Showing posts with label ஜோதிட பாடம். Show all posts
Showing posts with label ஜோதிட பாடம். Show all posts

Thursday, November 10, 2011

ஜோதிடராக ஆசையா? இன்றே இப்போதே ஆகலாம்


அண்ணே வணக்கம்ணே !
ஜோதிடராக ஆசையா நான் வெளியடப்போற புஸ்தவத்தை வாங்கிக்கங்கனு சன் பிக்சர்ஸ்/டிவி கணக்கா ப்ரமோட் பண்ண இந்த பதிவை போடலை. சமீபத்துல ஜோதிட பால பாடம்னு ஒன்னை துவங்கி திராட்டுல விட்டுட்டம்.

அந்த ரூட்ல ஒரு நாட் கிடைச்சது. கன்டின்யூ பண்றோம். தட்ஸால். உபரி தகவல் என்னன்னா இந்த மேட்டர் எல்லாம் நம்ம புஸ்தவத்துல பாய்ண்ட் டு பாய்ண்ட் வரப்போகுது.

ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது. ஆயிரம் புஸ்தவம் படிச்சா வர்ர தெளிவு ஒரு நூறு ஜாதகத்தை பார்த்தா வந்துரும். அதுக்கு சில அடிப்படைகளாவது தெரியனும்ல. எனவே இந்த ஜோதிடராக ஆசையா வரிசையில வரப்போற ஆடியோ பதிவுகளை தொடர்ந்து கேளுங்க.

பதிவை கேட்க கீழ்காணும் ப்ளேயர்ல உள்ள ப்ளே பட்டனை அழுத்துங்க. நெட்ஸ்பீட் இல்லாதவுக டவுன் லோட் பண்ணிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க.

Friday, September 2, 2011

ஜோதிட பாலபாடம் ஆடியோ :1

அண்ணே வணக்கம்ணே !
உங்களுக்கெல்லாம் ஒரு இனிய அதிர்ச்சி. ஜோதிட பாலபாடத்தை ஒரு வரிசையில ஆடியோ ஃபைலா தர முடிவு செய்து இன்னைக்கே ஆரம்பிச்சுட்டேன்.

இன்னைக்கு துவாதச பாவங்களில் சூரியன் நின்றால் என்ன பலன் கிடைக்கலாம்ங்கற விஷயத்தை எடுத்துக்கிட்டேன்.

வழக்கமா பாடற பல்லவிதான். இதெல்லாம் கல்வெட்டோ - ஐ.பி.சியோ கிடையாது. பொதுப்பலன் தான். இதுல நாம ப்ரஸ்தாபிச்ச கிரகஸ்திதிக்கு ஆப்படிக்கிற வேற ஒரு அம்சம் ஜாதகத்துல இருந்தா இந்த பலன் எல்லாம் பல்லை இளிச்சுரும்.

இன்னைக்கும் சில பால பாடங்களை துணுக்காவும் தந்திருக்கேன். இதையும் ஒரு ஓட்டு ஓட்டுங்க. கடைசியில உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை சொடுக்கினா ஆடியோ பாடம் ஒலிக்கும்

5 ல் ராகு 11 ல் கேது அல்லது 5 ல் கேது 11 ல் ராகு:

இவர் வாழ்வில் அவமானங்கள் - நடக்கும்போது அதையடுத்து பெரும் அதிர்ஷ்டம் வரிக்கும். அதே போல் எதிர்பாரா லாபங்கள் நிகழும் போது அதையடுத்து அவமானம் எதிர்ப்படும் .டேக் கேர்.

2க்கு அதிபதியும் விரயாதிபதியும் சேரும்போது:
உ.வசப்பட்டு பேசும்போது பேச்சு தடைபடலாம். தாராளமாக பேசும் பழக்கம் இருக்காது. அல்லது தேவையற்ற பேச்சுக்களால் விரோதம் வரும். டம்ப பேச்சு அதிகமாக இருக்கலாம். அல்லது சதா தன் ஏழ்மையை பேசும் பழக்கமும் இருக்கலாம். (மொத்தத்தில் உங்கள் பேச்சை சனம் ரசிக்காது. தப்பி தவறி ரசிச்சா அவிக ரசிக்கிற வரை குடும்பமும், நீங்களும் ரொம்பவே கஷ்ட ப்படுவீர்கள்.
3க்கு அதிபதி ஏழில்:
ஜாதகரின் விருப்பப்படிதான் வாழ்க்கை துணை அமையும். அதற்காக இவர் கொஞ்சம் வீர விளையாட்டில் /கண்ணாமூச்சியில்/அல்லது மோடி மஸ்தான் வேலையில் இறங்க வேண்டி வரலாம். ஒரு வேளை சகோதரர் பெண்ணெடுத்த வழியிலும் தாரம் அமையலாம்.ஆனால் திருமணத்துக்கு பின் மனைவிக்கு அல்லல் அலைச்சல் அதிகமாகலாம்.
4க்கு அதிபதி 5ல்:
இவரது பூர்வ புண்ணியங்களின் காரணமாய் வாகன,கிருக யோகம் அமையும். கடந்த பிறவியில் தாயாக இருந்தவரே இந்த பிறவியிலும் தாயாக வந்துள்ளார். எனவே தாயார் மீது சற்று அலட்சிய பாவம் இருக்கலாமே தவிர சப் கான்ஷியசில் உண்மையான பாசம் வைத்திருப்பவர். அதிர்ஷ்டவசமாய் குறைந்த விலைக்கோ அல்லது இலவசமாகவோ வீட்டுமனை அ வீடு /வாகனம் கிடைக்கும். தாயாரின் மறைவுக்கு பிறகு இவரது மனைவி கருத்தரித்தால் தாயின் மறுபிறவி தோன்றும்.

