Sunday, September 30, 2007

உடலுறவும் -அதீத ஈர்ப்பும்


1.உடலுறவின் மீது மனிதனுக்கு ஏன் இத்தனை ஆர்வம். மனிதர்கள் பல்வேறு போர்வைகளில் செய்வது 2 வேலைகளைத்தான். ஒன்று சாவது, இரண்டு சாகடிப்பது . இது இரண்டுமே உடலுறவில் சாத்தியமாகிறது.

2.ஒவ்வொரு ஆண் பெண்ணிலும் பாதி ஆண், பாதி பெண் தான் உள்ளனர். இந்த பற்றாக்குறை தீருமோ என்ற நப்பாசையில் தான் பெண், ஆணை /ஆண் பெண்ணை நாடுகின்றனர்.

3.உடலுறவின் உச்சக்கட்டம் என்பது நிகழும்போது காலம் நின்று போகிறது. இது மரணத்துக்கான சேம்பிள் பேக் தான். மனிதனுக்கு துன்பத்தை தருவது நகரும் காலம் தான். காலம் நகரும் போது எல்லாம் மாறிவிடுகிறது.மாற்றம் மரணத்துக்கு ஒப்பானது.

4.ஒவ்வொரு மிஷினிலும் ஆன்,ஆப் சுவிட்ச் இருப்பது போலவே ஒவ்வொரு உயிரிலும் தன்னை காத்துக்கொள்ளும் காப்பாற்றிக்கொள்ளும் உணர்வை போலவே தன்னை தான் அழித்துக் கொள்ளும் உணர்ச்சியையும் இயற்கை ஒளித்து வைத்துள்ளது. அந்த உணர்வு உடலுறவுக்கு தூண்டுகிறது..இது உள்ளார்ந்த வகையில் பார்க்கும் போது தவணை முறையிலான தற்கொலைதான்.

அதே நேரம் தான் சாவதை (அழிவதை) எவ்வாறேனும் தடுக்கும் உணர்வும் உடலுறவில் அடங்கியுள்ளது. தன் சாயலில் மற்றொரு உயிரை படைத்தல்.
இவையெல்லாம் தத்துவ,மனோ தத்துவ காரணங்கள்.

யதார்த்தத்தில் பார்க்கும்போது மற்றொரு காரணம் உள்ளது. இந்த பகுதியை இதர வலைதள ஆசிரியர்கள் தூக்கிவிடாதிருந்தால் உங்கள் ஜாதகம் யோக ஜாதகம் தான்.

ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடும்போது யோனியினுள் ஆணுறுப்பு நுழைக்கப் பட்டபிறகு ஆணுக்கு 7 அசைவுகளில் உச்ச நிலை ஏற்பட்டு இந்திரியம் நழுவி விடுகிறது.

பெண்ணுக்கோ 23 முறைகள் அசைக்கப் பட்ட பிறகே உச்ச நிலை ஏற்படுகிறது. இது ஒவ்வொரு ஆணுக்கும்,பெண்ணுக்கும் அனுபவத்தில் தெரிந்தே இருக்கும்.

இதை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என்ற கஜினி தனமான ஆசை மனிதனை மீண்டும்,மீண்டும் உடலுறவில் ஈடுபட செய்கிறது.

 மேலோட்டமாக பார்க்கும் போது பிரச்சினைகள் வெவ்வேறாக இருந்தாலும் உடலுறவிலான இந்த பிரச்சினை தான் தம்பதிகளை காவல் நிலையம்,கோர்ட்டு,தற்கொலை,கள்ளக்காதல்,ஓரின காதல்,வரதட்சினை கேட்டு மனைவியை இம்சித்தல் போன்ற நிலைகளுக்கு விரட்டுகிறது.

(உடலுறவில் திருப்தியுறாத மனைவியை கண்ணால் பார்க்காதிருக்க இது ஒரு சாக்கு)