Friday, February 5, 2010

ஜோதிடம் என்பது கடல்

ஜோதிடம் என்பது கடல் கரையோரம் நின்று தூண்டில் போட்டாலும் ஓரிரண்டு மீன்கள் சிக்குவது நிச்சயம். ஆனால் நம்மவர்களில் பலர் கடற்கரையில் சோழி பொறுக்குவதிலேயே திருப்தியடைந்து விடுவது சோகம்

ஜோதிடம் என்பது ஆன்மீகத்தின் முதல் படி. அதன் இறுதி இலக்கு ஆன்மீகமே.ஆனால் நம்மில் பலர் ஜோதிடத்தை இகவுலக வாழ்விற்கே உபயோகிப்பது மனித குல அறியாமைக்கும்,அகங்காரத்துக்கும் அறிகுறி.

ஆன்மீக வாழ்வை பொறுத்தவரை கடந்த ஜன்மத்தில் செய்த சாதனையை (ஆன்மீக முயற்சிகள்) அறியவும் இந்த ஜன்மத்தில் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய ஆன்மீக பாதையையும் வெகு எளிதாக ஊகித்தறிய உதவுவது ஜாதகமே.

இது சாத்தியமானால் கடந்த பிறவிகளின் முயற்சிகளை அதே திசையில் தொடரவும், கடந்த கால முயற்சிகளுக்கான பலனை இந்த பிறவியில் பெறவும் வழி ஏற்படுகிறது. இதற்கு நாம் செய்யவேண்டியதெல்லாம் லக்னாத் சுபகிரகங்களில் உச்சம் பெற்ற கிரகம், பஞ்சமாதிபதி, நவமாதிபதி இவர்களில் யார் பலம் பெற்றுள்ளனரோ அந்த கிரகத்துக்குரிய வடிவத்தில் இறைசக்தியை தியானித்தலே.

இந்த தொடர்ச்சி சாத்தியமானால் ஏற்கெனவே 100 அடி Bore போட்ட ஆழ்துளை கிணற்றில் ரீ போர் போட்டது போன்று சீக்கிரமே பலனடையலாம் . இந்த தொடர்ச்சி சாத்தியப்படாவிட்டால் 100 அடி ஆழ்துளை கிணறு ( நாம் தோண்டிய) பக்கத்தில் இருக்க புதியதாய் பாயிண்ட் பார்த்து போர் போட்டது போலத்தான்.

சிலர் ஜாதகத்தில் குரு சனி சேர்க்கையிருக்கலாம்.அவர்கள் தம் ஊர் காவல் தெய்வத்தை வணங்கினாலே போதுமானது. ராகு சேர்க்கை உள்ளவர்கள் துர்கையை தவிர இதர தேவதைகளை வணங்குதல் கூடாது. கேது சேர்க்கை உள்ளவர்கள் கணபதி.

பல பதிவுகளில் நான் சுட்டிக்காட்டியது போல் உங்கள் குண நலனை மட்டுமல்ல, உங்கள் ஆன்மீக வாழ்வையும் நிர்ணயிப்பது செக்ஸ் குறித்த தங்கள் அவதானிப்பும்,கருத்துமே.

ஜாதகத்தில் லக்னம்,ஐந்தாமிடம் , ஏழாமிடம், விரய பாவம், சுக்கிர ஸ்திதி ( பெண்கள் விஷயத்தில் 4 ஆமிடத்தையும், லாப ஸ்தானத்தையும் நோக்க வேண்டும்) ஆகியவற்றை பொருத்துதான் ஜாதகரின் செக்ஸ் அனுபவங்கள்,செக்ஸ் குறித்த கருத்து ஆகியன அமைகின்றன.

ஒருவர் சுய இன்ப பிரியரா, வாய் வழி புணர்ச்சியாளரா , ஹோமோவா,குத புணர்ச்சியாளரா, சேடிஸ்டா மசாக்கிஸ்டா போன்ற விஷயங்களை அவரவர் ஜாதகத்தை கொண்டு எளிதாக புரிந்து கொள்ளலாம்.

சுய இன்ப பிரியருக்கு திருமணம் என்பது வேண்டாத வேலை. அவர் திருமணம் செய்து ஒரு பெண்ணின் வாழ்வை வீணாக்கி மகளிர் காவல் நிலையம், ஃபேமிலி கோர்ட் என்று அலைவதை காட்டிலும் பேசாமல் தன் கையே தனக்குதவி என்று வாழ்ந்து விட்டால் செக்ஸுக்கு அடுத்தது என்ன என்ற கேள்வி எழும். அவர் ஆன்மீக பாதையில் அடியெடுத்து வைக்க வாய்ப்பு ஏற்படும். இன்னும் இது போன்று ஆழமான ஜோதிட ரகசியங்களை பதிவிட தான் ஆசை .ஆனால் வீடுமாற்றும் மகத்தான பணி காரணமாய் துண்டும் துக்கடாவுமாக இந்த பதிவிலும் ஜோதிடத்தகவல்களை தரவேண்டியுள்ளது. காலம் ஒத்துழைத்தால் , பதிவர்களுக்கு நான் கடன் பட்டிருந்தால் வெகு சீரியசாக ஜோதிடபாடங்களை ( சைன்டிஃபிக் அவுட் லுக்குடன் ) தொடர்பதிவாகவே போடுகிறேன். கவலை வேண்டாம்.

ஒரு பிரபல நாளிதழில் நிருபனாக சேர்ந்த புதிதில் "அடடே ..நீங்க ஜோசியம் கூட பார்ப்பிங்களா? அப்போ அதை பத்தி எழுதலாமே என்று எடிட்டன் ஜும்மேற்ற (உசுப்பிவிட) எழுதிய தகவல்கள் இவை. ஸ்க்ரிப்டை ஆசனத்தின் கீழ் போட்டு வைத்திருந்த அந்த ஆசாமி இடமாற்றல் பெற்று சென்று விட்டான். தற்போது நான் எழுதும் விசயங்கள் யாவும் நினைவிலிருந்து எழுதுபவையே.

1.விருச்சிக ராசிக்காரர்கள்:
இவர் என்னதான் பொறுமையாய் இருக்க நினைத்தாலும் சூழ் நிலை இதை அனுமதிக்காது. சூழல் மாறும்போது இவரது பேச்சு மனதுக்கு வருத்தம் தருவதாய் இருக்கும். இவருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கலாம். இவருக்கு யுத்தம் என்றால் வெல்லம். யாரேனும் ஒருவருடன் இவருக்கு விரோதம், யுத்தம் இருக்கும் வரை ஆக்டிவாக இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். எதிரி ஒழிந்துவிட்டால் இவர் டீலாகிவிடுவார்.
பரிகாரம்: தண்ணீர் பந்தல் வைத்தல்,தோட்டம் வளர்த்தல்

2.ஜாதகத்தில் செவ்வாய் பலமிழந்தால்:
அதி கோபத்தால் வரும் வியாதிகள் (ஹை பிபி) அல்லது கோபத்தை அடக்குவதால் வரும் வியாதிகள் ( அல்சர்) இவருக்கு வரலாம்.

3.லக்னாதிபதி 12ல் இருப்பது அ நீசம் பெறுவது:
சதா சர்வ காலம் இவர் முயற்சியில் பிறர் வேலைகள் எல்லாம் முடியுமே தவிர சொந்த வேலை முடியாது. ஞாபக சக்தி குறைவு, சொந்த கருத்து ,புத்தி இன்மை, எடுப்பார் கைப்பிள்ளையாக இருத்தல் தாழ்வு மனப்பான்மை அ எதிராளிகளை கிள்ளுகீரையாக பாவிப்பது, ஸ்திரமான அபிப்ராயம் இல்லாது போதல் போன்ற குணங்கள் ஏற்படும்.

4.செவ்வாய்3,6,10,11தவிர வேறு இடங்களில் இருந்து நீசம்/பகை பெறுதல்:
இவருக்கு சிறுவயதில் அம்மை, கட்டிகள் போன்ற பிரச்சினைகள் வந்திருக்கலாம் அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடந்திருக்கலாம். இவர் பிறந்த பிறகு மாடு கன்று நஷ்டமாதல், நிலம் பறி போதலும் நடந்திருக்கலாம்.

பரிகாரம்:
முருகன் கோவிலுக்கு எரியும் பொருட்களை அன்பளித்தல். (உம்: பல்பு , விளக்கு. விளக்காயின் செம்பாகில் உத்தமம். செம்பு பூஜா பாத்திரங்களும் தரலாம் அ உடல் அங்கம் அறுபட்டவர்கள், தீவிபத்தில் சிக்கியவர்களுகு உதவலாம்)


5. பெண்கள் ஜாதகத்தில் ஒன்பதாமிடம் கெட்டால்:
தந்தையாராகட்டும், திருமணத்துக்கு பின் கணவராகட்டும் எல்லாவகையிலும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும்.

6. ஒன்பதாமிடம் குருவுடன் சம்பந்தபப்ட்டால் :
தந்தை சமூகத்தில் நல்ல மரியாதையை பெற்றிருப்பார். ஊர் பொது வேலைகள், சேவைகள், சங்கம் , கோவில் தேவஸ்தானம் போன்றவற்றில் அவருக்கு
பங்கிருக்கலாம்.

7.சுக்கிரன் அ 4 ஆமிடம் கெட்டால்:
வீடு,மனைவி , வாகன வகையறாவில் மனக்குறை இருக்கும். காதல் தோல்வி, தம்பதியிடையில் பிரச்சினை . தாம்பத்ய உறவில் அதிருப்தி.

