Wednesday, August 25, 2010

பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி

பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி

பகவத்கீதைன்னா யூத்தை பொருத்தவரை ஏதோ விஜய் படத்துல கூட வந்ததே அதுவாங்கற ஐடியா தான் இருக்கும். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கோர்ட்ல சத்திய பிரமாணம் வாங்கற சீன் ஞா வரும். மிஞ்சிப்போனா வெளியூர் போன ஹீரோ திரும்பி வரச்ச தாத்தா அ பாட்டிக்கு "உங்களுக்கு பகவத்கீதை" ன்னிட்டு தர்ர சீன் ஞா வரும்.





ஆந்திராவுல கண்டசாலா பகவத்கீதை கேசட் ரெம்ப பிரபலம். அதை எடிட் பண்ணனும்னு எனக்கு ஒரு ஐடியா. கண்டசாலா ஞா இருக்குங்களாண்ணா. "கல்யாண சமையல் சாதம்" பாட்டு ஞா இருக்கா? அந்த குரலை வச்சுக்கிட்டு அர்ச்சுனனோட வெர்ஷனுக்கும் அவர் குரலே பலான யோகம் , பலான யோகம் முற்றும்ங்கற மாதிரி இணைப்புரைக்கும் அந்த குரலே. அர்ச்சுனனோட வெர்ஷனை எஸ்.பி.பால

சுப்பிரமணியம் குரல்ல ரெக்கார்ட் பண்ணி எடிட் பண்ணுங்கப்பா.



வேலை வெட்டினு இருக்கிறச்ச பணம் பதவின்னு அங்காடி நாயா அலைய வேண்டியது ரிட்டையர் ஆனதும் காலிகோ பைண்ட் பகவத் கீதை புஸ்தவம் வாங்கி வச்சுக்கிட்டு சீன் போட வேண்டியது. இதுவா வாழ்க்கை? தூத்தேறிக்க.



கீதைய கிழிக்கிறதோட நிப்பாட்டுவன்னு நினைக்காதிங்கண்ணா. இந்த தொடரை எழுத கீதைய உன்னிப்பா படிக்கிறச்ச சில ப்ளஸ் எல்லாம் கூட கண்ல பட்டது அதையெல்லாம் வச்சு இன்னொரு தொடர் எழுத உத்தேசம். மொக்கை சாஸ்தியாயிருச்சு. விஷயத்துக்கு வர்ரேன்.



கிருஷ்ணரோட விஸ்வரூபத்தை பார்த்த அர்ச்சுனனின் புலம்பலை தொடர்ந்து கிருஷ்ணர் உதிர்த்ததா சொல்லப்படற முத்துக்களோட தரத்தை பார்த்துக்கிட்டு இருக்கோம். மேட்டருக்கு வரேன். கிஷ்டரோட அடுத்த வரிய பாருங்க



//சிலர் தத்துவ அறிவாலும்,சிலர் காரிய சிந்தனையாலும் ஆத்மாவை பார்க்கிறார்கள்.//



தத்துவம்ங்கற வார்த்தைக்கு நீங்க ஃபிலாசஃபினு அர்த்தம் சொல்விங்க. தமிழ்ல இதை வேதாந்தம்னும் சிலர் சொல்றாய்ங்க. இந்த தத்துவம்ங்கற வார்த்தை இந்த அர்த்தத்துல தான் செலாவணி ஆயிட்டிருக்கு.



ஆக்சுவலா தத்துவம்னா இயல்புனு அர்த்தம். உ.ம்: மனோதத்துவம்னா மனதின் இயல்பு. தத்துவம்னா அது மனித வாழ்வின் இயல்பை ஆராயக்கூடியதா இருக்கனும்.



ஆனா தத்துவம்ங்கற கேட்டகிரில அவாளாகட்டும், இன்ன பிறராகட்டும் சொல்லி வச்சிருக்கிறதெல்லாமே மனிதனை அவன் இயல்புக்கு அவனோட வாழ்வின் இயல்புக்கு எதிரா சிந்திக்க வைக்கிறதாவே இருக்கு.



ஆனா கிட்னர் என்ன சொல்றார் பாருங்க..



//சிலர் தத்துவ அறிவாலும்,சிலர் காரிய சிந்தனையாலும் ஆத்மாவை பார்க்கிறார்கள்.//



தத்துவம்ங்கறதே டுபாகூரு. ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வாரு " ஒரு காயிதத்துல சர்க்கரைனு எழுதி வச்சு அதை நக்கினா இனிக்குமா?" தத்துவ வாதிகள்னு சொல்லப்படறவுக சர்க்கரைனு எழுதி நக்கின பார்ட்டியா இருந்தாலும் பரவாயில்லை அதை ஒரு தாட்டி கூட , கண்ணால பார்க்காம, நாக்கால நக்காம அதை பத்தி வால்யூம் வால்யூமா எழுதி வருஷ கணக்கா பேசிட்டு போய் சேர்ந்த பார்ட்டிங்க.



