Tuesday, February 23, 2010

பலான ஜோக் :மம்தா மேடம் படிக்காதிங்க !

கவிதை07 க்கு வருகை தந்துள்ள (ந)அன்பரே!
இப்பல்லாம் தினசரி இரண்டு பதிவுகள் போடறேன். ஒன்னு மறுபடி அவளை நாவலோட அத்தியாயம். இன்னொன்னு வழக்கமா போடற பதிவு. ரெண்டையும் படிச்சு பிரிச்சு மேஞ்சுரனும்ணா.. உங்க மறுமொழிக்காக காத்திருக்கேன்

முதல்ல இந்த பதிவுக்கு இளமை இதோ இதோ, என்றும் பதினாறு இப்படியெல்லாம் தலைப்பை வச்சி எழுதினேன்.
இந்த தலைப்பை பார்த்ததுமே சகலகலா வல்லவன் படத்துல வர்ர கமலோட பாட்டு ஞா வந்திருந்தா உங்களுக்கு வயசாயிருச்சுனு அர்த்தம்."என்றும் பதினாறு"பாட்டு ஞா வந்தா ஆடிப்போன வயசுன்னு அர்த்தம்


இளமைன்னா சொட்டைத்தலைல இருக்கிற நாலு மயிருக்கு டை போட்டுக்கறதோ ,தொப்பை பிதுங்க டீ ஷர்ட், புட்டம் பிதுங்க ஜீன்ஸ் அணியறதோ, பிளாட்பாரத்துல விக்கிற பத்து ரூபா கருப்பு கண்ணாடி போட்டுக்கறதோ இல்லே.

நாள் தவறாம பெண்டாட்டி மேல் பாயறது இல்லே. பாய முடியலியேனு கண்ட லாட்ஜு வைத்தியரை போய் பார்த்து லேகியம் வாங்கறது, எந்த ஃப்ரெண்ட் ஃபாரின் போறான்னு பார்த்து வயாக்ராவுக்கு முயற்சி பண்றதில்லே.

பின்னே எதுதான் இளமை? இளமைங்கறது உடலை பொருத்த விஷயமில்லை. அது மனசை பொருத்த விஷயம். மனிதனோட மனசு புது விஷயங்களை கிரகிச்சுக்கிற ஃப்ளெக்சிபிள் கண்டிஷன்ல இருக்கனும் . சில உணர்வுகள், ரசனைகள் தேஞ்சி போயிராத பார்த்துக்கனம் . அதான் இளமை.

மனம் என்பது என்ன ? நம் நினைவுகள். ஒரு ஹார்ட் டிஸ்க்ல இருக்கிற ஃபைல்ஸுக்கே எத்தனையோ பாதுகாப்பு ஏற்பாடுகளை வச்சிருக்காங்க. உம். பை மிஸ்டேக் டெலிட் பண்ணிட்டா கூட அது ரீ சைக்கிள்பின்ல இருக்கும். மறுபடி ரீஸ்டோர் பண்ணிக்கலாம். ஆனால் மனித நினைவுகளுக்கு இந்த மாதிரி ஒரு இழவு கியாரண்டியும் கிடையாது. அவன் என்ன சொல்லப்படுதோ அதை கேட்டு பதிவு பண்ணிக்கிறதில்லை. அவன் எதை பார்க்கிறானோ அதை மட்டும் ரிக்கார்ட் பண்ணிக்கிறதில்லை. சொல்லப்படறதுல அவன் எதை கேட்க விரும்பறானோ அதை மட்டும் கேட்டுக்கறான். காட்டப்படறதுல அவன் எதை பார்க்க விரும்பறானோ அதை மட்டும் பார்க்கிறான்.

ஒரு பலான ஜோக்

ஒரு பாடாவதி படம். முதல் நாள்ளயிருந்தே தியேட்டர்ல ஈ ஓடுது. ஆனால் ஒருத்தன் மட்டும் எவ்ரி ஷோ விடாம வந்துர்ரான். ஒரு நாள் மேனேஜருக்கு டவுட் வந்துட்டு கேட்கிறார்."அப்படி என்னதான் இருக்குப்பா இந்த படத்துல ?"

