அ கொலை செய்யும் தகிரியம் போதாதவன் அதை தவணையில் செய்கிறான்.
இவையெல்லாம் நான் கூறுவன அல்ல . மனோதத்துவ இயலின் சாரம் இது.

"மனிதர்கள் ஸ்தூலமாக எந்த செயலில் இறங்கினாலும் சூட்சுமத்தில் அவன் செய்வது கொல்வது அ கொல்லப்படுவது என்ற இரண்டு செயல்களையே"

(To be continued