4 ல் செவ்வாய் கேது:
இங்கு செவ்வாய் ஒருவர் நின்றாலே தாய்க்கு ரொம்ப கெடுதல். 4 என்றால் தாய் செவ்வாய் என்றால் ரத்தம், கேது என்றால் வழக்கத்துக்கு மாறான திடீர் மாற்றங்கள்/ பிரச்சினை.
கூட்டி கழித்து பாருங்கள் . தாய்க்கு பெரிய பிரச்சினையே வரவும் வாய்ப்புள்ளது. உ.ம் மார்பக கேன்சர் அ யூட்ரஸ் கேன்சர். ரெகுலர் செக்கப், முன் கூட்டிய ட்ரீட்மென்ட் ( வேறென்ன அறுத்து எரியவேண்டியதுதேன்) மூலம் யு கென் ரிசால்வ் தி ப்ராப்ளம்.
ஜாதகருக்கும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வறுமை , பூமிலாபம், சகோதரர் வகையறாவில் பிரச்சினைகள் காரணமாய் இதயத்துக்கு பெரும் அழுத்தம் ஏற்படும் .எனவே ஜாதகர் புகைப்பழக்கத்துக்கு ஆளாகாது பார்த்துக்கொள்ளவும் ( நிச்சயம் இவருக்கு இப்பழக்கம் ஏற்படலாம்) ஃபிசிக்கல் எக்ஸர்சைஸ் ஈஸ் மஸ்ட்.

எட்டில் குரு:
கடும் உழைப்பாளியாக ( ஃபீல்ட் ஒர்க் ) இருந்தால் தப்பிக்கலாம். அவ்வாறன்றி சுகஜீவனம் வாய்த்தால் திருமணம்,மனைவி,வாரிசு,பொன் ,பொருள் ஆகிய விஷயங்களில் அதிர்ச்சிகள் கட்டாயம்
பரிகாரம்:
சிவலிங்க பூஜை,பிரதி வியாழன் விரதம் ( இயற்கை வைத்திய முறைப்படி முழு பட்டினி). பஞ்சாட்சரி ஜபித்தல் . பொன் பொருள் எதிர்பாராது ஏழை குடும்பத்து பெண்ணை மணத்தல். உடலுழைப்பை விரும்பி ஏற்றல்



