Monday, August 9, 2010

பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி (அ)

அண்ணே,

ரெம்ப நாளைக்கு மிந்தி பகவத் கீதை - ஒரு உட்டாலக்கடி என்ற தலைப்புல ஒரு தொடர்பதிவு போட்டது ஞா இருக்கலாம். நாம லா.ச.ரா மாதிரி நெருப்புன்னா வாய் வெந்துரனும். இவிக வெறுமனே கீதையா அது ஆஹா .. அது ஓஹோனு பில்டப் கொடுக்கிறாய்ங்க. பாம்பு பாட்டுக்கு சிவனேனு போய்கிட்டிருக்குமாம். தவளைங்க சொம்மா இல்லாத "தவளை கூச்சல்" போட்டு கூப்டுமாம். அந்த மாதிரி தான் அவாளோட கதை . இன்னைக்கு வியாசர் விருந்து (சி.எ) மகாபாரதம் (பெரிய எழுத்து)ங்கற தலைப்புல வழித்துணை ராமன் என்பவர் எழுத பாரதி நிலையம் வெளியிட்ட பொஸ்தவத்தை புரட்டிக்கிட்டிருந்தேன்.



ஆசிரியர் பாவம் பேட்டைக்கு புதுசா இல்லை பதவிசானவரா தெரியலை. ஏதோ தடி தடியா பொஸ்தவங்களை வச்சுக்கிட்டுத்தான் எழுதியிருக்காரு. அவரா எதையும் சேர்க்கிற சாதியா இல்லை. ஜஸ்ட் ரீ ப்ரொடக்சன் தான்.



ஒரு பாரா மட்டும் இங்கே. (அர்ச்சுனருக்கு ஒரு கந்தர்வர் அட்வைஸ் பண்றார்)



//பாண்டவர்களே ! நீங்கள் பிராமண சகாயமின்றி இருக்கிறீர்கள். யாருக்கு பிராமண சகாயமிருக்கிறதோ அவர்களை அரக்கர்,ராட்சதர்,கந்தர்வர் எதிர்ப்பதில்லை. இதனால் தான் ( பிராமண சகாயம் இல்லாததால் தான்?) மானிடர் கந்தர்வர்களுக்கு பயப்பட நேர்கிறது. வெறும் வீர,சூர பராக்கிரமத்தால் மட்டும் வேந்தர்கள் பூமியை வெல்ல முடியாதுபிராமண சகாயம் இல்லாத பேரரசும் மேன்மை பெறாது//



இதை படிச்சுட்டு கூட நான் பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி தொடர் பதிவோட ரெண்டாவது பாகத்தை ஆரம்பிக்கலின்னா நான் பொறந்ததே வேஸ்டு. கிட்ண பரமாத்மாவுக்கும் நமக்கும் ஹாட் லைனே இருக்கு. எதுனா தகராறு வந்தா பேசி தீர்த்துக்கறேன்.



பிராமண சகாயம் இருந்தா அரக்கர்,ராட்சதர்,கந்தர்வர் எதிர்ப்பதில்லையாம். மூணுமே நிலத்துல கால்பாவாத சமாசாரம். அப்போ பக்கத்து நாட்டு ராசாவுங்க வந்து இந்த ராசா சூ..ல பொங்கல் வச்சுட்டு போயிருவார் ஆனால் இதுக்கும் அவாளுக்கும் சம்பந்தமில்லை போல. அவிக ஜூரிஸ்டிக்சன்ல தான் எதிரிங்க கிடையாதே.



//வெறும் வீர,சூர பராக்கிரமத்தால் மட்டும் வேந்தர்கள் பூமியை வெல்ல முடியாது//



நெஜம் தான். எத்தீனி யுத்தம் தான் பண்றது.பொண்ணை கொடுத்து (விட்டு) எதிரி நாட்டு ராசாவ தோஸ்து பண்ணிக்கிற டெக்னிக்கையே இவாள் தான் கத்துக்கொடுத்திருப்பானு நினைக்கிறேன்.இந்த வகையில பூமியை வெல்ல அவா சகாயம் தேவைதான். அட அவா சகாயம் இல்லாமயே வென்றாலும் வெல்லலாம். அவியளை ஆட்டத்துல சேர்த்துக்கலன்னா கவுத்துருவாளே.



சரிங்கண்ணா தொடருக்கு வந்துருவம்.