8.குரு கெட்டிருந்தால் :
வீட்டிலேயே வைத்து தினசரி சிவ லிங்கத்துக்கு பூஜை செய்யலாம்.
9.ராகு கெட்டால்:
பரிகாரம்: மேஜிக் கற்றுகொள்ளுதல்.
10.சனி கெட்டால்:
கிராம தேவதையை பூசித்தல்
11.இரண்டாம் பாவம் சுப பலமானால்:
தனம்,வாக்கு,குடும்பம், கண்கள் ஓகே

12.ஐந்தாமிடம் சுப பலமானால்:
பிள்ளைகள், மன நிம்மதி, பெயர் புகழ்


13.சூரியன் சுமார் பலத்துடன் இருந்தால்:
தந்தை வழியில் கூரையிழந்த வீடோ, காலி இடமோ கிடைக்கலாம். அது மலை பிரதேசத்தில் அ குக்கிராமத்தில் இருக்கலாம். பஞ்சாயத்து, முனிசிபாலிட்டி நிர்வாகத்தில் பங்கு பெறலாம்.

14.தலை எழுத்து:

தலையெழுத்தை ஜாதகம் பார்த்து நிர்ணயிக்கலாம் என்று நினைப்பது முட்டாள் தனம். கிரக நிலையை வைத்து ஜோதிடர் கூறும் அனைத்து நற்பலன்களும் நடப்பதில்லை. அதே மாதிரி தீயபலன்களும் அனைத்தும் நடந்துவிடுவதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இவற்றை குறித்து 1989 முதல் ஆராய்ந்து வருகிறேன். தலையெழுத்து என்பது நீங்கள் பிறந்த போது இறைவன் கையில் இருந்த நிகழ்ச்சி நிரல். மனித வாழ்வில் ஒவ்வொரு செகண்டும் ஒரு ஜங்க்ஷன் பாயிண்ட் தான். ஆம் ஒவ்வொரு செகண்டிலும் மனித வாழ்வு நான்கு வித திருப்பங்களுக்கு வாய்ப்பு தரும் வகையில் ஸோ ஃப்ளெக்சிபிள். மாறிக்கிட்டே இருக்கும். எனவே நான் இங்கு தரும் பலன்கள் 100 சதம் ஏற்கெனவே நடந்திருக்க வேண்டும் என்ற அவஸ்யமில்லை. இப்போது வரை நடக்காத பலன்கள் எதிர்காலத்தில் நடக்கலாம். நடக்காமலும் போகலாம். ஆக நான் இங்கு கூறியுள்ள பலன் 60 சதவீதம் நடந்தாலே நான் சூப்பர் ஜோதிடன் என்பதை மனதில் வைத்து இந்த தகவல்களை படிக்கவும் .


15. ஒன்று ஏழில் ராகு கேது இருந்தால்:
அளவுக்கு மீறி இளைத்த சரீரம், அல்லது ஊளை சதை கொண்டவராக இருக்கலாம் அல்லது சந்தேக புத்தி அல்லது அனைவரையும் நம்பி மோசம் போவதும் இருக்கலாம். ஈஸி மணி மீது கவர்ச்சி இருக்கலாம். நண்பர்கள், பங்குதாரர்கள், காதலியாலும், மனைவியாலும் தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டலாம். அ அவர் நோயாளியாகவோ, தங்களை விமர்சிப்பவராகவோ இருக்கலாம். உடலில் ஆச்சரிய குறி போன்ற மச்சம் இருக்கலாம் (கோட்டின் கீழ் புள்ளி இருக்க தேவையில்லை)

தங்கள் மனதில் எப்போதும் ஏதோ கெட்டது நடக்க போகிறது என்ற எண்ணம் பதைப்பு இருந்து கொண்டே இருக்கலாம். தேவையற்ற விசயங்களில் கூட ரகசியம் காப்பவராய் இருந்து இதரரின் சந்தேகத்திற்கும் ஆளாவீர்கள்.புதிதாக அறிமுகமாகும் நபர்கள் ,வெளி நாட்டினர், வெளி நாட்டு தொடர்புள்ளவர்கள், கரிய நிறம் கொண்டவர்கள், ஓரப்பார்வை பார்ப்பவர்கள், பூனைக்கண் கொண்டவர்களால் பிரச்சினையில் மாட்டலாம்.

பரிகாரம்; கூட்டு வியாபாரம் கூடாது. இதர மதத்தவர், இதர மொழியினரிடம் எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். எனவே துர்கை கணபதியை வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.

16. இரண்டு அ நான்கில் சனி:
பெரிய குடும்பத்தை போஷிக்க வேண்டி வரலாம். பழைய வீட்டில் அ பராமரிப்பு இல்லாத புது வீட்டில் வாழலாம். வாக்கு தவற நேரிடலாம். வாக்கு நிஷ்டுரமாக வரலாம். குடும்பத்தில் கலகம் ஏற்படலாம். லாவாதேவிகளில் சிக்கல் தாமதம் ஏற்படலாம். என்றாலும் சோர்ஸசுக்கு குறைவிராது என்ன ஒரு லொள்ஸ் என்றால் அவை கைக்கு வர பயங்கர தாமதம் ஏற்படும்

17. மூன்றாம் பாவத்தில் ராகு/கேது/சனி/சூரியன்,செவ்வாய், இருந்தால்:
சோதர சோதரிகள் (இருந்தால்) ,மனைவி, வாழ்வு கோடை நதியாகவே இருக்கும் .போக போக அவர்களின் அழகு, கவர்ச்சி ஆரோக்கியம் குறைந்து வரும்..ஜாதகருக்கு புஜம் /தோள் பகுதியில் முறிவு, காயம் ஏற்படலாம். செவிட்டுத்தன்மை கூட ஏற்படலாம்.

18.ரிஷப ராசி, ரிஷப லக்ன காரர்கள்:

தங்களுக்கு பணம், பேச்சு, குடும்பம் என்றால் வெல்லம். ஆனால் இயற்கை குரூரமானது எந்த ஜாதகர் எதை தன் உயிருக்கு சமமாய் பாவிக்கிறாரோ அந்த விசயங்களிலேயே ஆப்பு வைக்கும். எனவே மேற்சொன்ன விசயங்களில் முடிந்தவரை தங்கள் மைண்ட் செட்டை மாற்றிக்கொள்வது நல்லது. இதனால் பொருளாதார விசயத்தில் சற்று வீக் ஆனாலும் குடும்பவகையில் அபிவிருத்தி உண்டு. பேச்சை குறைக்கவும், குடும்பத்தாருடனும் சற்று நீக்கு போக்காக நடப்பது நல்லது. அதிகம் அட்டாச் மெண்ட் வேண்டாம் .
19.கடக லக்ன காரர்கள்:

தாங்கள் தங்கள் சக்திக்கு மீறி வீடுகட்டுவார்கள். பாதியில் வேலை நிற்கும். தீராத கடன் ஏற்படும் . நிம்மதி குலையும்.

20.லக்ன சூரியன்:
சூட்சும புத்தியும் இருக்கும். அந்த புத்தியை தங்கள் அகங்காரம், வறட்டு கவுரவம்,
21.லக்ன சந்திரன்:

சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை
22.மூன்றாம் பாவத்தில் சந்திரன்:
சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும்.

****************

பரிகாரம்:
கன்னியா குமாரி அம்மனை வழிபடவும். நிலாச்சோறு தின்னவும். ஊஞ்சலில் ஆடவும். வண்ண மீன்கள் வளர்க்கவும். தியானம் அத்யாவசியம். தங்கள் பிரச்சினைகளில் அதிகம் மானசிகமானவையாகவே இருக்கும். "என்னமோ தோணுச்சு செய்தேன் எனும் ரகம்"

கடன் பிரச்சினை இருக்கும் . இதற்கு தாய் மாமன்,வியாபாரம், மீடியேஷன்,ஏஜென்சி, டீலர்ஷிப் போன்றவை காரணமாக இருக்கலாம். மேலும் பிள்ளைகள் கல்வி இத்யாதி காரணமாயும் கடன் ஏற்படலாம். இந்த ஜாதகப்படி என்னதான் ஈகோயிஸ்டாக இருந்தாலும் ஆண்குழந்தை நல்ல அபிவிருத்தியடைய வாய்ப்பிருக்கிறது. (இவை புத தசை, புக்திகளில் நடக்கும். சுக்கிர தசா புக்திகளிலும் தலை காட்டலாம்)

பெண் குழந்தைக்கு தலை,பல்,எலும்பு தொடர்பான தொல்லைகள் ஏற்படலாம். கல்வி,வேலை, திருமணம் காரணமாய் தொலை தூரம் சென்று வாழ நேரலாம். பெண் சாயலுள்ள ஆண் குழந்தை அ ஆண் சாயலுள்ள பெண் குழந்தையுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். (இவையும் புத தசை, புக்திகளில் நடக்கும் பலனாகும்)

ஜாதகருக்கு தோல் ,அண்டம், ஜாயிண்ட்ஸ் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். பிறருக்காக முன் நின்று நஷ்டப்பட வேண்டி வரலாம். ஜாதகர் பிறர் விசயத்தில் தலையிடாமலிருப்பதே நல்லது. (இப்பலன் புத தசா புக்திகளில் நடை பெறும்)