http://www.archive.org/details/Anubavajothidam1

Monday, August 29, 2011

ஜோதிட பாலபாடம்: 11


இரண்டுக்கு அதிபதி 12 ல்:
தாராளமாக பேச தயங்குவீர்கள் அல்ல து சொல்ல நினைத்தது ஒன்றாய் இருக்க சொல்வது வேறு ஒன்றாய் முடியும்.குடும்பத்தை பிரிந்து வாழும் நிலை ஏற்படலாம். கண்பார்வை மங்கலாகலாம். வீண் விரயங்கள் ஏற்படும்.
10க்கு அதிபதி 11ல் அ பத்து பதினொன்று அதிபதிகள் இணைந்து சுபபலமாதல்:
ஒரே நேரத்தில் இரண்டு தொழில்களில் ஈடுபடலாம்.
கேது சுபபலமாகி ஜீவன பாவத்துடன் தொடர்பு கொண்டால்:
எந்த தொழிலில் இறங்கினாலும் அதில் மாடர்ன் டெக்னிக்ஸ், லேட்டஸ்ட் இன்னோவேசன்ஸை உபயோகிப்பிங்க. வெளி நாட்டு தொடர்பிருக்கும்.
3 ல் சுக்கிரன் அ கேந்திர சுக்கிரன் (7 அ 10) :
செக்ஸ் மீதான அதீத ஈடுபாட்டால் விரைவில் அதன் மீதுள்ள கவர்ச்சியை இழத்தல் கூட நடக்கலாம். நீங்க செய்றிங்களோ இல்லையோ அதைபத்தி நிறைய யோசிப்பிங்க. நிறைய பேசவும் செய்யலாம். இங்கே ஒரு சின்ன ரகசியத்தை சொல்லனும் யாரெல்லாம் அதை பத்தி நிறைய யோசிக்கிறாய்ங்களோ ,பேசறாய்ங்களோ அவிக சீக்கிரம் அது மேல இருக்கிற கவர்ச்சியை இழந்துருவாங்க காதல் ,கல்யாணம் வகையிலும் அதிருப்திகள் ஏற்படும். பொருந்தா காதல், காதல் திருமணம், கலாட்டா கல்யாணம்,மனைவியுடன் தகராறுகள் , பெண்களால், விவகாரம் போன்றவற்றையும் எதிர்பார்க்கலாம்.
லக்னாதிபதி விரயத்தில் அ விரயாதிபதி லக்னத்தில்:
உங்க யோசனைகள் உங்களுக்கு பயன்படாது. பிறர் விஷயத்துல ஒர்க் அவுட் ஆகும்.
செவ் சுபபலமாகி லக்னத்தில் /ஐந்தில் :
நீங்க ஜஸ்ட் ஒரு சோல்ட்ஜர் தான். உங்களை உரிய பாதையில செலுத்த ஒரு கமாண்டர் ஒரு அட்வைசர் தேவை.
6க்கு அதிபதி 10ல் :
தொழில் வியாபாரத்துல கடன் ஏற்படலாம். போட்டி இருக்கலாம், விரோதம் வரலாம். பயப்படாதிங்க. இறுதி வெற்றி உங்களுக்கே. சற்று தாமதமாகவேனும் சதுர்ஜயம்,ருண விமுக்தி, ரோக நிவர்த்தி கிடைக்கும்.
7 ஆமிடத்துடன் சுக்கிரன் தொடர்பு கொண்டால்( இருந்தாலும்):
தென் கிழக்கு திசைல இருந்து வரலாம். அவிக வீட்ல பெண் ஜனத்தொகை அதிகமா இருக்கலாம். ஏரியா பேர் கூட பொம்பள பேரா இருக்கும். துர்கா காலனி எட்ஸெட் ரா. அவிக வாழ்க்கைல ( வீட்டு எண்,கிராஸ் நெம்பர்,பிறந்த தேதி முதலியன) 6 ஆம் நெம்பர் ரொம்பவே விளையாடியிருக்கும்.
பழம், பூ,லட்சுமி, தொடர்பான பேர் கொண்டவுகளா இருப்பாங்க. அழகிய தோற்றம், அழகியல் உணர்வு உள்ளவங்க. கலைத்துறைல ஈடுபாடு இருக்கும்.
பத்தில் சந்திரன் :
வெறும் இரண்டே கால் நாட்களில் 20 வருடங்களுக்கும் தீராத பிரச்சினையை க்ரியேட் செய்துவிடுவார். அதே நேரம் 20 வருடங்களாய் தீராத பிரச்சினையை வெறும் இரண்டே கால் நாட்களில் தீர்த்துவிடுவார்.
2ல் சந்திரன்:
தன் இரண்டே கால் நாள் வருமானத்திலிருந்தே ஒரு சொத்தை வாங்கினாலும் ஆச்சரிய பட முடியாது. அதே சமயம் சொத்தை விற்று தின்றபடி காலத்தை ஓட்டினாலும் ஆச்சரிய பட முடியாது.
லக்னாதிபதி+ரோகாதிபதி:
கடனை முதலாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டால் சக்ஸஸ் ஆகலாம்.
தனுசு லக்ன்ம:
இவரது மைண்ட் செட்டை புரிந்து கொள்வது கடினம். வயிற்றுக்கு கூட தாரளமாக செலவழிக்காது சேமிப்பை மேற்கொள்வார். அந்த சேமிப்பில் இருந்து சொத்து வாங்குவார். ஆனால் வாழ் நாள் பூரா சொத்து வாங்குதல், அதன் மீது விவகாரங்களை எதிர்கொள்ளுதலிலேயே இவர் நேரம் செலவழிந்து போகும். இவர் இருக்கும் இடத்தில் வளர்ப்பு பிராணிகளை வளர்க்க கூடாது. முக்கியமாய் பூனை . (முடி உதிர்க்கும் எந்த பிராணியும் வேண்டாம்)
இவர் மீது தந்தையின் இம்பாக்ட் அதிகம். தந்தை மகன் உறவை மீறி எல்லா தொழில்,வியாபார விஷயங்களிலும் கலந்து வேலை செய்யும் வாய்ப்பு உள்ள

