Sunday, May 16, 2010

பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி : 7

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி தொடர்பதிவின் 7 ஆம் அத்யாயத்தை படிக்கப்போறிங்க

ஆரம்பத்துல வேள்வி/யாகம் பத்தி பெரிசா (வாயை) கிழிச்சிக்கிட்ட கீதாசாரியர் போக போக அடக்கி வாசிக்கிறார் பாருங்க . (காரணம் கீதை சொல்லப்படற காலத்துல நெருப்பு தன் முக்கியத்துவத்தை இழந்துருச்சு. வீட்டு பொருளாயிருச்சு. அதுக்கு எதையும் அர்ப்பணிக்கனுங்கற ஒரு கொண்டாட்ட உணர்வு போயிருச்சு. இருந்தாலும் கீதாசிரியர் நூல் விட்டு பார்க்கிறார்.சனம் ஏமார்ர வரை ஏமாறட்டுமேன்னு)

//பலவகையான விரதங்களை முறையாக கடைபிடிக்கும் முனிவர்களில் சிலர் பொருள்களை கொண்டு வேள்வி செய்கிறார்கள்.//
சொந்தமா சம்பாதிச்ச பணத்துல வாங்கி செய்யறதாயிருந்தா.பொருட்களை கொண்டு வேள்வி செய்யட்டும். வேணாங்கலை. (பொல்யூஷன் தான் இருந்தாலும் என்ன செய்ய தலைவருங்க செத்தா டயரை கொளுத்தி விட்டுர்ரானுங்க .. எதுனா கேட்க முடியுதா? மாசு கட்டுப்பாட்டு வாரியம் தான் தடை செய்யனும். நாம ஏதாச்சும் சொன்னா மத நம்பிக்கைன்னு அலம்பல் பண்ணுவாய்ங்க)

வேலை வெட்டி இல்லாத திண்ணைல கிடக்கிற இந்த பிரகிருதிங்க  மேற்படி பொருட்களை இதர வர்ணத்தார்கிட்டேருந்து  ஃபிலிம் காட்டி, பீலா  உடான்ஸ் ,குண்டு, டுமீல் விட்டு ,ரைட் பண்றதைதான் நான் எதிர்க்கிறேன்.

ராஜயோகத்துல  அஷ்டாங்க யோகம்னுவாங்க. அதுல யமம், நியமம்ங்கறதுக்கப்புறம் வர்ரது "பிரத்யாஹாரம்"  இதுக்கு  பிறருடைய பொருளை கவராதிருத்தல்னு அர்த்தம்.

கவருதல்னா லவட்டறது மட்டும்தான்னு  நினைச்சுராதிங்க. எதிராளி சொம்மா கொடுத்தா கூட வாங்க கூடாது. (இரும்பை வாங்கினா அவன் சனி உன்னை அடிக்கும், செம்பு வாங்கினா செவ்வாய், பித்தளை வாங்கினா சூரியன் இப்படி ஒவ்வொரு பொருளுக்கு ஒவ்வொரு கிரகம் அதிபதி. கொடுத்தவனுக்கு ரிலீஃப். வாங்கிக்கிட்டவனுக்கு ரிவிட். இது பொது விதி. இவிங்க அந்த காலத்துல இந்த மாதிரி சகட்டுமேனிக்கு லவுட்னதால இந்த காலத்துல நம்மாளு எம்.எல்.ஏ எம்பியா இருந்தா இவிக செக்ரட்ரி, ஐ ஏ எஸ்னு இருந்துக்கிட்டு குனிஞ்சு குனிஞ்சு வணக்கம் போட வேண்டியிருக்கு.

மாதா செய்தது மக்களுக்கு.

பிரத்யாஹாரங்கற இந்த விஷயம்  யோகசாதனைல வெற்றிய விரும்பறவங்க கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைமட்டுமில்லை ஊர் சனி நம்மை அடிச்சுராம இருக்க ஃபாலோ பண்ண வேண்டிய முக்கியமான டிப்.

