Tuesday, September 4, 2007

ஆர்குட்டை தடை செய்ய ஆ.வி.மாய்மாலம்


ஆர்குட்டை தடை செய்யும்படி ஆனந்த விகடன் மாய்மாலம் செய்து வருகிறது. ஆர்குட்டால் கொலைகள் நடக்கிறதாம். எனவே ஆர்குட்டை தடை செய்ய வேண்டுமாம்.


கம்யூனிஸ்டுகள் நடத்திய நில ஆக்கிரமிப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் மக்கள் செத்தனர். எனவே போராட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று கூட ஒரு பிரகிருதி வழக்குப் போட்டுள்ளது.


பார்ப்பன முதலாளித்துவத்தின், அச்சு ஊடகத்தின் பார்ப்பன சாதி செருக்கை எதிர்க்க மீதியுள்ள ஒரே தளம் தான் ஆர்குட். வேண்டுமானால் ஆ.வி நெருப்புக் கோழிபோல் தன் தலையை மணலுக்குள் நுழைத்துக் கொள்ளட்டும்.


ஆர்குட்டை தடை செய்ய கோருவது பார்ப்பன மாயையில் உள்ள திராவிடர்களையும் அணிதிரள வைத்து விடும் என்பது உறுதி.
ஆர்க்குட்டில் தப்பித் தவறி இடறும் ஒரு சில‌ ப‌குத்த‌றிவு வாதிக‌ளின் வாத‌ங்க‌ளையே சகித்துக் கொள்ள‌ முடியாது ஆர்குட்டை தடை செய்ய கோரும் ஆனந்த விகடனே..ஒரு ஆர்குட் தடை செய்யப்பட்டால் ஓராயிரம் ஆர்குட்டுகள் கிளம்பும்.


அன்னிய முதலீட்டையும், தாராளமயமாக்கத்தையும் வரவேற்ற விகடனே..அன்னிய முதலீடும்,தாராள மயமாக்கலும் ,தகவல் தொழில் நுட்ப புரட்சியும் சூத்திரர்களின் பிழைப்பை மட்டுமல்ல உங்கள் பிழைப்பையும் ஒழித்து கட்டும். சூத்திரப் பெண்களின் கற்புக்கு மட்டுமல்ல, உங்கள் வீட்டு பெண்களின் கற்புக்கும் விலை குறிக்கும் என்பதை இப்போதாவது உணர்ந்தால் சரி..