லக்னம் ரிஷபமாகி லக்னத்தில் சனி:
அதே போல் 9/10 க்கு அதிபதியான சனி லக்னத்தில் நின்று டெக்னிக்கல் ப்ரெயின், புண்ணாக்கிலிருந்து கூட எண்ணெய் எடுக்கும் அத்தனை சாலாக்கை தந்திருந்தாலும் சொத்து சேர்க்கும் யோகத்தை தந்தாலும் அவர் ஏழையும் பார்த்து மனைவியாரின் உடல்,மன நலன் ,அவருடனான தங்கள் ஒற்றுமையையும் பாதிக்கிற நிலையில் உள்ளார். எனவே சனி தொடர்பான தொழில், மனிதர்களையும் தவிர்ப்பது நல்லது.
சர்ப்ப தோஷம் உள்ளவர்கள்:
4,13,22 , 7,16,25 எண்கள் தேதிகளை தவிர்க்கவும்.
இரண்டில் செவ்வாய்:
இது தனபாவம் என்பதால் வீண் விரயம், வாக்குஸ்தானம் என்பதால் எதிராளியை இர்ரிட்டேட் செய்யும் பேச்சு, நேத்திர ஸ்தானம் என்பதால் கண்களுக்கு ,வாய்,தொண்டைக்கு பாதிப்பு ஏற்படும்.குடும்பஸ்தானம் என்பதால் குடும்பத்திலும் கலகம் பெருகும்.
பரிகாரம்:
முருகன் மூலமந்திரத்தை வாய் விட்டு ஜெபித்தல் . யுத்தம் தொடர்பான சினிமாக்களை டிவிடியில் பார்த்தல். கழுத்தில் வேல், சூலம் போன்ற ஆயுதம் பொறித்த டாலர் அணிதல்.
முருகன் மூல மந்திரம்:
ஓம் சௌம் சரஹணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ
(Om sowm sarahanabhava sreem hreem kleem klowm sowm namaha
4ல் சனி :
இது குடும்ப வறுமையை, வீட்டின் பாழடைந்த தன்மையை காட்டும். வீட்டை புதுப்பித்தால் ஏழ்மை வரும். இதை தவிர்க்க புதுப்பித்த பிறகு ஹாலில் விவசாயம் தொடர்பான சீனரியை வால் பேப்பராக ஒட்டவும்.ஆனால் தாய்க்கு தீர்காயுவை தரும் (ஆனால் அவருக்கு கால் தொடர்பான தொல்லையையும் தரும்) படிப்பில் தடை, வாகன யோகம், ஆனாலும் சிறு விபத்து ஒன்றும் நிகழலாம்,
4ல் சந்திரன்:
அடிக்கடி வீடு மாறுதல் அ வீட்டு நிதி நிலை மாறுதலை காட்டும். தாயின் உடல் ,மன நிலையிலும் எவ்ரி டூ இயர்ஸுக்கு பெரும் மாற்றம் தெரியும். வாகன விசயத்திலும் பெரும் ஏற்ற இறக்கம் இருக்கும்.
7ல் புதன்:
இது ஜாதகரின் நடத்தை குறைவை காட்டுகிறது (பெண்கள் விஷயத்தில்) தோல் அண்டம் தொடர்பான பிரச்சினயையும் தரலாம்.

Sunday, August 28, 2011

ஜோதிட பாலபாடம்: 10


4 ஆம் பாவாதிபதி ஐந்தில்/ ஐந்தாம் பாவாதிபதி 4 ல் :
தங்கள் அம்மா பற்றிய சங்கதியை சொன்னால் நக்கலாக சிரிப்பீர்களோ என்னவோ? ஏன் என்றால் கடந்த ஜன்மத்திலும் அவரே தங்கள் அம்மாவா இருந்திருக்கிறார். இதற்கு என்ன ஆதாரம் என்று நீங்கள் கேட்கலாம்.
ஆதாரம் 1:
அவர் இன்ஃப்ளுயன்ஸ் இதர குழந்தைகளை விட அதிகமாக தங்கள் மீது இருக்கலாம்.
ஆதாரம்2:
அவரை பற்றி ஒருவித அலட்சியபாவம் இருக்கும். ( காலேஜ்ல சேர்ந்த புதுசுல வாங்கின பழைய செல்ஃபோனை இப்போ பார்த்தா மாதிரி ஒரு ஃபீலிங்)
அவரது மரணத்துக்கு பிறகும் அவர் குறித்த நினைவுகள், விவகாரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவர் தரப்பு வில்லங்கமுள்ள சொத்து அல்லது ரீ சேல் மதிப்பற்ற சொத்து தொடரலாம். அல்லது அவர் தரப்பு உறவினர்கள் குறைந்த பட்சம் அவரது தோழிகளின் தொடர்பு தொடர்ந்து கொண்டே இருக்கும்.

