Sunday, July 26, 2009

தலைமை செயலகத்தில் பார்ப்பனகூட்டம்

ஏ தாழ்ந்த தமிழகமே !
ஈ.வே.ரா ஈந்த திராவிட பராம்பரியத்தால், பகிர்ந்திட்ட பகுத்தறிவால்
பக்குவப்பட்டு பார்மிசை
தலை நிமிர்ந்து நின்ற நீ இன்று
அந்தணர் தம் சதியாம்
சாதிகளின் சறுக்குப்பலகையில் சறுக்கி
துவேஷ பள்ளத்தாக்கில் புதைந்து விட்டாய்.

ஆஷாட பூதிகள் வகுத்த மனு தர்மம் காத்து
இன மானத்துக்காய் செயல் பட வேண்டிய
மனோ தர்மத்தை பலியாக்க விட்டு விட்டாய்.

பகுத்தறிவு பகலவனே உதித்தும்
வெளுக்காத கிழக்கு நீ ! விடியாத வானம் நீ !
பெரியார் வார்த்தை பிரம்புகளாலும் படியாத மாடு நீ
அடி மாடாய் போனதில் வியப்பென்ன?

பாரதத்தில் முதல் முறையாய்
பார்ப்பனீயத்தை எதிர்த்து வெடித்து கிளம்பிய
இயக்கத்தின் வரலாறு இப்படியா முடிய வேண்டும்

இறைவனுக்கே வேண்டாம் சிலை
என்ற அய்யாவின் கொள்கைக்கே
உலை வைத்து பேட்டை பேட்டைக்கு வைத்தீர்கள் சிலை

பார்ப்பனர்கள் தம் முதுகு அழுக்கை
திரட்ட பயன்படுத்திய பூணூல்
திராவிட இனத்துக்கே தூக்குக்கயிறாக மாறிட
விட்டாரா ஈ.வே.ரா ?

அவர் கண்ட இயக்கம் அவர் கண் முன்னே பிளந்து
கண்ணீர் துளிகளே சூடாறி
சுரத்திழந்தன.

புதிய புதிய விளக்கங்கள் கூறி
அந்த கோமகனின் கொள்கையை கூறிட்டன.
பதவி என்ற ஆட்கொல்லிக்கு பலியாகின.
தமிழர் சமுதாயத்து தன் மானத்துக்கே நலியாகின
அண்ணாவை கொன்றது புற்று நோய் தான்
ஆனால் தம்பிமார்களில் அவர் வளர்த்த
கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை கொன்றது
மட்டும் பதவி என்ற ஆட்கொல்லிதான்


அண்ணா சொன்னார் நான் பார்ப்பணீயத்தை எதிர்க்கிறேன்
பார்ப்பனரை அல்ல !
போலீசார் ஏன் இரவு ராணிகளை கைது செய்கிறார்கள் ?
அவர்களிலான விபச்சார எண்ணத்தை மட்டும் கைது செய்தால் போதுமே ?
அவ்வெண்ணத்தை தோற்றுவிக்கும் வறுமையை மட்டும்
தண்டித்தால் போதுமே !

பார்ப்பான் என்ன பாம்பா ? பார்ப்பணீயமெனும் விஷத்தை மட்டும்
எடுத்து விட்டு குழந்தைகளிடம் விளையாட கொடுக்க
பாம்புக்கு பல்லில் பார்ப்பானுக்கு செல்லில் விஷம்.

விபச்சாரிகளிடமாவது கொடுக்க ஏதேனும் இருக்கிறது - இந்த
வீணர்களிடம் என்ன உண்டு.

தம்பிமாரின் பதவிச்சண்டை ஒவ்வொரு தமிழனின்
தன்மானத்தையும் தில்லி பாதுஷாக்களின்
பாதுகைகளாக்கியதே !

