Saturday, September 15, 2007

சுவாமி நித்யானந்தா


சுவாமி நித்யானந்தா கருப்போ சிவப்போ யான் அறியேன். எனக்கு தமிழ் அச்சு ஊடகத்தின் மீதான நம்பிக்கை நசிந்து பல காலமாயிற்று. இருந்தாலும் தமிழகத்தின் பிரபல வார இதழ்களில் ஒன்று மேற்படி சாமியாரின் உபதேச தொடரை வெளியிடுகிறது..மற்றொரு இதழோ அவர் திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புக்கு முயன்றதாக புலனாய்வு கட்டுரை வெளியிடுகிறது.



தமிழன் பற்றிய இந்த பத்திரிக்கைகளின் அபிப்ராயம் தான் என்ன? சாமியாரின் உபதேச தொடரை வெளியிடும் பத்திரிக்கையில் ஆக்கிரமிப்பு குறித்த வாசனை கூட இல்லை. பத்திரிக்கை தர்மத்தை கடைபிடிக்காத காரணத்தால் தமிழ் பத்திரிக்கை உலகம் நாறிப்போய் கிடப்பது நிஜம் தான் . அதற்காக இப்படியா?


என் கேள்வி:
சாமியாரின் உபதேச தொடர் ஸ்பான்சர்டு ஃபீச்சரா? அல்லது கேட்டு பிரசுரிக்கும் விஷயமா? ஸ்பான்சர்டு ஃபீச்சர் என்னும் பட்சத்தில் அது கிடைக்காத எரிச்சலில் தான் மற்றொரு பத்திரிக்கை ஆக்கிரமிப்பு விஷயத்தை கையில் எடுத்ததா? ஸ்பான்சர்டு ஃபீச்சர் என்பதால் தான் ஆக்கிரமிப்பு படலத்தை கண்டும் காணாது உபதேச தொடர் தொடர்கிறதா?கேட்டு பிரசுரிக்கும் விஷயம் என்றால் ஒரு ஆக்கிரமிப்பாளரின் தொடரை , அவர் ஆக்கிரமிப்பாளர் என்ற குற்றச்சாட்டுகள் வெளிவந்த பிறகும் தொடர வேண்டுமா?


என்னங்கடா இது தமிழ் பத்திரிக்கை இயலுக்கு வந்த சோதனை?