Thursday, February 21, 2008

தொலை தூர வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி !


தொலை தூர வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி ! (ஹி..ஹி.. ஜோசியம் கேட்க விரும்புபவர்களுக்குங்க)

இத்தனை நாள் ஆர்க்குட்,யாஹூ சாட்,ஜோதிட பூமி,நிலாச்சாரல்.காம், எனது வலைப்பூக்கள் மூலம் என் ஜோதிட வித்வத்தை(?) அறிந்து, தனிப்பட்ட பலன் களை அறியத் துடிப்பவர்கள் என் ஆலோசனை கட்டணத்தை எனக்கு அனுப்பி வைக்க படாத பாடு பட்டு வந்தனர். அதைப் பெற நானும் தான் பாடுற்றேன்.


ஒரு தரம் ஒரு யு.எஸ்.ஏ நண்பர் ரூ.3000 அனுப்ப தங்களுக்கு ஏதேனும் வங்கியில் கண‌க்கு உண்டா? உண்டெனில் எந்த பெயரில் உள்ளது என்று கேட்டார்.(மெயிலில் தான்) . அந்த நேரத்துக்கு ஒரு நண்பரின் கணக்கு எண்ணை கொடுத்தேன். அவன் பெயருக்கு செக் வந்தது. நண்பனிடம் கொடுத்தேன்.

ஒரு வாரம் கழித்து வரச்சொன்னான். சென்றேன். எவ்ள வேணும் என்றான். நானும் இ.வாயன் போல் நூறும் இரு நூறும் வாங்கி தீர்த்து விட்டேன்.


இன்று இறைவன் திருவருளால் ஸ்டேட் பாங்க் ஆஃப் இண்டியா (கிரீம்பேட்டை) கிளையில் சேமிப்பு கணக்கு துவக்கினேன். கணக்கு எண்: 30333022274 எனது அஃபிஷியல் பெயரான எஸ்.முருகன் என்ற பெயரில் கணக்கு துவங்கப் பட்டது. சித்தூர்.எஸ்.முருகேஷன் என்பது எனது புனைப்பெயராகும். எழுத்து வேலைகளை

சித்தூர்.எஸ்.முருகேஷன் என்ற பெயரிலும், இதர போக்கு வரத்துகளை அஃபிஷியல் பெயரான எஸ்.முருகன் என்ற பெயரிலும் தொடர்ந்து வருகிறேன். எழுத்தாளர்கள் தமது உண்மை மற்றும் புனைப்பெயர்களில் வங்கி கணக்கு துவங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

ஆக எனது ஜோதிட ஆலோசனை பெற விரும்பும் தொலை தூர வாடிக்கையாளர்கள் மேற்சொன்ன எனது வங்கி கணக்கில் கட்டணத்தை கட்டி விட்டு மெயில் , சாட் மூலம் ஆலோசனை பெறலாம்.