Showing posts with label saktheyam. Show all posts
Showing posts with label saktheyam. Show all posts

Wednesday, August 24, 2011

அவன் அவள் அது :20


கடந்த பதிவுல ஜகஜ்ஜால புரட்டனான ஒரு ரிப்போர்ட்டரோட மோத வேண்டி வந்தப்போ ஆத்தா எப்படியெல்லாம் ஹெல்ப் பண்ணினாங்கறதை சொல்றதா சொல்லியிருந்தேன். அப்பம் ஸ்டேட்ல சந்திரபாபுவோட உச்சா பெட்ரோலை விட வேகமா எரிஞ்சுக்கிட்டிருந்தது. அடுத்தும் சந்திரபாபு தான் சி.எம்னுட்டு 3 புதுப்பணக்காரவுக காசை தண்ணியா இறைச்சுக்கிட்டிருந்தாய்ங்க. அவிக கிட்ட அதிகமா குளிர்காய்ஞ்சது நிருபருங்கதேன். அவிகளுக்கு (பு.ப) ஸ்டேஷன்லயும் நல்ல வாய்ஸு.

அந்த நேரம் நம்ம தொகுதி எம்.எல்.ஏ ஆளுங்கட்சியோட பழிவாங்கலுக்கு டார்கெட் ஆகி இருந்தாரு. ஆனை படுத்தாலும் குதிரை மட்டம்தானே. இந்த தெலுங்கு தேசம் ஸ்கூலை பத்தி நமக்கு நல்லாவே அனுபவம். தாளி என்.டி.ஆர் ஃபேன் என்ற முறையில என்.டி.ஆர் காலத்துலருந்து உழைச்சிருக்கம்ல. கடேசியா 1999 தேர்தல் வரை ( சந்திரபாபு என்.டி.ஆருக்கு ஆப்படிச்ச பிற்காடும் கூட) தேர்தல் வேலையில எல்லாம் பார்ட்டிசிப்பேட் செய்திருக்கம். அவனுக (ஐ மீன் லோக்கல்) பவிசு நமக்கு நல்லா தெரியும்.

நம்ம எக்ஸ்பார்ட்டி போய் ஒரு ஆளை பிடிக்க நாமளும் அதே கட்சியில இன்னொரு ஆளை பிடிக்க குடுமிப்பிடியாயிரும்னு ஆந்திரபிரபா மேனேஜருக்கு நாம எம்.எல்.ஏ வை பார்க்கலாம்னு சஜஸ்ட் பண்ணேன். அவரு நீயே எதுனா சானலை பிடின்னாரு. ( நாம அவரு 3 தாட்டி ஜெயிச்சு ஹேட்ரிக் அடிச்சப்பல்லாம் அவருக்கு விரோதமாதான் வேலை செய்திருக்கம்)

எந்த சானலை பிடிக்கிற்துன்னு தலையை பிடிச்சுக்கிட்டம். முன்னாள் தி.தி.தே சேர்மன் பூமண கருணாகர் ரெட்டி (இப்பம் ஜகனோட முக்கிய தளபதிகள்ள ஒருத்தரு) ஞா வந்தாரு.

அவருக்கும் நமக்கும் என்ன லின்குன்னு கேப்பிக. சொல்றேன். ஆத்தா ஒவ்வொரு வேலையா செய்தா. வஷக் வஷக்னு ஜெபிச்சதுல ஆராரையோ வசியமாக்கி வச்சுட்டா. நம்மை பத்தி வார்த்தால செய்தி வந்ததை படிச்சுட்டு தன்னோட சர்க்கிள்ள நம்மை ரெம்ப ஸ்லாகிச்சு பேசினதா தகவல்.

அப்பம் நமக்கு ஆ.இ.2000 தவிர வேற வேலையே கிடையாது. உடனே டைரக்டரில அவரோட நெம்பரை பிடிச்சு பேசினம். அவரும் ரெம்பவே ஆர்வம் காட்டினாரா ஃபோன் தொடர்பு அப்படியே கன்டின்யூ ஆயிருச்சு.

நீங்க எங்க எம்.எல்.ஏவுக்கு சொல்லுங்கன்னு கேட்டா நல்லாவா இருக்கும்.அதனால பொதுவா மேட்டரை சொன்னம். அவரு " அவ்ளதானே நான் பாபுவுக்கு (எங்க தொகுதி எம்.எல்.ஏ) ஃபோன் போட்டு சொல்றேன்
நீங்க போயி அவரை பாருங்கன்னுட்டு ஃபோனை வச்சுட்டாரு.

எம்.எல்.ஏவை பொருத்தவரை அவரோட கட்சி பவர்ல இல்லைதான். ஆனால் ஆளுங்கட்சி டுபுக்குங்களை நம்பறதை விட இவரை நம்பினா நம்பினோர் கைவிடப்படார். அவரோட கேரக்டர் இது.

ஒடனே திருப்பதிக்கு ஃபோன் போட்டு மேனேஜர் அண்ட் கோவை வரச்சொன்னேன். ச்சொம்மா பார்த்தோம். அவரு " சி.ஐ கிட்டே போங்க என்னை பார்த்ததா சொல்லுங்க. தேவைப்பட்டா ஃபோன் போடுங்க நானே வர்ரேன்" னாரு அவ்ளதேன். அதுக்குள்ள தகவல் தீயா பரவ.. மறுபடி ஸ்டேஷன்ல இருந்து ஆளு. சுதி இறங்கிப்போயி " ஃப்ரீயா இருக்கிறப்ப ஒரு அஞ்சு நிமிஷம் சி.ஐ சாரை பார்த்துட்டு வந்துருங்க சார்"

நம்மை பேசவிட்டா போறாதோ வாத்தியார் படம் மாதிரி " எங் வகக்கை நானே வாகாடுகிறேன்"னுட்டு கிழிச்சு ஆறப்போட்டுர மாட்டோமா? போட்டுட்டம். சி.ஐ சுஸ்தாயிட்டாரு. நம்ம மேனேஜர் " எக்ஸ் பார்ட்டிய திருப்பதிக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணியாச்சு ஜாயின் பண்றதா இருந்தா பண்ணட்டும் சித்தூர்ல டிஸ்டர்ப் பண்ணா சிவியர் ஆக்சன் எடுப்பம்"னு சி.ஐக்கு சொல்ட்டாரு.

யுத்தம் தானே க்ஷத்திரிய தர்மம். அது முடிஞ்சதுமே நம்ம வேலை ஓவர். வெற்றியை அனுபவிக்க எங்கருந்தோ ஒரு பார்ப்பான் வந்துருவான் தானே. அப்படி திருப்பதி ஏடிவிடி பார்ப்பான் புத்தூர் பார்ப்பான் ஒருத்தனை ஸ்டாஃபரா ரெக்கமண்ட் பண்ண நாம வாய்ல விரல் போட்டுக்கிட்டு இருக்க வேண்டியதாயிருச்சு. அது வேற கதை.

நாம மட்டும் தெலுங்கு தேச க்ரூப்ல போய் வாய வச்சிருந்தம் தாளி ஊறப்போட்டே நாறடிச்சிருப்பானுவ.இது நம்ம லைஃப்ல ஒரு டர்னிங் பாய்ண்ட்.

எம்.எல்.ஏவோட இன்டர் ஆக்ட் ஆக தடையா இருந்தா 15 வருச கம்யூனிகேஷன் கேப் /அல்லது ஒரு தயக்கம் தூளாகிருச்சு. இன்னைக்கு ஜஸ்ட் எம்.எல்.ஏவோட அடிப்பொடிகளுக்காகவே லோக்கல்ல பத்திரிக்கை அதுவும் மல்ட்டிகலர் ந்டத்திக்கிட்டிருக்கம். அதுவும் வெற்றிகரமா.

