Monday, February 22, 2010

அவளை மறுபடி: 2

முன் கதை சுருக்கம்
"மாயா அழகி. என்னை விட 10 வயது மூத்தவள். என் அப்பாவின் நண்பர் ஒருவரின் டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் அலுவலகத்தில் எனக்கு  உதவியாளராக சேர்ந்தாள்.எங்களுக்குள்  மெல்ல மெல்ல நெருக்கம் ஏற்பட்டது"

மாயாவோட ப்ளானிங்கும், லாஜிக்கும், காமன் சென்ஸும் ( பலான சென்ஸில்லே தலை பொது அறிவுங்கண்ணா)  என்னை ரொம்பவே கவர்ந்தது. எங்க ஆஃபீஸ்ல வழக்கமா எதையுமே  ஒரு வாரம் தேடினா தான் கிடைக்காது.  எத எங்க வச்சிருக்குனு ஒரு நாள் பெரிய லிஸ்டே ப்ரிப்பேர் பண்ணிட்டன். மறு நாள் அந்த லிஸ்டே  காணாம போயிருச்சுங்கறதுதான் சோகம்.  ஆனா மாயா இந்த நிலைமையை ஸ்விட்ச் போட்டாப்ல மாற்றி தொலைச்சுட்டா கஸ்டமரெல்லாம் காய ஆரம்பிச்சுட்டான்.  புகைக்கு தடா போட்டாள், ஆஷ் ட்ரே காணாம போயிருச்சு. ரிகார்ட்ஸ் பக்கா, கணக்கு பக்கா, டெலிபோனுக்குனு தனி புக் வச்சி  இன் கமிங்க் அவுட் கோயிங்கெல்லாம் எழுதவச்சிட்டானா பார்த்துக்கங்க.

நான் ஏதோ பொம்பளைன்னா வெள்ளிக்கிழமை ஈர கூந்தலோட லேட்டா வந்து மன்னிப்பு கேட்கும். எல்லாத்தயும் தப்பு தப்பா பண்ணிட்டு "சாரி சார்னு கொஞ்சும்னு" நினைச்சிருந்தேன். ஆனால் மாயாவோட பங்க்சுவாலிட்டிக்கு முன்னே டப்பிங்க் சினிமால விஜயசாந்தி முன்னே வில்லனுக மாதிரி  நடுங்க ஆரம்பிச்சுட்டன்னா பார்த்துக்கங்க. 

அப்பப்போ பேச்சோட பேச்சா மாயா சொன்ன ஃப்ளாஷ் பாக் இதுதான். மாயாவோட  நேட்டிவ் ப்ளேஸ் மாவட்டத்துக்கு எல்லைல இருந்த குக்கிராமம். அப்பா சவுண்ட் பார்ட்டிதான். இவள் அவருக்கு 5 ஆவது பொண்ணு. 4 கல்யாணத்துல தேஞ்சி,ஓஞ்சி போயி மிச்சம் மீதி நிலத்தை எல்லாம் மாயா பேருக்கு எழுதி வச்சிட்டாரு. இவ பேர்ல ரெண்டு மூனு லட்சம் போல ஃபிக்ஸட் போட்டு வச்சிட்டாரு. மாரடைப்புல போய் சேர்ந்துட்டாரு. இந்த நிலம், பணம் எல்லாம் தமக்கே வரணும்னு மாமன்மாரு இவளுக்கு ப்ராக்கெட் போட , இவள் மறுக்க அவனுக இவள் அக்காமாரை கொடுமை படுத்த என்னடா இது லொள்ளுனு டவுனுக்கு வந்துட்டா . நேரு ஸ்ட்ரீட்ல அறையெடுத்துக்கிட்டு தங்கி, நிலத்துல இருந்தும், ஃபிக்ஸட் டிப்பாசிட்லருந்தும் வர்ரத வச்சிக்கிட்டு போது போக கரஸ்பாண்டன்ஸ்ல  எம்.ஏ . அடிஷ்னலா டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல ஜாப்.

