Sunday, September 9, 2007

அள்ளி அணைத்து


ஒவ்வொரு முறை அவள் என்னை கீழே தள்ளிய போதும்அள்ளி அணைத்து எடுத்துமிருக்கிறாள்..தன் ஆணைப்படி என் மேல் ஆதிக்கம் செலுத்தப் பார்க்கும் கோளுக்கு எதிராகவும் வாளெடுக்காத ஜனநாயக வாதி அவள்கோள் என்னை சிறைப்படுத்தினாலும் ஜாமீனில் தான் என்னை நழுவும் மீனாக்கி மகிழ்கிறாள் அந்த மீனாட்சி


யாவும் அவளாட்சியாக இருக்க என்னில் ஏது தளர்ச்சிநான் பூஜ்ஜியம் .யாவும் அவள் ராஜ்ஜியம்அம்மையவள் என்னை பொம்மையாக்கி விளையாடும்போதுசற்றே பங்கப் பட்டால் தான் என்ன?
ஒவ்வொரு ந‌தியும் புனித‌மாக‌த்தான் புற‌ப்ப‌டுகிற‌து.வ‌ழியில் தான் முத‌ல் பிண‌ம் போட‌ப்ப‌டுகிறதுஒவ்வொரு சாத‌னையாள‌னும்ச‌மூக‌ நீதிக்கு க‌ட்ட‌ப்ப‌ட்ட ச‌மாதியின்பிள‌விலிருந்து தான் புற‌ப்ப‌டுகிறான்.ச‌ற்றே காற்றும்,நீரும்,க‌திரும் கிட்டிய‌தும்உண்ட‌ ம‌ய‌க்க‌த்தில் ச‌ளைக்கிறான்.பின் .........ச‌முதாய‌த்தை உண்ண‌ ஆர‌ம்பிக்கிறான்.அத‌னால் தான்என் அன்னை ப‌ட்டினியிலேயே வைத்துத‌ன் ல‌ட்சிய‌த்தை நிறைவேற்றிக் கொள்கிறாள்.
எவ‌ன், எத‌ற்கு உழைத்தாலும் அத‌னால் நிறைவேறுவ‌து அவ‌ள் ல‌ட்சியம் தானே!