அடுத்த வாரம் வினாயகர் சதுர்த்தி கம் ரம்ஜான் ஸ்பெஷலும் ரிலீஸ் ஆகப்போகுது. மல்ட்டி கலராக்கி ஒரு வருஷம் கம்ப்ளீட் ஆயிருச்சு. பத்திரிக்கை நடத்தி போன்டியானவுக எத்தீனி பேரு கீறாய்ங்கன்னு உங்களுக்கே தெரியும்.

ஆத்தா மனசு வச்சா பத்திரிக்கை நடத்தி கூட காசு பார்க்கலாமுங்கோ.


Saturday, November 13, 2010

வேட்டி வரிஞ்சு கட்டி

அண்ணே ..வணக்கம்ணே,

ஹரியும் சிவனும் ஒன்னு இதை அறியாதவன் வாயில மண்ணுங்கறது பெரியவுக சொன்னது.

ஆத்திகமும் நாத்திகமும் ஒன்னு. இது ரெண்டுமே  நீசத்துல இருக்கும்போது கடவுளை பத்தி பேசும். (உளன் -இலன் விவாதம்) ,உச்சத்துக்கு போகும்போது மனிதனை பத்தி பேசும்.

அதனால அம்மன் அருள் வேண்டி நாம செய்த சாதனையை அதிலான நம்ம அனுபவத்தை ரிவீல் பண்றதுல நமக்கு எந்தவிதமான குற்ற உணர்வும் கிடையாது.  "அவாள்" மாதிரி சீக்ரெட் மெயின்டெய்ன் பண்றதுல எனக்கு சம்மதமில்லை.

தனி மனிதனுக்கு கிடைக்கிற காசு பணமே ஒட்டுமொத்த மனிதசமுதாயத்துக்குரியது. காந்தி நீ ஜஸ்ட் ஒரு கர்த்தா -டரஸ்டி தாங்கறார்.  இந்த நிலைல இந்த மாதிரி மிஸ்டிக் சைன்ஸ் எல்லாம் நிச்சயமா என் மூலமா மனித குலத்துக்கு வழங்கப்பட்டதாவே தான் நினைக்கிறேன்.


பைபிள் கூட பன்றிகள் முன் முத்துக்களை போடாதிருங்கள்னு சொல்லுது. என்னோட சித்தாந்தம் என்னன்னா நாம வீசறது ஒரிஜினல் முத்தா இருந்தா (அதுக்குரிய கிரகம் சந்திரன் - அவர் மனோகாரகன் - எனவே) பன்றியோட மனசும் மாறனும்.


சரிங்கண்ணா ..ஆத்தாளோட நமக்கேற்பட்ட உறவு -அதிலான திருப்பங்கள் எல்லாத்தையும் சொல்லிரனும்னு 10 வருஷ கதைய  நீட்டி முழக்கி சொல்லத்தான் இந்த தொடரை ஆரம்பிச்சேன். ஆனால் கடந்த அத்யாயத்துலயே  2000 டு 2010 ன்னு லாங் ஜம்ப் அடிச்சுட்டன்.

இதுக்கும் காரணம் இல்லாம இல்லை. என்னங்கடா இது ஆத்தா ஆத்தான்னு கிட்டு ஒரே இம்சையா போச்சு .. ஓகே ஆத்தாள வச்சி என்னத்த கிழிச்சேனு கேட்டுருவாய்ங்களோனு ஒரு உதைப்பு அதனாலதான் இந்த ஜம்ப்.

தீபாவளிதினம் லட்சுமி பூஜைக்கு ஹெல்ப் பண்ணேன். ரூ 900 வாடகைக்கு வசந்த மாளிகை கிடைச்சுதுனு சொன்னா அதுக்கும் சப்பை கட்ட சனமிருக்கு.

நாம எதையாவது புதிதாய் பெற்றால் அதன் மதிப்பை கூட உணரமுடியாத அளவுக்கு நம்ம மனசு,புத்தி எல்லாமே மரத்து போயிருக்கு. எதையாவது இழந்தால் தான் உறைக்குது.

நாம பெற்றாலே இந்த கதி. மற்றவர் பெற்றால் கேட்கவே தேவையில்லை. இந்த kavithai07 வலைப்பூவையே எடுத்துக்கங்களேன். kavi -குரங்கு- ஆஞ்சனேயர்- "மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்" thai - தாய் (ஆத்தா) நீங்களே பார்த்திருப்பிங்க டஜனுக்கு மேல ப்ளாக் க்ரியேட் பண்ணி வச்சிருக்கேன். எதுவுமே பேர் சொல்லலை.
இது மட்டும் தான் ஒர்க் அவுட் ஆச்சு. எந்த ரேஞ்சுக்குன்னா ஆத்தாவுக்கு சர்வ ஸ்வதந்த்ராயை ஸ்வாஹானு ஒரு பேர் உண்டு. யத்பாவம் தத்பவதி. நானும் சுதந்திரனாயிட்டன்.

கருத்து சுதந்திரம் மட்டுமில்லே பொருளாதார சுதந்திரம் கூட தினத்தந்தியை விட்டாச்சு. வீட்டண்டை ஜோசியம் சொல்றதை 90% குறைச்சாச்சு. ஏதோ பக்தாள் ரேஞ்சுல  நம்மையே நம்பி உள்ளவுகளை மட்டும் அன்பு காரணமா வெட்டிவிடாம இருக்கேன். ஆன்லைன்ல கூட நமக்கு பிடிச்சிருந்தாதான் ஜோதிட ஆலோசனை. இல்லைன்னா இன்னொரு சமயம் பார்ப்போம்னு கழட்டிவிட்டுர்ரதான். செலக்ட் பண்ண க்ளையண்டுக்கு கூட கட் ரைட்டா சொல்லிர்ரன் ..வாரமாகலாம் பத்து நாளாகலாம் காத்திருக்கும் பொறுமையிருந்தா காசு போடுங்க.. இல்லாட்டி டாட்டா..

இப்படியெல்லாம் நடக்குமான்னு கனவு கண்டுக்கிட்டிருந்தேன். கனவு நனவாயிருச்சு.
இப்படி கனவு கண்டது என்னோட சுய நலத்துக்காக இல்லே. டு டூ பெட்டர் இன் மை ஜாப்.  நாட் ஒன்லி டு மை க்ளையண்ட்ஸ் பட் ஆல்சோ டு மை மதர் லேண்ட்.

ஆக கவிதை07 மூலமா ஆத்தா என்னை எக்கனாமிக்கலா சுதாரிச்சுக்க வச்சு சுதந்திரனாக்கி (அவிழ்த்து விட்ட மாடு மாதிரினு சொல்லலாம்) விட்டிருக்காள்.

நீ நீர்த்து போயிட்ட, கொண்ட கொள்கைய காத்துல விட்டுட்ட.. (ஆப்பரேஷன் இந்தியா2000) ன்னுட்டு யாரும் சொல்ல தேவையில்லை. நானே ஒத்துக்கிடறேன். ஆனால் காரணம் வேற..

1997ல வேட்டி வரிஞ்சு கட்டி கோதாவுல இறங்கினப்ப  நாம சிங்கிள்.. போக போக ஆத்தா வந்து சேர்ந்துக்கிட்டா பாஸ்..2004ல ஆப்பரேஷன் இந்தியா2000 விஷயமா தலை நகருக்கு பாதயாத்திரை அறிவிச்சாச்சு. ( பட்டை உரியற ஏப்ரல்ல) BC,SC,ST அமைப்பினர் வந்து அன் கண்டிஷ்னல் சப்போர்ட் கொடுத்து பஸ் யாத்திரை ப்ளான் பண்ண சொன்னாய்ங்க. பாத யாத்திரை  ட்ராப் ஆயிருச்சு. அப்போ நான் பேசின காட்சியை பத்திரிக்கைகாரவுக ஃபோட்டோ பிடிச்சாய்ங்க. அதை பார்த்தா ஒரு இனிய அதிர்ச்சி.