7க்கு அதிபதி 7 ல் ஆட்சி பெற்றால்:
நண்பன்/காதலி /மனைவியின் இன்ஃப்ளுயன்ஸ் அதிகம்.

8க்கு அதிபதி 4 ல்:
தாயை ஸ்தூலமாகவோ மன அளவிலோ பிரிந்து வாழும் நிலை ஏற்படலாம். சிறு வாகன விபத்து / தொழிலகம் அல்லது குடியிருப்பில் சிறு விபத்துக்கு வாய்ப்பிருக்கிறது. உயிர் பிரிவதும் வீட்டிலேயே இருக்கலாம். சிலர் விஷயத்தில் வீடு கை மாறிவிடும்.

9க்கு அதிபதி -4ல் :
தாயே தந்தையை போலோ அல்லது தந்தையே தாயை போலோ தங்களை வளர்த்திருக்கலாம்.

4 ல் புதன் சுபபலம் பெற்றால்:
தாய்மாமன் அ மாமனார் சொந்தஊரில் செட்டிலாகவே வாய்ப்புள்ளது. அது கூட பஜார் தெரு, மக்கள் கூடிக்களிக்கும் இடத்தை ஒட்டி வீடு அமைய வாய்ப்புள்ளது. வீட்டில் தோட்டம் நிச்சயம். அது பிரபல பெருமாள் கோவில் உள்ள ஊராகவோ அ வியாபாரத்துக்கு முக்கியமான ஊராகவோ இருக்கலாம்.

ஜாதகத்தில் புதன் சுபபலமானால் .அதிர்ஷ்டம் தருவன:
எண்: 5
தேதி: 5,14,23
நிறம்: பச்சை
கடவுள்:பெருமாள்
கல்: ஜாதி பச்சை ( இடது சிறுவிரலில் அணியவும்)
ஏரியா: பஜார் தெரு, சந்தை, பீச் (மக்கள் கூடுமிடம்)
சாதி: வைசியர்கள், வியாபாரிகள்,ஏஜெண்ட்ஸ்,டீலர்
மனிதர்கள்: மருத்துவர்கள், ஆடிட்டர்கள்,ஜோதிடர்கள்

குரு+சந்திரன்:
இவர் தம் தகுதிக்கு (அதிர்ஷ்டம்) எள்ளளவும் தொடர்பில்லாத வாழ்வை 14 வருடம் வாழவேண்டியிருக்கும். அது எப்போது துவங்கியது என்பதை அவரே தம் அனுபவத்தில் இருந்து கணிக்கவேண்டும்.

ஐந்தில் சுக்கிரன் சுபபலமானால்:
மகாலட்சுமி போன்ற பெண் குழந்தைகள் பிறக்கும். அது நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட், கலர் சென்ஸ் உள்ளவராக வளரும் . அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் போன்ற தொழில்களை துவங்கி நடத்தலாம். மேலும் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகம், துறைகளும் லாபம் தரும்.பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியனவும் அனுகூலம் தரும்.

லக்னம் அ ராசி மகரமானால்:
பகவத்கீதையில் கூறப்பட்டுள்ள கர்ம யோகம் இவருக்கு ரொம்பவே பொருத்தம். அந்தந்த நேரத்துக்கு தன் உழைப்பின் பலன் எங்கே போகிறது என்று கேள்வி எழுப்புவாரே தவிர பிறகு கண்டு கொள்ளமாட்டார். உடல் நலம் ஒத்துழைக்காவிட்டாலும் வேலை செய்து கொண்டே இருக்க விரும்புவார்.

4 -7 பாவங்களுக்கு ஒரே கிரகம் அதிபதியாக இருந்தால்: (இது எந்த லக்னத்துக்கு ஒர்க் அவுட் ஆகும்னு சொல்லுங்க பார்ப்போம்)
இவரது தாய்க்கும், மனைவி/கணவருக்கு சில ஒற்றுமைகள் அமைந்திருக்கும். பெயரில்,குணத்தில் அ ஜாடையில்.

லக்னம்/ராசி கன்னியானால்:
கடன், நோய்கள், விரோதங்கள்,சொத்து தகராறுகள் இருந்து கொண்டே இருக்கும் . கடன் இருக்கும் வரை ஆரோக்கியமாக இருப்பார். விரோதங்கள் இருக்கும் வரை கடன் இராது. ( சில கால கட்டத்தில் மட்டும் மூன்றுமே தொல்லை தரலாம்.) இவை குறித்து கவலை வேண்டாம்.