இந்த இடத்துல என் அனுபவத்தை மட்டும் கொஞ்சமா சொல்லனும்.  நாம என்னதான் கடுமையா உழைச்சாலும் அதுக்கான கூலியை கொடுக்கிறான் பாருங்க அந்த கூலியோடவே அவனோட  கர்மமும் (வினை) ஒட்டிக்கிட்டு வந்துருது.

உங்க முதலாளி குடிகாரனா இருந்தா நீங்களும் குடிகாரனா மாற வாய்ப்பிருக்கு. உங்க முதலாளி ஊதாரியா இருந்தா நீங்களும் ஊதாரியா மாற வாய்ப்பிருக்கு  . மேலும் அந்த பணம் உங்க முதலாளி கிட்டே இருந்தா எந்த வகைல செலவழியுமோ அதேவழில செலவாகவும் வாய்ப்பிருக்கு .டேக் கேர். இது தர்ம நியாயமா கிடைச்ச கூலிக்கான விதி. இன்னம் லவட்டிக்கிட்டு வந்தா அதனோட விளைவு எப்படியிருக்குமோ அனுபவிச்சவுக சொல்லனும்.

ஜோதிட ஆலோசனை கட்டணமா வர்ர தொகைகள் மேல கூட  அந்தந்த ஜாதகர்களோட ஜாதகங்களின் இம்பாக்ட் இருக்குங்கண்ணா.  இது நிலைமை,

இந்த இழவுல இவிக (லவட்டி, ஏமாத்தி,மிரட்டி, இரந்து சேகரிச்ச  பொருட்களை, எவனோட உழைப்புலயோ விளைஞ்ச ,உருவான, பொருட்களை   கொண்டு  வேள்வி செய்வாய்ங்களாம். வேள்விகள்ள இருக்கிற பல வகைகள்ள இதுவும் ஒன்னாம் .  அப்படின்னு கண்ணன் சொன்னதா கீதை  சொல்லுது. இதை எப்படிங்கண்ணா நம்பறது?

வேள்விகளின் வகைகள் தொடர்கின்றன...

//சிலர் தவத்தால் வேள்வி செய்கிறார்கள்.//
தவம்னா என்ன? பத்மாசனம் ? மூக்கு   நுனியில் பார்வையை  நிறுத்தல் ? சுவாசத்தை கட்டுப்படுத்தல்?  பிராணயாமம் ?  எண்ணங்களை கவனித்தல்?  எண்ணங்களின் இடையிலான இடைவெளியை கவனித்தல்?

சரி எந்த அர்த்தத்துல சொல்றாரோ கீதாசிரியர் மொட்டையா  தவம்னிட்டாரு. அதனால் விட்டுருவம். இன்னொரு இடத்துல இதே மேட்டர் வருது .அப்ப மாட்டுவம்லே.

(அரசியல்வாதிங்க ஊழலை கூட தவமா செய்றாய்ங்க..அவிகளும் கீதைய படிச்சிருப்பாங்களோ?)

சிலர் யோகத்தால் வேள்வி செய்கிறார்கள். யோகம்னா ? ராஜயோகம்?

சரிங்கண்ணா தவம்,யோகம் ரெண்டையும் விட்டுருவம்.  ஏன்னா  இதனால எல்லாம் சமூக வாழ்வு பாதிக்கப்படறதில்லை. இதை காரணம் காட்டி சலுகைகள் கேட்காத வரை, விதிவிலக்குகள் கேட்காதவரை, இதை வச்சு நித்யானந்தா மாதிரி  சுரண்டாதவரை   நோ அப்ஜெக்சன். ஓஞ்சு போவட்டும்.

சில சாமியாருங்க கிட்ட உபதேசம் வாங்கனும்னா தங்க குச்சி கொண்டு போகனும். அந்த குச்சியால சாமியார் உங்க நாக்குல குறிப்பிட்ட பீஜாக்ஷரத்தை எழுதுவாரு. குச்சியை பல் குத்த வச்சிக்குவார். அடங்கொக்கமக்கா !

