Saturday, September 22, 2007

ராமர் பாலம்








ராமர் பாலத்தைப் பற்றிய விவாதங்கள் இப்போதக்கு அடங்குவதாக இல்லை. பிரம்மங்காரு எழுதிய காலஞானம் நூலின் படி உலகமே ஏழில் ஆறு பாகம் அழிந்து ஒரு பாகம் தான் மிச்சமாகப் போகிறது. இதில் ராமர் பாலம் என்ன? செங்கோட்டை என்ன?


நாட்டில் பற்றியெறியும் பிரச்சினகள் பலப்பல இருக்க ராமர் பாலத்தைப் பற்றி வாய் கிழிய பேசி வருகிறார்கள். பக்தி,பூஜை,ஆன்மீகம் எல்லாம் காலைக் கடன் கழிப்பதைப் போன்றவை. இவற்றை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.


தனிப்பட்ட வாழ்விலன்றி பொதுவாழ்வு,சமூக வாழ்வு என்று வரும்போது மனிதனை மய்யமாக வைத்து சிந்திக்க வேண்டும். நான் ராம பக்தன் தான். ராமன் ஒரு முறை அல்ல பல்லாயிரம் முறை பிறந்தான் வாழ்ந்தான் என்று நம்புகிறேன். அது என் தனிப் பட்ட நம்பிக்கை. நம்பிக்கைக்கு கை கால்கள் இருப்பதில்லை. கேவலம் ஒரு நம்பிக்கைக் காரணமாய் ஒரு வளர்ச்சிப் பணியை தடுப்பது முட்டாள் தனம்.


கலைஞர் மஞ்சள் துண்டு,புட்டபர்த்தி மாயைகளிலிருந்து வெளி வந்து இத்தனை தைரியமாக பேசுகிறார் என்றால் தமிழகமே சந்தோஷப் படவேண்டும்.


சிவன் சந்திரனை தலையி தரித்துள்ளார் என்பது புராணம் ரஷ்யா,அமெரிக்காகாரர்கள் சந்திரனை தம் காலால் மிதித்த போது இந்த ஆஷாடபூதிகள் எந்த மசூதியை உடைக்க போயிருந்தார்கள்? இந்து மத நம்பிக்கைகளின் படி பார்த்தால் வியாதி என்பது தெய்வ கோபத்தால் விளைவது. மருத்துவ மனைகள் அனைத்தையும் இழுத்து மூடிவிடவும் ஒரு போராட்டம் செவார்களா?

இந்து மத நம்பிக்கைப் படி பார்த்தால் விருந்தாளிக்கு மனைவியை படுக்க வைக்க வேண்டும். குழந்தை இல்லை என்றால் பிராமணர்களுக்கு கூட்டி கொடுக்க வேண்டும். என்னங்கடா தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை.
கலைஞர் அவர் தளத்தில் யோசித்து ராமன் கற்பனை என்று சொல்கிறார். சொல்லிவிட்டு போகட்டும்.


ராமன் எந்த தளத்தில் இயங்குகிறான் என்பது தெரிந்தால் ராமனுடன் இதை பற்றி பேசி சிரியுங்கள். அதை விட்டு தலைக்கு விலை வைப்பதும், நாக்கை அறுப்போம் என்பது ராமன் பாணியல்ல ..ராவணன் பாணி கூட அல்ல..