Tuesday, February 23, 2010

மறுபடி அவளை ‍ 3

முன் கதை சுருக்கம்
மாயா என்னை விட 10 வயது மூத்தவ. டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல எனக்கு அசிஸ்டண்டா வந்து சேர்ந்தா. சவுண்ட் பார்ட்டி. ஒரு நாள் நான் அவள் ரூமுக்கு போக அவள் தற்கொலை முயற்சி செய்து கிடக்க போலி டாக்டர், ஹெட் நர்ஸ் உதவியுடன் காப்பாற்றி ரூம்ல விட்டுட்டு கிளம்ப பார்க்கிறேன். அவள் என் கைய இறுக பிடிக்கிறாள்


நான் மெதுவா அவள் கை மேல இன்னொரு கைய வச்சு லேசா அழுத்தி என் கைய உருவிக்கிட்டேன். அவளோட சின்ன கண்கள் தன்னால மூடிக்கிச்சு. என் வலது கைய அவள் உச்சந்தலைல வச்சி லேசா அழுத்தினேன். அவ கண்ணை திறந்து பார்த்தா(ள்) " நீ ஒன்னும் ஃபீல் பண்ணாதே, ஒன்னும் சொல்லாத, எதுவாயிருந்தாலும் நான் ஒருத்தன் இருக்கேன். எல்லாம் நாளைக்கு பேசிக்கலாம்" இதெல்லாம் வாய் வார்த்தையா சொன்னதில்லை. ஒரு தரம் தலைய வலது இடதா அசைச்சு , என் கண்களை மூடி திறந்தேன்.

மறு நாள் ஆஃபீஸ் வந்தப்ப கொஞ்சம் சோர்வா இருந்தாலும் ஃஃப்ரெஷ்ஷாவே இருந்தாள். ஆஃபீஸ் விஷயம் தவிர எதுவும் பேசிக்கலை. மதியம் கர்ட் ரைஸ் கேட்டா வரவழைச்சேன். ராத்திரி 7 மணிக்கு போய்ட்டா. நான் எட்டரை வரை ஆஃபீஸ்ல இருந்துட்டு சாவிய ஓனர் வீட்ல கொடுத்துட்டு மாயா ரூமுக்கு போனேன். கதவு திறந்தே இருந்தது. எதிர்பார்த்திருப்பா போல.

"வா முகேஷ் !சாரி உனக்கு தேவையில்லாம ஸ்ட்ரெயின் கொடுத்துட்டன்"

"ஏமாத்திட்டு போயிருவயோனு பயந்துட்டன் சனியனே ! தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு என்ன நடந்துருச்சு. ப்ராத்தல் கேஸ்லயா மாட்டி பேப்பர்ல ஃபோட்டாவா வந்துருச்சு "

"ஏய் ! என்ன என்னவோ காதலிகிட்டே பேசற மாதிரி பேசறே.. என்ன லவ்வா?"

"கிழிஞ்சுது.. என் லவர்ஸோட எண்ணிக்கை தெரியுமில்லியா? அவளுகளுக்கு அப்பாயிண்ட்மென்ட் குடுக்க முடியாம நாக்க தள்ளுது. இந்த இழவுல இன்னொரு லவ்வா ஒன்னு கூட 18 கிடையாது எல்லாமே 14லருந்து 17 தான் "

"அட என் மம்மத ராசா.. பின்னே நான் செத்தா உனக்கென்னவாம்?"

"அந்த கான்செப்ட் இல்லாம நான் பழகிக்கிட்டிருக்கிற ஒரே பார்ட்டி நீதான்"

"அடப்பாவி .. நம்ம ஆஃபீஸை பெருக்கிற முனியம்மாவ கூடவா ட்ரை பண்றே"
"அவளுக்கென்ன கேடு தலைக்கு ஒரு ஷாம்பூ வாஷ், முகத்துக்கு ஒரு ப்ளீச், டூ பை டூ ப்ளவுஸெல்லாம் கழட்டி"

"சீ சீ வல்கரா பேசறே.."

" அட நீ வேற அதுக்கு பதிலா டெரிகோஸ்ல ப்ளவுஸு தச்சு போட்டா தூளா இருக்கும்னு சொல்ல வந்தேன்"

"சரி சரி எனக்கு பசி வயித்த கிள்ளுது உன் கதை என்ன நீ சாப்பிடறயா இல்லே டீ சாப்பிடறயா?"

"டீயா ? டீ சாப்டா தம்மடிக்கனும். உங்க ஏரியால என்னென்னவோ கிடைக்குமே தவிர சிகரட் மட்டும்கிடைக்காதே!"

