Monday, February 4, 2008

ஏழுமலையான் மீது பாடப்பட்ட பாடல்களின் அச்சு,எழுத்து பிரதிகள் மீது ஆராய்ச்சி


திருப்பதி திருமலை தேவஸ்தானத்தார் சப்தகிரி என்று ஒரு பத்திரிக்கை வெளியிடுகிறார்கள். அதில் ஒரு அறிவிப்பை கண்டேன். ஏழுமலையான் மீது பாடப்பட்ட பாடல்களின் அச்சு,எழுத்து பிரதிகள் மீது ஆராய்ச்சி நடக்கிறது. அவற்றை வைத்திருப்பவர்கள் அனுப்பினால் ஆராய்ச்சிக்கு பிறகு ஜாக்கிரதையாக திருப்பி அனுப்பப்படும். என்பது அதன் சாராம்சம். நான் எனது படிஐப்புகளை அனுப்பினேன். அந்த பிராஜக்டின் தலைவர் டாக்டர்.Raghavachari என்பவர் பாடல்கள் அற்புதமாக இருப்பதாகவும் தேவஸ்தானம் நிதி உதவியுடன் அச்சிட முயற்சி செய்யும்படியும் கடிதம் எழுதினார். அதற்கான படிவத்தை கூட அனுப்பினார். நானும் விண்ணப்பித்தேன் . அதற்கு வந்த பதிலைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.