Saturday, August 28, 2010

கீதை ஒரு உட்டாலக்கடி : 16

அண்ணே வணக்கம்ணே,
கீதை ஒரு உட்டாலக்கடி தொடர்பதிவுக்கு எதிர்வினையை எதிர்பார்த்து கண்ணே பூத்து போன நிலைல அய்யர் தி கிரேட்னு புது கேரக்டர் முளைச்சிருக்கு.  பாவம் பைல்ஸ் கம்ப்ளெயிண்ட் உள்ள பார்ட்டி  போலிருக்கு. சரக்கே இல்லாம ஒரு கமெண்டை போட்டிருக்கு. ஓஞ்சு போவட்டும் மொத கமெண்டாச்சேனு விட்டுட்டன்.
இவராச்சும் சரக்கு உள்ள கேஸா? இல்லை இதுவும் ஸ்மார்ட் மாதிரி டுபுக்கானு வெய்ட் அண்ட் சீ.

சரி மேட்டருக்கு வந்துர்ரன்.கிட்ணர் சொல்றாரு..

//ஆகாயம் என்பது என்ன? அது எதிலே ஒட்டிக்கொண்டிருக்கிறது.ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட ஒரு கலவை அந்த ஆகாயம்//

பாவம் அந்த காலத்து அசம்ப்ஷன் இது. கீதாசிரியரான அய்யரு அந்த காலத்து பிரமிப்பை , அசம்ப்ஷனை இட்டு நிரப்பியிருக்காரு.

இப்போ விஞ்ஞானிங்க நிறையவே கண்டுபிடிச்சாச்சு. பிக் பேங்க்  நிகழ்ந்த சமயம் ஏற்பட்ட வெப்பத்தின் காரணமா கேலக்ஸி விரிவடைஞ்சுகிட்டே போகுதுனு சொல்றாய்ங்க. இன்னொரு பக்கம் பிக் பேங் சூடு ஆறி  கேலக்ஸி  சுருங்கிக்கிட்டே வருதாம்.

கூகுல்ல போய் ஆகாயம்னு அடிச்சு தேடினா இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதாசிரியருக்கு தெரியாத டேட்டா  எல்லாம்  ஏழுமலையான் உண்டில காணிக்கை மாதிரி கொட்டோ கொட்டுனு கொட்டும்.

//அது போலத்தான் ஆத்மாவும்.அது எந்த தேகத்தில் இருந்தாலும் தேகத்தோடு ஒட்டுவதில்லை//

இந்த ஆத்மாங்கறதே சந்தேகாஸ்பதமான மேட்டர். யோக சாஸ்திரம் சொல்ற சக்கரங்களை பத்தி ஓஷோ சொன்னது ஞா வருது. பை பெர்த் இந்த வீல் எல்லாம் கிடையாதாம். அவனவன் சாதனையை பொருத்து உருவாகுமாம்.( மூளைல புது கனெக்சன் உருவாகறாப்ல).  ஆத்மா சமாசாரம் கூட  இதே கேட்டகிரிதான் . ஆனால் இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதைய பார்த்திங்கண்ணா ஆத்மாவுக்கு அப்படியே படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருக்காய்ங்க.

நீரில் நனையாது, நெருப்பில் வேகாது எட்செட்ரா. கல்வியை பத்தின பழந்தமிழ் பாட்டு ஒன்னிருக்கு.அதுல கல்விக்கு எக்ஸாக்டா இதே உவமைகள் சொல்லப்பட்டிருக்கு.

//ஒரே சூரியன் உலக முழுமைக்கும் ஒளி தருகிறான்.//
இது எத்தனாம் பெரிய ஹம்பக்னு ஏற்கெனவே விவரிச்சிருக்கேன்.  நட்சத்திரங்களோடு ஒப்பிட்டா சூரியன் எல்லாம் ஜுஜுபி.

//அது போலவே ஆத்மா தேகத்தை ஒளிப்பெற செய்கிறான்//
மனித தேகத்துக்கென்னவோ ஒரு ஒளி இருக்குங்கண்ணா. அதை பத்தி ஆரா ங்கற தலைப்புல தனிப்பதிவே போட்டிருக்கேன் படிங்க. ஆனால் இந்த சூரியன் உலகம்ங்கற உவமைதான் கிருஷ்ணர் ரேஞ்சுக்கு ஒத்துவராம உதைக்குது


//பிரம்மாவே எனது கர்ப்பப்பை//
அடடா பிரம்மா  ஆண் இல்லையா? அட பாவமே ஆணாவே இல்லாமயா தான் படைச்ச சரஸ்வதியை தானெ மோகிச்சாரு. ஆணாவே இல்லாமயா எவளோ ஆடினா வீர்யத்தை  நழுவ விட்டாரு. இல்லை அந்த காலத்துலயே பால் மாற்று ஆப்பரேஷன் எல்லாம் நடை முறைல இருந்ததா?  கர்பப்பைன்னா அப்ப மாதவிலக்கு கூட நடக்கனுமே.

// அதில் நான் விதையை விதைக்கிறேன். அந்த விதையிலிருந்து எல்லா உயிர்களுமே தோன்றுகின்றன.//

சரியா போச்சு அப்ப கிருஷ்ணர் ஒரு வயாக்ரா ஃபேக்டரியே வச்சிருக்கனும்.

