Wednesday, February 3, 2010

ஜோதிட தகவல்கள்

ஜோதிட தகவல்கள்
ஒரு ஜாதகத்தில் ஒரு ராசி/பாவத்தில் நின்ற கிரகம் இன்ன பலன் தான் தரும் என்று அறுதியிட்டு கூற முடியாத நிலை உள்ளது. ஆப்ஜெக்டிவ் டைப் கொஸ்டியன் பேப்பர் மாதிரி ஒரே கிரக ஸ்திதிக்கு நான்கு வித பலன் களை கூறவேண்டியுள்ளது. இவற்றில் எது நடந்தாலும் சரிதான். ஒரு வேளை நான்கு ஆப்ஷனுமே நடை பெற வில்லை என்றால் ஐந்தாவதாக இருக்கக்கூடிய ஆப்ஷனை ஜோதிடர் கெஸ் பண்ணவில்லை என்றே அர்த்தம்.

1.செவ்வாய் பலவீனப்பட்டால்:

இது அதி கோபம் அ கோபத்தை அடக்குவதால் வரும் வியாதிகள் தரலாம்.உம் ரத்தக்கொதிப்பு, அல்சர். உஷ்ண ரோகங்கள் பாதிக்கலாம். உம் கட்டிகள், பைல்ஸ்.
நிலம்,சகோதரம், எதிரிகள்,போட்டியாளர்கள் தொடர்பாக வழக்கு,விவகாரங்கள் நஷ்டங்கள் வரலாம்.
பரிகாரம்:முருகன் கோவிலுக்கு எரியும் பொருட்களை அன்பளித்தல். (உம்: பல்பு , விளக்கு. விளக்காயின் செம்பாகில் உத்தமம். செம்பு பூஜா பாத்திரங்களும் தரலாம் அ உடல் அங்கம் அறுபட்டவர்கள், தீவிபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்)

2.
(சூரியன்+புதன்):
இந்த சேர்க்கை பொது அறிவு, கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இத்யாதியை தந்தாலும் தந்தை, தந்தை வழி சொத்து தலை,பல்,எலும்பு முதுகெலும்பு தொடர்பான தொல்லைகளை தரலாம். உடலில் எங்கேனும் வெள்ளை தேமல் போன்று இருக்கலாம். இது வியாதியல்ல யோகத்தின் அறிகுறி. கவலை வேண்டாம்.

லக்னாதிபதி 7ல் நின்றால் அ 7 க்கு அதிபதிபதியுடன் சேர்ந்தால்:

தங்கள் வாழ்வில் ஃப்ரெண்ட்,லவர் ,பார்ட்னர்களின் இம்பாக்ட் அதிகம். நல்லதோ கெட்டதோ அவர்களாலேயே நடக்கும்.

3)
7ல் குரு நின்றால்:
தங்கள் வாழ்வில் ஃப்ரெண்ட்,லவர் ,பார்ட்னர்களின் இம்பாக்ட் அதிகம். நல்லதோ கெட்டதோ அவர்களாலேயே நடக்கும்.ஆனால் அவர்கள் பிராமணர்களாகவோ, அ பூணூல் அணியும் வகுப்பினராகவோ ,குருவாகவோ (டீச்சர்) இருந்தால் நல்லது.அவர்களின் பெயரில் குரு,லிங்கம் போன்றவை கலந்து ஈஸ்வரன் பெயராக இருக்கலாம். தங்கள் இல்லம் அ அலுவலகத்திலிருந்து வட கிழக்கு திசையில் இருப்பார்கள். ம்னைவி தெய்வபலம் வாய்ந்திருப்பார்.குணவதியாக இருப்பார்.சில நேரங்களில் மனைவியாரின் ஆலோசனை எரிச்சலூட்டினாலும் பின்பற்றுவது நல்லது.

4)
ராகு,கேதுக்கள் பலம் பெற்றால்:
புதிதாக அறிமுகமாகும் நபர்கள் ,வெளி நாட்டினர், வெளி நாட்டு தொடர்புள்ளவர்கள், கரிய நிறம் கொண்டவர்கள், வேறு மொழி பேசுவோர், வேறு மதத்தை சேர்ந்தோர், நாக என்று துவங்கும் பெயர் கொண்டோர்,கணபதி பெயர் கொண்டோர். ஓரப்பார்வை, பூனைக்கண் கொண்டோர் உதவ வாய்ப்புண்டு. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி தொழில் இரவில் செய்யும் தொழில்/வேலை அனுகூலமே.

5)நான்காம் இடத்தில் ராகு/கேது நின்றால்:

இருந்தாலும் தாய், தாய் வழி உறவு , வீடு , வாகனம் ,கல்வி வகையறாவில் சிறு சிறு கஷ்ட நஷ்டங்கள் வரலாம்.மார்பில் மச்சமிருக்கலாம்.