தான் டிகிரி படிக்கறச்ச இவளை ஒரு கோயான் லவ் பண்ணியிருக்கான். இவளும் அந்த வயசுக்கே உரிய  அன் மெச்சூரிட்டியோட காதலுக்கு பச்சை கொடி காட்டி கல்யாணத்துக்கும்  ரெடி ஆயிருக்கா.  ஆனால் அவன் சரியான எஸ்கேப்பிஸ்ட் தன் தங்கச்சிகளுக்கு கல்யாணம் ஆனால் தான் நம்ம கல்யாணம்னிட்டு மாயாவோட அப்பா கொண்டுவர்ர அல்லையன்ஸ் எல்லாம் மொட்டை கடுதாசி போட்டு தடுத்துக்கிட்டிருந்திருக்கான். இவளுக்கு எரிஞ்சி போயி கட் அண்ட் ரைட்டா கட் பண்ணி விட்டிருக்கா.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை பத்துமணிக்கு  முதல் முறையா மாயா சொல்லியிருந்த விலாசத்தை  வச்சி அவளோட அறைக்கு போனேன். கதவு திறந்து கிடக்கு . கட்டில்ல மாயா. தமிழ் சினிமா மாதிரி வாய்ல நுரை , தரையில பூச்சி மருந்து பாட்டில். எனக்கு வெட வெடங்குது. இதே காட்சி சினிமால வந்திருந்தா "இப்போபாரேன் பாட்டில் மேல விஷம்னு எழுதியிருக்கிறத க்ளோஸப்ல காட்டுவான்னு கமெண்ட் அடிச்சிருப்பேன். சட்டசபைல சந்திரபாபு பேச ஆரம்பிச்சாலே காங்கிரஸ் எம்.எல்.ஏங்க காமெண்ட்ரி ஸ்டார்ட் பண்ணிர்ராங்களே அதுமாதிரி.

ஆனால் நிஜத்துல அதே காட்சி வந்தப்ப சுஜாதா கதை மாதிரி முழங்காலெல்லாம் பஞ்சு. பரபரனு வெளியே ஓடி வந்தேன். காலியா வந்த ஆட்டோவை நிறுத்தினேன். அட என் கிளாஸ் மெட் எஸ் ரமேஷ். தெய்வமேன்னிட்டு ஆட்டோவை மார்க்கெட் சவுக்குக்கு விடச்சொன்னென். அங்கேதான்  நம்ம பர்சனல் டாக்டரிருக்காரு.  டாக்டர் என்ன டாக்டர் அரசு ஆசுபத்திரில லேப் டெக்னீஷியன். தே.கிட்டே போறச்ச நோய் தொத்தாம இருக்க  ஊசி போட்டுவிடுவாரு. ஆட்டோல போய் இறங்கி அவருக்கு சமாச்சாரத்தை சொன்னேன். அவருக்கும் கைகால் நடுங்க ஆரம்பிச்சுருச்சு. எப்படியோ தைரியத்த வரவச்சிக்கிட்டு ஜி.ஹெச் ஹெட் நர்ஸுக்கு போன் போட்டு வரவச்சாரு. அந்தம்மாவ சும்மா சொல்லக்கூடாது. தேர் மாதிரி அசைஞ்சுவந்தாலும், மார் பால் பண்ணை சைஸுல இருந்தாலும் கை பம்பரமா சுழன்றது.  என்னையும், டாக்டரையும் வெளிய இருக்க சொல்லிட்டாங்க.

டாக்டர் பந்தாவா சிகரட்டை எடுத்து பத்த வச்சிக்கிட்டு 'என்னய்யா முகேஷு.. முடிச்சிட்டயா கர்பமாயிட்டாளா  முன் கூட்டியே நம்ம கிட்டே வந்திருந்தா வாஷ் பண்ணிருக்கலாம்ல  " என்று டாக்டன்  ஆரம்பிக்க வெறிச்சி பார்த்தேன். ரெண்டையும் மூடிக்கிட்டான். அவன் பாக்கெட்ல இருந்து சிகரட்டை எடுத்து பத்திக்கிட்டேன். வெறுப்பா இருந்தது. வெளியே வந்த ஹெட் நர்ஸ் "மஷ்டு எல்லாம் வெளிய வந்துருச்சு. சலைன் இருக்கான்னு கேட்டா. பாடாவதி டாக்டன் இல்லேங்கறான். இரைக்க இரைக்க ஓடி ஜி.ஹெச் கிட்டே இருந்த மெடிக்கல் ஸ்டோர்ல அதை வாங்கிக்கிட்டு வந்து கொடுத்தேன். ராத்திரி 7 மணி அளவுல மாயா எந்திரிச்சு உட்காருந்து தமிழ் சினிமா மாதிரியே " நான் எங்க இருக்கேன்னா" "வாழ்க்கைல அடி எடுத்து வைக்ககூடாத இடத்துல"ன்னு சொல்லி டாக்டனுக்கு பே பண்ணி,மாயாவ பேக் பண்ணி ஆட்டோல போட்டுக்கிட்டு அவள் அறைல சேர்த்தேன். சரி வீட்டை போய் சேரலாம்னு திரும்பினேன். மாயா என் கையை பிடிச்சிக்கிட்டாள்