யாரு என்ன பீஜத்தை உச்சரிச்சா உடனடி லாட்டரி கணக்கா ஒர்க் அவுட்டாகும்னு ஒரு சமாசாரம் இருக்குங்கண்ணா கிருஷ்ணர் மாடுவிடாம பிழைச்சு கிடந்தா தனிப்பதிவே போட்ருவமில்லே..

எங்க ஊர்ல ஒரு யோகா சென்டர் இருக்கு.  சென்டரோட ஹெட் தன் சொந்த அண்ணனோட சொத்து பிரச்சினைக்காக ரோட்ல கட்டிபுரண்டு சண்டை போட்டாரு.

பிரமிட் யோகா பத்தி தெரியும்ல. அதுக்கு ஃபவுண்டர்  தாடி பத்திரியா .. இல்லே இல்லே சுபாஷ் பத்திரின்னு நினைக்கிறேன். ஒரு நாள் இவரு ஏதோ வென்யூல யோகா க்ளாஸ் கண்டக்ட் பண்ணிக்கிட்டிருக்காரு. ஒரு அம்மா பாவம் லேட்டா வந்த பதட்டத்துலயோ என்னமோ ரெண்டு நாற்காலிய நகர்த்தி கிகர்த்தி சத்தம் பண்ணிருச்சு உடனே சுபாஸு என்ன பண்ணாரு தெரியுமா? கச்சா முச்சானு திட்டி தீர்த்ததோட அந்தம்மாவ அறைஞ்சும் விட்டாராம். தெலுங்கு பேப்பர்லெல்லாம் நாறிப்போச்சு. இந்த மாதிரி தவம், யோகம்னா செவிட்லயே அறைங்க. தப்பே கிடையாது.

இவிக யோகா கத்துதர்ர பாஸு.. சபாஸு..

அடுத்த வரியை பாருங்க

//சிலர் கல்வியால் வேள்வி செய்கிறார்கள்.//

 கல்வின்னா என்னங்கண்ணா?

(இந்த காலத்து கல்வியை போட்டு குழப்பிக்காதிங்க. இது ஆன்மீக முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல வாழ்க்கை பற்றிய புரிதலுக்கு கூட பத்து பைசாவுக்கு பிரயோஜனப்படாத கல்வி)   

அந்த காலத்து கல்வி தெரியும்லியா? இந்த காலத்து சம்மர் கோர்ஸு மாதிரி இலக்கணம்,இலக்கியம் (பக்திதான் அதிகம்),வாழ்க்கைக்கு தேவையான திக்கு,திசை, கணக்கு போன்ற அம்சங்கள் அடங்கிய கல்வி. எல்லாமே பாட்டு வடிவத்துல இருக்கும். எல்லாத்தயுமே மனப்பாடம் பண்றது தான் மாணவர்களோட வேலை.

(இதே இழவை இந்த கூகுல் யுகத்துல கூட கல்வி நிறுவனங்கள் பின்பற்றுவதை என்ன சொல்ல?)   வயித்துப்பாட்டுக்கான  கல்வியாலயே வேள்வி செய்துர்ராங்களாம்.

இதுல இருந்து கீதை காலத்து  நான் ப்ராமின் லிட்டரசி பர்சண்டேஜை கெஸ் பண்ண முடியுது. கீதாசிரியரான பிராமணோத்தமர் கல்வி கற்கறதை கூட அதாவது லோகாயத கல்வி , அதாவது வயித்துப்பாட்டுக்கான கல்வியை கூட வேள்வி கணக்குல சேர்க்கிறார்னா அந்த காலத்துல பிராமணரல்லாதோர் படிக்கவே போகலன்னு  தான் கெஸ் பண்ண வேண்டியிருக்கு ,

இப்போ மாதிரி கண்ட சூத்திரப்பயலுவல்லாம் படிப்புல இறங்கியிருந்தா கீதை வேற மாதிரி சொல்லியிருக்கும்.