6)சுக்கிர ராகு சேர்க்கை:
இதன் காரணமாக நண்பர்கள், பங்குதாரர்கள், காதலியாலும், மனைவியாலும் தேவையற்ற சிறு சிறு பிரச்சினைகளில் மாட்டலாம். அ அவர் நோயாளியாகவோ, தங்களை விமர்சிப்பவராகவோ இருக்கலாம்.இதனால் லாங் ரன்னில் நலமே விளையும்.

7)
6க்கு அதிபதி 8ல் மறைதல் அ 8 க்கு அதிபதி 6 ல் இருத்தல அ இருவரும் ஒருவர் ராசியில் மற்றவரிருத்தல்:

நீங்கள் பாக்கி வைத்துள்ள ஒரு கடன் காரர் /எதிரி/போட்டியாளர் செத்தே போகலாம் அ ஊரை விட்டே போய்விடுவார், அந்த சமயத்தில்

8)
சந்திரன் 8 ல் நின்றால்:
தங்களுக்கு நுரையீரல், சிறு நீரகம், மனம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம்

9)
9 ஆமிடம் கெட்டால்:
தூர தேசங்களில் அவதி படுதல், சேமிப்பை ஊர் வாயில் போட்டு அலைபாய்தல். வில்லங்கமுள்ள சொத்துக்களில் தங்கள் பணம் மாட்டுதல். நீசர்களுடன் சேர்ந்து தொழில்,வியாபாரம் செய்ய வேண்டி வருதல் நடக்கலாம். முழங்கால் வலி அவதிபடுத்தும்.

10)
9ல் சனியிருந்தால்:
தங்கள் பணம்,சொத்து,வரவேண்டிய பாக்கிகள் கைக்கு வர தாமதமாகுமே தவிர வராது போகாது.

11)
தனுசு ,கன்னி லக்ன காரர்களுக்கு :
தங்கள் தாய்க்கும், மனைவிக்கும் விசித்திரமான ஒற்றுமைகள் இருக்கும். ( முக ஜாடை, பேச்சு தோரணை, அ பெயர்களில்) .
ஐந்தாமிடம் கெட்டால்:
சிலகாலம் பிள்ளை இல்லாது போதல். அ ஒன்று அரை கர்பம் போதலும் நடைபெற்றிருக்கலாம்.

12)
6க்கு அதிபதி பத்தில் ,பத்துக்கதிபதி 6 ல் இருந்தால்:
கடன் , நோய், விவகாரம் தொடர்பான தொழிலில் சில காலம் இருக்க வாய்ப்புண்டு. உம். ஃபைனான்ஸ், மெடிக்கல் ஸ்டோர், எல்.ஐ.சி.

13)
சுக்கிரன் அ 7க்கு அதிபதி 11ல் நின்றால்:
மனைவியல்லாது மற்றொரு பெண்ணும் தங்கள் வாழ்வில் இடம் பெறுவார். முன்னேற்றத்துக்கு உதவலாம்.

14)
7ல் சூரியன் இருத்தல் அ 7 ஆமிடத்துக்கு சூ ஆதிபத்யம் பெறுதல்:
காயத்ரி,சூரியன்,வெளிச்சம் தொடர்பான பெயர் கொண்ட பெண் ஈகோயிஸ்டான பெண் அறிமுகமாவார்.
15)
7ல் புதன் இருந்தால்:
வேசிகள் நட்பு கிட்டும் .பெருமாளின் மனைவி பெயர் கொண்ட பெண் மனைவியாவார்.

16)
சூரியன் அ 9 ஆம் இடத்ததிபதி பலம் பெற்றால்:
தந்தையின் உடன் பிறந்தோரில் ஒருவர் உதவலாம்.(ஆனால் அது பெயரளவு உதவியாகவே இருக்கும்)

17)
10க்கு அதிபதி 11ல் நின்றால்:
ஒரே நேரத்தில் இரண்டு தொழில் அ வியாபாரம் செய்ய வாய்ப்புண்டு.

18)
7ல் பாவ கிரகம் நின்றால்:
தனிமையில் வாழும் பெண்கள், நோயாளி பெண்கள்,கெட்ட பெயர் கொண்ட சட்டவிரோத தொழில் செய்யும் குடும்பத்து பெண்களுடன் நட்பு ஏற்படும்

19)
11க்கு அதிபதி பலம் பெற்றால்:
மூத்த சகோதரர் அ மூத்த சகோதிரியாலும் பெயரளவு உதவி உண்டு.

20)
6க்கு அதிபதி 8 ல் மறைந்தால்:
நோய் வரும். ஆனால் கட்டுக்குள்ளிருக்கும். ஆயுள் பங்கமிராது. கடன் ஏற்படும் ஆனால் தீரும். விரோதிகள் தோன்றுவர் ஆனால் ஒழிவர்.
21)
12க்கு அதிபதி 8ல்:
அச்சுறுத்தும் செலவுகள், நிலையாமை, விரோத சூழல் ஏற்படும்.ஆனால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும்.