லக்னம் கடகமானால்:
அம்மா ஏதேனும் ஒரு கலை/அழகு படுத்தும் கலை கைவரப்பெற்றிருப்பார்கள். நல்ல ரசனை இருக்கலாம். ஆனால் இவருடன் ஒருவித ஹேட் அண்ட் லவ் தான் இருக்குமேதவிர அதில் தொடர்ச்சி இல்லாதிருக்கலாம். இவருக்கு கைனகாலஜிக்கல் பிரச்சினைகள் வரலாம். (கருப்பை,ஓவரிஸ்,அண்டம்) பாட்டு டீச்சர், ட்ராயிங் டீச்சர் மாதிரி கூட இருந்திருக்கலாம்

சனி ஜீவனஸ்தானத்தில் தொடர்பு கொண்டால்:
ஐரன்,ஸ்டீல்,ஆயில் ,ஃபேக்டரி ,விவசாயம்,வெட்டினரி துறை. . எந்த துறையில் இருந்திருந்தாலும் கை,கால் அழுக்காகும் தொழில்/சீட்டில் இருந்திருக்கலாம். ஒர்க்கிங் என்விரான்மென்டில்குறைந்த பட்சம் தூசு, துர்வாசனை இருந்திருக்கும்.
இவருக்கு தொழில் உத்யோகத்தில் எதிர்ப்புகள் இருந்தால்:
காகத்துக்கு சோறு, பசு மாட்டுக்கு அகத்தி கீரை தரவும்.

Friday, August 26, 2011

ஜோதிட பாலபாடம்: 8

லக்னாதிபதி எட்டில்:
லக்னாதிபதி உங்களை காட்டும் கிரகம். எட்டு மரணத்தை காட்டும் இடம். லக்னாதிபதி எங்கே இருந்தாலும் நன்மை செய்யனும்.அவர் மரணத்தை காட்டும் இடத்துல நின்னாரு. இதன் பொருள் என்ன? உங்க லக்னாதிபதி மரணத்தின் மூலம் நன்மை செய்வார் அந்த மரணம் உங்க போட்டியாளரோடதா இருக்கலாம் -உங்க எதிரியோடதா இருக்கலாம் - அல்லது உங்கள் உறவினரா இருக்கலாம். அந்த மரணத்தின் மூலம் உங்களுக்கு பதவி உயர்வு -சொத்து -சுகம் வரலாம் என்பது இதன் பொருள். ஒரு வேளை நீங்க எதுனா பெரிய விபத்தில் சிக்கி நஷ்ட ஈடு இத்யாதி வரலாம்.

ரோகாதிபதி இரண்டில்:
நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல் ஜாதகர் வீண் பேச்சு,வெட்டிப்பேச்சால் வம்புகளை விலை கொடுத்துவாங்குவார். அல்லது மிக அவசியமான நேரத்தில் கூட வாய் திறந்து பேசாது இருந்துவிடுவார்.அதனால் பல நஷ்டங்கள் ஏற்படும்.நோய்கள்,கடன்,விரோதங்களேற்படலாம். கண்,தொண்டை,வாய் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் மற்றும் வே ஆஃப் ப்ரசண்டேஷனில் பிரச்சினை வரலாம்.

லக்னாதிபதி ஆட்சி உச்சம் பெற்றால்:

லக்னங்கறது ஜாதகத்துக்கு கடைக்கால் மாதிரி. ஜாதகத்துல எத்தீனி யோகம் இருந்தாலும் லக்னாதிபதி டுபுக்காகியிருந்தா ஒரு இழவும் கைக்கும் வந்து சேராது. அதே நேரத்துல ஜாதகம் சுமாரா இருந்தாலும் லக்னாதிபதியோட பலத்துல சமாளிச்சுர்ரதே இல்லை சாதிக்கவும் முடியும்.

லக்னங்கறது நம்ம நிறம்,மணம்,குணம், உடல்,மனம்,புத்தி ஆரோக்கியம்,பொறுமை,முடிவெடுக்கும் திறன் எல்லாத்தயும் காட்டற இடம். மற்ற 11 பாவங்களோட சுருக்கம் இது.

ஆக லக்னாதிபதி உச்சம் பெற்றால் அது மினிமம் கியாரண்டி ஜாதகம்னு கண்ணை மூடிக்கிட்டு சொல்லிரலாம்.