50 வருஷத்துக்கு முந்தி வெளியான பிராமணாள் எழுதின கதைகளை ஃபாலோ பண்ணியிருந்தா உங்களுக்கு அவிக எண்ண ஓட்டம் தெரிஞ்சிருக்கும்.

அவிங்களை பொருத்த வரை பிராமண குடும்பத்து  பிராமண சிறுவர்கள்  வேதம் கத்துக்கனும் . அதான் ஸ்ரேஷ்டம்.   ஏன்னா அதுதான் வித்தை. பிரிட்டீஷ்காரன் புண்ணியத்துல எல்லா சாதிக்காரனும் படிக்க போனதால மத்த கல்வியெல்லாம் அவித்தை, மிலேச்ச வித்தை, நீச வித்தை .ஆனால் விதியில்லாம "வயித்துப்பாட்டுக்காக  " நீச வித்தை கத்த்க்க வேண்டியிருக்கேனு  பாத்திரங்கள் புலம்பும்.

என்னடா கதைகளை ஆதாரமா காட்டறார் முருகேசனு நொந்துக்காதிங்க. கதைன்னா என்ன?  வானத்துல இருந்தா குதிக்குது. எல்லாம் சமூகத்தோட , முக்கியமா சொன்னா மீடியாவை பிடிக்குள்ள வச்சிருக்கிற அவாள் வாழ்க்கையோட  பிரதிபலிப்பு தான் இலக்கியங்கள்.

தி.ஜா.ராவோட அம்மா வந்தாள் படிச்சவுங்க ஜானகிராமனோட எழுத்து நடைல  அப்படியே கரைஞ்சு போயிருப்பாய்ங்க. ஆனால் இப்போ  உணர்ச்சிக்கு இடம் கொடுக்காம மேண்டேஜ் ஷாட்ல அந்த கதைய ஓட்டிப்பாருங்க. அம்மாக்காரி லோலாயி. யாரோ ஒரு  பண்ணையார்க்கு முந்தி விரிச்சவ. அவளை அந்த கில்ட்டி உறுத்திக்கிட்டே இருக்கு. அதனால என்ன பண்றா ஒரு பையனை வேதம் கத்துக்க அனுப்பறா. இதையும் வெறுமனே கதைன்னிராதிங்க. இதெல்லாம் அவாள் வாழ்க்கையோட பிரதிபலிப்புத்தான்.

ஆக கல்வி பிராமண இனத்துக்கு மட்டும் அவெய்லபிளா இருந்ததால கல்வி கூட வேள்விதான்னு கீதை சொல்லுது. அடுத்த வரியை பாருங்க!

சிலர் ஞானத்தால் வேள்வி செய்கிறார்கள்.

அடங்கொப்புரானே ஏற்கெனவே நீங்க விட்டிருக்கிற பீலாக்களின் படி பார்த்தால்  வேள்வி செய்தா ஞானம் வந்துரனும்லியா. அதென்ன அது ஞானத்தால வேள்வி செய்யறது?

எவனாச்சும்  ஒரே பை ப்ராடக்ட்லருந்து ப்ராடக்டை தயாரிச்சு அந்த ப்ராடக்டை வச்சு மறுபடி அதே பை ப்ராடக்ட தயாரிப்பானா?

தயிரை கடைஞ்சு வெண்ணை எடுத்தவன், மறுபடி  வெண்ணையை கடைஞ்சு தயிர் எடுப்பானா? என்னங்கடா  லாஜிக்கு ?

அடுத்தவரியை பாருங்க

// பொருளைக்கொண்டு செய்யப்படும் வேள்வியை காட்டிலும் ஞான வேள்வியே சிறந்தது.//

பாவம் அய்யருக்கே கில்ட்டி வந்துருச்சா இல்லே என்னடா இது நெருப்பு வீட்டுப்பொருளாயிருச்சு இப்ப போயி வேள்வி வேள்வினு தவளை மாதிரி கூச்சல் போட்டுட்டமே .. சனம் நம்மை அண்டர் எஸ்டிமேட் பண்ணிருமோ, அவுட் டேட்டட் ஃபெலோன்னிருமோ, நம்ம ஹிடன் அஜெண்டா புரிஞ்சுருமோன்னு சந்தேகம் வந்துட்டாப்ல இருக்கு. 