ஆனால் கிட்ணர் சொல்றாரு தத்துவ அறிவால ஆத்மாவ பார்க்கிறாய்ங்களாம். நாளிதுவரை ஆத்மா பத்தி சொல்லப்பட்ட செனேரியோவ வச்சு பார்த்தா அது அறிவை ,சிந்தனையை எல்லாம் கடந்தது. ஆனால் கிட்னர் ............



//சிலர் தத்துவ அறிவாலும்,சிலர் காரிய சிந்தனையாலும் ஆத்மாவை பார்க்கிறார்கள்.//



தெரிஞ்சதை தான் சிந்திக்க முடியும். தெரியாததை சிந்திக்க முடியுமா? கற்பனை வேணம்னா பண்ண முடியும். அதனாலதான் தத்துவ வாதிகளை விட கவிஞர்கள் குருட்டாம்போக்குல சத்தியத்தை டச் பண்ணிர்ராய்ங்க.



சிந்தனைக்கு ஈகோ உண்டு. அறிவுக்கு ஈகோ உண்டு .ஆனால் கற்பனைக்கு ஈகோ இல்லை. அதனால தான் கற்பனை சில சமயம் சத்தியத்தை டச் பண்ணிருது. ஆனால் பாருங்க கிட்னர் சொல்றாரு சிந்தனையால ஆன்மாவ பார்க்கிறார்களாம்.



( சிந்தனை காரியமாகும். காரியத்துக்கு முந்தி சிந்திப்பாய்ங்க .சிந்தனையிலயும் சிந்தனை காரிய சிந்தனைன்னா என்னங்கண்ணா? )



தொடர்ந்து வர்ர ஸ்டேட்மென்டை பாருங்க. (இதுவும் கிட்ணரோட ஸ்டேட்மென்டுதான்)



//வேறு சிலரோ இது புரியாமல் யாராவது சொல்லக்கேட்டு அதன் படி ஆத்மாவை தேடுகிறார்கள்.//



தத்துவமே டுபாகூர். தெரிஞ்சதை தான் சிந்திக்க முடியும், தெரியாத ஆன்மாவை எப்படி சிந்திக்க முடியும்னு கிழிச்சு தொங்க விட்டாச்சு. இங்கன இன்னம் ஒருபடி மேல போய் " யாராவது சொல்லக்கேட்டு அதன் படி ஆத்மாவை தேடுகிறார்கள்"

ஆத்மா என்ன ரைஸ் புல்லிங்கா? எவனோ சொல்லக்கேட்டு தேட.



இதனோட நோக்கம் என்னடான்னா உனக்கு ஒரு மயிரும் புரியலைன்னாலும் பரவால்ல. நாங்க சொல்றதை வாய்ல கொசு போறது தெரியாம கேளு. தேட் அப்பத்தான் நாங்க உழைக்காம, உங்க உழைப்புல உண்ண முடியும்ங்கறதுதான்



கிருஷ்ணரோட லைஃப்ல நமக்கு தெரியற ப்ராக்டிக்காலிட்டிக்கு இந்த ஸ்டேட்மென்ட் கடுகளவாச்சும் பொருந்துதா பாஸு. கேள்வி ஞானத்தை ரெக்கமெண்ட் பண்ற கேரக்டரா கிருஷ்ணருது. கேள்வி ஞானத்துல திருப்தியடையற பார்ட்டியா இருந்தா கோபிகைகள் குளிக்கிற இடத்துக்கு போக வேண்டிய அவசியமே இல்லையே வேற எவனோ பார்த்துட்டு வந்து சொன்னா போதும்னு கிடந்திருப்பாரே.



அடுத்துவர்ர ஸ்டேட்மென்ட் செம காமெடி ...



//அந்த கேள்வி ஞானத்தை பெரிதாக மதிப்பவர்களும் பிறப்பு இறப்பற்ற நிலையை அடைகிறார்கள்//



ஒரு ஆளு கேள்வி ஞானத்தை பெருசா மதிக்கிற கேட்டகிரின்னா அவனுக்குள்ள எந்த விதமான கேள்வியும் தேடலும் இல்லைனு அர்த்தம். அப்படியே இருந்தாலும் கேள்வி ஞானத்துலயே திருப்தி அடையறான்னா அவனோட கேள்வி,தேடல் எல்லாம் பாசாங்குனு அர்த்தம்.



சந்தையை விரிவுப்படுத்திக்கிட்டே போறது அவாள் டெக்னிக். பாரதத்தை முழுக்கா படிச்ச சொர்கம்னுவான். அப்பாறம் குறிப்பிட்ட பார்ட்டை படிச்சா போதும்னு ரிலாக்சேஷன் கொடுப்பான். அப்பாறம் உன்னால முடியலைன்னா குறிப்பிட்ட ஒரே ஸ்லோகத்தை படின்னுவான். இதெல்லாம் ஒரு ரூபாய்க்கு சிம் கார்டு விக்கிற மார்க்கெட்டிங் டெக்னிக். இதை கிருஷ்ணர் உபயோகிச்சுருப்பாருனு நான் கற்பனை கூட பண்ண மாட்டேன். இதுவும் அவாளோட கைவரிசையாதான் இருக்கும்.



//இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது//

அப்ப கிட்ணர் என்னத்த கழட்டறாரு? இந்த பஞ்ச கச்சங்கள் என்னத்தை கழட்டறாய்ங்க. இயற்கை தான் அனைத்தையும் செய்யுது. இல்லேங்கலை. ஆனால் மனிதன் இயற்கையோட மீனியேச்சர். இயற்கையோட செயல்பாடுகளுக்கு மனிதனும் பொறுப்பு வகிக்கிறான். அதை அவன் உணரமுடியாம இருக்கலாம் .அது வேற கதை.



அதை அனுபவத்துல உணர்ரதுதான் ஞானம். ஞானேஸ்வரனான கண்ணன் இப்படி

//இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது//னு மொட்டையா சொல்ட்டு கழண்டுக்குனாருன்னா நான் எப்படி நம்புவேன். உண்மையிலயே கிருஷ்ணர் //இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது//ன்னு நம்பியிருந்தா கம்சன் தன்னை கொல்றதும் இயற்கையோட வேலைதானு கழுத்தை ஆல்கஹால்ல நனைச்ச பஞ்சால தடவிட்டு காட்டியிருப்பாரே. திரவுபதி வஸ்திராபரணம் நடந்தப்ப ஹிண்டு ரிப்போர்ட்டர் கணக்கா ஸ்பைரல் நோட்புக்ல குறிப்பெடுத்துக்கிட்டிருந்திருப்பாரே.



//ஆத்மா அதற்கு காரணமன்று//



மனிதன் இயற்கையோட மீனியேச்சர். இயற்கையோட செயல்பாடுகளுக்கு மனிதனும் பொறுப்பு வகிக்கிறான்னு சொல்லி ஒரு நிமிஷம் கூட ஆகலை கிட்ணரோட ஸ்டேட் மென்டை பாருங்க //ஆத்மா அதற்கு காரணமன்று//



இயற்கையின் செயல்பாட்டுக்கு மனிதனே பொறுப்பு வகிக்கனும்னு சொன்னேன். ஞானமடைந்த ,ஆன்மாவை உணர்ந்த மனிதனில்லே பாஸு. சாமானிய மன்சனை சொன்னேன். ஆன்மாவை உணர்ந்த மனிதனுக்கு நான் தனியா சொல்லத்தேவையில்லை .. ஆட்டோ மேட்டிக்கா அவனுக்குள்ள அந்த உணர்வு வந்துரும். இன்னம் ஆன்மாவ பத்தி என்ன சொல்ல?



ஆன்மாவை மனசு,மனசை அறிவு, அறிவை அகந்தை அழுத்திக்கிட்டிருக்கிற கண்டிஷன்லயே இயற்கையோட நிகழ்வுகளுக்கு மனிதனும் பொறுப்புனு சொன்னேன்.

மேற்படி கஸ்மாலத்துலருந்தெல்லாம் கழண்டுகிட்ட ஆன்மாவ பத்தி சொல்லனும்னா அது நத்திங் பட் பார்ட் அண்ட் பார்ஷல் ஆஃப் ஆல் மைட்டி.



இயற்கை தான் இறைவன். இயற்கையோட செயல்களுக்கு இயற்கையை போலவே (இறைவனை போலவே) மனிதனும் பொறுப்பு. தன்னை அழுத்திக்கிட்டிருக்கிற மனசு,அறிவு,அகந்தைலருந்து ரிலீஸ் ஆயிட்ட ஆன்மா இயற்கையில ஒரு பாகமாயிருது. பாகம் என்ன பாகம்............. இயற்கையில இரண்டற கலந்துருது.

(இதைத்தான் நம்மாளுங்க செத்தார்ங்கறதுக்கு இயற்கை (நிலை) எய்தினாருன்னு போட்டுக்கிட்டிருந்தாய்ங்க.





ஆனா இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதைல கிட்ணர் என்ன சொல்றாரு?



//இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது. ஆத்மா அதற்கு காரணமன்று. என்று எவன் கண்டு கொள்கிறானோ அவனே பேரறிஞன்//



எம்மாம் பெரீ வைட் மார்க்கெட் பார்த்தியா துரை! இந்த டுபாகூர் ஸ்டேட்மென்டை எந்த கூமுட்டையும் ஆகே பீச்சே மூடிக்கிட்டு ஏத்துக்குவான். ஆத்மாங்கற வார்த்தைய எடுத்துட்டு மனிதன்னு மாத்தி பெரியார் கிட்டே காட்டியிருந்தா அவரும் இதை ஏத்துக்கிட்டிருப்பாரு.



இது ஒரு ரூபாய்க்கு சிம் காரடு விக்கிற டெக்னிக் இல்லையா? மார்க்கெட்டை வைடன் பண்ணிக்கிற தந்திரமில்லையா? அவிக உழைப்புல வாழற குயுக்தியில்லையா?



இதை கண்ணன் சொல்லியிருப்பானா? பார்ப்பனன் சொல்லியிருப்பானா? ரோசிச்சு பாருங்க