ஜாதகருக்கு பொது சேவை, கோவில் குளம், தர்மம் , சேரிட்டியில் அதி ஈடுபாடு இருந்தால் குறைத்துக் கொள்ளவும். இதனால் வீண்பழிதான் ஏற்படும். முக்கியமாக ரொக்கம், தங்கம் ஹேண்டில் செய்யும் எச்சரிக்கை தேவை. வேலை செய்யுமிடத்தில் ஒரு மரணம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ( குரு தசா புக்திகளில் நடைபெறும்)

ஜாதகர் சில காலம் மரணம் தொடர்பான தொழில்களில் ஈடுபடலாம். (உ.ம் எல்.ஐ.சி ) ஆனால் இதனால் பெரிதாக லாபம் இராது. ஒரு வேளை இருந்தாலும் வைத்திய செலவுகள், சச்சரவுகள் அதிகம் ஏற்படும். உயில் மூலம் வரவேண்டிய சொத்துக்காகவோ அ மூதாதையர் சொத்துக்காகவோ கோர்ட்டு படியேறவேண்டி வரலாம். ஆனால் இது வேண்டாத வேலை என்று தான் காலம் கூறும்.( குரு தசா புக்திகளில் நடைபெறும்)
இனி தங்கள் கேள்விகளுக்கான பதில்கள்:

வீடு:
8/1/2012 வரை வீடு கட்டிக்கொள்ள ஏதுவான நேரமே. கைப்பணம் இருந்தாலும் கொஞ்சமாவது கடன் வாங்கி ஆரம்பிக்கவும். முடிந்தவரை பேச்சு வார்த்தைகளில் நீங்கள் நேரிடையாக இறங்க வேண்டாம். அதே போல ரொம்ப யோசனைகள் செய்தல் அடிக்கடி திட்டத்தை மாற்றுதல் வேண்டாம். முடிந்தவரை காண்ட் ராக்ட் மூலமாகவே கட்டிக்கொள்ளவும். தங்கள் ஜாதகப்படி தங்கள் வீடு மலைப்பகுதியில் மேட்டுப்பகுதியில், புத்தம் புதிய காலனிகளில் முதல்வீடாக அமையவே வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற இடங்களில் ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்ட முயற்சித்தால் அது ஆற்றோடு போவது போவது போல் எளிதாக இருக்கும். வீட்டு கூரையில் சென்டரில் சூரிய வெளிச்சம் நேரே வீட்டுக்குள் விழுவது போல் திட்டமிடவும் . முக்கியமாக மீடியேட்டர்கள் பேச்சை நம்பாது நேரில் இறங்கி விசாரித்து முடிவு செய்யவும் .வெங்கடேச பெருமாளுக்கு வேண்டிக்கொள்ளவும். மஞ்சள் துணியில் 5 ஒரு ரூ நாணயங்களை வைத்து முடிந்து பெருமாள் படத்தில் கட்டி வீடு கட்டி முடிந்ததும் நேரில் வந்து (திருப்பதி) செலுத்துவதாய் வேண்டிக்கொள்ளவும். 2010 மார்ச் 23 க்கு பிறகு நல்ல நாள் பார்த்து வேலையை ஆரம்பிக்கவும். முடிந்தவரை கட்டின வீடாகவே வாங்கி விட பாருங்கள். முடியாவிட்டால் மிகுந்த எச்சரிக்கையுடன் நான் கூறியுள்ள விஷயங்களை மனதில் வைத்த் செயல்படவும்.

2.உடல் நலம்,செல்வ நிலை: 8/1/2012 தேதிக்கு பிறகு சற்று பின்னடைவு ஏற்படும் . வினாயகரை வழிபடவும் . தினசரி வீட்டில் பிள்ளையார் பூஜை செய்யவும்
14.12.2012 க்கு பிறகு பரவாயில்லை .

3.மகனின் படிப்பு, எதிர்காலம்:
2010 பிப்ரவரி 6 க்கு பிறகு படிப்பில் நல்ல வளர்ச்சி இருக்கும். ஆனால் கூட பழகுபவர்களால் (முக்கியமாய் கீழ் சாதியினர் கருப்பாக இருப்பவர்கள், உடல் ஊனமுற்றவர் காரணத்தால்) பிரச்சினைகள் வரும். திடீர் என்று ஒரு சிறு விபத்தோ, வீண்பழியோ படிப்பின் மீது எஃபெக்ட் காட்ட வழியுள்ளது. 8/7/2012 க்குள் தங்கள் மகன் கல்வியில் நல்லதொரு வளர்ச்சியை அடைவார். வராக ஸ்வாமியை தியானம் செய்யச்சொல்லவும். (பன்றி முகத்துடன் விஷ்ணு)

4.மகள்:
15/9/2010 க்கு பிறகு படிப்படியாக முன்னேற்றம் இருக்கும். இது 2/7/2015 வரை கூட தொடரும். அதற்கு பிறகு அ சற்று முன் குடும்பத்தில் முக்கியமான ஒருவர் நிலை கவலைக்கிடமாகும்
5.மனைவி:
30/4/2012 வரை யோகமான காலமே. ஆனால் இவருக்கு ஒரு டார்கெட் அ ஒரு எதிரி இருந்தால் மேலும் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். முருகனை வழிபடச்செய்யவும். செம்பருத்தி பூவை நிழலில் உலர்த்தி கஷாயம் போட்டு குடிக்க சொல்லவும். ரத்த விருத்திக்கு தேவையான ஆரோக்கிய சூத்திரங்களை பின்பற்ற சொல்லவும். செம்பு காப்பு/வளையல் அணியவும் . 30/4/2013 க்குள் குடும்பம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையும்.
Danya:
சஞ்சல சுபாவம் கொண்டவராக கற்பனை, பரபரப்பு மிக்கவராக இருந்தாலும் ஆழமான யோசனை உள்ளவராக இருப்பார். தன் கருத்துக்களை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பார். சுற்றுபயணங்கள், பயணங்கள் என்றால் விருப்பம் உள்ளவராக இருக்கலாம்/சமூகத்தில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் மீது கவர்ச்சி இருக்கும்.

ஒரு வேலையை எடுத்துக்கொண்டு அதை முழுமூச்சாக முடிக்கும் உறுதி இல்லாவிட்டாலும் பல்வேறு வேலைகளுக்கிடையே அனைத்து வேலைகளையும் தவணையில் சிறிது சிறிதாக முடிக்கும் தனமை இருக்கலாம். இப்பலனை சந்திர சுக்கிர, கேது தசா புக்திகளில் காணமுடியும்)
பரிகாரம்:
வண்ண மீன் வளர்ப்பு, கன்னியா குமாரி வழிபாடு, ஊஞ்சலாடுதல், நிலாச்சோறு, ஸ்படிக மாலை, முத்து மாலை , முத்து மோதிரம்.

இந்த ஜாதகப்படி சகோதரர் செல்வந்தராக வாய்ப்புண்டு. பத்து பேரை போஷிப்பவராக அவர் வளர்வார்.(குரு தசா புக்தி காலங்களில்)

ஜாதகருக்கு படிப்பில் தடை ஏற்படலாம். அன்னிய மொழியில் வித்தகராவார்.இதய பகுதியில் மச்சம் இருக்கலாம். (ராகு தசா புக்திகளில்) இவருக்கு சிறிய தந்தை , பெரிய தந்தை போன்றோரின் அன்பு, ஆதரவு கிட்டலாம். இந்த ஜாதகப்படி தந்தை ஒரு தோட்டம் அ அரிய ஷேர்களை இவருக்கு தரலாம். (சூரிய ,புத தசா புக்திகளில் இப்பலனை எதிர்பார்க்கலாம்)

இத்தனை நல்ல அம்சங்கள் இருந்தாலும் திருமண விஷயத்தில் இவருக்கு ஏமாற்றம்/அதிருப்தி ஏற்படலாம். கணவர் இவர் தகுதிக்கு சமமானவராக இல்லாது போகலாம். தம்பதியிடையில் சச்சரவுகளும் ஏற்படலாம். கருப்பை தொடர்பான மருத்துவ பிரச்சினைகளும் வரலாம். சிறு வாகன விபத்து காதல் போன்ற விவகாரமும் தலை காட்டலாம்.
பரிகாரம்:
லட்சுமிக்கு சுமங்கலி பூஜை, ( சுக்கிர, கேது தசா புக்திகளில்), எளிய வாழ்வு ஸ்னேக்ஸ், சுவீட்ஸ், சாட்டிங், டி.வி, ஏ.சி, வாசனா திரவியங்கள் போன்ற லக்சரி தவிர்க்கவும்.


இவருக்கு முன் பிறந்த மூத்த உடன் பிறப்புக்கு இந்த ஜாதகம் அனுகூலமல்ல. இவர் தனது தாயின் கருவில் இருந்த போதே தூரத்து/ நெருங்கிய உறவில் துர்மரணம் அ அகால மரணம் சம்பவித்திருக்கலாம். மேலும் ரத்தம் கெடுவதால் வரும் நோய்களும் வாட்டலாம் . உ.ம் கட்டிகள், ப்ளட் ஷுகர் ஒரு உயில் மூலமாகவோ நஷ்ட ஈடு வகையிலேயோ தனவரவு ஏற்படலாம். (இப்பலன் சனி,செவ்வாய் தசா ப்க்திகளில் நடக்கலாம்)
பரிகாரம் : குல தெய்வத்துக்கு பலி பூஜை. நட்பு /உறவுக்கு நான் வெஜ் டின்னர் ஜாதகரும் சாப்பிடலாம்.