// பொருளைக்கொண்டு செய்யப்படும் வேள்வியை காட்டிலும் ஞான வேள்வியே சிறந்தது.//னு சொல்ட்டாரு.

ஞான வேள்வின்னா என்ன? குருகுலம் நடத்தறதா? இல்லே உபன்யாசம் கொடுக்கிறதா? இல்லே ஆசிரமம் வச்சி சிஷ்யகோடிகளை மோல்ட் பண்றதா? இல்லே திருவிளையாடல்ல கே.பி.சுந்தராம்பாள் மாதிரி "என்ன? என்ன? என்ன?"ன்னோ அ சுஜாதா மாதிரி ஏன்? எதற்கு? எப்படி?ன்னு தொடர் எழுதறதா? எந்த இழவா இருந்தாலும் ஞான வேள்விங்கற வார்த்தையே பம்மாத்தா தான் இருக்கு.

நான் ஞான வேள்வி செய்யறேன். எனவே நான் உழ மாட்டேன். விதைக்க மாட்டேன். கிராம மக்கள் எனக்கு படியளந்துரனும்னு சொல்ல இது ஒரு சதியோன்னும்  சந்தேகம் வருது.

ஏற்கெனவே ஒரு பதிவுல சொல்லியிருக்கேன்.

மூளை : இதுக்கு எத்தனை ஹார்ட் ஒர்க் தர்ரோமோ அந்த அளவுக்கு (குறிப்பிட்ட காலம் ) ஸ்ட் ராங்க் ஆயிட்டே வரும். ஒரு ஸ்டேஜுக்கப்புறம் ரெஸ்ட் லெஸ் நெஸ் அதிகரிக்கும். மூளைக்கு ஓய்விருக்காது. சைலன்சர் இல்லாத இஞ்சின் மாதிரி ஓட ஆரம்பிக்கும். பாடி காட்பாடி ஆயிரும்.

உடல்: இதுக்கு எத்தனை ஹார்ட் ஒர்க் தரோமோ அந்த அளவுக்கு இது ஸ்ட் ராங் ஆகும்.  அதே நேரத்துல மூளைக்கு சூப்பர் ஓய்வு கிடைக்கும். எண்ணங்கள் கொஞ்சமாச்சும் நிதானமா கேட் வாக் பண்றதா   இருந்தா அதுகளை கவனிக்க முடியும். கொஞ்சமா முக்கினா எண்ணங்களுக்கு இடையிலான இடைவெளியையும் கவனிக்க முடியும். அதான் யோகம். இதனாலதான் நிறைய உண்மையான ஞானிகள் ஏதோ ஒரு கை  வேலைய இடை  விடாம செய்துக்கிட்டிருப்பாய்ங்க.

இவிக இப்படியே பல டெக்கேட்ஸா  நோகாம நோன்பு கும்பிட்டுக்கிட்டிருந்தாங்க போல.  இதனால என்னாச்சு மைண்ட் ரெஸ்ட் காலி. பாடி காட்பாடி. பலவீனமே எல்லா பாவங்களுக்கும் பிறப்பிடம்ங்கறதால வித்தைய ஒளிக்கிறது, ஒன்னுமில்லாததை வச்சு பூச்சி காட்டறது, சதி,ஆட்காட்டி வேலைகனு இறங்கிட்டாய்ங்க.

தீட்டிவச்ச க(பு) த்தி (இன)எதிரியையும் குத்தும். சகோதரனையும் குத்தும். இவிக அறிவு சாஸ்தியாகி இவிகளே மேஜரா  ரெண்டு க்ரூப்பாகி, மைனரா பல க்ரூப்பாகி  தங்கள் கல்யாண குணங்கள் காரணமா வெட்டி மடிஞ்சு ரோட்டுக்கு வந்துட்டாய்ங்க.