இதுல ஒரு மைனஸ் பாய்ண்டும் இருக்கு.ஓஷோ சொல்வாரு " நீங்க மத்தவுகளை விட உயர்ந்துட்டா பிரச்சினை அதிகம்"

மத்தவுக குண்டூசி தவறி விழுந்ததுக்கு பதறிப்போயி காட்டுக்கத்தல் கத்த "யார் கால்லயாச்சும் குத்திர ப்போவுதுப்பா மொதல்ல அதை பொறுக்கி எடுத்து அதுக்கான டப்பாவுல போடு"ன்னு சொன்னா எதிராளிக நொந்துபோய்ருவாய்ங்க

மேலும் எதிர்காலத்துல நீங்க என்னவா மாறப்போறிங்களோ இளமையில அதுவாவே இருப்பிங்க இதை சாமானியர்கள் டைஜஸ்ட் பண்ணிக்க முடியாம நொந்துப்போயிருவாய்ங்க. உங்களை நோகடிக்கவும் கூடும்.

எந்த கிரகம் கெட்டால் - எந்த கிழமையில் - எந்த கடவுளை வழிபடலாம்:

சூரியன் -ஞாயிறு -சூரிய நமஸ்காரம்,காயத்ரி
சந்திரன் -திங்கள் கிழமை -கன்னியாகுமாரி
செவ்வாய் -செவ்வாய் கிழமை - சுப்பிரமணியர் -ரத்த தானம்
ராகு -வெள்ளிக்கிழமை (காலை 10.30 முதல் 12 க்குள்) புற்றுள்ள -அய்யர் பூசை பண்ணாத அம்மன் கோவில்
குரு -வியாழகிழமை - தட்சிணா மூர்த்தி அ எவரேனும் குரு
சனி - சனிக்கிழமை - ஆஞ்சனேயர் அ கிராமதேவதை
புதன் - புதன் கிழமை - நாமம் போட்ட சாமி (எதுவானாலும் சரி) எஸ்பெஷலி கிருஷ்ணர்
கேது - திங்கள் காலை 7.30 முதல் 9 க்குள் வினாயகர்


குரு சுபனாகி/அசுபனாகி தனித்து நின்றால்;

அந்தணன் தனித்து நின்றால் நிந்தனை பல உண்டாம்:
இது ஒரு ஜோதிட பழ மொழி. அந்தணன் என்பது குருவை குறிக்கு சொல். இது எப்படி மெட்டீரியலைஸ் ஆகுதுன்னா ..


குரு வயிறு,இதயத்துக்கு அதிபதி. இந்த ரெண்டு பார்ட்டும் ஒழுங்கா வேலை செய்தாலே ஹெல்த் பாய்ண்ட் ஆஃப் வ்யூல தூள் கிளப்பலாம். ஆரோக்கியமான உடல்ல ஆரோக்கியமான எண்ணங்கள் தான் வரும்.அந்த எண்ணங்களை செயல்படுத்தற உந்துதலும் வரும்.( மேலும் உங்க ஜாதகத்துல செய்தொழிலை காட்டற 10 ஆமிடத்துக்கும் குருவே அதிபதியா இருக்காருங்கறதால இந்த பலன் ரொம்பவே ஒர்க் அவுட் ஆகும்)

யுவார் ஓகே. ஆனால் உங்களை சுத்தி உள்ளவுகளும் ஆரோக்கியமான உடலும்,மனசும் பெற்றிருக்கனுமில்லையா? அப்படி இல்லேன்னா என்ன ஆகும்?

உடல்,மன ஆரோக்கியம் காரணமா நீங்க உற்சாகம், எனர்ஜியோட இருப்பிங்க. அதெல்லாம் சேர்ந்து உங்களை சந்தோஷமா இருக்க வைக்கும்.

ஸ்தூல நிலை வேறயா இருந்தாலும் சந்தோஷமா இருப்பிக.

அந்த சந்தோஷம் உங்களை உந்தித்தள்ள நீங்க நாலு பேருக்கு நல்லதை செய்யப்போவிக .அதைப்பார்த்து நாலு பேர் உங்களை நக்கலடிக்கலாம். ஏன் உங்களுக்கு தீமை கூட செய்யலாம் (சந்தோசத்துல உள்ளவன் அடுத்தவுகளையும் சந்தோசப்படுத்தத்தான் பார்ப்பான்.துக்கத்துல உள்ளவன் அடுத்தவுகளையும் துக்கப்படுத்தத்தான் பார்ப்பான்)

குரு தனியா நின்னா என்ன ஆயிரும்னு கேப்பிக சொல்றேன். குருன்னா டூ குட்.( Too good/ do good) குருவோட இன்னம் ஏதோ ஒரு கிரகம் சேர்ந்தா இதை கட்டுப்படுத்தும். இல்லாட்டி அரண்மனை வாசக்காலை வெட்டிக்கொடுத்த கர்ணன் கதையா போயிரும்.