அதுக்கு அவன் பதில் சொல்றான். "

இதுல ஒரு பொம்பளை ரயில்வே ட்ராக்கை ஒட்டியிருக்கிற பம்பு செட்ல குளிக்கப்போறா. புடவை,ரவிக்கை எல்லாம் அவுக்கறா.உள்பாவாடைய அவுக்கற நேரத்துல ரயில் வந்து மறைச்சுருது. ஒர் நாள்னா அந்த ரயில் லேட்டா வராதானுதான் டெய்லி வரேன்"

மனிதர்களோட அப்சர்வேஷனும், க்ராஸ்பிங் தி இன்ஃபர்மேசனும் இப்படித்தான் இருக்கும்.

மனுஷனோட மெமரில ரெண்டு வகையிருக்கு. இதுல பர்மனன்ட் மெமரியும் இருக்கு. டெம்ப்ரரி மெமரியும் இருக்கு.

ஒதகாத விஷயங்களை எல்லாம் பர்மெனன்ட் மெமரிக்கு ஷிப்ட் பண்ணிட்டா அங்கே கஞ்செஷன் ஏற்பட்டுரும். இன்ஃபர்மேஷனை வடிகட்டித்தான் மூளைக்கு அனுப்பனும்.நானெல்லாம் அப்படித்தான் எதிராளிக்கு முதல்லயே சொல்லிருவன்.

"த பாரு எனக்கு நேரமில்லே. நீ சுருக்கமா ஸ்ட்ரெயிட்டா விஷயத்தை சொல்லிட்டா அப்படியே புடிச்சுக்குவன். ச்சும்மா வளவளனு சொல்லிட்டிருந்தா அசல் விஷயத்தை கோட்டை விட்டுருவன்"

வர்ர இன்ஃபர்மேஷனை அசெஸ் பண்ணனும்:

இது நமக்கு தேவையா ? இன்னைக்கோ நாளைக்கோ தேவையா ? வேறெங்கும் கிடைக்காதா? எழுதி வச்சிக்கிட்டா எதுனா வில்லங்கம் வருமா? செல் ஃபோன்ல ஃபீட் பண்ண முடியுமா?

தேவையில்லாததை ரிஜெக்ட் பண்ணிரனும். எப்பவோ ராம் நகர் காலனில நான் சைட் அடிக்க போனப்ப என்னை ஆள் வச்சு அடிச்ச ஆளுக்கு ஆக்சிடெண்ட் ஆச்சுன்னா "அப்படியா"ன்னு கேட்டுக்கலாம். ஸ்வாரஸ்யத்துக்காக அதுக்கு பத்து நிமிஷம் முன்னாடி எவனோட வயித்தெரிச்சலையாவது கொட்டிக்கிட்டானானும் தெரிஞ்சுக்கலாம். அதை விட்டுட்டு அதுக்கு முன்ன மாசம் என்ன செய்தான், முன் வாரம் என்ன செய்தான் இந்த இழவெல்லாம் குப்பை.

இதை எப்படி ஸ்டோர் பண்றது ?
இன்ஃபர்மேசன் என்பது உதிரி பூ மாதிரி. மனித நினைவு பூச்சரம் மாதிரி . இந்த பூவை பூச்சரத்துல வச்சி கட்டிரனும். (இதுக்கு முன்னாடி எவனெவன் என் வயித்தெரிச்சலை கொட்டிக்கிட்டான். அதுல எவனெவன் பெண்டாட்டி ட்ரைவரோட ஓடிப்போய்ட்டாள், எவனுக்கு எயிட்ஸ் வந்து செத்தான் மாதிரி இன்ஃபர்மேஷனெல்லாம் மைண்ட்ல இருக்கும். அந்த இன்ஃபோவை ஓரு ஓட்டு ஓட்டிபார்த்தா இந்த இன்ஃபோ போய் பச்சக்குனு அதுல ஒட்டிக்கும்.

