Tuesday, February 26, 2008

கெட்டவனுக்கு கடவுளை கெட்டவனாக்கனும்னா

ஆன்மீகம் கூட ஒரு விஞ்ஞானமே..நான் ஒரு ஆராய்ச்சியாளன்.

1967 ல் பிறந்த நான் 1984 வரை தந்தை,மற்றும் அண்ணன் மார்களால் வளர்க்கப்பட்டேன். 1984 முதல் 1986 வரை எப்படி எப்படியோ வாழ்ந்தேன்..1986 முதல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று உணர்ந்தேன். அந்த ஆதர்ஸ் வாழ்வுக்கு தொடர்ந்து முயன்று வருகிறேன். இதற்கு உதவி அனுமனும் அவன் இடைவிடாது ஜபிக்கும் அண்ணலின் கன்னலொத்த" ராம்" என்ற நாமமும் தான்.

நான் யோகியோ,சுவாமிஜியோ அல்லன். இன்றளவும் ஒருவித வெள்ளோட்டமாகவே தான் என் பக்தி பயணம் தொடர்கிறது. இந்த வெள்ளோட்டத்திலேயே உள்ளங்க பீட்ஸா போல் தெள்ளென புரிகிறது.

இறை சக்தியிருக்கிறது. அது கேட்கிறது,பேசுகிறது. அதை அகந்தை மறைக்கிறது. தன்னம்பிக்கை என்ற பெயரில் அது சுதி தவறி அகந்தையாகிவிட முற்றிலும் அழிந்த நான் அதன் ஆபத்தை முழுக்க உணர்ந்துவிட்டதால் அது " முருகேசா ! உன் உள்ளத்துல வந்து உட்கார்ந்து ஒரு தம் போட்டுட்டு உடனே ஓடிர்ரன் " என்று கெஞ்சி கூத்தாடினாலும் நோ என்ட்ரி போர்டு போட்டு வைத்துவிட்டேன்.

இதனால் எதிர்காலம் என் (ஞான) கண் முன் விரிகிறது, இறை சக்தியின் படம் வரைந்து பாகங்கள் குறிக்குமத்தனை "திமிர்" பிறக்கிறது. அந்த திமிரால் நான் கண்டுகொண்ட ஒரே ஒரு ரகசிய விதியை பகிரங்கப் படுத்துகிறேன்.


"கெட்டவங்க உங்களுக்கு கெட்டது பண்ணா , அவங்களுக்கு நீங்களும் கெட்டது பண்ண முயற்சி பண்ணா கடவுள் நியூட்ரலாயிருவார். கெட்டவனுக்கு கடவுளை கெட்டவனாக்கனும்னா நாம கெட்டவனுக்கு கெட்டதை நினைக்கக் கூட கூடாது. அட் லீஸ்ட் செய்யக்கூடாது ..இப்படி 9 நாள் விட்டா போதும் கெட்டவனுக்கு ,கடவுள் கெட்டவனாகி வெண்ணை எடுத்துருவார்"

இது என் கண்டுபிடிப்பு மட்டுமல்ல ..அனுபவமும் கூட‌