Sri Vathsan:
இவருக்கு பேச்சு, கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம். மலை போல் தோன்றி பனி போல் விலகலாம். எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல், ஈ என் டி பிரச்சினைகள் ( காது, மூக்கு, தொண்டை) தொல்லை தரலாம். குடும்பத்திற்கு கடன் ஏற்படலாம். ( இதற்கு காரணம் தனக்கு மீறிய தான தருமம் அ கோர்ட்டு நடவடிக்கை அ அரசியல் நடவடிக்கையாக இருக்கலாம்) ஜாதகர் அடிக்கடி பேச்சு மாறுதல், திடீர் என்று கிசு கிசுப்பாய் பேசுதல், திடீர் என்று கத்தி பேசுதல் , மிமிக்ரி செய்தல் நடக்கலாம்.( இந்த பலன் சந்திர தசா புக்திகளில் நடைபெறும்.)

மேலுக்கு மந்த புத்தி உடையவராக, சோம்பல் கொண்டவராக தென்பட்டாலும் அதிர்ஷ்ட சாலி. டெக்னிக்கலாய் முன்னேறி 8 பேருக்கு வேலை வாய்ப்பு தருவார். இரும்பு,ஆயில், க்ரானைட்ஸ், செகண்ட் ஹேண்ட் பொருட்கள், விவசாயம் தொடர்பானவை , வெட்டினரி துறை, கருப்பான பொருட்கள், துர் நாற்றம் வீசும் பொருட்களில் நல்ல லாபம் முன்னேற்றம் கிட்டும் . ( இந்த பலன் சனி, புத தசா புக்திகளில் நடைபெறும்)

கல்வியில் சிறு தடைகள் ,ஆர்வமின்மை, பின் தங்குதல் நடக்கலாம். என்றாலும் கல்வி தொடரும். அது தொழில் நுட்ப கல்வியாக இருந்தால் நலம். (இப்பலன் ராகு தசா புக்திகளில் நடைபெறும்)

இது தாய் மாமனுக்கு நல்ல ஜாதகமல்ல. அவருக்கு கண்டம் ஏற்படலாம்.ஜாதகருக்கும் தோல், ஜாயிண்ட்ஸ் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். அண்டம் கூட பிரச்சினை தரலாம். உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், வெ ந் நீர் , சுடும் எண்ணை , மின்சாரத்தாலும் பிரச்சினை ஏற்படலாம் எச்சரிக்கை தேவை. (புத ,செவ்வாய் தசா புக்திகளில் நடைபெறலாம்.

ஜாதகருக்கு இறந்தவர்கள் கனவில் வருதல், அ அவர்கள் குறித்த நினைவுகளோ ஓரளவு மைண்ட் டிஸ்டர்பன்ஸ் தரலாம். பிரதி சனிக்கிழமை காகத்துக்கு சோறு வைத்து வரவும். பசுமாட்டுக்கு அகத்திக்கீரை தரவும். ( சனி தசா புக்தி காலங்களில் கட்டாயம் செய்யவும்)

ஜாதகர் லைஃப் செட்டில்மென்ட் மிக தாமதமாகவே நிகழும். மேற்சொன்ன பரிகாரம் இந்த தாமதத்தை குறைக்கும். ஜாதகர் வாழ்வில் தாய் தந்தையரை விட மனைவியின் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமாக இருக்கும். ஆனால் அவர் (மனைவி) பெரிதாக வசதி படைத்தவர் என்று சொல்ல முடியாது(இப்பலன் சூரிய சுக்கிர தசா புக்திகளில் நடக்கும்) ஜாதகருக்கு சொந்த வீடு, வாகன யோகம் உள்ளது. இதில் லோக்கல் பாடிஸ் காரணமாய் சில அலைக்கழிப்புகள் இருந்தாலும் ரிலீஃப் கிடைக்கும்.

பரிகாரம் : காயத்ரி மந்திர ஜபம், சூரிய நமஸ்காரம்.

ஜாதகர் வாழ்க்கை கல்வி பயின்று ஆஷாட பூதியாக இல்லாவிட்டாலும் தமக்கென்று ஒரு ஃபிலாசஃபியுடன் வாழ்வார். (கேது, செவ்வாய் தசா புக்திகளில் இப்பலனை எதிர்பார்க்கலாம்)

Veera Lakshmanan:
சதா சர்வ காலம் தங்கள் முயற்சியில் பிறர் வேலைகள் எல்லாம் முடியுமே தவிர சொந்த வேலை முடியாது. ஞாபக சக்தி குறைவு, சொந்த கருத்து ,புத்தி இன்மை, எடுப்பார் கைப்பிள்ளையாக இருத்தல் தாழ்வு மனப்பான்மை அ எதிராளிகளை கிள்ளுகீரையாக பாவிப்பது போன்ற குணங்கள் ஏற்படும்.

செக்ஸ் மீதான அதீத ஈடுபாட்டால் விரைவில் அதன் மீதுள்ள கவர்ச்சியை இழத்தல் கூட நடக்கலாம். காதல் ,கல்யாணம் வகையிலும் அதிருப்திகள் ஏற்படும். பொருந்தா காதல், காதல் திருமணம், கலாட்டா கல்யாணம்,மனைவியுடன் தகராறுகள் , பெண்களால் விவகாரம் போன்றவற்றையும் எதிர்பார்க்கலாம்.

பரிகாரம்:
வெண் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வெள்ளியன்று லட்சுமி பூஜை செய்க.சுமங்கலிகளுக்கு (6 பேர்) தாம்பூலம் வழங்கவும். வெள்ளி ஆபரணங்கள் அதிகம் அணியவும். வெள்ளி பாத்திரங்கள் உபயோகிக்கவும். முருகனை வழிபடவும். குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து ரத்த தானம் செய்யவும். எரி பொருள் தானம் செய்யவும்.


மேற்படி பரிகாரங்களை செய்தால் மேற்சொன்ன பிரச்சினைகள் தங்கள் பேச்சு திறமையாலும் , பணத்தை செலவழித்தும், குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பாலும், அதிர்ஷ்டத்தாலும், புத்திபலத்தாலும், தங்களுக்குள்ள நல்ல பெயராலும் முழுக்க தீராவிட்டாலும் பாதிப்புகள் குறையும்.

தங்கள் தெய்வ, சாஸ்திர நம்பிக்கை முழுக்க ஒழிந்து போகும் வரை சோதனைகள் தொடரும். வயிறு,இதயம், வாரிசுகள், தங்கம்,ரொக்கம் ,அரசியல் வகைகளிலும் பிரச்சினைகள் ஏற்படும். தந்தை, தந்தை வழி சொத்து, தூர பிரயாணங்கள், சேமிப்பு வகையிலும் பாதிப்பு ஏற்படும் .

தங்கள் ஜாதகம் தங்கள் இளைய உடன் பிறப்புகளுக்கும், செவிக்கும் நல்லதல்ல. மித மிஞ்சிய தைரியத்தாலும், சாகசம் செய்யும் இச்சையாலும் உயிருக்கு ஆபத்தை விளைவித்துக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. முக்கியமாக அவ்வப்போது மூட் அவுட் ஆதல், எளிதில் எரிச்சல்,கோபம், தாய்வழியில் நட்டம், ஜல கண்டம், சீதள் நோய்கள், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். பொது வாழ்வு உதவாது.

லோகாயதமாக பிரச்சினைகளை தந்தாலும் தங்களுக்கு ராஜ யோகம் இத்யாதியில் ஆர்வம் ,பயிற்சி ஏற்படும் தந்தைக்கும், தந்தை வழி சொத்துக்கும் செதில்,பாம்பு தேள் இத்யாதி விஷ ஜந்துக்களால் பிரச்சினைகள் ஏற்படும்

பரிகாரங்கள்:
1.ஆரஞ்சு, மெருன் கலர் (பாக்கு நிறம்) கொண்ட துணி , வெண்பட்டு ஆகியவற்றை இணைத்து தயாரித்த பெட் கவர் உபயோகிக்கவும். இதனால் தூக்கமின்மை, காதல் ,திருமணத்தில் தடைகள் , மனைவியுடன் தகராறுகள் குறையும். (சுக்கிர சூரிய சேர்க்கையால் விந்து வறளும். எனவே உடலுறவுகளுக்கிடையே யான இடைவெளியை அதிகரிக்கவும்.

2.வெள்ளி அதிகம் உபயோகிக்கவும். லக்சரி,ஆடம்பரம், ஃபர்னிச்சர், டபுள் காட் பெட், ஹோம் நீட்ஸ்,வாகனம் ,பார்ட்டி, சுப காரியங்களில் நீண்ட நேரம் இருந்து எஞ்ஜாய் பண்ணுவது இத்யாதி தவிர்க்கவும். இதுவும் மேற்சொன்ன தீயபலன் களை குறைக்கும்.

3.சுக்கிர செவ்வாய் சேர்க்கையால் இன உறுப்பில் காயம் ஏற்படலாம். முடிந்தால் அப்டமன் கார்ட் அணியவும். (ஸ்போர்ட்ஸ் கடைகளில் கிடைக்கும்) பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை

4.தாங்கள் உற்பத்தி துறையில் இருப்பதைவிட விற்பனை துறைக்கு மாறுவது பெட்டர். அது கூட ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர் துறையானால் இன்னும் பெட்டர். இதை விட போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு பிரிவுகளில் விற்பனை துறையை தேர்வு செய்து கொண்டால் சாதனை படைக்கலாம்.