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே
என்று ஒரிசாவிலிருந்து ஒருவன் வந்து கூற வேண்டியதாயிற்றே !
உண்மையிலேயே உடன் பிறப்புக்களின் வாழ்வுதான் அவர்களின் நோக்கம்
என்றால் கோர்த்திருக்கலாமே கை
கோர்த்திருந்தால் இப்படி ஆகியிராதே ஈழ தமிழர் வாழ்க்கை

அரசன் மனைவி தன் கருவில் வைத்திருந்ததால்
இளவரசிகளாய் கவுரவிக்கப்பட்டோர் உண்டு
ஆண் வாரிசுகள் இல்லாத பட்சத்தில் அவர்களே
அரசிகள் ஆனதும் உண்டு
அரசன் (தன்னுடன்) வைத்திருந்ததாலேயே அரசி ஆன சரித்திரம்
ஏ தமிழினமே ! உனக்குத்தான் உண்டு

கழகத்தை குடும்பமாக்கினார் அண்ணா
குடும்பத்தையே கழகமாக்கினார் தம்பி

கிளைக்கழகங்களை விடுவோம்
மூலக்கழகம் என்னாயிற்று
வீரமானவர் மணியாய் பேசி தமிழர் நெஞ்சங்களில் வீரத்தை ஊட்டியிருக்க வேண்டும். அந்த நாள் முதல் ஆட்சி செய்யும் கிரகங்களின்
துணைக்கோளாகவே வாழ்ந்து விட்டவர் சுக வாழ்வை இழக்க முடியுமோ ?

உலகின் ஏதோ மூலையில் ஒரு தெலுங்கன் செத்தால்
தெலுங்கு தினசரிகளில் அதுதான் தலைப்பு செய்தி
உங்களுக்கோ விஜயசாந்தி ஏழுமலையானை கும்பிட்டதுதான் த.செய்தி
ஏ தமிழினமே நீ கோழைத்தனத்தின் கைதி

ஈ.வே.ராமசாமி நாயக்கர்
காலணாவுக்கு இனிஷியலும், ஓரணாவுக்கு முழு கையெழுத்தும் போட்டு
கட்சிக்கு நிதி வசூலித்த முனிவர்
அவரது தன்னலம் கருதா சிக்கனம் தெரிந்தால்
ராம பக்தர்களும் அவரை பூசிக்க முனைவர் இக்கணம்.

இன்று அவர் இருந்திருந்தால் புலிகளை தனிமைப்படுத்த
தில்லியில் கில்லி விளையாடிய பஞ்சக்கச்சங்களை அவிழ்த்தெரிந்து
அவர்தம் பூணூல்களை அறுத்தெறிய அழைப்பு விட்டிருப்பார்.

அவர் பேர் சொல்லி பேர் வாங்கும் பேருக்கு தலைவர்கள்
ஊருக்கு தலைவர்கள் அல்லர்.
முருகனுக்கு காவடி எடுக்கும் சாமானிய பக்தனையாவது
புரிந்து கொள்ளலாம்
தில்லிக்கு காவடி எடுக்கும் இந்த அசாதாரண பக்தர்களை
எப்படி புரிந்து கொள்ள !

தலைமை செயலகத்தில் பார்ப்பனகூட்டம்
மீடியாவில் பார்ப்பனகூட்டம்
நீதித்துறையில் பார்ப்பன கூட்டம்
இதில் பார்ப்பனருக்கு இட ஒதுக்கீடு கேட்டு
மனு கொடுக்கிறார் ஒரு பார்ப்பனர்
அதையும் வாங்கி வைத்துக்கொள்கிறார் ஒரு பெரியார் சீடர்

ஏ தாழ்ந்த த்மிழகமே !
நீ மறந்த இனமானத்தை நினைவுறுத்த
உன்னை சீரழித்த திரைத்துறை தான் முன் வர வேண்டியுள்ளது.
என்ன ஒரு வித்யாசம் என்றால் இவர்கள் வந்தேறிகள் அல்லர்.
மண்ணின் மைந்தர்கள்
குவிலயமாளும் கோமான்களே !
உங்கள் அழுக்குகளை
வெளுக்க வந்திருக்கும் இவர்கள் சீமான்கள்
வேறு வார்த்தையில் கூற வேண்டுமெனில் ஈமான்கள்