Monday, November 12, 2007

நீயும் பெரிய மனுஷங்க லிஸ்டுல சேர்ந்துட்டயா ?

மனசாட்சி: என்னா நைனா. நீயும் பெரிய மனுஷங்க லிஸ்டுல சேர்ந்துட்டயா ? பழசயெல்லாம் மறந்துட்டயா?

முருகேஷன்: இல்ல மனசாட்சி..பழச மறந்தா கதி மோட்சமே கிடையாது


மனசாட்சி: பின்னே..ஆப்பரேஷன் இந்தியா 2000 பத்தின பேச்சே காணோமே!

முருகேஷன்: அதெல்லாம் ஒன்னுமில்லே இந்த‌ மாச‌ம் த‌ந்தில‌ ச‌ம்ப‌ள‌ம் வாங்கின‌ உட‌னே முத‌ல் வேலை இய‌ர் பேன‌ல் விள‌ம்ப‌ர‌ம் கொடுத்து என் வ‌லைப்பூக்க‌ளுக்கு ஹிட்ஸை அதிக‌ரிக்க‌ போறேன்

மனசாட்சி: பார்த்த‌யா..ச‌த்யா ல‌ட்சுமி பூஜை ப‌ண்ற‌துக்கும் நீ விள‌ம்ப‌ர‌ம் த‌ர்ர‌துக்கும் வித்யாச‌மே இல்லையே

முருகேஷன்:பின்னே ஒவ்வொரு ஆசாமிக்கும் மெயில்,ஸ்க்ராப் அனுப்ப‌ சொல்றியா

மனசாட்சி: அதுலதான் க‌ண்ணா த்ரில். ஒவ்வொரு மெயில்,ஸ்க்ராப்போடயும் உன் ஆத்ம சக்தி சேர்ந்து போகும்பா ..விளம்பரம்லாம் ஈஸ்வர்ராவ் பண்ற வேலை

முருகேஷன்: ச‌ரி அப்ப‌டியே செய்தா போச்சு

மனசாட்சி: ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா ப‌த்தி சுப்ரீம் கோர்ட்டுல‌ ரிட் போட‌ற‌தா சொன்னாப்ல‌ ஞாப‌க‌ம்.

முருகேஷன்:அட‌ ஆமாம் ம‌ன‌சாட்சி அதுக்கு இன்க‌ம் ச‌ர்ட்டிஃபிகேட் வேற‌ வாங்க‌னும். என்ன‌த்தை ப‌ண்ணி என்ன‌ புண்ணிய‌ம் எல்லாம் கிண‌த்துல‌ போட்ட‌ க‌ல்லுதான். ச‌மீப‌த்துல‌ கூட‌ எல்லா ப‌த்திரிக்கை ஆசிரிய‌ர்க‌ளுக்கும் ஆ.இ ப‌த்தி டைப்ட் மேட்ட‌ரே அனுப்பி வ‌ச்சேன். ஒரு வி.ம‌. ம‌க‌ன் கூட‌ போட‌லே

மனசாட்சி: த‌ பார்..இந்த‌ கெட்ட‌ வார்த்தையெல்லாம் சுஜாதா நாவ‌ல்ல‌தான் ஒத்துக்குவாங்க‌, நீ உப‌யோகிச்சா உன் வலைப் பூவை த‌டை ப‌ண்ணிருவாங்க‌

முருகேஷன்: அம்பேல்! அம்பேல்! வாப‌ஸ் வாங்கிக்கிற‌ம்பா ஏதோ என் வ‌யித்தெரிச்ச‌லை தேன் கூடு,த‌மிழ் ம‌ண‌ம் உப‌ய‌த்துல‌ 10 பேராவ‌து ப‌டிக்கிறாங்க‌ அதுக்கும் ஆப்பு வ‌ந்துர‌ப் போவுது

மனசாட்சி: ஜோதிட‌ பூமி, நிலாச்சார‌லுக்கெல்லாம் அடுத்த‌ப‌டியா என்ன‌ த‌ர்ர‌தா உத்தேச‌ம்

முருகேஷன்:"மாறி வ‌ரும் அர‌சிய‌ல் சூழ‌லில் ராஜ‌ யோக‌ம்"

மனசாட்சி: கிழிஞ்ச‌து ல‌ம்பாடி லுங்கி ..பெருவாரியான ஜன‌த்துக்கு உப‌யோக‌மான‌ விஷ‌ய‌த்தை எழுதுப்பா

முருகேஷன்: அப்போ எல்லோருக்கும் த‌ன‌ யோக‌ம் எழுதிர்ர‌ன்

மனசாட்சி: வெரி குட்.. கீப் இட் அப்

முருகேஷன்: இன்னொரு விஷ‌ய‌ம் தெரியுமா ..பெண்டாட்டிய‌ ஒரு 3 மாச‌த்துக்கு பேர‌ணாம்ப‌ட்டுக்கு பார்ச‌ல் ப‌ண்ணிட்டு முழு மூச்சா எழுத்துல‌ இற‌ங்க‌ போறேன்

மனசாட்சி: த‌ பார்ரா..எழுத்து எழுத்துன்னுட்டு ப‌ட‌க்குனு எதாச்சும் குட்டியை தொட்டுட‌ப்போற‌பா

முருகேஷன்: பாரு ம‌ன‌சாட்சி நான் த‌ப்பு ப‌ண்ண‌வ‌ன் தான்/ இனியும் ப‌ண்ண‌ப்போற‌வ‌ன் தான் ஆனால் புதுசு புதுசா தான் த‌ப்பு ப‌ண்ணுவேன்