நீங்களும் பாருங்க. ( நம்ம பின்னாலே ஒரு ஷக்தி இருக்கு)

நான் அந்த காலகட்டத்துல சனங்கிட்டே  நம்ம ப்ளானை பத்தி பேசறச்சே சனம் " நீ சிங்கிள் ஆளு என்னப்பா பண்ணமுடியும்" னு கேட்டா ஒரு பஞ்ச் விடறது வழக்கம் " "கண்ணா ..உன் கண்ணுக்கு நான் சிங்கிளா தெரியறேன். ஆனால் என் பின்னாடி ஒரு ஷக்தி இருக்குது . அது பார்த்துக்கும். யு டோண்ட் ஒர்ரி"

ஒய்.எஸ்.ஆர் ஜலயக்னம் ஆரம்பிச்சுட்டதால ஆ.இ க்கு அவசியமே இல்லாம போயிருச்சு.இப்ப உள்ள ரோசய்யாவுக்கு மனு கொடுக்கிறதை விட எதுனா கோவில் தெப்பக்குளத்துல போட்டா வெய்ய காலத்துல "அதுக்கானா" ஒதகும்.

ஆனாலும் ஆ.இ 2000 ஐ விடறதா இல்லை. நிச்சயம் கலக்குவம்ல. வெயிட் அண்ட் சீ!  மொதல்ல திட்டத்தை பத்தி ஆர்ட் பேப்பர்ல 16 பக்கத்துல  மன்மத மருந்துக்கான புக்லெட் கணக்கா கவர்ச்சியா  அச்சடிச்சு தில்லி, அல்லது ஹைதராபாத்ல ப்ரஸ் மீட் வைக்கறதா ஒரு ஐடியா இருந்தது. இப்ப ஜர்னலிசம் இருக்கிற இருப்புல ஸ்டார் ஹோட்டல்ல ப்ரஸ் மீட் ஃபாலோட் அபை லஞ்ச் வச்சாதான் வேலைக்காகும் போல.கொஞ்சம் போல காசு புரட்டிக்கிட்டு பார்ப்போம்.

விளக்கம்:

மந்திரோபதேசம் நடந்ததே டிசம்பர்23 ஆம் தேதிதான். கவிதை07 வலைப்பூ ஆரம்பிச்சது 2000,ஜூலை,31 ( தகவல்:அலெக்ஸா) இதெப்படி? அதான் சொன்னேனே..சாக்தேயத்துக்கான  விதைகள் ஏற்கெனவே தூவப்பட்டிருந்தன. சிவசக்தி பூசனை எட்செட்ரா.

"இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே ..இன்பத்தில் ஆடுது என் மனமே" -ன்னுட்டு உடலின் ஒவ்வொரு  அணுவும் குதியாட்டம் போடுமாம். அப்ப அறிவு க்ராஸ் பண்ணி  இதனால என்ன லாபம்னு கேட்குமாம்.(ஓஷோ)  சனம் மட்டும் " இந்த பைத்தியக்காரனுக்கு வேற வேலையே இல்லப்பா" னுட்டு சந்தோஷ பலூன்ல ஊசி குத்திரும்.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்புன்னாரு வள்ளுவரு. மனிதனோட எல்லையற்ற காலவெளியோட ஒப்பிடறப்ப பத்துவருசம்லாம் ச்சொம்மா ஜுஜுபி.

நான் கூட இவிகளை மாதிரியே அரச மரத்தை சுத்திட்டு அடி வயித்தை தொட்டுப்பார்த்துக்கன மாதிரி பிஹேவ் பண்ண பார்ட்டிதான். 2001 நவராத்திரிக்கே ஆத்தா இந்த ஒன்பது நாள்ள ஒன்பது ஃபீல்டுல நம்மை உச்சாணிக்கொம்புக்கு தூக்கிட்டு போகப்போறானு கனவு கண்ட பிக்காலிதான் நானு.


கடந்த பதிவுல ஒரு குரல்  "விஜயவாடா நித்யானந்தம்"னு காதுல சொன்னது.. "கொலுசு சத்தம் கேட்டது" தன்னோட  என்ட்ரியை அக்கம்பக்கத்து  போர்ஷன்ஸ்ல பெரிய ஜாமானா தள்ளி சத்தம் பண்ணி தெரிவிக்கிறது, சூல மேடைக்கு எதிர் வாசல்லயே நம்மை குடி வச்சது..மாதிரி  நூத்துக்கணக்கான அற்புதம்லாம் நடந்தது வாத்யாரே..எல்லாத்தயும் சொல்லத்தான் போறேன்"ன்னு பில்டப் கொடுத்திருந்தேன். அதுல சிலதை இப்பம் பார்ப்போம்.

மொதல்ல கொலுசு சத்தத்துக்கு வந்துருவம்.(ஒரு பார்ட்டி பாவம் இந்த கேள்விக்கான பதிலுக்காகவே இந்த பதிவை ஆவலா எதிர்ப்பார்த்துக்கிட்டிருக்கு.) கொலுசுங்கறது முத்தின கேஸு. அதுக்கு மிந்தி குழந்தை குவா குவானு கத்தற சத்தம் கேட்டிருக்கும்.( நமக்கு கேட்டுதுங்கண்ணா)

இதனோட தாத்பரியம் என்னடான்னா நம்மளோட மந்திரம்,ஜபம், தியானம் இத்யாதியோட பொட்டன்ஷியாலிட்டிய க்ராஸ்ப் பண்ணிக்கிட்டு ஆத்தா நமக்குள்ளயே பிறந்து வராங்கறதுதான்.

நாம நம்ம சாதனையில முன்னேற முன்னேற ஆத்தாளும் வளர்ரா வளர்ந்து சித்தாடை கட்டி நம்மை சுத்தி நடமாட ஆரம்பிச்சுர்ரா. நாம தியானத்துலயோ மந்திர ஜபத்துலயோ ஆழும்போது அவ நடமாடற கொலுசு சத்தம் கேட்குது. மனசுலாயி?

இந்த விஜயவாடா மேட்டரை பார்ப்போம்.

வாணியம்பாடி - முஸ்லீம் நண்பர் அனுப்பி வச்ச ஜின் (தேவதை) -கவுசருக்கும் நமக்கும் ஒத்துவராம பேக் டு தி பெவிலியன்லாம் ஞா இருக்கில்லை.

வேலையில சேர்ந்த புதுசுல மொதல்வாரம் கவுசர் கிட்டே பேட்டா வாங்கிக்கிட்டு சித்தூர் வந்தா பொஞ்சாதி சேமிப்பு வாரம் கொண்டாடி வீட்டை காலி பண்ணி சாமான் செட்டையெல்லாம் கொண்டு போய் அம்மா வீட்ல போட்டு வச்சிருந்தா. நாமதான் தன்மான சிங்கமாச்சே. உடனே காசு புரட்டி வீடு தேட ஆரம்பிச்சேன்

வாடகைக்கு வீடு தேடறது ஒரு கலை. பேசிக்கலாவே நமக்கு நெட் ஒர்க் உண்டு. ( அர்த ராத்திரில சுடுகாட்டுக்கே போனாலும் " சாமேய்! இன்னா இந்த நேரத்துல"ன்னு ரு குரல் வரும். மேலும் எங்கன காலியிருக்கும், எங்கன நம்ம ரேஞ்சுக்கு இருக்கும்ங்கற குன்செல்லாம் நமக்கு உண்டு. வீடு தேட ஆரம்பிச்சா மினிமம் அரை மணி நேரம்.. மேக்சிமம் ஒரு மணி நேரம் அட்வான்ஸ் தட்டிட்டு சாவி வாங்கிக்கிட்டு வந்துருவம்.