"அப்ப சிகரட் இருந்தா டீ சாப்பிடறேனு சொல்றே"

"யா" என்றதும் தன் கைப்பையை திறந்து கோல்ட் ஃப்ளாக் கிங் சிகரட் பேக்கட்டை எடுத்து என் முன் போட்டாள். சமையலறைக்குள் சென்றாள். ராஜேஷ் குமார் நாவலில் ஹீரோவோ வில்லனோ உருட்டு கட்டையால் தாக்கப்பட்டால் மண்டைக்குள் நட்சத்திரம் தெறிக்குமே அது மாதிரி என் தலைக்குள்ளே ஸ்டார்ஸ்.

நான் வெளியே போய் தம்மடிச்சுட்டு வந்தாலே " என்ன மறுபடியா? இப்பத்தானே அரை மணி நேரம் முன்னாடி போய் வந்தே" என்று எரிந்து விழும் மாயா எனக்கு சிகரட் பாக்கெட் வாங்கி வைப்பதா?

வந்தவள் டீ கப்பை என் கையில் கொடுத்துவிட்டு கொஞ்ச நேரம் ஃபேனை நிறுத்திரு நான் அதுக்குள்ள சாப்டு வரேன் என்றாள். டீயா அது அமுதம். அதனோட டெம்பரேச்சர் ஆகட்டும், ஸ்ட் ராங்னெஸ் ஆகட்டும், இடை சிறுத்த கோவில் சிலை மாதிரி அளவான சர்க்கரை ஆகட்டும். நாக்கில் ஒட்டியது. ஒரு சிப். ஒரு பஃப் . ஸ்வர்கண்டா கண்ணா.. சிங்கில் ப்ளேட்டை கழுவும் சத்தம் கேட்டது. சின்ன டர்க்கி டவலில் கை துடைத்தபடியே வந்தவள். என்ன ஃபேனை போடவா என்று கேட்டபடி ஃபேனை போட்டாள்.
"அவளையே பார்த்தேன்..ஹார்லிக்ஸ் பேபி தனமான முகம், வெனீலா ஐஸ்க்ரீம் ஃபேமிலி பேக் தனமான உடல் இத்தனை இருந்தும் ஏதோ ஒன்று அவளில் செக்ஸ் அப்பீல் இல்லாது செய்துகொண்டிருந்தது. அது என்ன என்று யோசித்துக்கொண்டே இருந்தேன்.