5.தங்கள் ஜாதகப்படி தங்களுக்கு பணம், பேச்சு, குடும்பம் என்றால் வெல்லம். ஆனால் இயற்கை குரூரமானது எந்த ஜாதகர் எதை தன் உயிருக்கு சமமாய் பாவிக்கிறாரோ அந்த விசயங்களிலேயே ஆப்பு வைக்கும். எனவே முடிந்தவரை தங்கள் மைண்ட் செட்டை மாற்றிக்கொள்வது நல்லது. இதனால் பொருளாதார விசயத்தில் சற்று வீக் ஆனாலும் குடும்பவகையில் அபிவிருத்தி உண்டு. பேச்சை குறைக்கவும், குடும்பத்தாருடனும் சற்று நீக்கு போக்காக நடப்பது நல்லது. அதிகம் அட்டாச் மெண்ட் வேண்டாம் .

6.ஜோதிடனும் ஒரு குருதான். குருஸ்தானத்தில் உள்ள நான் இப்படி சொல்லக்கூடாது. ஆனாலும் தங்கள் நலம் நாடி கூறுகிறேன் இன்று முதல் கோவில் குளம், தெய்வம், தெய்வ நம்பிக்கை இத்யாதியை மறந்துவிடுங்கள் . உங்கள் ஜாதகப்படி அந்த கடவுள் தங்களுக்கு கொடுத்துள்ள சாய்ஸ் 2
அதில் ஒன்று தெய்வ நம்பிக்கையுடன் பணரீதியில் நிறைய கஷ்டப்படுவது. திருமணம், மனைவி ,வாரிசுகள் விசயத்தில் நிராசைப்படுவது
இரண்டாவது சாய்ஸ்: நாத்திக வாதியாக ஓரளவேனும் நிம்மதியாக வாழ்வது. இதில் தங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை செய்யவும்.


20/12/2011 வரை தந்தை, தந்தை வழி உறவில் ஒரு மரணம் அ பெரு நஷ்டம் நடந்தாலும் செய்தொழில், பெயர் புகழ், நிம்மதி, புத்தி கூர்மை ,சேமிப்பு சொத்து சொத்து பரிவர்த்தனை, வாங்குதல் விற்றல் வகையில் நன்மையே ஏற்படலாம். தூர பயணங்களால் அலைச்சல் திரிச்சல் ஏற்படலாம். திருமணம் அ மனைவி விசயத்தில் நன்மையை தந்தாலும் , வாரிசுகள் விசயத்தில் இது நல்ல நேரம் அல்ல்

பரிகாரம்:
பித்ருக்களுக்கு பிண்டம் வைத்தல் , காகத்துக்கு சோறு வைத்தல், நொண்டிக்கு உதவுதல்.

20/12/2011 முதல் 7/7/2014 வரை கனல்டன்சி, அக்கவுண்ட்ஸ்,ஆடிட்டிங்க், கம்யூனிகேஷன்ஸ், தாய் மாமன் ,ஏஜென்சி, கமிஷன் வியாபாரம் வகையில் முன்னேற்றம் உண்டு. என்றாலும் தோல் அண்டம் தொடர்பான பிரச்சினைகளும் வரலாம்.

தற்சமயம்:
மார்ச் 23 வரை மனதில் இனம்புரியாத அச்சம் இருக்கலாம். சகோதர/சகோதிரி வகையில் மனக்கஷ்டம்,பணக்கஷ்டம் ஏற்படலாம். மார்ச் 23க்கு பிறகு இடமாற்றம், சீட் மாற்றம், தாய்,வாகனம் வகையில் செலவு ஏற்படலாம்.

Shanmuga sundaram:
அன்புடையீர்,
தங்கள் ஜாதகத்தில் நல்ல அம்சங்களை விட தீய அம்சங்களே அதிகமாய் உள்ளன. எனவே பலன்களினிடையே கூறியுள்ள பரிகாரங்களை தவறாது செய்யவும். அதி கோபம் அ கோபத்தை அடக்குவதால் வரும் வியாதிகள் வரலாம்.உம் ரத்தக்கொதிப்பு, அல்சர். உஷ்ண ரோகங்கள் பாதிக்கலாம். உம் கட்டிகள், பைல்ஸ்.
நிலம்,சகோதரம், எதிரிகள் தொடர்பாக விவகாரங்கள் வரலாம். மேலுக்கு சமாதானமாய் போனாலும் உள்ளுக்குள் விரோதம் கனன்று கொண்டே இருக்கும். எச்சரிக்கை தேவை. நேரடி எதிரிகள் மட்டுமன்றி ரகசிய எதிரிகளாலும், துரோகிகள் சதிகாரர்களாலும் தொல்லைகள் ஏற்படும். நம்பி நம்பி ஏமாந்து ஏமாந்து சந்தேக காரராக கூட தயாராகிவிடலாம். சில நேரம் தாங்களும் சதி திட்டம் தீட்ட முனைந்துவிடுவீர்கள். இவையாவும் தங்கள் உடல் நலனையும், மனைவியார் உடல் நலனையும் , தங்களியை ஒற்றுமையையும் பாதிக்க கூடியன ஸோ பீ கெர்ஃபுல் !

வயதில் சிறியவர்கள், இளையவயது போல் தோற்றம் தரும் மூத்தவர்கள், சகோதரர்கள், வன்னியர், ராஜுக்கள் (ஒரு சாதி பெயருங்க), கரிய நிறத்தவர் ,ஓரப்பார்வை பார்ப்பவர், காகம் போல் தலை சாய்த்து பார்ப்பவர் இதர மதத்தவர், இதர மொழியினர் ஆகியோருடன் கூட்டு வியாபாரம் , நட்பு , வேண்டாம்

பரிகாரம்: போட்டிகள் வேண்டாம்.(ப்ளட் ஷுகர் கூட வரலாம்) , அஜீரணம், மலச்சிக்கல் தவிர்க்கவும் இன்றேல் பைல்ஸ் கியாரண்டி. பவழக்கல் வைத்த மோதிரம் , பாம்பு வடிவ மோதிரம் இரண்டும் அணியவும். முருகன், ஸ்ரீ துர்கை,கணபதியை வழிபடவும். மனைவியாரும் இரு மோதிரங்கள் அணிந்து முருகன், ஸ்ரீ துர்கை,கணபதியை வழிபட்டால் நல்லது. மனைவியார் வாரம் ஒரு தினம் (திங்கள்) காவி புடவை உடுத்தி வினாயகரை வழிப்படுவது நல்லது. வைத்தியத்திற்கு அடங்காத வலி, பலகீனம் இருப்பின் காலை வெறும் வயிற்றில் வேப்பந்துளிர் சாப்பிடவும். அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.

தாங்கள் அதிர்ஷ்ட சாலி என்பதில் ஐயமில்லை. ஆனால் அதிர்ஷ்டம் சற்று தாமதமாய் (முதுகு வளைந்த பின், தலைமுடியெல்லாம் வெளுத்த பின் வரிக்கும். பொறுமை தேவை. யூனிஃபார்ம் அணியும் தொழில், இரும்பு, ஆயில், சுரங்கம், குவாரி, செகண்ட் ஹ்யாண்ட் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள்,விவசாயத்தொழில், கருப்பு நிற பொருட்கள் தாமதமாக அதிர்ஷ்டம் தரும். மேற்கு திசை, எஸ்.சி.பிரிவினரும் 8.17.26 தேதிகளும்,சனிக்கிழைமையும் கூட அப்படித்தான். பலன் தரும். முடிவுகள் எடுப்பதில், செயல்பாட்டில் மந்தம் இருப்பின் அதை அப்படியே தொடரவும். அதுவே அதிர்ஷ்டம் தரும். பிள்ளைகள் மட்டும் ரொம்பவே மந்த புத்தி அ கால்,ஆசனம் தொடர்பான தொல்லைகளை சந்திக்கவேண்டி இருக்கும்.

பரிகாரம்:

திருமலையில் உள்ள வராக ஸ்வாமியை தியானம் செய்க. பெயர் புகழுக்கு ஆசைப்படாது,எதற்கும் முன்னே நிற்காது கும்பலில் கோவிந்தா போடவும்.

தலை,பல்,எலும்பு தொடர்பான தொல்லைகள் ஏற்படலாம். தந்தை, தந்தை வழி சொத்து நஷ்டம். ஹைப்பர் டென்ஷன், அதி ஆடம்பரம்,லக்சரி செலவுகள், பெண்கள் பேச்சுக்கு ரொம்பவே மதிப்பு தருதல். ஃபர்னிச்சர், இன்டிரியர் டெக்கரஷன்,வீடு வாகனம், விருந்து உபசாரம் வகையில் வீண் செலவுகள்வாங்கிய கடன் செட்டிலாகாது இழுத்துக்கொண்டே போவது நநல்லதல்ல. தூர பிரயாணத்தில் சிறு விபத்தோ பெரு நஷ்டமோ ஏற்படலாம். தோல் அண்டம் ,ஜாயிண்ட்ஸ் ,தொடர்பான பிரச்சினைகளும் ,புத்தி குழப்பம், தகவல் குழப்பம் வரலாம்.


பரிகாரம்:
காயத்ரி மந்திர ஜபம், சூரிய நமஸ்காரம். வெண் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வெள்ளியன்று லட்சுமி பூஜை செய்க.சுமங்கலிகளுக்கு (6 பேர்) தாம்பூலம் வழங்கவும். வெள்ளி ஆபரணங்கள் அதிகம் அணியவும். வெள்ளி பாத்திரங்கள் உபயோகிக்கவும்.
புதன் கிழமை கிருஷ்ணருக்கு துளசி மாலை அணிவித்து வணங்கி வரவும்.