ஆனால் பாருங்க இந்த தாட்டி ஹார்ட் ஆஃப் தி டவுனெல்லாம் முடிச்சாச்சு. 1 கி.மீ தாண்டியாச்சு தேனபண்டானு ஒரு ஏரியா (தேன் பாறை). அங்கன ஒரு புராதன கோவில். கோவில் பக்கத்துல இடம் பிடிச்சு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் ஒரு கோவில் (?) கட்டியிருக்காய்ங்க. அதுக்கு எதிரே ஒரு மேடை அதுல சூலம். அங்கன வந்து உட்கார்ந்துட்டன். கூட பொஞ்சாதி வேற.

அப்போ ஒரு பொம்பளை வந்து விஜாரிக்க நான் மேட்டர் சொல்ல அந்த மாராஜி க்ளூ கொடுக்க வீட்டை பிடிச்சேன். தெற்கு வாசல்தான்.ஆனால் வடக்குல ஆறு.
( இழந்த ராஜ்ஜியத்தையே பிடிச்சுரலாமாம்)

நம்ம போர்ஷனுக்குள்ளார ஒரு ஆள் உள்ள உட்கார்ந்துக்கற மாதிரி சைஸ்ல ஒரு தொட்டி வேற.கவுசருக்கு உப்பு தீர்ந்த பிறவு இங்கனதான் சாதனைய முழுமூச்சா துவங்கினேன்.

அந்த காலகட்டத்துலதான் ஜெபம்,தியானம்லாம் முடிஞ்சு ஓஞ்சு சாஞ்சப்ப காதுல "விஜயவாடா நித்யானந்தம்"ங்கற வரி கேட்டுது. எப்படியெல்லாமோ அனலைஸ் பண்ணி பார்த்தும் இது ஒன்னுதான் இன்னைவரைக்கும் ரிசால்வ் ஆகல்லே.

ஆனால் அவாள் பண்ற அட்டூழியங்களை காரண காரியங்களோட விளக்கி நோண்டி நுங்கெடுத்து நான்  பதிவு போடற சமயங்கள்ள, உள்ளதை சொல்லிர்ரதால நொள்ளைக்கண்ணுக நோப்பாளத்துக்கு இலக்காகறப்ப நமக்கு கொஞ்சம் போல பேஸ்தடிச்சாப்ல ஆயிரும். அந்த மாதிரி சந்தர்ப்பத்துல ஓம் தும் துர்காயை ஸ்வாஹானு கொஞ்ச  நாழி ஜெபிச்சா ப்ராப்ளம் சால்வ். அடுத்து ஒரு வார காலத்துக்கு அந்த பிக்காலிங்க ரெட் மார்க்கோடயோ,புத்தூர் கட்டோடயோ எதிர்படறது வழக்கமா இருக்கு.(விஜயவாடால உள்ளது துர்காதானே)

அதுக்கு முந்தி சின்ன சுய விளக்கம். வழக்கமா இந்த அம்மன் விவகாரம்லாம் எங்கன போயி முடியும்டான்னா அருள் வாக்குலதான். பங்காரு அடிகளார்ல இருந்து நாராயணி பீடம் வரை பண்றது இந்த பிசினஸ்தான். ஆனால் நான் இந்த மேட்டர்ல மட்டும் பக்காவா இருக்கேன்.

நம்மகிட்டே பலன் கேட்டுக்கிட்ட பலர் "அப்படியே அருள் வாக்கு மாதிரி சொன்னிங்களே.. ஒரு வாக்கு அட அட"ன்னு ஜும் ஏத்தினாலும்  நாம மட்டும் "த பாரு இந்த டகுலெல்லாம் வேணா.. ஜோசியன் சொன்ன 100 மேட்டர்ல 96 நடந்திருக்காது. ஒரு நாலு குத்து மதிப்பா நடந்திருக்கும்.  ஆனா நீங்க   நடக்காததை எல்லாம் விட்டுருவிங்க .. நடந்ததை மட்டும் வச்சி அவனுக்குள்ள இருக்கிற நாலணா ஜோசியனை கூட காட் மேன் ரேஞ்சுக்கு கொண்டு போயிருவிக.
நான் சொன்னது ஜோசியம். வாட்ச் இருந்து  டைம் பார்க்க தெரிஞ்சா டைம் சொல்லலாம். பஞ்சாங்கம் இருந்து  நேரம் பார்க்க தெரிஞ்சா ஜோசியம் சொல்லலாம். வேணம்னா நீ வா ஜஸ்ட் 15 நாள்ள கத்து கொடுத்துர்ரன்..ஓடிப்பூடு"னுட்டு கழட்டிவிட்டுர்ரம்.

பின்னே என்ன ம..ருக்கு சாக்தேயம் ,,சால்னான்னு கேப்பிக. சொல்றேன். எந்தெந்த காலகட்டத்துல என்னோட தகுதி என்ன, எனக்கு கிடைச்ச அங்கீகாரம் என்னனு எனக்கு தெரியும். தகுதிக்கும் அங்கீகாரத்துக்கும் சம்பந்தமே கிடையாது.

நான் சந்திச்ச அவமானங்களுக்கோ, பெற்ற சன்மானங்களுக்கோ லாஜிக்கே கிடையாது. ஒரு ஆங்கிள்ள பார்த்தா என்ன மாதிரி சாதனையாளனை சரித்திரத்துல பார்க்க முடியாது. இன்னொரு ஆங்கிள்ள பார்த்தா என்னை மாதிரி சோம்பேரிய  துரதிர்ஷ்டம் பிடிச்சவனை பார்க்கவே முடியாது.

இப்படி ஒன்னுக்கொன்னு தொடர்பே இல்லாததையெல்லாம் நான் அனுபவிச்சிருக்கேன். அனுபவிச்சிக்கிட்டும் இருக்கேன். ஒரு ரூட்ல போயிருந்தா போதை ஊசி ரேஞ்சுக்கு வளர்ந்து புதைச்ச இடத்துல புல்லே முளைச்சிருக்கனும். இன்னொரு ரூட்ல போயிருந்தா என் கவுண்டரே ஆயிருக்கனும்.

ஒரு தனி மனிதனுக்கு இத்தனை நாலட்ஜ் தேவையில்லாத ஒன்னு.( மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ் இல்லேன்னாலும்.. எந்த சப்ஜெக்ட்ல நீங்க புலியா இருந்தாலும் அதே சப்ஜெக்ட்ல உங்க கண்லை விரலை விட்டு ஆட்டற கப்பாசிட்டி நமக்கு இருக்குதுங்கோ.

எப்படியோ என் மைண்ட்ல நான் ஒரு பொது சொத்துங்கற பாயிண்ட் விதைக்கப்பட்டுருச்சு.  நான் உயர்ந்தா இந்த நாடு உயரும்ங்கற ஓவர் கான்ஃபிடன்ஸ் பில்டப் ஆயிருச்சு.

பாபா படத்துல பேஸ்தடிச்ச ரஜினி "சக்தி கொடு"னு பாடறாரே அந்த மாரி கிடையாதுங்கோ..

நமக்கும் ஆத்தாளூக்கும் இருக்கிற அண்டர்ஸ்டாண்டிங்கே வேற "ஆத்தா நீ என்னப்பார்த்துக்க நான் இந்த நாட்டை பார்த்துக்கறேன்"

என் சிந்தனை,திட்டம்,செயல்பாடு மேல எல்லாம் எனக்கு நம்பிக்கை உண்டுதான். இல்லேங்கலை.இதையெல்லாம் வச்சு நான் ஒழுங்கு மரியாதையா என் சூ... மட்டும் கழுவியிருந்தா அம்பானி ரேஞ்சுக்கு இல்லைன்னாலும் நம்ம ஓம்கார் ஸ்வாமிகள் ரேஞ்சுக்கு அட்லீஸ்ட் டோண்டு ராகவன் ரேஞ்சுக்கு  இருந்திருப்பேன்.

