Sunday, July 12, 2009

ஜோதிட ஆராய்ச்சிக்கு ஒத்துழைத்த அன்பு நெஞ்சத்துக்கு நன்றி.

ஜோதிட ஆராய்ச்சிக்கு ஒத்துழைத்த அன்பு நெஞ்சத்துக்கு நன்றி. அந்த அன்பர் ஜாதகம் அனுப்பி வைத்தார். அந்த ஜாதகத்திலான கிரக அமைப்பு படி 5 அம்சங்களை குறிப்பிட்டு அவருக்கு அனுப்பினேன் .அதற்கு அவர் அளித்துள்ள க்ரேடிங்கை பாருங்கள். இவர் விஷயத்தில் பலன் தவற என்ன காரணம் என்பதற்கான என் விளக்கத்தையும் பாருங்கள் .

முதலில் கிரக அமைப்பு:சிம்ம லக்னம். லக்னத்தில் சூரியன் புதன்,மூன்றில் சனி,சுக்கிரன், சந்திரன், ஐந்தில் செவ்வாய் ராகு,11 ல் குரு கேது

நான் கொடுத்த பலன் & அவர் கொடுத்த க்ரேடிங் :



1.தன்னம்பிக்கை ஓவர் டோசாகி குடியை கெடுக்கும்=100%
விள‌க்க‌ம்: இது ல‌க்ன‌ம் சிம்ம‌மான‌தையும் அதில் லக்னாதிபதியான சூரிய‌ன் ஆட்சி பெற்றிருப்ப‌தையும் வைத்து கூற‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌னாகும். இத‌ற்கு ஜாத‌க‌ர் 100 ச‌த‌வீத‌ம் கொடுத்துள்ளார்

தூக்கமின்மை,பல்
எலும்பு,முதுகெலும்பு தொடர்பான தொல்லைகள். தந்தைக்கு அல்லது தந்தையுடனான
உறவுக்கு நல்லதல்ல‌
ALL above =0%
இப்ப‌‌ல‌ன் த‌வ‌ற‌ கார‌ண‌ம் என்ன‌ ? ல‌க்ன‌த்தில் வெறும் சூரிய‌ன் ம‌ட்டும் இருப்பின் இதுவே ப‌ல‌ன். ஆனால் இங்கு புத‌னும் உள்ளார். இத‌ர‌ கிர‌க‌ங்க‌ளுட‌ன் சேரும்போது அவ‌ற்றை எரித்துப்போடும் சூரிய‌ன் புத‌னுட‌ன் சேரும்போது ம‌ட்டும் தான் மொக்கையாகிவிடுகிறார். மேலும் புத‌ன் 2,11 ஆதிப‌த்ய‌த்தை பெற்றுள்ள‌தால் ச‌தா த‌ன‌து வ‌ருவாயை உய‌ர்த்துத‌ல்,லாப‌மீட்டுத‌ல் குறித்த‌ யோச‌னைக‌ள் வ‌ரும். இத‌னால் மூளை சீக்கிரம் களைத்து ஓய்வு பெற்று தூக்க‌ம் வ‌ருகிற‌து. இத‌னால் தான் மேற்சொன்ன‌ ப‌ல‌ன்க‌ள் வொர்க் அவுட் ஆக‌வில்லை. இது ஜோதிட‌னின் த‌வ‌று. ஜோதிட‌த்தின் த‌வ‌ற‌ல்ல‌.

2.முறைப்படி அறியாத விஷயத்திலும் திறமையை காட்டும் திறமை = 100%
முக்கியமாக
அகவுண்ட்ஸ் ஆடிட்டிங் =never tried
மெடிக்கல் =100%,
ஏஜென்ஸி துறைகளில்முன்னணி
=never tried
விளக்கம்:இது சூரிய புத சேர்க்கையை வைத்து கூறப்பட்டது. இந்த சேர்க்கை சிம்ம லக்னத்துக்கு அதிலும் சிம்மத்திலேயே ஏற்படும்போது சூப்பராக ஒர்க் அவுட் ஆகிறது அக்கவுண்ட்ஸ்,ஆடிட்டிங்,மெடிக்கல் இதெல்லாம் சாதாரண கண்களுக்கு வெவ்வேறாக தெரியலாம். ஆனால் இதெல்லாம் புத காரகத்வம் கொண்ட தொழில்களே. எனவே இது 100 சதம்
3.எதிராளியை ப்ளாக் மெயில் செய்தல்(never),மிரட்டுதல்(never) மன அமைதியின்மை, = 10% (rarely)
கை விரல் நுனி உதறுதல்.=10%
விளக்கம்: இது சனி,சந்திர சேர்க்கையை வைத்து சொல்லப்பட்டது. இங்கு இவர்களுடன் சுக்கிரனும் சேர்ந்துள்ள காரணத்தால் இந்த கெடுபலன் 10 + 10 = 20 சதத்துடன் நின்றுவிட்டது. சனி 6,7,க்கு அதிபதி. 6 என்பது நோய்,கடன்,விரோதங்களை காட்டுமிடம். அவர் பாவர் என்பதால் 3 ல் நின்றது நலமாகவே முடிந்துள்ளது. ஆனால் 7க்கும் ஆதிபத்யம் வகிப்பதால் மனைவியாருக்கு இது நல்லதல்ல. இங்கு இரண்டேகால் நாளைக்கு ஒரு முறை ராசி மாறும் சந்திரன் சேர்ந்ததால் அவருக்கு விரயாதிபத்யம் இருப்பதால் கெடுபலன் களை விரயமாக்கி, தேவையற்ற பிரயாணங்களாக்கி (தண்ட செலவுகள்) மனக்லேசத்தை கொடுத்து அட்ஜஸ்ட் செய்கிறார்.
4.மனைவி சீக்கிரமே முதுமை அடைதல்=20%. இந்த விசயம் சுக்கிரன் 3 ல் நின்றது,சனியுடன் சேர்ந்தது, விரயாதிபதியான சந்திரனுடன் சேர்ந்து அல்லல் அலைச்சலை காட்டும் மூன்றில் நின்றதை வைத்து சொல்ல‌ப்பட்டது. இது 20 சதமே இருக்க காரணம் ,மனைவியாரின் ஜாதகத்தில் 6 மிடம் வலுத்திருக்கலாம்.(உண்மையில் அவர் ஜாதகம் அனுப்பப்பட்டும் நான் பார்வையிடவில்லை . இதுவும் ஜோதிடரின் தவறுதான்.