செய் தொழில்:
செய் தொழிலில் ஸ்திரத்துவம் இராது. இடமாற்றம் ,சீட் மாற்றம் இருக்கும். இந்த வருடம் விட்டுரலாம்,அடுத்த வருடம் விட்டுரலாம் மாதிரியே இருக்கும். தொழில் ஆர்வமும் 15 நாள் ஓகோ, 15 நாள் அடச்சீ என்றாகிவிடும்.

பரிகாரம்:
கன்னியா குமாரி அம்மனை வழிபடவும். நிலாச்சோறு தின்னவும். ஊஞ்சலில் ஆடவும். வண்ண மீன்கள் வளர்க்கவும். தியானம் அத்யாவசியம். தங்கள் பிரச்சினைகளில் அதிகம் மானசிகமானவையாகவே இருக்கும். "என்னமோ தோணுச்சு செய்தேன் எனும் ரகம்" முடிந்தவரை இதை தவிர்த்து அறிவு பூர்வமாகவே யோசிக்கவும். முக்கியமாய் அமாவாசைக்கு பின் வரும் நாட்களில்.

சகோதர வகையில் லாப நஷ்டம் சமமாக இருக்கும். சிவந்த நிறம் கொண்டவரை விட மா நிறம் கொண்ட சகோதரர்/சகோதிரியால் நலம் விளையும்.

இதுல பயங்கர நஷ்டம் வரும் என்று முடிவு செய்துவிட்ட விஷயத்தில் திடீர் லாபம் ஏற்பட வாய்ப்புண்டு

பாம்பு புற்று, சாராயக்கடை,சர்ச் ,மசூதி,தர்கா,துர்கை கோயில் உள்ள தெருவில் அருகாமையில் வீடு கட்ட , நிலம் வாங்க வாய்ப்பிருக்கிறது. பெண்கள் பால் மனம் செல்லாது கட்டுப்படுத்தவும், இன்றேல் பெருத்த அவமானம் ஏற்படும்.

நீங்கள் பாக்கி வைத்துள்ள ஒரு கடன் காரர் /எதிரி/போட்டியாளர் செத்தே போகலாம் அ ஊரை விட்டே போய்விடுவார்,அது தங்கள் சகோதரர்/திரி ஒருவராகவ்ம் இருக்கலாம்.

தங்கள் மனைவியார் உடல் திடீர் என்று புசுபுசுவென்று வந்து , திடீன் என்று ஒல்லியாகிவருவார். பரிகாரம் முத்துமாலை அணிதல். தங்கள் வேலை/தொழில் விசயமாக அவர் கூறும் யோசனைகள் பவுர்ணமிக்கு பின் வரும் காலங்களில் ஒர்க் அவுட் ஆகும்

பித்ரு ருணம்:
இறந்தவர்கள் கனவில் வருதல், அ அவர்கள் குறித்த நினைவுகளோ ஓரளவு மைண்ட் டிஸ்டர்பன்ஸ் தரலாம். பிரதி சனிக்கிழமை காகத்துக்கு சோறு வைத்து வரவும். பசுமாட்டுக்கு அகத்திக்கீரை தரவும். உறவினரில் ஒரு பெண், மாமன் முறை வருபவர் ஒருவர், தந்தை வழி உறவினர் ஒருவருக்கு முடிந்த உதவிகள் செய்தால் கோர்ட்டு கச்சேரி, விவகாரம், கடன் தொல்லை , நெகட்டிவ் திங்கிங் கட்டுப்படும்.
வீண் செலவுகளை குறைக்க பிராமண போஜனம் செய்விக்கவும்


அன்புடன்,
எஸ்.முருகேசன்

Dasa bukthi
14/8/2010 வரை

தோல் அண்டம் ,ஜாயிண்ட்ஸ் ,தொடர்பான பிரச்சினைகளும் ,புத்தி குழப்பம், தகவல் குழப்பம் வரலாம்.கடன், நோய்கள், விரோதங்கள்,சொத்து,தூர தேச பிரயாணம், தந்தை ,தந்தை வழி உறவினர் வகையில் சற்று அல்லல் இருக்கும். இதனால் சேமிப்பு கரையுமே தவிர சொத்து வாங்குவது தள்ளிப்போகுமே தவிர பெரிதாய் ஆபத்து அபாயம் ஏதுமில்லை என்றே சொல்லலாம். ஆனால் நஷ்ட ஈடு வகையில், உயில் மூலம் சொத்து /ரொக்கம் கிடைக்கலாம்.
தீயபலன் குறைய: புதனன்று பெருமாளை துளசி மாலை அணிவித்து வணங்கி வரவும்.

14/8/2010 முதல் 20/6/2011 வரை
தலை,பல்,எலும்பு தொடர்பான தொல்லைகள் ஏற்படலாம். தந்தை, தந்தை வழி சொத்து நஷ்டம். தந்தை வழி உறவில் மரணம் ஒன்று வருத்தம் தரும். ஹைப்பர் டென்ஷன் இருக்கும். பரிகாரம்:
காயத்ரி மந்திர ஜபம், சூரிய நமஸ்காரம்.

20/6/2011 முதல் 20/11/2012
செய் தொழிலில் ஸ்திரத்துவம் இராது. இடமாற்றம் ,சீட் மாற்றம் இருக்கும். இந்த வருடம் விட்டுரலாம்,அடுத்த வருடம் விட்டுரலாம் மாதிரியே இருக்கும். தொழில் ஆர்வமும் 15 நாள் ஓகோ, 15 நாள் அடச்சீ என்றாகிவிடும்.

பரிகாரம்:
கன்னியா குமாரி அம்மனை வழிபடவும். நிலாச்சோறு தின்னவும். ஊஞ்சலில் ஆடவும். வண்ண மீன்கள் வளர்க்கவும். தியானம் அத்யாவசியம். தங்கள் பிரச்சினைகளில் அதிகம் மானசிகமானவையாகவே இருக்கும். "என்னமோ தோணுச்சு செய்தேன் எனும் ரகம்" முடிந்தவரை இதை தவிர்த்து அறிவு பூர்வமாகவே யோசிக்கவும். முக்கியமாய் அமாவாசைக்கு பின் வரும் நாட்களில்.
20/11/2012 முதல் 17/11/2013 வரை
அதி கோபம் அ கோபத்தை அடக்குவதால் வரும் வியாதிகள் வரலாம்.உம் ரத்தக்கொதிப்பு, அல்சர். உஷ்ண ரோகங்கள் பாதிக்கலாம். உம் கட்டிகள், பைல்ஸ்.
நிலம்,சகோதரம், எதிரிகள் தொடர்பாக விவகாரங்கள் வரலாம். மேலுக்கு சமாதானமாய் போனாலும் உள்ளுக்குள் விரோதம் கனன்று கொண்டே இருக்கும். எச்சரிக்கை தேவை. நேரடி எதிரிகள் மட்டுமன்றி ரகசிய எதிரிகளாலும், துரோகிகள் சதிகாரர்களாலும் தொல்லைகள் ஏற்படும். நம்பி நம்பி ஏமாந்து ஏமாந்து சந்தேக காரராக கூட தயாராகிவிடலாம். சில நேரம் தாங்களும் சதி திட்டம் தீட்ட முனைந்துவிடுவீர்கள். இவையாவும் தங்கள் உடல் நலனையும், மனைவியார் உடல் நலனையும் , தங்களியை ஒற்றுமையையும் பாதிக்க கூடியன ஸோ பீ கெர்ஃபுல் !
வயதில் சிறியவர்கள், இளையவயது போல் தோற்றம் தரும் மூத்தவர்கள், சகோதரர்கள், வன்னியர், ராஜுக்கள் (ஒரு சாதி பெயருங்க), கரிய நிறத்தவர் ,ஓரப்பார்வை பார்ப்பவர், காகம் போல் தலை சாய்த்து பார்ப்பவர் இதர மதத்தவர், இதர மொழியினர் ஆகியோருடன் கூட்டு வியாபாரம் , நட்பு , வேண்டாம்

பரிகாரம்: போட்டிகள் வேண்டாம்.(ப்ளட் ஷுகர் கூட வரலாம்) , அஜீரணம், மலச்சிக்கல் தவிர்க்கவும் இன்றேல் பைல்ஸ் கியாரண்டி. பவழக்கல் வைத்த மோதிரம் , பாம்பு வடிவ மோதிரம் இரண்டும் அணியவும். முருகன், ஸ்ரீ துர்கை,கணபதியை வழிபடவும். மனைவியாரும் இரு மோதிரங்கள் அணிந்து முருகன், ஸ்ரீ துர்கை,கணபதியை வழிபட்டால் நல்லது. மனைவியார் வாரம் ஒரு தினம் (திங்கள்) காவி புடவை உடுத்தி வினாயகரை வழிப்படுவது நல்லது. வைத்தியத்திற்கு அடங்காத வலி, பலகீனம் இருப்பின் காலை வெறும் வயிற்றில் வேப்பந்துளிர் சாப்பிடவும். அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.

மேற்படி பரிகாரங்களை கட்டாயம் செய்து வந்தால் தோஷங்கள் கட்டுப்பட்டு முருகப்பெருமான் அருளால் பூமி லாபம் ஏற்படலாம், சொத்துப்பங்கீடு குறைந்த பட்ச தகராறுகளுடன் நல்ல படியாய் முடியலாம்.

