Sunday, September 9, 2007

க‌ண்ணால் பார்ப்ப‌தும் பொய்.


க‌ண்ணால் பார்ப்ப‌தும் பொய்..காதால் கேட்ப‌தும் பொய் என்பார்க‌ள். நான் ஒரு ந‌ண்ப‌னுக்கு நெட்டிலிருந்து எஸ்.எம்.எஸ் அனுப்புகிறேன்..அவ‌ன் உன் ச‌க‌வாச‌மே வேண்டாம் ஆளை விடு என்று Offline messege// அனுப்புகிறான். உட‌னே நான் உ.வ‌.ப்ப‌ட்டு மேற்ப‌டி வ‌லைப்பூவை எழுதி வைக்கிறேன்.
ம‌று நாள் ம‌ற்றொரு ந‌ண்ப‌ன்.."நாம‌ நின‌ச்ச‌து ச‌ரியாப் போச்சுப்பா அந்த‌ பொம்ப‌ள‌ ம‌றுப‌டி இவ‌னுக்கு SMS// அனுப்பினாப்பா? நான் ப‌க்க‌த்துல‌ இருந்த‌தால‌ உன் ச‌க‌வாச‌மே வேண்டாம் ஆளை விடு என்று Offline messege//அனுப்ப‌ வ‌ச்சிட்டேன் என்று கூறுகிறான். ஏதோ கெட்ட‌ நேர‌த்தில் ந‌ல்ல நேர‌ம் அன்று மேற்ப‌டி Offline messege//ஐ நான் ப‌டிக்கும் முன்பாக‌வே அவ‌ன் லாக் அவுட் செய்து விட்டான். பார்த்திங்க‌ளா..பெரிய‌வ‌ங்க‌ சொன்னா பெரும‌ள் சொன்ன‌ மாதிரி..இப்போ அன்னைக்கு நான் உ.வ.பட்டு எழுதிய வலைப்பூவை படிங்க..
1986 இல் தெருவில் சரண் புகுந்த காதல் ஜோடியில் பெண்ணை வீடு புகுந்து அனுபவித்துவிடவேண்டும் என்று ஒரு நண்பன் கூறிய தினம் முதல் நான் எந்த மனிதனையும் மனிதனாக மதிப்பதில்லை. மனிதன் என்பவன் தெய்வமாவது பிறகு..அவனை மனிதனாகவே தொடரச் செய்வதே முக்கியம். அதற்கு மனிதனின் மூளை,உடலுக்கு தொடர்ந்து வேலை தரப்பட வேண்டும்..இல்லையேல் அவன் மிருகமாவதை தடுக்க முடியாது. இது இன்று எடுத்த முடிவல்ல. 21 வருடங்களுக்கு முன்பு எடுத்த முடிவு. அதற்குத்தான் 10 கோடி வாலிபருடன் சிறப்பு ராணுவம், நதி நீர் இணைப்பு.
நிற்க..ஒரு நண்பன்(?) எனக்கு தகவல் கொடுத்திருந்தான். என்னை தொடர்பு கொள்வதாயில்லையாம்..நானும் கொள்ள கூடாதாம். இத்தனைக்கும் விஷயம் என்ன தெரியுமா?அவன் ஒரு திருமணமான பிராமண பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தான். ஆரம்பம் முதல் இது தகாது என்று சொல்லி வந்தவன் நான். 15 தினங்களுக்கு முன் அந்த பெண்ணின் தகப்பன் போலீஸில் புகார் கொடுத்து விட்டான்.(அவளுக்கு எத்தனை காதலர்கள் என்ற கணக்கு இன்னும் முடியவில்லை. கணவர்கள் மட்டும் 2)காவலர்கள் நண்பனை வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நான் எஸ்.ஐ. யிடம் பேசிப் பார்த்து நேரில் சென்றால் தினத்தந்தி பாணியில் அடி உதை கிடைக்குமே தவிர வழக்கு எதுவும் இராது என்று உறுதி கூறி ஸ்டேஷŒனுக்கு கூப்பிட்டேன். புஷ்,முஷாரப் ரேஞ்சில் சிபாரிசு பிடிப்பதில் நான் கைந்து தினங்கள் கடத்தி விட்டான். எஸ்.ஐ என்னை அழைத்து "உனக்கு அவ்ளோ ஸீனில்லை நீ கழண்டுக்கப்பா " என்று கூறிவிட்டார்.பிறகு எனக்கு ஒரு வார்த்தை கூட சொல்லாமல், வேறு வழியில்லாமல் போலீஸில் சரணடைந்து விட்டான். எல்லாம் முடிந்து 3 நாட்கŒள் கழித்து வெளி வந்த பிறகு நண்பர் கொடுத்ததுதான் மேற்சொன்ன தகவல்.இவன் போலீஸில் சரண் அடைந்த தகவல் தெரிந்து அவன் வீட்டுக்கு சென்று அவன் அம்மாவை கூப்பிட்டேன்..நீங்க வாங்க..உங்களுக்கு துணையா வர்ராப்ல நான் நுழைஞ்சி என் முயற்சி எதோ நான் செய்யறேன் என்று சொன்னேன். பெற்ற மனம் பித்தாம்..இடியட்ஸ்! அந்தம்மா சுத்தமா கழண்டுகிட்டாங்க..அம்மாவே கழண்டுகிட்ட பிறகு..நான் வலிய,தனிய போய் எஸ்.ஐ முன்னாடி கைகட்டி நிற்க நான் என்ன இ.வாயனா? இவன் என்ன துரியோதனன் நானென்ன கர்ணனா?