உணர்வுகளை பத்திரப்படுத்தனும்:

துணிச்சல், காதல், அழகியல்,இசை,கலா ரசனை, கற்பனை, தில்லு, எதிர்காலத்து மேல நம்பிக்கை இப்படி எத்தனையோ உணர்வுகள் இளமைல ச்சும்மா பீர் மாதிரி பொங்கும். ஆனால வயசாக வயசாக இதெல்லாம் தேஞ்சிக்கிட்டே வரும்.

தங்கள் வாழ்க்கைல இருந்தே ரெஃபரன்ஸ் குடுக்கிறது கிழவாடிகளோட லட்சணம் . என்ன செய்ய எனக்கும் 43 வயசாகுதே சின்ன ரெஃபரென்ஸ். (தந்தி பாஷைல)

1991 ல எனக்கு கலப்பு கல்யாணமாச்சு. முதல்ல எங்கப்பா குர்ருனு இருந்தாலும் அப்புறம் நான் பண்ண ஒரு எம்.ஜி.ஆர் வேலைக்கு ( சாக பிழைக்க இருந்த நம்ம சொந்த காரனுக்கு ஜொள் விட்டு நம்ம சைடுக்கு வந்துட்டார். கலப்பு திருமண தம்பதிகளுக்கு கவர்ன்மென்ட் கொடுக்கிற ஊக்கத்தொகைக்கு அப்ளை பண்ணேன். எங்கப்பா டிஸ்ட் ரிக்ட் ட்ரஷரி ஆஃபீசராயிருந்து அப்போதான் ரிட்டையர் ஆகியிருந்தார். நமக்கும் "இவன் ஒரு மாதிரி"ன்னு சின்ன இமேஜ். இத்தனையையும் வச்சிக்கிட்டு பத்து பைசா லஞ்சம் கொடுக்காம செக் எழுதற ஸ்டேஜ் வரைக்கும் விவகாரத்தை கொண்டு வந்துட்டன்.

செக் எழுதற நாய் என் ஃப்ரெண்டுக்கு மாமன் தான். என்ன இருந்து என்ன அம்பது ரூபா வெட்னாதான் செக்குன்னிட்டான். அந்த 3,000 ரூபாயை நம்பி புதுப்பெண்டாட்டிக்கு ( அதாங்க பழைய காதலி) என்னென்னவோ வாக்குறுதி கொடுத்திருக்கிற சந்தர்ப்பத்துல அவனை பத்தி கம்ப்ளெயின் பண்ணி , விசாரணை நடந்து எப்போ வேலையாறதுனு படக்கு அம்பது கொடுத்து செக் வாங்கிகிட்டு வந்துட்டன். அதுலயும் கடவுள் ஒரு வாய்ப்பை கொடுத்தார்.என் மனைவி பெயரை மாத்தி எழுதிட்டான் செக்ல. காச்சு காச்சுனு காச்சியெடுத்திருக்கலாம். ஆங்க்ரி யங்க்மேன் இமேஜுக்கு செமை பூஸ்ட் அப் கிடைச்சிருக்கும்.

ஆனா செய்யலை. அவன் தப்பா எழுதின பேர்லயே கை.எ. போடச்சொல்லி பாங்க்ல கேஷ் வாங்கிட்டன். வயசாறதுக்கு முத லட்சணம் இது. காரியம் பெரிசா வீரியம் பெரிசான்னா காரியம் தான் பெரிசுன்னு பூட்ஸு நக்கறது (இப்பல்லாம் 22 வயசுலயே இந்த கல்யாண குணம் நம்ம இளைய தலைமுறைக்கு வந்துட்டுது.






இதைத்தான் ஸ்ரீ ஸ்ரீ "கொந்த மந்தி குர்ரவாள்ளு புட்டுகத்தோ வ்ருத்துலு"ன்னாரு
அதாவது சில இளைஞர்கள் பிறப்புலயே கிழவாடிங்களாம். மனசை ஃப்ளெக்சிபிளா வச்சிக்கிடுங்க, உணர்வுகளை பத்திரமா வச்சிக்கிடுங்க அப்புறம் என்னா.. என்றும் 16 தான்..