தர்மம் பண்ணியே போண்டியான குடும்பம் ஊருக்கு நாலிருக்குல்லியா? நல்லதை பண்றது ஓகே.ஆனால் எதுக்காக பண்றோம்னு ஒரு கேள்வி வருமில்லியா?

கூட வேற ஏதாச்சும் கிரகமிருந்தா அந்த கிரக காரகத்வத்துக்குட்பட்ட ஏதோ ஒரு நோக்கத்துக்காக பண்றான்னு ஜனம் அஜீஸ் பண்ணிப்பாங்க.

அப்படியில்லாம குரு தனிய நின்னா நல்லது பண்றதுக்காகவே நல்லது பண்ண ஆரம்பிச்சுருவம்.

இதை ஜீரணிச்சுக்க முடியாத சனம் உங்க நற்செயலுக்கு விபரீதமான அர்த்தத்தையெல்லாம் கொடுத்து கதை கட்ட ஆரம்பிச்சுரும்.

உதாரணமா நீங்க ஒரு ஏழக்குடும்பத்துக்கு உதவறிங்கனு வைங்க. அந்த வீட்டு பெண்ணை கணக்கு பண்ணத்தான் பண்றிங்கனு கதை கட்டிருவாய்ங்க.

கோவிலை புதுப்பிக்க இறங்கினிங்கனு வைங்க. மூலவர் அடியில புதையல் இருக்குப்பா அதை குறிவச்சுத்தான் இந்த வேலைல இறங்கியிருக்கானு சொல்லிருவாங்க.

குரு தனிய நின்னா வர்ர பிரச்சினை இதான்.


மேலும் குரு ஞாபகசக்தியை,திட்டமிடும் திறமையை,பொறுமைய தரக்கூடிய கிரகம்.வெற்றிக்கு இதுகள விட்டா வேற வழி ஏது? குரு உச்சம் பெற்றதால குரு காரகத்வம் கொண்ட எல்லா மேட்டருமே நல்லா ஒர்க் அவுட் ஆகும் .(பார்க்க: இணைப்பு நெம்பர் டூ )மனுசன் வாழ்க்கையில உசர உசர தனிமைப்பட்டு போயிருவான்.

இதுல குரு வேற தனிய இருந்தா நீங்க தனிமையை விரும்ப ஆரம்பிச்சுருவிங்க. சிங்கம் தனித்திருக்க சிறு நரிகள் எல்லாம் கூட்டா சதி பண்ண ஆரம்பிச்சுரும்.

குருங்கறது பிராமண கிரகம். பிராமணன் தனித்து நின்னு எதையும் கழட்ட முடியாது. அவனுக்கு அரசாங்கத்தோட,சமூகத்தோட ,மக்களோட உதவி தேவை. குரு தனியே நின்னா ஜாதகர் பாட்டுக்கு சோலோவோ தான் செய்ய நினைச்சதை செய்துக்கிட்டு போய்க்கினே இருப்பார்.

அப்ப சனம் தங்களோட கற்பனை சிறகை படபடனு அடிச்சு வதந்தீகளை கிளப்ப ஆரம்பிச்சுருவாய்ங்க. இதைத்தான் நிந்தனைங்கறது.

6 ல் சந்திரன்: ரோக பாவம்:

இங்கே சந்திரன் நின்னாரு.இங்கு சந்திரன் நின்றதால் தீடீர் என்று உடல் நிலை ட்ரபுள் கொடுக்கும், மந்திரம் போட்டாப்ல குணமாயிரும். அதனால சின்ன சின்ன ஹெல்த் ட்ரபுள்ஸுக்கு மருந்துமாயம்னு போகாதிங்க போச்சுனு நினைச்சா மறுபடி தலை காட்டும்.(அவை வேறேதேனும் பெரிய பிரச்சைனைக்கு முன் அடையாளமா இல்லாதவரை) கடனும் திடீர்னு ஏற்படும் விளையாட்டா தீர்ந்துரும்னு நினைக்காதிங்க. வாழ் நாள் முழுக்க தொடர்ந்தாலும் தொடரும். அதனால் கடன் வாங்கறச்ச ஒரு முறைக்கு பல முறை யோசனை பண்ணி இறங்குங்க. வழக்கு,விவகாரம்,சண்டையும் இதே கேட்டகிரிதான். "அம்பாளே பார்த்துப்பா"ன்னுட்டு விலகி வந்துருங்க.
சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை ஆகியன யதார்த்தத்தை புத்தியில் இருந்து மறைத்து சிக்கலில் மாட்டிவைக்கும். சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும். எதிரிகள் நண்பர்களா மாறுவாய்ங்க. நண்பர்கள் எதிரிகளா மாறுவாய்ங்க.