" ஏய் என்ன பார்க்கிறே?"
" ஆங் .. எந்த சர்க்கஸ்ல இருந்து இந்த யானைக்குட்டி தப்பிச்சு வந்துதானு பார்க்கிறேன்"
"முகேஷ்.. நிஜம்மா சொல்லு என்னை பார்த்தா யானைக்குட்டி மாதிரியா இருக்கு ?"
"சே அதெல்லாம் ஒன்னுமில்லே யானக்குட்டிக்கு அக்கா மாதிரி யிருக்கு"
பிரம்பு நாற்காலி பின்னிருந்த தலையணையை எடுத்து என் மீது எறிந்தாள். அவசரமாக அதிலிருந்து தப்பித்து " தபாரு நீ இப்படியே இருக்கனும். கான்ஃபிடன்டா, போல்டா ,சிரிச்சிக்கிட்டே , சந்தோஷமா இருக்கனும்.. இன்னொரு தடவை எதனா பை.தனம் பண்ணா மகளே.. கொன்னே போட்ருவன்"
"ஓகே டாடி.."
"அட போடி.. இப்பயாச்சும் சொல்லு எதுக்கு அந்த முயற்சி?"
"என் லவர் வந்துருந்தான்"
"அவனைத்தான் கட் அண்ட் ரைட்டா கழட்டி விட்டுட்டே இல்லியா?"
"இப்பவும் அப்படித்தான் . ஆனால் அவன் இன்னும் பழைய ஃபீலிங்க்ஸ்லயே இருக்கான்"
"பின்னே என்ன வந்தா வரட்டும்னு பேசி அனுப்ப வேண்டியதுதானே..இல்லாட்டி எனக்கு ஒரு ஃபோன் பண்ண வேண்டியதுதானே"
"இல்லே முகேஷ் ரொம்ப ஃபீல் பண்ணான்"
"எதுக்காம்"
"அவன் தங்கச்சிக்கு எதுவும் செட்டிலாகலையாம். ஆய்ட்டா நேர எங்க மாமன்ங்க கிட்டே போய் பேசிருவானாம்"
"ஒரு வைபரேட்டர் வாங்கித்தந்துர சொல்றதானே"
"சீ.. என்னை பண்ணிக்கனும்னு வெறியாம். பண்ணிக்க முடியலேனு ராப்பகலா ஒரே ஏக்கமாம்"
"அப்ப அந்த எண்ணத்துல ஆய் போயிட்டு கழுவாம வந்துர்ரானாமா?அவன் எக்கேடோ கெட்டுப்போகட்டும் .. உனக்கென்ன கேடுகாலம் வந்துச்சி"
"ஒரு உயிர் எனக்காக இப்படி தவிக்குதேனு"
"தபார்ரா.. அப்புறம்.. அதுக்கு அந்த உயிருக்கு உங்க உயிரை அர்ப்பணிச்சிங்களாக்கும். உண்மையிலயே உன் மேல அந்த நாய்க்கு லவ் இருந்தா தங்கச்சியா மயிரா என் லவ் எனக்கு முக்கியம்னு கல்யாணம் கட்டிக்கனும்"
'அய்யோ தங்கச்சிக்கு பண்ணாம இவன் பண்ணிக்கிட்டா கிராமத்துல அசிங்கமா பேசுவாங்க முகேஷ்"
"சரி மாயா.. இதெல்லாம் அவன் தலைவலி நீ எதுக்கு..ஃபீல் பண்ணனும்? அவன் பணம் கேட்டான்.."
"இதென்ன புது ட்விஸ்டு?"
" தன் தங்கச்சிக்கு நல்ல அல்லையன்ஸ் வந்துருக்கிறதாவும் ..வரதட்சிணை பணம் குறைவா இருக்கிறதாவும் சொன்னான். தங்கச்சிக்கு இந்த அல்லையன்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கிறதாவும் ஏறக்குறைய லவ்ஸ் மாதிரி ஆயிட்டதாவும் சொன்னான்.நான் குறையற பணம் வேணம்னா நான் தரேன். ஆனால் என்னை கல்யாணம் பண்ணிக்கிறது இத்யாதியெல்லாம் மறந்துருனு செக் எழுதி கொடுத்தேன்"
"சரி ஒழியட்டும். இருக்கப்பட்டவ தர்மம் பண்ணே...அப்புறம் என்ன இழவு ஆச்சுனு இந்த வேலை செய்தே "
" செக் வாங்கிக்கிட்டு போறச்ச கதவை வெளிப்பக்கம் தாள் போட்டுக்கிட்டு மாயா !என்னை நீ அவமான படுத்திட்டே.. இப்போ நான் கிராமத்துக்கு போய் இந்த செக்கை எல்லாருக்கும் காட்டி மாயா என்னை வச்சிருக்கா. செலவுக்கு செக் கொடுத்தானு சொல்லப்போறேன்னான்"
"அதுக்கு நீங்க பேதியாயிட்டிங்களாக்கும். உன் கேரக்டரை வெறும் மூனு மாசம் பழகின நானே புரிஞ்சிக்கிட்டேன். உங்க கிராமத்துல புரிஞ்சிக்கமாட்டாங்களா..அவன் மூஞ்சியும், சோடாபுட்டி கண்ணாடியும் அவனை ப்ராத்தல் ஹவுஸ்ல கூட உள்ளே விடமாட்டாங்க.."
"என்னமோ முகேஷ் கெட்ட பேரை பத்தின பயத்தை விட அவன் செய்த நம்பிக்கை துரோகம் என்னை உடைஞ்சு போக வச்சிருச்சு"
"ஆமா ..மனுஷ மனசு க்ளாஸ் டம்ளர் மாதிரிதானே பொள்ளுனு உடைஞ்சிருச்சாக்கும் .. தாளி விஷயத்தை சொல்லிட்டேல்ல .. அந்த நாயை என்னா கதி பண்றேன் பாரு" ன்னு கொதிச்சேன். மாயா எவ்வளவோ தடுத்தும் கொதிப்பு அடங்கலை.

மறு நாள் நேர பாபு ரெட்டிக்கிட்டே போனேன். அவரு கதை பெரிய கதை . தொகுதில 3 தடவை எம்.எல்.ஏவா ஜெயிச்ச பார்ட்டிய சி.எம்.முன்னாடியே பப்ளிக் ஸ்டேஜ்ல "டிச்"சடிச்ச பார்ட்டி. ( தலையால முட்டறதுங்கண்ணா) அவர் தம்பிக்கெ எம்.எல்.ஏ சீட் ட்ரை பண்ணாரு. வேலைக்காகலே. இருந்தாலும் தொகுதியில ரெண்டாவது ஆப்ஷன் பாபுரெட்டிதான். அவருக்கும் நமக்கும் எப்படி டச்சுன்னா ஒரு ஏரியால ஒரு குட்டி நமக்கு லைன் விட அவளோட அண்ணன் தங்கச்சிய நான் ஈவ் டீசிங் பண்ணினதா பாபுரெட்டி கிட்டே கம்ப்ளெயின் பண்ணிட்டான். குட்டிய வரவழைச்சாதான் பஞ்சாயத்தேனு அவர்கிட்டே செமர்த்தியா அடி வாங்கினேன். அப்புறம் குட்டிய வரவழைக்க அவள் விஷயத்தை போட்டு உடைக்க பாபுரெட்டி நமக்கு சாரி சொல்லி வீட்ல ட்ராப் பண்ண ஆளையும் அனுப்பினாரு. அப்பலருந்து அப்பப்ப போய் கண்டுக்கிட்டு வர்ரது வழக்கம்.

