Monday, May 3, 2010

ஐ.டி துறையும் வாந்தி,வ.போக்கும்

கேள்வி :
நீங்க சர்ப்ப தோஷத்துக்கு சொல்லியிருக்கிற அன் வாரண்டெட் மோஷன்ஸ் இருக்கும், வாமிட்டிங் சென்ஸேஷன் இருக்கும்ங்கற பாயிண்ட் இன்னைக்கு உள்ள  ஐ.டி எம்ப்ளாயிஸ்ல நிறைய பேருக்கு இருக்கே ?
பதில்:
நீங்க எத்தனை பேரை அப்சர்வ் பண்ணிங்க அ எத்தனை பேரை சர்வே/கொஸன் பண்ணிங்கனு தெரியலை. நீங்க பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லே. நீங்க சொல்றதை நிஜம்னே வச்சுக்கிட்டு பதில் சொல்றேன். ஒகே ஜாதிக்கி செந்தின பட்சுலு ஒக்கே கூட்டிகி சேருதாயி (ஒரே இனத்து பறவைகள் ஒரே கூட்டில் வந்து சேரும்)ன்னு தெலுங்குல சொல்வாங்க. அதை மாதிரி சர்ப்ப தோஷம் இருக்கிற பார்ட்டிங்க எல்லாம் ஐ.டி. துறையையே ஆப்ட் பண்ணியிருக்கலாமில்லயா? சர்ப்ப தோஷமுள்ளவர்கள்னா என்ன ராகு,கேது தீமை செய்ற பொசிஷன்ல உள்ள ஜாதகர்கள் தானே.

வெளி நாட்டு தொடர்பு, சூதாட்டத்தனமான வளர்ச்சி, தேக்கம்,பின்னடைவு, முக்கியமா ராத்திரில செய்ற தொழில், போன்ற அம்சங்கள் உள்ளதால் ஐ.டி துறையை ராகு,கேது தொடர்பான தொழிலாகவே கொள்ளலாம். ஆக்சுவலா கம்யூனிகேஷனுக்கும், கணிதத்துக்கும் புதன் தான் அதிபதி. இந்த துறைக்கு புதன் தான் காரகனா இருக்கனும். ஆனால் மேற்சொன்ன அம்சங்கள் காரணமா காரகத்வம் மாறிப்போச்சு.
ஐ.டி துறை ராகு கேது ஆதிக்கத்தின் கீழ் வந்துருச்சி.

அப்போ ராகு கேது பலம் உள்ளவங்க தானே ஐடி துறைக்குவரனும், அப்படியிருந்தா ஏன் அவிகளுக்கு இந்த பிரச்சினை (அன் வாரண்டெட் மோஷன்ஸ்,வாமிட்டிங் சென்ஸேஷன்)  இருக்குனு நீங்க கேட்கலாம்.  சரியான கேள்வி.

மேட்டர் எப்படிரா போகுதுன்னா போலீஸ் படைக்கு காரகத்வம் வகிக்கிறது செவ்வாய். நியாயமா பார்த்தா செவ்வாய் பலம் உள்ள ஜாதகன் தான் போலீஸ் துறைல இருக்கனும்.ஆனால் ஒரு சர்வே எடுத்து பார்த்தா செவ்வாய் சரியில்லாதவன் தான் நிறைய பேரு போலீஸ்ல இருப்பான். இதுக்கு ஆதாரம் என்னன்னா செவ்வாய் பலம் உள்ளவனுக்கு ரத்தம் (பி.பி, ப்ளட் ஷுகர்,  ரத்த சோகை,பெப்டிக் அல்சர் ) எரிச்சல் (அல்சர்)  தொடர்பான வியாதி இருக்கவே இருக்காது, உடம்புல புல்லெட் காயம், வெட்டு காயம் தொடர்பான தழும்புங்கறதே இருக்காது.  ஆனால் இதெல்லாம் இல்லாத போலீஸ் எத்தனை பேரு இருப்பாங்கங்கறிங்க?

இது எப்படி நடக்குதுன்னா இதான் ரிவர்ஸ் எஃபெக்ட். ஆண் பெண்ணோட சேரனும், பெண் ஆணோட சேரனும். ஆனால் சின்னவயசுல ஆண்,ஆணோட தான் சேருவான், பெண் ,பெண்ணோட தான் சேருவாள்.

அதை மாதிரி எவன் போலீஸ் வேலைக்கே லாயக்கில்லையோ அவனுக்குதான் அது மேல நிறைய ஆர்வமிருக்கும். அலைஞ்சு பறை சாத்தி சேர்ந்துருவான். செவ்வாய் பலம் உள்ளவன் போலீஸ்ல சேரலைன்னாலும் போலீஸ் மாதிரிதான் இருப்பான், போலீஸ் மாதிரி தான் பிஹேவ் பண்ணுவான். ஒரு போலீஸ்காரருக்கு கிடைக்கிற மரியாதை அவனுக்கு சமுதாயத்துல கிடைக்கும். ஆனால் அவனுக்கு போலீஸ் வேலைக்கு போற ஆர்வமிருக்காது. முயற்சிக்கவும் மாட்டான்.

நிறைகுடம் தளும்பாதுனு கே. பட்டிருப்பிங்கல்ல. அதான் இது. 

அரை குறைங்க தான் அலைஞ்சு பறை சாத்தும். இந்த விதியின் படி ராகு,கேது சரியில்லாதவர்களே, சர்ப்ப தோஷம் உள்ளவர்களே ஐ.டி துறையை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.