Friday, February 19, 2010

இரட்டை அர்த்த வசனங்களால் பயன்கள்

"முதலில் இரட்டை அர்த்த வசனம் என்றால் என்ன...." என்று இந்த பதிவை ஆரம்பித்தால் உதைக்கவே வந்துவிடுவீர்கள். ஏன் என்றால் இரட்டை அர்த்த வசனங்களுக்கு பெயர் போன சினிமா தமிழ் சினிமா. இவற்றால் இளைஞர்கள் கெட்டுப்போகிறார்கள் என்று இந்த இன்டர் நெட் யுகத்திலும் யாரேனும் புலம்பினால் பாவம் விஷயம் தெரியாத பார்ட்டிகள் என்று மன்னித்துவிடுங்கள்.

ஒரு காலத்தில் மட்டும் கெட்டுவிட்டார்களா ? என்றால் இல்லை என்று தைரியமாக சொல்லலாம். இரட்டை அர்த்த வசனங்களால் மட்டும் கெட்டேன் என்று ஒரு ஆளை கை தூக்க சொல்லுங்கள் ! ஊஹூம்.. அந்த காட்சியில் லைட்டிங், பின்னணி இசை, நடிகையின் உடல் மொழி, குரல், பார்வை,அவள்/அவன் இதுக்கு முன்னாடி நடித்த படங்கள் எல்லாம் கூட்டு சேர்ந்துதான் கிளர்ச்சியுறவைக்கிறதே தவிர வெறுமனே இரட்டை அர்த்த வசனத்தால் மட்டும் மோகம்,தாகம்,தாபம் இத்யாதி வந்துவிடாது என்பது என் தா. கருத்து.

இன்டர் நெட்டில் போர்னோ வீடியோ க்ளிப்பிங்குகளாய் கொட்டும் இக்காலத்தில் இ.அர்த்த வசனங்களால் ஏற்படக்கூடிய நஷ்டத்தின் சதவீதம் வெகுவாக குறைந்துவிட்டதென்றே சொல்வேன்.எனவே இவற்றால் (இரட்டை அர்த்த வசனங்களால்) என்ன லாபம் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

லாபம்: 1

"ஊசி இடம் கொடுக்காம நூல் நுழையுமா ? " இது சாதாரண மக்கள் கூட பயன் படுத்தற இரட்டை அர்த்த வசனம். ஊசின்னா யோனி, நூல்னா ஆணுறுப்பு. இதை நேரடியா சொன்னால் எவ்ள அருவருப்பா இருக்கு பார்த்திங்கள்ள.. ஸோ இரட்டை அர்த்த வசனம் பேச்சில அருவருப்பை குறைக்குது

லாபம்:2
ஒரே காம்பவுண்ட்ல ரெண்டு போர்ஷனிருக்கு. ஒரு போர்ஷன்ல விதவை ஒருத்தி இருக்காள். இன்னொரு போர்ஷன்ல தம்பதி இருக்காங்க. அதுல வைஃப் வெளியூர் போயிருக்காங்க. கணவன் ஓட்டல் சோறு சாப்பிட்டுட்டு வயித்துக்கு ஒத்துக்காம நாலஞ்சு தடவ கக்கூஸ் போயி டீலாயிர்ரான். அந்த விதவைக்கு இவன் மேல ஒரு கண்ணிருக்கு. "வர்ரியா"னு நேரடியா கூப்பிட முடியுமா ? முடியாது. இப்போ எப்படி நூல் விடறானு பாருங்க
" என்னங்க வயிறு சரியில்லயா?"
"ஆமாங்க ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கல"
"வீட்ல இல்லிங்களா ?"
"இருந்தா எனக்கென்னங்க தலை எழுத்து"
"அக்கம்பக்கத்துல அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமே"
"இந்த காலத்துல கட்ன புருசனுக்கு ஆக்கிப்போடவே அலட்றாளுங்க.. நீங்க வேற"
"அப்படி நீங்களே நினைச்சுட்டா எப்படி ? அக்கம்பக்கம் கண்ணை திறந்து பார்த்தா தானே"

ஆக கோரிக்கையை நாசூக்கா வெளிப்படுத்த உதவுது.

பி.கு: முதல் கதைய பாக்யராஜ் பாக்யால பிரசுரிச்சாருன்னா சும்மாவா ..

லாபம்: 3
வயசு பையன் ஏதோ தப்பு காரியம் பண்றான்னு பாட்டிக்கு தெரியுது.(வேறென்ன சுய இன்பம்தான்) இப்போ கான்வர்சேஷனை பாருங்க.

"என்னடா ஆம்பள புள்ள குளிக்க இத்தனை நேரமா ?"
" நான் எவ்ள நேரம் குளிச்சா உனக்கென்ன?"
"எவ்ள நேரம் குளிச்சாலும் பரவால்ல. சேத்த பூசிக்கறியோனு சந்தேகம்"
"ஏ கிழமே .. அழுக்கு போக குளிச்சேன்"
" அழுக்கு போக குளிச்சவளும் கிடையாது..."
" அடுத்த பார்ட்டும் சொல்லு ஆசை தீர அனுபவிச்சவனும் கிடையாது அதானே.. அதுக்குனு குளிக்காமயே இருந்துர முடியுமா? இல்லே அனுபவிக்காம இருந்துர முடியுமா? பசி தீரலன்னாலும் ஏதோ நொறுக்கு தீனிய வச்சு வயித்த நிரப்ப வேண்டாமா?"
" அடேய் பேராண்டி.. சோற தின்னா பசி தீரும். அரிசிய சாப்டா வயித்துவலி தாண்டா வரும்"

ஆக செக்ஸ் எஜுகேஷன் தரவும் உதவுது.

லாபம்: 4,5,6,7,8,9,10 எல்லாம் வழக்கம் போல் அடுத்த பதிவில்