ஆனால் நம்ம டிமாண்ட் ஒன்னுதான் "ஆத்தா நீ என்ன பார்த்துக்கலைன்னா நான் என்னை பார்த்துக்கறதுலயே பொயப்பு பூடும். என்னால எவனுக்கும் எந்த நன்மையும் நடக்காது. ஸோ நீ என்னைப்பாரு.. நான் இவிகளை பார்க்கிறேன்"

சுப்பிரமணிய பாரதி கேட்டாரே " வல்லமை தாராயோ நா( மா) நிலம் பயனுற வாழுதற்கே"ன்னுட்டு.. நாமளும் அதே டைப்தான்.

நவம்பர் எட்டாம் தேதி வீட்டை காலி பண்ணதால ஃபோன் ஷிஃப்ட் பண்ண வேண்டியதாயிருச்சு. மறு நாளே அப்ளை பண்ணியும் பிக்காலி பசங்க இன்னம் ஷிஃப்ட் பண்ணலை. இத்தனைக்கும் நாம ப்ரஸ் ரிப்போர்ட்டருனு பெத்த பேரு.
இந்த அழகுல ஊதிய உயர்வு,போனஸுனு ஸ்ட்ரைக் வேற பண்ணுவாய்ங்க. இந்த நாலு நாள்ள ஒரு நாளைக்கு ரூ 20 மேனிக்கு இன்டர் நெட் சென்டருக்கும் அழனும், நாளைக்கு இவிக பில் போடறச்ச இந்த 4 நாளை லெஸ் பண்ணப்போறதில்லை.

(625/30X4 லெஸ் பண்ணுவாய்ங்களா ? ம.......ரு கூட பண்ணமாட்டானுங்க. அதுவும் க்ஷவரம் தான்.யாரோ பண்ற தப்புக்கு  நாம தண்டம் அழவேண்டி வர்ரதான் பெரிய  சோகம்)

பதிவுகளோட தொடர்ச்சி, வேகம், இத்யாதில ஏற்பட்டிருக்கிற  இடைவெளிக்கு  இதான் காரணம் . அதுவும் இன்னைக்கு சால்வ் ஆயிரும்னு ஒரு ஜொள்.பார்ப்போம். உடு ஜுட்.

Thursday, November 11, 2010

விதவை மைத்துனி

சூ மந்திர காளி : ?
நான் கமெண்டுகளோட எண்ணிக்கைக்கு  முக்கியத்துவம் கொடுக்கிறதை விட்டு மாமாங்கமாச்சு. அதே போல மறுமொழிக்கு மறுமொழி கொடுக்கிறதையும் விட்டுட்டன். ஒரு சிலதுக்கு நிச்சயம் தேவைப்படும்..இதோட தொடர்ச்சி நின்னுரும்னு  நம்பிக்கை பிறந்தா மட்டும் ம.மொ போடறதை வழக்கமா வச்சிருக்கேன்.

இந்த தொடர்பதிவோட தலைப்புக்கு ஒரு பார்ட்டி "சரியான தலைப்பு"னு ம.மொ போட்டிருந்துச்சு. பார்த்திங்களா பத்தி பத்தியா பெரியார்லருந்து மேற்கோள் காட்டி கிழி கிழினு கிழிக்கிறதுல வர்ர எஃபெக்ட் ஒரே ஒரு வார்த்தையில வந்துருச்சு. ஐ லவ் தீஸ் டைப் ஆஃப் கமெண்ட்ஸ்.


ஓஷோ சொல்வாரு "நான் என்ன பேசனுமோ அதைத்தான் பேசிட்டிருப்பேன். தலைப்பெல்லாம் சொம்மா உளுவுளாக்காட்டிக்கு"

யத்பாவம் தத்பவதிங்கறாப்ல ஓஷோவோட எழுத்துக்களை படிச்சு படிச்சு நமக்கும் அந்த கப்பாசிட்டி வந்துட்டாப்ல கீது. என்னோட சாக்தேய சாதனைகளை சொல்றேன்னு தான் இந்த தொடர்பதிவை ஆரம்பிச்சேன். ஆனால் ஸ்ருதி கூட்டவே 4 அத்யாயம் தீர்ந்து போயிருச்சு. சரிங்கண்ணா பதிவுக்கு போயிரலாமா?


மந்த்ரோபதேசம்  நடந்ததென்னவோ 2000,டிசம்பர் 23 ஆம் தேதிதான். ஆனால் சாக்தேய சாதனைகளுக்கான  விதைகள் பால்யத்துலயே விதைக்கப்பட்டுட்டாப்ல இருக்கு. 1 ஆம் கிளாஸ்லருந்தே புவனேஸ்வரிங்கற க்ளாஸ் மெட் இருந்தது ஞா வருது.(1973) எங்கம்மாவுக்கு மார்ல கட்டி வந்தப்ப பார்த்து பயாப்சி பண்ணுங்கனு உசார் பண்ண கைனகாலஜிஸ்ட் பேரு புவனேஸ்வரி.(1984)

1991க்கு முந்தியே (1989க்கு பிறவு) நம்ம ஜாதகத்துல சிவசக்தியோகம் இருக்குன்னு சிவசக்தி உபாசனை ஆரம்பமாயிருச்சு.சைட் ஃபோஸ்ல சிவனும் சக்தியும் உள்ள டாலர் அணிய ப்ளான் பண்ணி ரெடிமேட் கிடைக்காம ஆஞ்சனேயர் டாலர் பின்னாடியே டை போட சொல்லி கழுத்துல   போட்டதும், கவர்,லெட்டர் பேட்ல எல்லாம் அந்த லோகோவை பொறிச்சிக்கிட்டதும்  ஞா வருது.

ச்சொம்மா ஃப்ளாஷ் பேக்கை சொல்லிக்கினிருந்தா கடுப்பாகத்தான் செய்யும். அதனால இந்த சாதனைகளோட   லேட்டஸ்ட் விளைவு  என்னனு பார்ப்போம்.

கடந்த 10 மாசமா ஆக்னேயத்துல பெரிய வேப்பமரம் இருக்கிற சிதிலமான ஓட்டுவீட்ல குடியிருந்ததும் ..  இந்த மழைக்கு எங்கே விழுந்து தொலைச்சுரப்போவுதோனு அவசர அடியா தேடிய இந்த சூப்பர் வீடு கிடைச்சதும்தான்.

மந்த்ரோபதேசம் நடந்த புதுசுல நானா சில கஸ்டம்ஸ் வச்சுக்கிட்டேனு சொல்லியிருந்தேனில்லையா.அதுல மஞ்ச தண்ணியோட வேப்பிலையையும் சொல்லனும்.

நாம என்னதான் நாமர்தா வேலைகள் செய்துக்கிட்டு இருந்தாலும் மாடியில தனியறை கொடுத்துத்தான் ராஜா வீட்டு கன்னுக்குட்டி மாதிரிதான் அப்பா வச்சிருந்தாரு. அதுல கூட அட்டாச்ட் எல்லாம் கிடையாது.( 1984 டு 1991)

இப்ப உள்ளது மாதிரியான  வசதிகள் கொண்ட வீட்ல என் லைஃப் டைம்ல எப்பயும் குடியிருந்ததில்லை. இத்தனைக்கும் வாடகை ஜஸ்ட் ரூ900 தான் வாட்டர் சார்ஜஸ் ரூ 300.ஆனால் சொம்மா சொல்ல கூடாது தூள். ஒரு வராண்டா,அதையொட்டி சமையலறை, பெரிய ஹால், அதையடுத்து பெட் ரூம், அதையொட்டி அட்டாச்ட். ஒவ்வொரு அறையிலயும் பரண், சுவத்துல மானாவாரியா  அலமாரிங்க அட ஷோ கேஸ் கூட இருக்குன்னா பார்த்துக்கங்களேன்.