// பொருளைக்கொண்டு செய்யப்படும் வேள்வியை காட்டிலும் ஞான வேள்வியே சிறந்தது.//னு பதிவிரதைதனமா சொல்லிட்ட கீதாசிரியர் நாக்கை கடிச்சுக்கிட்டு உடனே இட்டு நிரப்பறார் பாருங்க

// எந்த கருமமும் ஞானத்தில் தான் முடிவடைகிறது.//  கருமம்னா செயல் தானே. சங்கர்ராமனை போட்டுத்தள்ள ஏற்பாடு பண்ணதும் கருமம் தான். அதுவும் ஞானத்துல தான் முடிஞ்சதுன்னுவாங்களோ?

கீதையோட சாரத்துக்கு வந்திருக்கம். கீழே உள்ள வரியை பாருங்க:

//செயலை துறப்பது - செயலை செய்வது இந்த இரண்டுமே சுவர்கத்திற்கு நம்மை இட்டுச்செல்லும். //

செயலை துறப்பதுன்னா சன்னியாச யோகம், செயலை செய்வதுன்னா கர்ம யோகம்.
இந்த இரண்டுமே மனிதனை ஸ்வர்கத்துக்கு இட்டு செல்லுமாம். 

பிராமணனா இருந்தா உடலுழைப்பு கிடையாது,  அரிசி பருப்பு எல்லாமே ஓசி.  இதுல புரோகிதம், உபன்யாசம்னு போனா காசு,பணம்,பசு,  ராசா கிட்டே செல்வாக்கு, அதிகார வர்கத்தோட நெருக்கம். அரசவைல கொக்கோகம், வாத்சாயணர்னு பேசிட்டு வீட்டுக்கு  வந்து மூக்கு பிடிக்க தின்னுட்டு ( பாரதியார் தான் சொல்வாரு உழைப்பே இல்லாம வெறுமனே தின்னு  தின்னு புடைச்ச வயிறு செரிக்க சிரமப்படறதுன்னு தொந்திக்கு சந்தனலங்காரம் பண்ணுவாளாம்.) "ஏண்டி பாகீரதி ! நான் செத்த கண்ணசர்ரேன்"னுட்டு மதிய தூக்கம் ,இவனுக்கு ஓசில கிடைச்ச பசுக்கூட்டத்தை ஓசில  மேய்க்க ஆளிருக்கும் இதை விட  ஸ்வர்கம் வேற எங்கே இருக்கும்ங்கறிங்க?

இந்த லைஃபை விட்டுட்டு என்ன  இழவுக்கு  கர்ம சன்னியாசம், கர்ம யோகம்னு அவாள் மண்டைய உடைச்சுக்கனும் சொல்லுங்கோ ?

இதே சத்திரியனா இருந்தா உயிரை பணயம் வைக்கிற போர்கள், போருக்கு போறச்ச முன்னணில நிக்கனும், வெற்றி ஊர்வலம்னு வந்துட்டா  பின்னணிக்கு போயிரனும் அவாள்ளாம் ராசா யுத்தத்துல செயிக்க யாகம் பண்ணுவா, மந்திர ஜலம் தெளிச்சு வழியனுப்புவா. தட்ஸால். ராசா ஜெயிச்சு திரும்பிட்டா அவனை வரவேற்க இவாள் தான் போகனும்.  தப்பித்தவறி நம்ம ராசா "ஊத்தையாகி" எதிரி ராசா ஊருக்குள்ள வண்டான்னா அவனையும் இந்த பன்னாடைங்க போய் வரவேத்து மந்திர ஜலம் தெளிக்கும்.