மதச்சார்பற்ற அரசுன்னு அரசியல் சாசன அட்டையிலயே பொறிச்சு வச்சிருக்கிற இந்திய அரசு நடத்தற கோர்ட்ல இந்து மத நூலான பகவத் கீதை மேல கைய வைக்க சொல்லி சத்திய பிரமாணம் எடுக்கச்சொல்றாய்ங்களே.. கீதைய சொன்ன கண்ணன் சொல்லாத பொய்யா, பண்ணாத சதியா? எந்த ஊரு நியாய்ங்கண்ணா இது ?



அர்ச்சுனன்:



//கிருஷ்ணா நீயே பரபிரம்மம் , நீயே மோட்சம், நீயெ தூய திருவடிவம், அழிவில்லாதவன் நீயே தேவ புருஷன். தேவர்களுக்கும் தேவன் நீயே

பிறப்பற்றவன். என்றும் எங்கும் நிறைந்தவன் என்றும் முனிவர்களெல்லாம் கூறுகிறார்கள் . தேவமுனி நாரதரும் கூறுகிறார்.//



இதையெல்லாம் ஸ்க்ரால் பண்ணி விடுங்க. விசயம் பின்னாடி வருது.



//அசிலதர்,தேவலர், வியாச முனிவரும் அவ்வாறே கூறுகிறார்கள்.//



சரி அர்ச்சுனா மேட்டருக்கு வா



//அவர்கள் கூறியதைத்தான் திரும்ப சொல்கிறாய்.//

வச்சான்யா ஆப்பு கிட்ணர் அப்போ காப்பிரைட் ஆக்டை வயலேட் பண்ணிட்டாரு. நம்ம நாலணா சினி டைரக்டர்ஸ் வெளி நாட்டு டிவிடிலருந்து உருவறாப்ல கிட்ணர் மேற்படி பார்ட்டிங்க சொன்னதை தான் ரீ ப்ரொட்யூஸ் பண்றாருன்னு அர்ச்சுனன் சொல்றான்.



கிட்ணர் இதையும் கேட்டுக்கிட்டிருக்காரு. இதுல எதுனா லாஜிக் இருக்கா? இது கிட்ணருக்கு பெருமை தருமா? இதை கண்ணன் ஏத்துக்கிட்டிருப்பானா? இப்போ செலாவணில இருக்கிற கீதை ஒரிஜினலே கிடையாதுங்கறதுக்கு இதை விட ஆதாரம் வேற எதுனா வேணமா?



இப்போ கண்ணனோட ஸ்டேட்மென்ட்:



//காஸ்யப முனிவருக்கு அதிதி தேவியிடம் பிறந்த 12 புதல்வர்களில் குணத்தில் சிறந்தவனான விஷ்ணு நானே //

இந்த விஷ்ணுவும் மும்மூர்த்திகள்ள ஒருவரான விஷ்ணுவும் ஒரே பார்ட்டியா? உலகத்தை படைச்ச பிரம்மாவே விஷ்ணுவோட உந்தி கமலத்துலருந்துதான் வந்தாருங்கறாய்ங்க. படைப்பு ஆரம்பமாகி காஸ்யப முனிவர் தோன்றி அதிதி தேவி தோன்றி அவிக கெட்ட காரியம் செய்து இந்த விஷ்ணு பிறக்கிற வரை காக்கும் தொழிலை யார் செய்துக்கிட்டிருந்தாய்ங்க? கண்ணன் கீதைய சொல்லியிருந்தா இந்த மாதிரி டுபாகூர் ஸ்டேட்மென்டெல்லாம் கொடுத்திருப்பானா? நோ.



//.கிரகங்களில் ஒளி வீசும் கதிரவன் நானே //

அடங்கொப்புரானெ.. கிட்ணருக்கு அஸ்ட்ரானமில அரிச்சுவடி கூட தெரியலை போலிருக்கே. சூரியன்லாம் ஜுஜுபி. ஏதோ கிட்ட இருக்கிறதால பெருசா தெரியறார். ஆக்சுவலா நட்சத்திரங்களுக்குத்தான் ஒளி அதிகமாம். கிட்ணர் மேட்டர் புரியாம கதிரவன்னிட்டாரு. சிவாஜில ரஜினி பஞ்ச் டயலாக் மாதிரி காண் ட்ராவர்சியாயிருச்சு. "சிங்கம் சிங்கிளா வரும் பன்னிங்க தான் கூட்டமா வரும்"



//தேவர்களில் இந்திரன் நானே//

இந்திரனோட பயோ டேட்டாவும் கீதைல உள்ள அய்யர் மாருங்க கலந்து விட்ட பீலாக்களும் அடுத்த பதிவில் தொடரும்