Wednesday, September 12, 2007

இங்கு பொய் சத்தியம் போட முடியாது

ஆந்திர பிரதேசம்,சித்தூர் மாவட்டம் ,ஐராலா மண்டலம் ,கானிப்பாக்கத்தில் ஒரு வினாயகர் கோவில். கோவிலில் உள்ள விக்கிரகம் சுயம்பு மூர்த்தி மட்டுமல்ல. நாளுக்கு நாள் வளர்ந்தும் வருகிறது.வேலூரை அடுத்துள்ள சித்தூரிலிருந்து 10 நிமிட பயண தூரத்தில் உள்ளதூரத்தில் உள்ள இந்த வினாயகர் கோவிலின் விசேஷம் என்னவென்றால் இங்கு பொய் சத்தியம் போட முடியாது. போட்டால் கதை காலி. போட்டாலே மட்டுமல்ல பொய் சத்தியம் போடத்தயார் என்று சவால் விட்டாலும் போதும். எங்கள் முன்னாள் முதல்வரின் சகோதரர் முதல் இன்றைய முன்னாள் எம்.எல்.ஏ சி.கே.பாபு வரை பல கூறலாம்.