தாய்க்கு, தாய் வழி உறவுக்கு கேடு.=0%
ஸ்தான பலத்தை இழத்தல் குடும்பத்தில் கலகம்=0%

விளக்கம்: இந்த பலன் தவற காரணம் செவ்வாய்க்கு பாக்யாதிபத்யம் கிடைத்திருப்பதும்,ராகுவுடன் சேர்ந்ததும் காரண‌ம் . நாலு என்பது வித்யாஸ்தானம் எனவே ஜாதகரின் படிப்பில் தடை ஏற்பட்டிருக்கலாம். தாய்க்கு ரத்தம் எரிச்சல் தொடர்பான தொல்லைகள் இருந்திருக்கலாம். அல்லது ஜாதகர் வீட்டில் தீ,மின்சாரம் தொடர்பான விபத்து ஏதும் நிகழ்ந்திருக்கலாம். ஜாதகர் தெற்கு திசையாக போகும்போது விபத்து நிகழ்ந்திருக்கலாம் . சொந்த வீடின்மை, வீட்டுப்பெயரில் லிட்டிகேஷன்ஸ் இருக்கலாம். ராகு எனில் திருடர்கள்,விஷ பூச்சிகள்,தேள்,பாம்பு,போன்றவற்றையும் ,மோசடிக்குள்ளாவதையும் காட்டும் . இந்த வழிகளிலும். இது கெடுபலனை தந்திருக்கலாம்.

5.குழந்தைகளுக்கு கேடு.=0% இது குரு கேது சேர்க்கையை வைத்து சொல்லப்பட்ட பலன். இந்த பலன் தவற காரணம். ஐந்தாமிடம் என்பது வாரிசுகளையும்,ஜாதகரின் பெயர் புகழையும் காட்டுமிடமாகும். இது குழந்தைகளுக்கு கேடு தரும் அல்லது அவப்பெயர்,புத்தி குழப்பத்தால் நம்பத்தகாதவர்களை நம்பி மோசம் போவதையும் காட்டும். வாரிசுகளில் ஒருவர் அன்னிய மதத்தினருடன் நெருங்கி பழகாலாம். அல்லது வெளி நாடு செல்லும் ஆர்வத்தில் நஷ்டப்படலாம். எது எப்படி ஜாதகர் விஷயத்தில் எப்படி ஒர்க் அவுட் ஆனதோ அதை அவ‌ர்தான் கூற‌ வேண்டும். ‌

தெய்வ நம்பிக்கை/சாஸ்திர நம்பிக்கையில் குறைவு.=0%இதுவும் குரு கேது சேர்க்கையை வைத்து சொல்லப்பட்டதே . இது நாஸ்திக வாதத்தை தரலாம் அல்லது கடுமையான ஞா.மறதி, தங்கம் அடகில் மூழ்கிப்போவது,திருட்டு போவது,கொடுத்து ஏமாறுவதையும் தரலாம். அல்லது வயிறு தொடர்பான சுகவீனம் (முக்கியமாய் வாயு கோளாறுகளை தரும்.

பலன்:(அல்லது இந்த நம்பிக்கைகளை இழக்கும் அரை வாழ்வில் பெரிய முன்னேற்றம் இராது)

விள‌க்க‌ம்: ஜாத‌க‌ர் குருச‌ண்டாள‌ யோக‌த்தில் பிற‌ந்துள்ளார். இது ஜாதகர் நாத்திக‌ராவ‌தை காட்டுகிற‌து. ஆனால் மாயாச‌க்தி ப்ர‌பாவ‌த்தால் அல்லது என்விரான்மென்டல் ஃபேக்டர்ஸ் காரணமாய் அவ‌ர் தெய்வ‌ ந‌ம்பிக்கையை தொட‌ருகிறார். இங்கு ஒரு சிறு விஷ‌ய‌த்தை கூறி விள‌க்க‌த்தை முடிக்கிறேன்.


கிர‌க‌ங்க‌ள் த‌ரும் ப‌ல‌ன் என்ப‌து ஆப்ஜெக்டிவ் டைப் வினாத்தாள் மாதிரி நான்கைந்து ஆப்ஷ‌ன்ஸ் இருக்கும். இதைதான் பெரியோர் "விதியை ம‌தியால் வெல்லலாம்" என்று கூறியுள்ள‌ன‌ர். என‌வே ஜோதிட‌ர் ஒரு ப‌ல‌னை கூறிய‌துமே அது ந‌ட‌க்க‌வில்லை என்று முடிவு செய்து ஹை ஜோதிட‌ம் பொய் என்று முடிவு செய்து விட‌க்கூடாது.

ப‌ல‌னை கூறுப‌வ‌ன் ஜோதிட‌ன் ப‌ல‌னை த‌ருப‌வ‌ன் இறைவ‌ன்