கவர்மென்ட் ஆஸ்பத்திரியில சுவத்துக்கு இடுப்புயரத்துக்கு  பச்சை அடிப்பாய்ங்களே அது மாதிரி இங்கன மெருன். இதையெல்லாம் ஏன் லிஸ்ட் அவுட் பண்றேன்னா..

நம்ம ஜாதகத்துல வீக் சுக்கிரன். ஏதோ சந்திரனோட சேர்ந்து சமாகமனம் பெற்றதால  மதியம் 3 மணிக்கு சோறு, ராத்திரி 12 மணிக்கு டிஃபனுன்னு தரார். ட்ரஸ் விஷயமும் இப்படித்தான்.

தினத்தந்தில நிருபரா இருக்கிறச்ச சொந்த பத்திரிக்கை,ஜோதிஷம், கன்ஸ்யூமர் டிஸ்ப்யூட்ஸுனு பத்துவழில பணம் வர்ர காலத்துல கூட நான் இருந்த வீட்டுக்கு பவர் கிடையாது.

அடுத்து வந்த வீட்ல எலி ராஜ்ஜியம். தெரு லெவலுக்கே ஃப்ளோரிங். தாளி வீட்ல படுத்தா ஃப்ளாட்ஃபாரத்துல படுத்திருக்கிறாப்லயே ஒரு ஃபீலிங் வரும்.

அதுக்கடுத்து வந்ததுதான் வேப்பமரத்து வீடு. வாஸ்து ரீதியில பார்த்தா நொந்து போயிருவிங்க. தெற்கு வாசல். அதுலயும் பக்கா நைருதிலதான் கேட். கிழக்கெல்லாம் கட்டிடம். மேற்கெல்லாம் காலியிடம். அகட விகடம்தான்.

ஆக்சுவலா இந்த வாஸ்துல 6 மாசம் குடியிருந்தா குடும்பத்தலைவன் காலி. அடுத்த 6 மாசத்துல தலைவி காலி. அடுத்த 6 மாசத்துல தலைவாரிசு காலி. உள்ளதெல்லாம் ஓடிப்போயிரனும்.

இந்த எஃபெக்டெல்லாம் வீட்டு ஓனருக்கு 100 சதவீதம் ஒர்க் அவுட் ஆகியிருக்கு. இதுக்கு முன்னாடி குடியிருந்தவுகளுக்கு ஆகியிருக்கு.  ஆனால் நமக்கு மட்டும் பேப்பே. இங்கதான் ஆத்தா நிக்கறா.. ஆத்தரை நிக்க வைக்கிறா.

மேலும் பழங்காலத்து ஓட்டு வீடு பக்கத்து போர்ஷன் விழுந்தே கிடக்க தேள்,பூரான் எல்லாம் லாட்ஜு வைத்தியர் மாதிரி ரெகுலர் விசிட். குடைக்குள் மழை மாதிரி வீட்டுக்குள் மழை. இத்தனை இம்சை இருந்தாலும், இத்தனை களேபரத்துக்கிடையிலயும்   வேப்பமரத்துல கேம்ப் அடிச்சிருந்த ஆத்தாளோட அருளால பொருள் எல்லாம் வந்து சேர்ந்தது. ( மூனு டிவி பாஸ் - ஒன்னை விதவையான என்  மைத்துனிக்கு இரவல் கொடுத்திருக்கேன்) . வைட் அண்ட் ப்ளாக்ல வந்துட்டிருந்த மாதமிருமுறை கலராச்சு. டோட்டல் இன்வெஸ்ட்மென்ட் அதுவரை அஞ்சாயிரம்னா கலருக்கு வந்ததும் 15 ஆயிரமாச்சு. வீட்டுக்கே நெட் கனெக்சன் வாங்கினேன். என் மகள் பீரோ வாங்கினா. 2.5 கொடுத்து எலக் ட்ரிக் ஸ்டவ் வாங்கினா. இன்னம் என்னென்னவோ கண்ட கசுமாலத்தையெல்லாம் வாங்கி சேர்த்தாய்ங்க.

தீபாவளியன்னைக்கு என் ஃப்ரெண்டு லட்சுமி பூஜை பண்றது வழக்கம். அவன் திவாலாகி ஊரை விட்டு ஓடிப்போயி வந்தப்ப மொதல் பூஜைக்கு நான் தான் கூட மாட இருந்தேன்.(2003)

அதோட 2010ல கூப்டான். போனேன். தாத்தா காலத்துல ஜாதிக்காய் பெட்டில காலண்டர் லட்சுமிய ( சிட்டிங்)  ஒட்டி வச்சிருப்பாய்ங்க. அதுக்குத்தான் 10 ஆயிரம் ரூ டெக்கரெஷன்.

இந்த தாட்டி.." லட்சுமிய  நிக்க வைக்கலாம்பான்னேன்" சாதில செட்டியாரா இருந்தாலும் தில்லு துரை. வச்சுத்தான் பார்ப்பமேன்னான். நெட்ல டவுன்லோட் பண்ணி ஃபோட்டோ ப்ரிண்ட் போட்டு பூஜை .

ஒரு அரை லி. பெட்ரோல் எரிச்சு அங்கன இங்கன சுத்தியிருப்பேன். தட்ஸால். ஷாட் கட் பண்ணா 3 ஆவது நாள் இந்த வசந்த மாளிகை.

சுக்கிரன் கிருக காரகன். சுக்கிரனுக்குரிய அதி தேவதை லட்சுமி.

இதுக்கு நான் கொடுக்கிற விளக்கம் என்னன்னா கர்ப காலம் பத்து மாசம். ஆத்தா வேப்பமரத்து நிழல்ல 10 மாசம் அல்லாட வச்சு ,  என் கருமத்தையெல்லாம் ஒழிச்சி கொடுத்த பரிசு இது.

மந்திரோபதேசம் நடந்து சரியா 10 வருஷம் முடியற நேரத்துல சினிமா செட் மாதிரி ஒரு வீடு. வீடுங்கறது உங்க மனசோட நீட்சினு சொல்லியிருக்கேன். வே ஆஃப் திங்கிங்கே மாறிரும். இதான் வாஸ்துவுக்கு அடிப்படை.

ஆத்தாளோட நமக்கேற்பட்ட உறவு -அதிலான திருப்பங்கள் எல்லாத்தையும் சொல்லனும்னா 10 வருஷ கதைய சொல்லனும். நான் 2000 டு 2010 ன்னு லாங் ஜம்ப் அடிச்சுட்டன்.

நோ ப்ராப்ளம் நாளைலருந்து வரிசையா பார்ப்போம். "விஜயவாடா நித்யானந்தம்"னு காதுல சொன்னது.. "கொலுசு சத்தம் கேட்டது" தன்னோட  என்ட்ரியை அக்கம்பக்கத்து  போர்ஷன்ஸ்ல பெரிய ஜாமானா தள்ளி சத்தம் பண்ணி தெரிவிக்கிறது, சூல மேடைக்கு எதிர் வாசல்லயே நம்மை குடி வச்சது.. நூத்துக்கணக்கான அற்புதம்லாம் நடந்தது வாத்யாரே..

எல்லாத்தயும் சொல்லத்தான் போறேன்..

Tuesday, June 22, 2010

"அம்மாவுக்கு ஒரு கடிதம்"

தாயே !
நீ யாது செய்தாலும் அது  என் லட்சியப்பயணத்தை முடித்துவைக்கவே என்பதை நான் அறிவேன்.குறைந்த பட்சம் என் வாழ்க்கை பயணத்தையாவது முடித்து வைக்கத்தான் உன் நயன அசைவில் கோள்களை இயக்குகிறாய்.மரணத்துக்கு நான் அஞ்சுவதாயில்லை. மேலும் வரவேற்கவே செய்கிறேன்.