தற்போதைக்கு:( 2வருடத்துக்கு)
சம்பளத்துக்கு வேலை செய்வதே நல்லது. க்ளாஸ் ஃபோர் எம்ப்ளாயிஸிடம் பி கேர்ஃபுல். எஸ்.சி வகுப்பினராலும் பிரச்சினை வரலாம். தங்கள் வேலையை மட்டும் பார்க்கவும்
பொறுமை தேவை. யூனிஃபார்ம் அணியும் தொழில், இரும்பு, ஆயில், சுரங்கம், குவாரி, செகண்ட் ஹ்யாண்ட் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள்,விவசாயத்தொழில், கருப்பு நிற பொருட்கள் நஷ்டம் தரலாம். மேற்கு திசை பயணம், முயற்சி தவிர்க்கவும்.
பரிகாரம்:
திருமலையில் உள்ள வராக ஸ்வாமியை தியானம் செய்க. பெயர் புகழுக்கு ஆசைப்படாது,எதற்கும் முன்னே நிற்காது கும்பலில் கோவிந்தா போடவும்.

அன்புடையீர்,
தாங்கள் மெயிலில் அனுப்பிய பிறந்த தேதி படி கம்ப்யூட்டரில் ஜாதகம் போட்டால் சில சாஃப்ட் வேர்களில் துலாவும், சிலதில் விருச்சிகமும் லக்னமாக வருகின்றன. விருச்சிகம் லக்னமாக வந்த போது லக்னம் 2.7(டூ பாயிண்ட் செவன்) டிகிரியில் வருகிறது. இதை லக்ன சந்தி என்பார்கள். எனது அனுபவத்தில் இது போல் வரும்போது அதற்கு முந்தைய ராசியை லக்னமாக கொண்டு பலன் சொன்னாலே சரியாக வருவதை காணமுடிந்தது. எனவே துலா லக்னத்தையே அடிப்படியாக கொண்டு பலன் எழுதிய நோட்டை தாங்கள் குறிப்பிட்ட விலாசத்துக்கு அனுப்புகிறேன். குழப்பம் வேண்டாம். தாங்கள் அனுப்பியிருந்த கேள்விகள் துலா லக்னத்தையே சுட்டுகின்றன என்று உறுதியாக கூற முடியும்.
அன்புடையீர்,

ஜோதிடத்தின் மீதும், என் மீதும் நம்பிக்கைவைத்து தொடர்பு கொண்டமைக்கு நன்றி.
பலன் கூறும் முன்பாக தங்களுக்கு சில விசயங்களை கூறுவது என் கடமை. ஒரு ஜாதகத்தில் ஒரு ராசி/பாவத்தில் நின்ற கிரகம் இன்ன பலன் தான் தரும் என்று அறுதியிட்டு கூற முடியாத நிலை உள்ளது. ஆப்ஜெக்டிவ் டைப் கொஸ்டியன் பேப்பர் மாதிரி ஒரே கிரக ஸ்திதிக்கு நான்கு வித பலன் களை கூறவேண்டியுள்ளது. இவற்றில் எது நடந்தாலும் சரிதான். ஒரு வேளை நான்கு ஆப்ஷனுமே நடை பெற வில்லை என்றால் ஐந்தாவதாக இருக்கக்கூடிய ஆப்ஷனை நான் கெஸ் பண்ணவில்லை என்றே அர்த்தம்.

முதலில் பொதுவான ரீடிங்கை பார்ப்போம்.

தங்கள் லக்னத்துக்கு சுபம் செய்யவேண்டிய கிரகங்கள் 3. அவற்றில் ஒன்று 8ல் நின்று நீசமும் பெற்றுள்ளது.(செவ்வாய்)

இது அதி கோபம் அ கோபத்தை அடக்குவதால் வரும் வியாதிகள் தரலாம்.உம் ரத்தக்கொதிப்பு, அல்சர். உஷ்ண ரோகங்கள் பாதிக்கலாம். உம் கட்டிகள், பைல்ஸ்.
நிலம்,சகோதரம், எதிரிகள்,போட்டியாளர்கள் தொடர்பாக வழக்கு,விவகாரங்கள் நஷ்டங்கள் வரலாம்.
பரிகாரம்:முருகன் கோவிலுக்கு எரியும் பொருட்களை அன்பளித்தல். (உம்: பல்பு , விளக்கு. விளக்காயின் செம்பாகில் உத்தமம். செம்பு பூஜா பாத்திரங்களும் தரலாம் அ உடல் அங்கம் அறுபட்டவர்கள், தீவிபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்)
அடுத்த கிரகம் 11ல் நின்றாலும் சேரக்கூடாத கிரகத்துடன் சேர்ந்து பலம் இழந்துள்ளது. (சூரியன்+புதன்) இந்த சேர்க்கை பொது அறிவு, கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இத்யாதியை தந்தாலும் தந்தை, தந்தை வழி சொத்து தலை,பல்,எலும்பு முதுகெலும்பு தொடர்பான தொல்லைகளை தரலாம். உடலில் எங்கேனும் வெள்ளை தேமல் போன்று இருக்கலாம். இது வியாதியல்ல யோகத்தின் அறிகுறி. கவலை வேண்டாம்.

இன்னொரு கிரகம் (இது கடைக்கால் போன்றதாகும்) 7ல் நின்று ஓரளவு பலம் பெற்றுள்ளது.(குரு)
இதனால் தங்கள் வாழ்வில் ஃப்ரெண்ட்,லவர் ,பார்ட்னர்களின் இம்பாக்ட் அதிகம். நல்லதோ கெட்டதோ அவர்களாலேயே நடக்கும்.ஆனால் அவர்கள் பிராமணர்களாகவோ, அ பூணூல் அணியும் வகுப்பினராகவோ ,குருவாகவோ (டீச்சர்)
இருந்தால் நல்லது.அவர்களின் பெயரில் குரு,லிங்கம் போன்றவை கலந்து ஈஸ்வரன் பெயராக இருக்கலாம். தங்கள் இல்லம் அ அலுவலகத்திலிருந்து வட கிழக்கு திசையில் இருப்பார்கள். ம்னைவி தெய்வபலம் வாய்ந்திருப்பார்.குணவதியாக இருப்பார்.சில நேரங்களில் மனைவியாரின் ஆலோசனை எரிச்சலூட்டினாலும் பின்பற்றுவது நல்லது.

ராகு,கேதுக்கள் நன்மை செய்யும் நிலையில் உள்ளனர்.புதிதாக அறிமுகமாகும் நபர்கள் ,வெளி நாட்டினர், வெளி நாட்டு தொடர்புள்ளவர்கள், கரிய நிறம் கொண்டவர்கள், வேறு மொழி பேசுவோர், வேறு மதத்தை சேர்ந்தோர், நாக என்று துவங்கும் பெயர் கொண்டோர்,கணபதி பெயர் கொண்டோர். ஓரப்பார்வை, பூனைக்கண் கொண்டோர் உதவ வாய்ப்புண்டு. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி தொழில் இரவில் செய்யும் தொழில்/வேலை அனுகூலமே.
இருந்தாலும் தாய், தாய் வழி உறவு , வீடு , வாகனம் ,கல்வி வகையறாவில் சிறு சிறு கஷ்ட நஷ்டங்கள் வரலாம்.மார்பில் மச்சமிருக்கலாம். சுக்கிர ராகு சேர்க்கை காரணமாக நண்பர்கள், பங்குதாரர்கள், காதலியாலும், மனைவியாலும் தேவையற்ற சிறு சிறு பிரச்சினைகளில் மாட்டலாம். அ அவர் நோயாளியாகவோ, தங்களை விமர்சிப்பவராகவோ இருக்கலாம்.இதனால் லாங் ரன்னில் நலமே விளையும். நீங்கள் பாக்கி வைத்துள்ள ஒரு கடன் காரர் /எதிரி/போட்டியாளர் செத்தே போகலாம் அ ஊரை விட்டே போய்விடுவார், அந்த சமயத்தில் தங்களுக்கு நுரையீரல், சிறு நீரகம், மனம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம்
தூர தேசங்களில் அவதி படுதல், சேமிப்பை ஊர் வாயில் போட்டு அலைபாய்தல். வில்லங்கமுள்ள சொத்துக்களில் தங்கள் பணம் மாட்டுதல். நீசர்களுடன் சேர்ந்து தொழில்,வியாபாரம் செய்ய வேண்டி வருதல் நடக்கலாம். முழங்கால் வலி அவதிபடுத்தும். தங்கள் பணம்,சொத்து,வரவேண்டிய பாக்கிகள் கைக்கு வர தாமதமாகுமே தவிர வராது போகாது.
தங்கள் தாய்க்கும், மனைவிக்கும் விசித்திரமான ஒற்றுமைகள் இருக்கும். ( முக ஜாடை, பேச்சு தோரணை, அ பெயர்களில்) . சிலகாலம் பிள்ளை இல்லாது போதல். அ ஒன்று அரை கர்பம் போதலும் நடைபெற்றிருக்கலாம். கடன் , நோய், விவகாரம் தொடர்பான தொழிலில் சில காலம் இருக்க வாய்ப்புண்டு. உம். ஃபைனான்ஸ், மெடிக்கல் ஸ்டோர், எல்.ஐ.சி.
மனைவியல்லாது மற்றொரு பெண்ணும் தங்கள் முன்னேற்றத்துக்கு உதவலாம். காயத்ரி,சூரியன்,வெளிச்சம் தொடர்பான பெயர் கொண்ட பெண் தங்கள் ஈகோவை அதிகரித்து நஷ்டம் செய்வார். பெருமாளின் மனைவி பெயர் கொண்ட பெண் ஈகோவை குறைத்து லாபம் செய்வர்.தந்தையின் உடன் பிறந்தோரில் ஒருவர் உதவலாம்.(ஆனால் அது பெயரளவு உதவியாகவே இருக்கும்)
ஒரே நேரத்தில் இரண்டு தொழில் அ வியாபாரம் செய்ய வாய்ப்புண்டு. தனிமையில் வாழும் பெண்கள், நோயாளி பெண்கள்,கெட்ட பெயர் கொண்ட சட்டவிரோத தொழில் செய்யும் குடும்பத்து பெண்களாலும் உதவி உண்டு.
மூத்த சகோதரர் அ மூத்த சகோதிரியாலும் பெயரளவு உதவி உண்டு. நோய் வரும். ஆனால் கட்டுக்குள்ளிருக்கும். ஆயுள் பங்கமிராது. கடன் ஏற்படும் ஆனால் தீரும். விரோதிகள் தோன்றுவர் ஆனால் ஒழிவர். அச்சுறுத்தும் செலவுகள், நிலையாமை, விரோத சூழல் ஏற்படும்.ஆனால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும்.
குழந்தைகளில் ஒருவருக்கு ரத்த சோகை இருக்கலாம். ப்ளட் ப்யூரிஃபிகேஷன் பிரச்சினையால் உள்ளங்கை உள்ளங்கால் எரிச்சல், கட்டிகள், எக்சிமா போன்ற பிரச்சினைகள் வரலாம் .டேக் கேர் ! அவர்களுக்கு அம்மை, கட்டிகள் போன்ற பிரச்சினைகள் வரவும், அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடக்கவாய்ப்பிருக்கிறது.
பரிகாரம்: முருகன் கோவிலுக்கு எரிபொருள் தானம் . அ தாங்கள் ஃபேமிலி டாக்டரின் ஆலோசனை பெற்று ரத்த தானம் செய்யலாம்.
மேக்சிமம் 2010 ஆகஸ்ட் 7 வரை தான் வேலையில் பிரச்சினை உள்ளது.(குரு தசை சனி புக்தி) நான் கூறிய உரிய பரிகாரங்களை செய்தால் சமாளிக்கலாம். உடன் இணைத்துள்ள ஜாதகத்தை பார்க்கவும். தசா புக்திகளை பொருத்து குருதசை புத புக்தி நோ ப்ராப்ளம்.கேதுபுக்தியில் சிறு சிறு பிரச்சினைகள். சுக்கிர புக்தியில் இவை அதிகரிக்கும். சூரிய புக்தியில் சொந்த தொழில் செய்ய வாய்ப்பு. சந்திர புக்தியில் தங்களில் மறைந்துள்ள சக்திகள் பெரும் போராட்டத்துக்கு பின் வெளிவரும். உச்ச நிலை பெறுவீர்கள்..