மாயாவோட தற்கொலை முயற்சி, செக் விஷயம், சோடாபுட்டியோட ப்ளாக் மெயிலிங்க் எல்லாம் சொன்னேன். பாபு ரெட்டி "இப்ப என்ன அவனை தூக்கிரலாமா" ன்னாரு. "இல்லே தலை ! அவனை புடிச்சி செக்கை பிடுங்கிரனும் . ஸ்ட் ரிக்டா வார்ன் பண்ணா போதும்"னேன்.

அவரு நாலு பசங்களை கூட அனுப்பினாரு. சுமோ ஒன்னை பேசிக்கிட்டு புறப்பட்டோம். கிராமமாச்சா.வெளியாளுக என்டர் ஆனதுமே சனம் நோட் பண்ண ஆரம்பிச்சுருச்சு. தடுக்கி தடுக்கி விசாரிச்சு மாயா சொன்ன சோடாபுட்டி கண்ணாடிய ட்ரேஸ் பண்ணீட்டோம். தே.மகன் ஒரு உயிருக்கு உலை வைக்க பார்த்துட்டு அசால்ட்டா கோழிப்பண்ணைல சூப்பர் வைஸ் பண்ணிக்கிட்டிருக்கான். பாபு ரெட்டி அனுப்பின ஆளுங்க கப்புனு அவன் கழுத்துல கத்திய வச்சிட்டாங்க. கிர்க்கா மர்க்காங்கலை அப்படியே தள்ளிக்கிட்டு சுமோ கிட்டே வந்தோம்.

சனம் சுத்திக்கிச்சு. எங்களை அப்படியே ஒரு மரத்துக்கு கட்டிட்டாங்க. பாபு ரெட்டி ஆளுங்கனு சொல்லியும் "கண்டவனுக்கும் அந்தாளு பேரை சொல்றதே பொழப்பா போச்சு பொளங்கடா"ன்னு எவனோ குரல் கொடுக்க. செமை காட்டு காட்னானுங்க. அந்த நேரம் பார்த்து பாபுரெட்டியை தெரிஞ்ச ஆள் ஒருத்தர் ஸ்பாட்டுக்கு வந்து சேர
கிராமத்து பெரியவங்கல்லாம் பேசி செக்கை வாங்கி கொடுத்துட்டாங்க. சோடாபுட்டிக்கும் நல்ல மண்டகப்படி. எப்படியோ சுமோவை கிளப்பிக்கிட்டு ஊரை வந்து சேர்ந்தோம்.

வெளிச்சத்துல பார்த்தா ஒரு லட்ச ரூபாய்க்கு செக் எழுதியிருக்கா மாயா. இந்த மேட்டர் முன்னாடியே தெரிஞ்சிருந்தா மவனை டவுன்ல வச்சி பிக்கப் பண்ணி செமை பெரடு எடுத்திருக்கலாமேனு ஆத்து ஆத்து போச்சு. அப்பத்தான் பொழுது விடிஞ்சிக்கிட்டிருக்கு. இந்த நேரம் வீட்டுக்கு போனா அப்பாகிட்டே பாடம் கேட்கனும். ஸோ.. அப்படியே மாயா வீட்டுக்கு போனேன்.

கன்னம் எல்லாம் கன்னி போய், உதடெல்லாம் வீங்கியிருந்த என்னை பார்த்ததும் பதறிப்போயிட்டா. செக்கை கொடுத்து விஷயத்தை சொன்னேன். நல்லா திட்டினா.. " கேஷ் செட்டில் பண்ணிட்டதால பர்ட்டிகுலர் செக் வந்தா ஹானர் பண்னாதிங்கனு பாங்க் மேனேஜருக்கு ஒரு லெட்டர் குடுத்துட்டா சரியா போற சமாச்சாரத்துக்கு இத்தனை வல்லடி ,வம்படி தேவையா அப்படியே ஒரு லட்சம் போனாலும் போறதுனு புலம்பிக்கிட்டே இருந்தா. காயங்களையெல்லாம் தடவி தடவி பார்த்தா.. ஷர்ட் பெண்டெல்லாம் ஒரே அழுக்கு , கெய்சர்ல ஹாட் வாட்டர் போடறேன்.முதல்ல குளி அப்பதான் ஃப்ரஷ் ஆகும்னா. நிஜமாவே உடம்பெல்லாம் பயங்கர வலி.



( To be cont..)