Friday, February 19, 2010

கன்னத்துக்கு சத்துணவு

புது மொழி கற்பவன் மீண்டும் குழந்தையாகிறான்
சிந்தும் மழலை

கலைவாணியின் கைகளில் கித்தார்
மாறவில்லையே கவிஞர்கள்

அமுதாய் பெருகும் கவிதை
விஷமாய் பெருகும் இன்டர் நெட் கட்டணம்

அரசு அலுவலகத்து காம்பவுண்ட் சுவரில்
மரம்.பசுமை புரட்சி

பெண்ணே எனை நீ தொட்டு
இலவச மின்சாரம் வழங்குகையில்
என் உதடுகள் உன் கன்னத்துக்கு சத்துணவு போட துடிக்கின்றன

நீ இல்லாத நேரம் என் உள்ளப்பறவை நீயிருக்கும் இடம்
நாடி போகுது வலசை

இப்போதெல்லாம் நட்பும் உறவும் ட்ராஃபிக் ஜாமில் தான்
சொல்கின்றன ஹலோ

சிக்னலில் நின்ற போது பறவைகளின் இன்னிசை
அடச்சே ! சக வாகனனின் காலர் ட்யூன்