Wednesday, February 20, 2008

இந்திய பிரதமர் போனில் பேசினார்

கி.பி.2020, புது தில்லி

இந்திய மனித வளத்துறை அமைச்சர் வீராசாமி, தன்னெதிரில் உட்கார்ந்திருந்த வெளி நாட்டு விஞ்ஞானிகளை "தயங்காது சொல்லுங்க" என்றார். ஒரு விஞ்ஞானி கூற ஆரம்பித்தார்.

"உங்க அண்டை நாடுகளான எங்கள் நாடுகளில் 13 வருசங்களுக்கு முன் ஜனத்தொகை பெருக்கத்தை சமாளிக்க ஆண்கள்,பெண்கள் ஒவ்வொருத்தருக்கும் கட்டாய குடும்ப கட்டுப்பாடு செய்விச்சோம். அதுக்கு முன்னாடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆண்களோட விந்துவையும்,பெண்களோட முட்டைக் கருக்களையும் தனித்தனியே சேகரிச்சு ஃப்ரீஸ் பண்ணி புதச்சு வச்சுட்டம். ஜனத்தொகை குறைந்து பொருளாதாரம் நல்ல நிலைமக்கு வந்த பிறகு , இதுக்கு முன்னாடி புதைச்சு வச்ச விந்து,முட்டைக் கருக்களை இணைச்சு குழந்தைகளை பிறப்பிக்க முடிவு செய்தோம். எடுத்தப்புறம் தான் ரெண்டு ராட்சத சோதனைக்குழாய்களுமே நாசமாகியிருந்தது தெரிஞ்சது அதனால உங்க நாட்டு ஆண் பெண்களோட விந்து,முட்டைக் கருக்களை வாங்கி இணைச்சு குழந்தைகளை பிறப்பிக்க நினைக்கிறோம்."


அதே நேரம் இந்திய பிரதமர் போனில் பேசினார்" என்ன வீரா சாமி எதுனா பெயருமா?"
வீரா சாமி சொன்னார் " சார் ..நம்ம நிலையே தான் அவங்களுதும்"