எப்படியும் மரியாதைக்குரிய வாழ்வை நான் வாழவில்லை. சமூக பார்வையில் மட்டுமல்ல. என் பார்வையிலும் தான்.

எனவேதான் என்  மரணமேனும் மரியாதைக்குரியதாய் அமைய வேண்டுமென்று துடிக்கிறேன்.

மகா வெடிப்பு காரணமாக உருவாகி அந்த வெப்பத்தால் ஒரு புறம் விரிவடைந்தபடி மறுபுறம் சுருங்கியபடி இருக்கும் இந்த விஸ்வத்தில் , இந்த படைப்பின் ஆரம்பத்தில் ஒரு மின்னல் பாய்ந்ததில் முதல் உயிர் தோன்றியதாய் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த மின்னல் உன் மூக்குத்தியிலிருந்து பிறந்து வந்ததாய்  நான் கற்பித்துக்கொள்வதில் விஞ்ஞானிகளுக்கோ ,விஞ்ஞானத்துக்கோ என்ன வலி.? எங்கே வலி?

உன் வலி(மை)  நானறிவேன். என் நலி(வு) நீயறிவாய். உன் அருட்கரம் என் பின்னிருந்து ஆசி கூற நான்  நீ அமரும் புலி.  உன் கரம் ஓய்ந்தால் உளமெங்கும் கிலி. சத்துவம் கற்பித்தாய். தத்துவம் உணர்த்திவிட்டாய். இனி என்ன? வாழவேண்டும். நான் வெறுமனே பிழைத்திருந்த காலத்திலேயே,அறம் பிழைத்திருந்த காலத்திலேயே வெற்று பிழைப்புக்கு எதிரி நான். வாழ்விக்க வேண்டும். பூவுலகை. வாய்ப்பிருந்தால் வானுலகை.

மல மூத்ர தாரியான இவ்வுடலில் கமலம் மலரவும் , என் விழி நீர் உலரவும் உனை விட்டால் வேறு வழியில்லை. நாளிதுவரை நான் சுமக்காத பழியில்லை. எனைகண்டு மூடாத விழியில்லை.

அம்மா என்றுனை சரண் புகுந்தேன். முரண்களை விட்டு நகர்ந்தேன். அரண்களை தாண்டி தாயே உனை நாடி வந்தேன். பல்லவி பாடி வந்தேன்.

என் வாக்கில் அமர்ந்தாய். என்னை என் போக்கில் விட்டாய். சர்வ ஸ்வதந்த்ராயை ஸ்வாஹா..

நான் வெறுமனே காசு பணம் கிட்டும் என்று மந்திரம் கேட்டேன். நீ அவன் மனம் நின்று யாவும் பெற்றிட விதைச்சொல் தந்தாய். உன்னருளாலே உன் அருள் நாடி உன் அருளாலே மந்திர பெற்றும் செபித்தேன்.

ஓம்:

பிரணவ ஜெபம் செய்வித்து இறந்திருந்த எனக்குள் பிராணனை பிரதிஷ்டை செய்தாய். 

ஐம்:
ஞானப்பெட்டகத்தை காட்டுவித்து ,பூட்டெல்லாம் திறப்பித்து கொள்ளையிட உத்தரவு தந்தாய். என்னில் சச்சரவெல்லாம் சமாதியாக மயான அமைதிக்கே அச்சாரம் கொடுத்தாய். அதில் ஆதிசிவனை ஆட வைத்தாய். என்னை பாட வைத்தாய்.

ஹ்ரீம்:
உலகமெனும் நாடகமேடையை ஒரு மாயத்திரை மூடியிருக்க நிஜத்தை அதன் நிர்வாணத்தை தரிசிக்க முடியாது தவித்திருந்தேன். அம்மாயத்திரையை விலக்கியதோடு   என் மேல் மாயத்திரை ஒன்றை இறக்கி வைத்தாய். உலகத்தை  என் வியூகம் அறியாது விலகி நிற்க  வைத்தாய். கூட்டுப்புழுவென கிடந்த என்னை  ஒரு கூட்டில் சிறைவைத்து வண்ணத்து பூச்சியாய் வளரச்செய்தாய்.

க்லீம்:
நிதம் நிதம் உருமாறி, என் உள்ளத்தை சரமாரியால் தவிக்கச்செய்த நட்பும்,உறவும் என்னைக்கண்டு அஞ்சிடச்செய்தாய்.

ஸ்ரீம்:
சேராதிருப்பது கல்வியும் செல்வமும் என்ற சொலவடைக்கு சோர்வு வர என் மேல் காசும்  காதல் கொள்வித்தாய்.

நீ அம்மை. நானுன் கை பொம்மை. ஆட்டுவித்தல் நின் செயல். நல் வழி (கா)கூட்டுவித்தல் நின் கருணை.

ஓம் சக்தி

Sunday, February 21, 2010

தோஸ்துங்கல்லாம் "ஒதுங்க" புறப்பட்டாங்க

கூட்டி கழிச்சு பார்க்கிறேன்
ஒரு தரம் புத்தூர்ல ஒரு ஃப்ரெண்ட் கல்யாணத்துக்கு போயிருந்தம். ராத்திரி ரிசப்ஷன் ஆயிருச்சு. மறு நாள் விடியல்ல தோஸ்துங்கல்லாம் "ஒதுங்க" புறப்பட்டாங்க. அந்த காலத்துல நமக்கு அந்த பிரச்சினையெல்லாம் கிடையாது. எப்போ வசதியோ அப்போ எனிமா எடுத்தா தான் விசயமே வெளிய வரும். காரணம் நம்ம "ராவுகள்" அப்படி. எனிவே தனியே என்னத்த பண்றது ச்சும்மா அப்டி காத்தாட போய் தம்மடிக்கலாமேனு கூட போனேன்.தண்டவாளத்து மேலயே நடந்து போறோம். நான் தான் கடைசியா நடந்துக்கிட்டிருக்கேன்.

தண்டவாளம் ஒரு சுரங்கத்துக்குள்ள போகுது. (அதை என்ன சொல்வாங்க?) நானும் போறேன். உள்ளே தண்டவாளத்துக்கு ஒரு புறம் திண்ணை மாதிரி இருக்கு. அதுல ஒரு தம்பதி. சஷ்டியப்த் பூர்த்தியானமாதிரி கல்யாண காஸ்ட்யூம், நகை நட்டுகூட அணிஞ்சிருந்தாப்ல ஞா . அவிக முகத்துல அப்படி ஒரு களை. உள்ளுக்குள்ள லேசா சிலீர்ங்கற மாதிரி ஒரு உணர்வு. இருந்தாலும் என்னை நான் ஈஸி பண்ணிக்க அந்த பெரியவர்கிட்டே போய் சிகரட்டை எடுத்து வாய்ல வச்சுக்கிட்டு தீப்பெட்டி கேட்டேன்.அவர் அந்தம்மா பக்கம் திரும்பி சுந்தர தெலுங்குல "குடு"ங்கறார். நான் வாங்கி சிகரட் பத்த வச்சிக்கிட்டு, பெட்டிய திருப்பி கொடுத்துட்டு நடக்கிறேன்.தோஸ்துகளோடபோய் சேர்ந்துக்கிட்டேன். விஷயத்தை சொல்றேன். சுரங்கம் இருந்தது நிஜம்தான். அது மாதிரி தம்பதியை பார்க்கவே இல்லேங்கறாங்க. வாய்ல சிகரட் புகைஞ்சிக்கிட்டு இருக்கு. யாரை நம்பறது?

