Saturday, September 29, 2007

ஜெயலலிதாவுக்கு ஜாதகம் சொன்னேன்‍-2


5ல் உள்ள கேது, தனித்து நின்ற குரு அம்மையாருக்கு கெட்ட பெயரை தருவதில் நீயா நானா என்று போட்டியிடுகின்றனர். குரு 7 ல் உள்ளார். 7 என்பது கணவனை காட்டுமிடம். குரு தான் நின்ற இடத்தை நசிக்கச் செய்வார் என்பது எளிய விதி. இவர் 7,10 இடங்களுக்கு ஆதிபத்தியம் பெற்றதால் தான் அம்மையாருக்கு கோயில் குளங்கள் மீது அதீத ஈடுபாடு ஏற்பட்டு அவப்பெயரும் ஏற்பட்டது.

லக்னாதிபதியான புதன் (4க்கு அதிபதியும் இவரே/ 4 என்றால் தாய்,வீடு,வாகனம்) 9ஆமிடத்தில் 3க்கு அதிபதியான சூரியனுடன் சேர்ந்துள்ளார். இதனால்தான் அடிக்கடி முகாம் மாற்றும் பழக்கம் உள்ளது. 1+3= அலைச்சல் தான். 3 என்பது தைரியத்தை காட்டுமிடம். இதன் ஆதிபத்தியம் சூரியனுக்கு கிடைத்திருப்பதால் தான் இவரது தன்னம்பிக்கை ஓவராகி அகங்காரமாக காட்சி அளிக்கிறது.


ஒன்பது என்பது வாழ்வில் வழிகாட்டியாக அமையும் குருவைக் காட்டுமிடம். லக்கினாதிபதி புதன் இங்கு அமர்ந்ததால் இவரது அரசியல் குருவான எம்.ஜி.ஆர் வழியில் அதிகாரம் கிடைத்தது. 5,12க்கு அதிபதியான சுக்கிரன் 10ல் உச்சம் பெற்றதைத்தான் எல்லா ஜோதிடர்களும் புகழ்ந்து பேசுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை சுக்கிரன் கேந்திரம் பெற்றதால் தான் அம்மையார் இன்று தனிமரமாக நிற்கிறார்.

ஆடம்பரம்,படாடோபம்,கிலோ கணக்கில் வெள்ளி இதற்கெல்லாம் இந்த சுக்கிரன் தான் தூண்டி விட்டார். சுக்கிரன் கிருக காரகன்,வாகன காரகன். அம்மையாருக்கு சுக்கிரன் யோகம் தருவதாயிருந்தால் ஏன் அவருக்கு வீடு,வாகனம் தொடர்பாகவே தொல்லைகள் வருகின்றன. விளக்குவார்களா ஜோதிடர்கள்?

10ல் உள்ள‌ ராகு ச‌ட்ட‌த்திற்கு புற‌ம்பான‌வ‌ர்க‌ளின் உற‌வை த‌ருகிறார். அம்மையாருக்கு த‌ற்போது ந‌ட‌ப்ப‌து ராகு த‌சையாகும். இது 1994/8/21 அன்று துவ‌ங்கிய‌து. இத‌ன் முத‌ல் பாதி 21/8/2003 ல் முடிந்துவிட்ட‌து. 6,11 க்கு அதிப‌தியான‌ செவ்வாயின் வீட்டில் ராகு (ப‌த்தில்) நின்றுள்ளார். முத‌ல் 9 வ‌ருட‌ங்க‌ள் ஓர‌ள‌வு ந‌ல்ல‌ ப‌ல‌னை கொடுத்துவிட்ட‌ ராகு த‌ன் இர‌ண்டாம் பாதியில் எந்த‌ அள‌வு ப‌ல‌ன் கொடுப்பார் என்ப‌து ஆராய்ச்சிக்குரிய‌ கேள்வியாகும்.

கோச்சார‌ப்ப‌டி சிம்ம‌த்துக்கு 4ல் உள்ள‌ குரு கொடைக்கான‌ல் குடைச்ச‌லை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். ஜ‌ன்ம‌த்தில் வ‌ந்த‌ ச‌னி அங்குள்ள‌ கேதுவுட‌ன் சேர்ந்து மூன்றாவ‌து அணியிலிருந்து பிரித்துவிட்டார். 2007 ந‌வ‌ம்ப‌ர் 11 க்கு 5ல் வ‌ர‌விருக்கும் குரு ஜ‌ன்ம‌ ச‌னி,ஜ‌ன்ம‌ கேதுவை மீறி என்ன‌ செய்துவிட‌ முடியும்.

அம்மையாருக்கு இப்போதுள்ள‌ ஒரே ஆறுத‌ல் மிதுன‌த்தில் ஸ்த‌ம்பித்துள்ள‌ செவ்வாய்தான். (இது ராசிக்கு 11 ஆமிட‌ம்.செவ்வாய் இங்கு 2008 ஏப்ர‌ல் வ‌ரை த‌ங்குகிறார்)

மொத்த‌த்தில் அம்மையார் இப்போதாவ‌து நிலாச்சார‌லில் வெளிவ‌ரும் என் ப‌ரிகார‌ தொட‌ரை ப‌டித்து பின்ப‌ற்றினால‌ன்றி தேறுவ‌து க‌ஷ்ட‌ம் தான். (அப்ப‌டி போடு அறுவாளை)

குறிப்பு: என் ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்துக்கு ஆத‌ர‌வு த‌ர்ர‌தாயிருந்தா பார‌த‌ நாட்டின் 40 கோடி த‌ரித்திர‌ நாராய‌ண‌ர்க‌ளும் அம்மாவுக்கு க‌வ‌ச‌மாகி விடுவார்க‌ள். பிறகு நாள் என்செய்யும்? கோள் என்செய்யும்?