Sunday, September 30, 2007

ஜெயலலிதாவுக்கு ஜாதகம் சொன்னேன் -3


அம்மாவுக்கு தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடை பெறுகிறது. (இது குறித்து ஏற்கெனவே 2 ஆம் பாகத்தில் சொல்லியுள்ளேன். சுக்கிரன் மிதுன லக்கினத்துக்கு யோககாரகன். இவர் கோண ஸ்தானங்களில் இருந்தால் தான் நல்லது.


அம்மையாரின் ஜாதகத்தில் இவர் கேந்திரம் பெற்றுள்ளார். இவர் சுப பலன் களை தருவதாயின் அவருக்கு காலாகாலத்தில் திருமணமாகியிருக்கும்,மகாலட்சுமி போன்ற மகள் உறுதுணையாக இருந்திருப்பார். வீடுகள் ரெயிடுக்குள்ளாவது,கொடைக்கானல் குற்றச்சாட்டுக்கள், வெளிநாட்டுக் கார் அன்பளிப்பு போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது.


எனவேதான் அடித்து சொல்கிறேன்.2006 மார்ச்,9 ஆம் தேதி ஆரம்பமான சுக்கிர புக்தி 2009 மார்ச் 9 ஆம் தேதி வரை நடக்கும். மற்ற ஜோதிடர்கள் கூறுவது போல் சுக்கிரன் யோகத்தை தருவதாயிருந்தாலும் 2009 மார்ச்சுக்குள் தேர்தல் வந்தால் தானே முதல்வராகமுடியும்.


கலைஞர் ஸ்டாலினை முன்னிலைப் படுத்திவருவதற்கு கட்சி,தொண்டர்கள்,பத்திரிக்கைகள் தரப்பிலிருந்து எதிர்ப்பு ஏதுமில்லை. மேலும் ஸ்டாலினுக்கு பட்டம் கட்டுவதில் ஏனிந்த தாமதம் என்ற கேள்வி தான் எழுந்து வருகிறது. எனவே அம்மாவுக்கு நிராசை தான் மிஞ்சப் போகிறது.


ராசிக்கு 11 ல் ஸ்தம்பித்துள்ள செவ்வாய் பலத்தில் ஏதேனும் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்க முடியும் அவ்வளவு தான். 2007,நவம்பர் 11 ல் ராசிக்கு 5ல் வ‌ர‌ உள்ள‌ குரு ,ஜ‌ன்ம‌த்தில் உள்ள‌ ச‌னி,கேதுவை மிஞ்சி என்ன‌ செய்துவிட‌முடியும்.


எது எப்ப‌டியானாலும் அம்மையார் //www.nilacharal.com//ல் வெளிவ‌ந்து கொண்டிருக்கும் என‌து ஆய்வு தொட‌ரை ப‌டித்து உரிய‌ ப‌ரிகார‌ங்க‌ள் செய்து கொண்டால், என‌து ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 அம‌ல் ப‌டுத்த‌ப்ப‌ட‌வேண்டும் என்று குர‌ல் கொடுத்தால் நாட்டில் உள்ள‌ 40 கோடி ஏழைம‌க்க‌ள், 10 கோடி வேலை‌ய‌ற்ற‌ வாலிப‌ர்க‌ள், 70 கோடி விவ‌சாயிக‌ள் அம்மையாரை பிர‌த‌ம‌ராக‌வே ஆக்கிவிடுவார்க‌ள் என்ப‌தில் என‌க்கு ச‌ந்தேக‌மில்லை.


ஜோதிட‌ப்ப‌டி ச‌னி எந்த‌ ராசியில் இருந்தாலும் 4 ராசியின‌ருக்கு அனுகூல‌ ப‌ல‌ன் க‌ளை த‌ருவார். அம்மையார் என் திட்ட‌த்துக்கு குர‌ல் கொடுத்தால் ஜ‌ன‌த்தொகையில் 12ல் 4 பாக‌ம் ம‌க்க‌ளின் கிர‌க‌ப‌ல‌ன் க‌ள் அம்மாவுக்கு கை கொடுக்கும். இது உறுதி