//எந்த கர்பப்பையில் எத்தனை விதமான வடிவங்கள் படைக்கப்பட்டாலும் அவற்றுக்கெல்லாம் பரபிரம்மமே தாய்.//
பாருங்க போன பத்தில பிரம்மா தான் கர்ப்பப்பைனு வருது அதுக்குள்ள ட்ராக் மாறி பரபிரம்மமே தாய்னு வருது.  அப்ப கிருஷ்ணர் பரபிரம்மமில்லையா?  தான் தான் பரபிரம்மம்னா பரபிரம்மமாகிய நானே தாய்னு சொல்லியிருக்கனுமில்லையா?

அடுத்த வரியை பாருங்க

// நான் விதையை தூவி விளைச்சலை உண்டாக்கும் தந்தை //

நம்ம படைப்பே அடல்ட்ரிலதான் ஓடுது போல. இதெல்லாம் பிராமண குசும்பு. விஷ்ணுமயம் ஜக்த்ம்பானுக. சரி ஓஞ்சு போவட்டும்னு விட்டா  ராஜாவும்  விஷ்ணுவும் வேற இல்லேம்பானுங்க. ராஜா தான் ஊர் மேஞ்சிக்கிட்டிருந்தாருன்னா கிருஷ்ணரை கூட பொலி காளையாக்கிடாய்ங்க பாருங்க. ஊர் உலகத்துல உள்ள கர்ப்பப்பைல எல்லாம் விதைக்கிறதே இவர் வேலையாம். எந்த கர்பப்பையில் எத்தனை விதமான வடிவங்கள் படைக்கப்பட்டாலும்  ........................  நான் விதையை தூவி விளைச்சலை உண்டாக்கும் தந்தை.

கிருஷ்ணருக்கு நரம்பு தளர்ச்சி  வந்துராதோ?

இங்கிலீஷ் கிராமர்ல "டிகிரி" ன்னு ஒரு கான்செப்ட் வரும். பாஸிட்டிவ் டிகிரி,கம்பேரிட்டிவ் டிகிரி, சூப்பர் லேட்டிவ் டிகிரி.  குட்,பெட்டர்,பெஸ்ட். இதான் டிகிரீஸ். இந்த விதியை வச்சு அய்யரு ஒரு தியரியையே டெவலப் பண்ணிட்டாரு.
அதான்  தமோ,ரஜொ,சத்வ எனும் முக்குணங்கள்.

இவரை விட கண்ண தாசனே பெட்டர். ஒருவன் மனது  ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடானு வைடா ரோசிச்சிருக்காரு.

இப்ப இந்த முக்குணங்களை பத்தி கீதை ( இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதை) என்ன சொல்லுதுனு பார்ப்போம்.

//தமோ,ரஜொ,சத்வ என்னும் குணங்கள் இயற்கையில் இருந்து தோன்றியவை.//

இதை கூட ஏதோ தியரி இழவு ஓஞ்சு போவட்டும்னு விட்டுரலாம். இந்த மூன்று குணங்கள் கூட பர்மெனென்டா இருக்க வாய்ப்பே கிடயாது. மாறி மாறி வரும். ஜோதிஷத்துல முக்குண வேளைகள்னு தனி கான்செப்டே இருக்குங்கோ.

அடுத்த வரிதான் இன்னம் சில்லியா இருக்கு.

//இந்த குணங்கள் தான் அழிகின்ற உடம்போடு அழிவற்ற ஆன்மாவை படைக்கின்றன//

அழிகின்ற உடம்பை மட்டும் படைக்கின்றனன்னா ஒரு மாதிரியா அஜீஸ் ஆயிரலாம். ரஜோ குணம் மேலோங்கும்போது பெண்டாட்டிகிட்ட " ஏய்  வரப்ப உனக்கு பட்டுப்புடவை, லாலா கடை அல்வாவோட வரேன். நீ ரெடியாயிருன்னுட்டு கில்மா வேலைல குதிச்சா அன்னைக்கு சேஃப்டி டேஸா இல்லாம இருந்தா நம்மாளு அதுக்கு மிந்தி ஏழெட்டி தினமாச்சும் நல்ல பிள்ளையா இருந்திருந்தா ஒரு அழிகின்ற உடம்பு படைக்கப்பட வாய்ப்பிருக்கு.

அதே மாதிரி ஞாயிற்றுக்கிழமை. பத்து மணி வரை படுக்கைல புரண்டு கிட்டிருந்து தமோ குணம் மேலோங்கின வேளைல குளிக்கிறதுக்கு மிந்தி ஒரு ஷோ போட்டா என்னன்னு கில்மால இறங்கினா அன்னைக்கு சம்சாரத்துக்கு சேஃப்டி டேஸா இல்லாம இருந்தா நம்மாளு அதுக்கு மிந்தி ஏழெட்டி தினமாச்சும் நல்ல பிள்ளையா இருந்திருந்தா ஒரு அழிகின்ற உடம்பு படைக்கப்பட வாய்ப்பிருக்கு.

ஆனா கிருஷ்ணர் //அழிகின்ற உடம்போடு அழிவற்ற ஆன்மாவை படைக்கின்றன//ங்கறாரே  இங்கன தான்  குழப்பம் கும்மியடிக்குது. ஆன்மா பிறப்பதுமில்லை. சாகிறதுமில்லேனு இதே கீதையில சொல்லிட்டு இப்படி சொதப்பறாரே.