இதே சூத்திரனா இருந்தா , கடும் உடலுழைப்பு,அடிமை வாழ்க்கை, சுரண்டலுக்கு இலக்கு, அவிக மயிரும் இவன் உயிரும் ஒன்னுங்கற நிலைமை

இதே வைசியனா இருந்தா யுத்தகாலம்னா படை திரட்ட பணம் தரனும், சாந்தி காலம்னா கோவில் கட்ட பணம் தரனும், கொள்ளைக்காரனையும் சமாளிக்கனும்,படை வீரனையும் சமாளிக்கனும். கரணம் தப்பினா மரணம் மாதிரி கடற்பயணம்,சாலைவழிப்பயணம்.

இவிக வாழ்க்கைக்கு மிஞ்சின நரகம் எங்கன இருக்கு ?

இந்த வர்ண பேதம் ஏதோ இயற்கையில  ஏற்பட்டுருச்சு இதை முதல் வர்ணத்தான் தன் சுய நலத்துக்காக ராசாங்க துணையோட  நிரந்தரமாக்கிட்டான். . நீ யுத்தம் பண்ணு  . ஆம்பளை எல்லாம் சாவான்.  பொம்பளையெல்லாம் தாலியறுப்பா. ஆண் துணை தேடறப்ப வர்ணம்,சாதி பேதம்லா பார்க்க முடியாது . ஸோ  இந்த வர்ண பேதம் எல்லாம் காணாம போயிரும் .கலப்பினம் ஏற்படும். ஒரு வர்ணத்துக்கு சொர்கமாவும், மத்த மூனு வர்கத்துக்கு நரகமாவும் மாறிட்ட இந்த உலகத்தை (கு,பட்சம் பாரத நாட்டை) உழைக்க தயாரா இருக்கிற  சகல வர்ணத்தாருக்கும் சொர்கமாக்குன்னு  கண்ணன் சொன்னதா சொல்லியிருந்தா ஓகே.  ஏன்னா ....

கண்ணன் இதையெல்லாம் வாயா வார்த்தையா சொல்லலியே தவிர (As per the Geetha  prevailinga at present)  காரியத்தை கன கச்சிதமா முடிச்சுட்டாரு. (As per Maha bharatha)

அதை விட்டுட்டு  கர்ம யோகம், கர்ம சன்னியாசம் ரெண்டுமே சொர்கத்துக்கு கூட்டிப்போகும்னு சொல்ல ஒரு கண்ணன் தேவையில்லே. ஒரு வேளை சொல்ல வேண்டி வந்திருந்தாலும் தன்னோட இயல்பான மொழில, தன் அனுபவங்களில் கிடைச்ச பாடங்களை, தன் வாழ்க்கை தந்த உவமைகளோட   சொல்லியிருப்பான்.

லல்லு பிரசாத் யாதவை கேம்பிரிட்ஜ்ல எம்.பி.ஏ ஸ்டூடென்ட்ஸுக்கு பாடம் நடத்த சொன்னாய்ங்க. அப்போ லாலு என்னா சொன்னாரு தெரியுமா?

எனக்கு பிஸினஸ் மேனேஜ்மென்டும் தெரியாது . ஒரு மயிரும் தெரியாது. நான் மாட்டுக்காரன். பால் கொடுக்கிற மாட்டுக்கு நிறைய புண்ணாக்கு போட்டேன்.  நிறைய புண்ணாக்கு சாப்பிட்ட மாட்டை செமர்த்தியா கறந்தேன். தட்ஸால்னாரு

கண்ணனோட வாழ்க்கைல இரண்டற கலந்த விஷயங்கள் எத்தனை எத்தனையோ?
யசோதை, பால்,தயிர்,வெண்ணை,பசு,புல்லாங்குழல்,துளசி,கோபிகைகள், ராதா,ருக்மினி, பிருந்தாவனம், துவாரகை இப்டி மஸ்தா கீதுனா. கீதைல இதெல்லாம் எத்தனை தடவை வந்திருக்குன்னு வோர்ட் கவுண்ட் எதுனா கீதா?

இப்போ செலாவணில இருக்கிற கீதை கண்ணன் சொன்ன உண்மையான கீதையில்லேங்கறதுக்கு இதைவிட ஆதாரம் என்ன வேணும்.