Saturday, September 22, 2007

என்னத்தை எழுத

எழுதப்பட்டதை படித்து கருத்து சொல்ல 10 பேர் கூட இல்லாத நிலையில் என்னத்தை எழுத என்ற சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. இத்தனைக்கும் வாசகனுக்கு என்ன தேவை, அதை எப்படி தரவேண்டும் என்று முழுக்க அறிந்தவன் நான். வாசகனுக்கு முக்கியத்தேவை சாதல் அல்லது சாகடித்தல். அது செக்ஸில் சாத்தியம்,பணத்தால் சாத்தியம். இவை இரண்டும் கிடைக்காத போதோ முழுக்க கிடைத்துவிட்டபோதோ ஆன்மீகம் தேவை. சாதல் என்பது ஆன்மீகத்தில் தான் 100 சதவீதம் சாத்தியம். அது தியானத்தில் தான் சாத்தியம். அலகு குத்திக் கொள்ளுதல் , மண்சோறு,விரதம் எல்லாமேஅவலை நினைத்து உரலை இடித்த கதைதான். எண்ணங்களை கொல்லும்போதுதான் மனிதன் மொத்தமாக சாகிறான்.செக்ஸில் உச்சக் கட்டத்தின் போது ஒரு சில வினாடி காலம் நின்று செத்ததைப் போல் உணர்கிறான் தட்ஸ் ஆல்