தங்களுக்கு பணம், பேச்சு, குடும்பம் என்றால் வெல்லம். ஆனால் இயற்கை குரூரமானது எந்த ஜாதகர் எதை தன் உயிருக்கு சமமாய் பாவிக்கிறாரோ அந்த விசயங்களிலேயே ஆப்பு வைக்கும். எனவே மேற்சொன்ன விசயங்களில் முடிந்தவரை தங்கள் மைண்ட் செட்டை மாற்றிக்கொள்வது நல்லது. இதனால் பொருளாதார விசயத்தில் சற்று வீக் ஆனாலும் குடும்பவகையில் அபிவிருத்தி உண்டு. பேச்சை குறைக்கவும், குடும்பத்தாருடனும் சற்று நீக்கு போக்காக நடப்பது நல்லது. அதிகம் அட்டாச் மெண்ட் வேண்டாம்
தற்போது மே வரை நாற்காலி ஆட்டம் காணும். தங்கள் சீட்டின் மேல் மஞ்சள் குஷன் அ டர்க்கி டவல் போட்டு அமரவும். டேபிளுக்கு மஞ்சள் நிற டேபிள் க்ளாத் உபயோகிக்கவும். பணம், தங்கம் ஹேண்டில் செய்யும்போது எச்சரிக்கை தேவை.பிராமண போஜனம் செய்விக்கவும்
முடிந்தவரை பழைய துணிகளையே அணியவும். சஃபாரி அணியவும் அ பேண்ட் சற்று டார்க் கலரில் சட்டை அதேகலரில் (சற்று லைட்டாக) அணியலாம். திருமலை வராக ஸ்வாமியை தியானம் செய்யவும். பிரதி சனிக்கிழமை காகத்துக்கு சோறு வைத்து வரவும். பசுமாட்டுக்கு அகத்திக்கீரை தரவும். முடியாவிட்டால் உடல் ஊனமுற்றோருக்கு முக்கியமாய் நொண்டிக்கு இயன்ற உதவியை செய்யவும்.

தற்போது (மேக்சிமம் 2 வருடங்களுக்கு) தங்கள் வேலையை மட்டும் பார்க்கவும். அடுத்தவர் விசயத்தில் தலையிட வேண்டாம். பொது சேவை இத்யாதிக்கு தங்கள் ஜாதகத்தில் உள்ள பவர் போதாது. என்றாலும் இந்த 2 வருடங்கள் கழித்து ஒரு இரண்டரை வருடங்களுக்கு பொது சேவையில் சமாளிக்கலாம் . இந்த இரண்டரை வருடம் முடியும் முன்பாகவே பொறுப்பை மாற்றிவிட்டு விடவும்.வெளியே வந்துவிடவும்.

தங்கள் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கான விரிவான பதிலை தருகிறேன்.
1. வேலை இந்த‌ நாட்டில் தொட‌ருமா?
2010 ஆகஸ்ட் 7 வரை சிரமமே. சமாளித்துவிட்டால் பிரச்சினை இல்லை

2. இல்லை இந்தியா திரும்புவ‌து ந‌ல்ல‌தா?
இப்போது வேண்டாம். குரு தசை, சந்திர புக்தியில் இந்த முயற்சி வெற்றி பெரும்

3. சிறிது வ‌ருட‌ங்க‌ளுக்கு பிற‌கு வேலையை விட்டு இய‌ற்கைக்கு அருகில்
விவசாய‌ம் ம‌ற்றும் க‌ல்வி க‌ற்றுக் கொடுக்கும் தொழிலுக்காக‌ என‌து
வேலையை மாற்றிக்கொள்ள‌லாம் என்று உள்ளேன்? அது ப‌ற்றி?
குரு தசை சந்திர புக்தியில் செய்யவும். ஆனால் குரு தசை செவ்வாய் புக்தியில் எதிரிகள் தொல்லை அதிகரித்து பாதியில் விட வேண்டி வரும். சூ+பு சேர்க்கையால் நீங்கள் வெறும் கன்சல்ட்டண்டாக இருந்தாலே போதுமானது. பைசா கூட கிடைக்கும்.டீச்சிங் ப்ரொஃபெஷன் வேண்டாம்.வயிறு இதயம் தொடர்பான பிரச்சினைகள் வந்துவிடலாம்

4. த‌னியாக‌ நினைத்த ச‌மூக‌ சேவையை நிறைவேராம‌ல் உள்ள‌து?
என்னால் அது செய்ய‌ முடியுமா? (உதார‌ண‌ம்: ம‌ர‌ம் ந‌டுத‌ல் ம‌ற்றும் ப‌ராம‌ரித்த‌ல்)
குரு தசை சந்திர புக்தி வரும் வரை பொறுமை காக்கவும். என்னை கேட்டால் இது தங்கள் ஜாதகத்தில் உள்ள பவருக்கு பெரும் சுமையாகிவிடும். பிறரை மோட்டிவேட் செய்வதோடு நிறுத்து கொள்ளவும்.

5. உட‌ன‌டியா வ‌ரும் கோப‌ம் க‌ட்டுப்ப‌டுமா?
முருகனுக்கு தரச்சொன்னவற்றை தரவும். பவழ மாலை அணியவும். ரத்ததானம் செய்யவும் .கோபம் குறையும். தியானம் முயற்சிக்கவும். கீழ் காணும் மூலமந்திரம் ஜபிக்கவும்.

ஓம் சௌம் சரஹண பவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ


6. என‌து குடும்ப‌த்திற்கு என‌து வேலை மாற்ற‌ எண்ண‌த்தால் பாதிப்பு வ‌ருமா?
குடும்பத்துக்கு பாதிப்பு சொற்பமே. ஆனால் குடும்பமே உயிராய் பாவிக்கும் தாங்கள் குற்ற உணர்ச்சியால் பெரிதும் அவதிப்படுவீர்கள்.
7. உட‌ல் ந‌ல‌ம் ப‌ற்றி என் ந‌ல‌ம் ந‌ன்றாக‌ இருந்தாதான் ம‌ற்ற‌து செய்ய‌முடியும்.
ஒற்றைத்த‌லைவ‌லி முழுதுமாக‌ எப்பொது குண‌ம் அடையும்?
ஒற்றை தலைவலிக்கு சூப்பர் பரிகாரம் உள்ளது . நம்பிக்கையுடன் ஆரம்பித்தால் முதல் 9 நாட்களில் ஒ.த. பயங்கரமாய் அதிகரித்து படிப்படியாய் குறைய ஆரம்பித்துவிடும்.
பரிகாரம்:
காயத்ரி மந்திர ஜபம், சூரிய நமஸ்காரம். ஆரஞ்சு நிற தொப்பி அணிதல்.