22)
ஐந்தாமிடத்தில் செவ்வாய் இருத்தல் அ அவர் பஞ்சமாதிபத்யம் பெறுதல்:
குழந்தைகளில் ஒருவருக்கு ரத்த சோகை இருக்கலாம். ப்ளட் ப்யூரிஃபிகேஷன் பிரச்சினையால் உள்ளங்கை உள்ளங்கால் எரிச்சல், கட்டிகள், எக்சிமா போன்ற பிரச்சினைகள் வரலாம் .டேக் கேர் ! அவர்களுக்கு அம்மை, கட்டிகள் போன்ற பிரச்சினைகள் வரவும், அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடக்கவாய்ப்பிருக்கிறது.
பரிகாரம்: முருகன் கோவிலுக்கு எரிபொருள் தானம் . அ தாங்கள் ஃபேமிலி டாக்டரின் ஆலோசனை பெற்று ரத்த தானம் செய்யலாம்.

23)
ஏழரை சனியின் போது:
தங்களில் மறைந்துள்ள சக்திகள் பெரும் போராட்டத்துக்கு பின் வெளிவரும். உச்ச நிலை பெறுவீர்கள்..

24)
ரிஷப லக்னம் ராசிக்காரர்களுக்கு:
தங்களுக்கு பணம், பேச்சு, குடும்பம் என்றால் வெல்லம். ஆனால் இயற்கை குரூரமானது எந்த ஜாதகர் எதை தன் உயிருக்கு சமமாய் பாவிக்கிறாரோ அந்த விசயங்களிலேயே ஆப்பு வைக்கும். எனவே மேற்சொன்ன விசயங்களில் முடிந்தவரை தங்கள் மைண்ட் செட்டை மாற்றிக்கொள்வது நல்லது. இதனால் பொருளாதார விசயத்தில் சற்று வீக் ஆனாலும் குடும்பவகையில் அபிவிருத்தி உண்டு. பேச்சை குறைக்கவும், குடும்பத்தாருடனும் சற்று நீக்கு போக்காக நடப்பது நல்லது. அதிகம் அட்டாச் மெண்ட் வேண்டாம்
25)
10 ல் குரு வந்தால்:
நாற்காலி ஆட்டம் காணும். தங்கள் சீட்டின் மேல் மஞ்சள் குஷன் அ டர்க்கி டவல் போட்டு அமரவும். டேபிளுக்கு மஞ்சள் நிற டேபிள் க்ளாத் உபயோகிக்கவும். பணம், தங்கம் ஹேண்டில் செய்யும்போது எச்சரிக்கை தேவை.பிராமண போஜனம் செய்விக்கவும்

26)
சனி பிடித்த போது(முக்கியமாய் பஞ்சம சனியின் போது:
முடிந்தவரை பழைய துணிகளையே அணியவும். சஃபாரி அணியவும் அ பேண்ட் சற்று டார்க் கலரில் சட்டை அதேகலரில் (சற்று லைட்டாக) அணியலாம். திருமலை வராக ஸ்வாமியை தியானம் செய்யவும். பிரதி சனிக்கிழமை காகத்துக்கு சோறு வைத்து வரவும். பசுமாட்டுக்கு அகத்திக்கீரை தரவும். முடியாவிட்டால் உடல் ஊனமுற்றோருக்கு முக்கியமாய் நொண்டிக்கு இயன்ற உதவியை செய்யவும்.

27)
குரு பலவீனமாக உள்ளவர்கள் முக்கியமாய் தனுசு, மீன லக்ன காரர்கள்:
டீச்சிங் ப்ரொஃபெஷன் வேண்டாம்.வயிறு இதயம் தொடர்பான பிரச்சினைகள் வந்துவிடலாம்

28)
உட‌ன‌டியா வ‌ரும் கோப‌ம் க‌ட்டுப்பட:
முருகனுக்கு எரியும் பொருள் தரவும். பவழ மாலை அணியவும். ரத்ததானம் செய்யவும் . தியானம் முயற்சிக்கவும். கீழ் காணும் மூலமந்திரம் ஜபிக்கவும்.

ஓம் சௌம் சரஹண பவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ


29)
மருந்துகளுக்குகட்டுப்படாத ஒற்றைத்த‌லைவ‌லி குண‌ம் அடைய:

சூப்பர் பரிகாரம் உள்ளது . நம்பிக்கையுடன் ஆரம்பித்தால் முதல் 9 நாட்களில் ஒ.த. பயங்கரமாய் அதிகரித்து படிப்படியாய் குறைய ஆரம்பித்துவிடும்.
பரிகாரம்:
காயத்ரி மந்திர ஜபம், சூரிய நமஸ்காரம். ஆரஞ்சு நிற தொப்பி அணிதல்.

குறிப்பு: முன் கூட்டியே ஐ டெஸ்ட் செய்து கொள்ளவும்