Saturday, September 29, 2007

ஆராய்ச்சியின் இடைக்கால முடிவு

நான் பிராமணன் அல்லன். இன்றுவரை ஜோதிடம்,வாஸ்து போன்றவைகளை ஆராய்ந்து வருகிறேன். என்னை நாடி வருவோருக்கு "இது என் ஆராய்ச்சியின் இடைக்கால முடிவு" என்று குறிப்பிட்டே ஆலோசனை வழங்குகிறேன்.
தெருக்குத்து என்ற ஒரே ஒரு அம்சத்தைப் பற்றி மட்டும் கூறி என் கருத்தை முடிக்கிறேன். தெருக்குத்து என்றால் கட்டிடத்தின் நேர் எதிரில் சாலை இருப்பதாகும். இது தீமை தரும் என்பது வாஸ்து.
ஒருவன் மற்றொருவனை கொல்ல விரட்டி வருகிறான் என்று வைய்யுங்கள். அவன் நேர் எதிரில் உள்ள நம் வீட்டுக்குள் தான் நுழைவான். அட ஒரு லாரி ப்ரேக் ஃபெயில் ஆகி அந்த சாலையில் வந்தால் அது நம் வீட்டுக்குள் தான் நுழையும்.

இந்த பிராமணர்களின் அறிவு மிக மிக கூர்மையானது. என்ன பிரச்சினை என்றால் அவர்கள் எதை இட்டு கட்டுகிறார்கள், எது சத்தியம் என்று நாம் தான் பகுத்தறிவுடன் யோசிக்க வேண்டும். அவர்கள் சொல்வதை அப்படியே எடுத்துக் கொண்டால் கதை கந்தல் தான்.

ஜோதிடம் குறித்த என் கருத்துக்களை மேலும் அறிய:
www.tamilvasam.blogspot.com