இது நடந்தது 1990 லனு நினைக்கிறேன். இப்போ 20 வருசம் கழிச்சு 2010 ல வீடு தேடி அலையறேன். ரூ1,200 வரைக்கும் ப்ரிப்பேர் ஆனாலும் வீடு கிடைக்கல. அப்புறமா பெரிய வேப்ப மரம். அதனோட நிழல்ல இருக்கிற வீட்டுல ஒரு போர்ஷன் காலினு "சாந்தி"ங்கற பொம்பளை சொல்லுது. அது "சத்யா"ங்கற நண்பன் மூலமா அறிமுகம். போய் பேசறேன். ஆமா காலிதான்னு கன்ஃபார்ம் ஆகுது. ஒரு பொண்ணு வீடு திறந்து காட்டுது.அட்வான்ஸும் வாங்கிக்குது.அப்பா,அம்மா பலமனேர் போயிருக்காங்க. தாத்தா பாட்டி வீட்ல இருக்காங்க ஒரு தடவை பார்த்து அட்வான்ஸை அவிக கைலயே கொடுத்துருங்கங்குது. நான் என் மகளை நீ போய் பார்த்து கொடுத்துருப்பாங்கறன். என் மகள் போய் பார்த்து பேசி கொடுத்துட்டு வரா.

அந்த கிழ தம்பதிகளை வர்ணிக்கிறா. மைண்ட்ல எந்த ரெஸ்பான்சும் இல்லே ப்ளாங்காவே இருக்கு. சாமான் செட்டை எப்படி கட்டறது என்னாங்கற யோசனைதான்.பிப்ரவரி 6 ஆம் தேதி இந்த வீட்டுக்கு குடி வந்துட்டம். இன்னைக்கு தேதி என்ன? பிப்ரவரி 22. பதினாறு நாள் வரை தம்பதி பத்தி எந்த யோசனையும் இல்லே. இன்னைக்கு இந்த விடியல்ல டக்குனு ஸ்பார்க் ஆகுது. 1990 ல நான் பார்த்த தம்பதி வர்ணனையும், என் மகள் கொடுத்த வர்ணனையும் பச்ச்சக்குனு பொருந்துது.
1990 ல நான் அரை குறை . என் ஜாதகத்துல சூரிய சந்திரர்கள் பக்கத்து பக்கத்துல இருக்கிறதால அது சிவசக்தியோகம்னு படிச்சுட்டு பஞ்சாட்சரி ஜபிச்சிக்கிட்டிருந்த நேரம் அது.

வருசம் 2000, மாசம் டிசம்பர் தேதி 23 லருந்து சக்தி உபாசனை . இந்த வீட்டுக்கு வர்ரதுக்கு மாசம் முன்னாடிதான் சத்யா டிக்டேட் பண்ண பண்ண அம்மனுக்காக சாரி அம்மன் அருளுக்காக நான் எழுதின தெலுங்கு கவிதைகளை தட்டச்ச ஆரம்பிச்சதும் ஞா வருது. ஏதோ கணக்கிருக்கு. நானும் எனக்குள்ள கேள்விகள் எழ ஆரம்பிச்சப்பத்துலருந்து கூட்டி கழிச்சிக்கிட்டே இருக்கேன். டேலி ஆன மாதிரியே இருக்கு. அப்புறம் பார்த்தா ஆன்சர் தப்பு. பார்ப்போம்.

முந்தா நாள் பெரிய சைஸ் தீப்பெட்டி பத்து ரூ க்கு மூனுனு வாங்கினேன். கம்பெனி பேரு ஜோதி. இன்னைக்கு ஒரு க்ளையண்ட் தெலுங்கு ப்ளாகை பார்த்து ரெஸ்பாண்ட் ஆகி தெலுங்குல ப்ரிடிக்ஷன் கேட்டிருக்காங்க. எல்லாமே ரஸ்னா பவுடர் தனமா ஏற்கெனவே இருக்கும் போல. அப்பப்போ சந்தர்ப்பத்தை பொருத்து சர்க்கரை தண்ணி சேர்த்து ஆஃபர் பண்றா அவள்.

Friday, February 12, 2010

ஒரு அந்தரங்க உரையாடல்

"வணக்கம் சாமி"
"வாப்பா .. என்னாச்சு வேலை விசயம்?"
" நீங்க சொன்ன மாதிரியே ஆச்சு சாமி.சக்ஸஸ் தான்"
" நான் சொன்ன மாதிரினு மொட்டையா சொல்லகூடாது. எனக்கு நடக்க இருந்ததை நீங்க கெஸ் பண்ணி சொன்னது நடந்ததுன்னு வேணும்னா சொல்லலாம். ஓகேவா"
" நீங்க சொன்னதெல்லாம் நடக்குதே சாமி"
"முண்டம் ! நான் சொன்னதெல்லாம் நடந்துர்ர மாதிரி இருந்தா ரஜினி காந்த் அரசியல்ல குதிச்சு விஜயகாந்தை விட செமர்த்தியா மொக்கையாகனும் இத்தனை நாள் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் புல்க் காட்டினதுக்கு புலி வருது கதை கணக்கா அவரோட கதை முடியனும்னு சொல்லிருவனே ..."
"ஆங்க்..இப்ப புரியுது சாமி ! நீங்க சொன்னது செரி சாமி!"
"சாமி இன்னொரு விசயம்?"
"தபாரு.. ஜோசியர்கிட்டே அடிக்கடி வரக்கூடாது. எதுனா முக்கிய முடிவு எடுக்கறப்ப,தசா புக்தி மார்ரப்ப, முக்கிய கிரகம் ஏதாவது மார்ரப்பதான் வரணும் புரியுதா?"
"சரி சாமி. இப்போ நீங்க சொன்னாப்ல ஒரு முக்கிய முடிவு எடுக்கனும்..அதான் வந்தேன்"
"சரி சொல்லு"
"சாமி.. நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன். அவிக வேற சாதி."
'சாதி என்னப்பா சாதி. நல்ல குடும்பம்தானா"
"அதெல்லாம் ஒன்னும் தப்பா இல்ல சாமி பக்காவா இருக்கு"
"பின்னே என்ன பிரச்சினை?"
"எங்கப்பாதான்.. சொந்தத்துல தான் கட்டனும்னு இம்சை பண்றார்"
"உங்கப்பா வந்திருக்காரா?"
"உம்.."
"அவரை வரச்சொல்லுப்பா"
***
"வணக்கம் சாமி !"
"வணக்கம் வாங்க.! உட்காருங்க"
"சாமீ.. நீங்களே நியாயத்த சொல்லுங்க..தங்கச்சி மக காத்திருக்கா அவளை விட்டுட்டு இவன் வேற எவளையோ கட்டறேன்னு ஒத்தகால்ல நிக்கறான்"
"அப்படியா .. அடப்பாவமே ! இதுல நான் என்ன செய்யறது?"
" நீங்க எடுத்துச்சொல்லுங்க சாமி.."
"நான் ஏதோ வயித்து பொழப்புக்கு பஞ்சாங்கம் சொல்றவன்பா எனக்கென்ன தெரியும்.?"
"ஹ.. அப்படி சொல்ட்டா எப்டி சாமி.. உங்களை பத்தி தான் பேப்பர்ல நிறைய்ய படிக்கிறமே..இந்தியாவையே பணக்கார நாடா மாத்த போறிங்களாம்..10 கோடி பசங்களுக்கு வேலை தரப்போறிங்களாம்.."
"கிழிஞ்சது கிஸ்னகிரி.. இப்டிதான் போய் சொல்லிரு.. யோவ் அதெல்லாம் வெறும் ப்ரபோசலுய்யா செய்யவேண்டியது அரசாங்கம்யா"
"எதோ ஒன்னு அவ்ளோ அறிவிருக்கிற சாமி ..இந்த சின்ன விசயத்துல புத்தி சொல்ல கூடாதா?"
"சரி அப்டியே சொல்ட்டா போவுது.. சொல்றேன். போன வாரம் உங்க வீட்டு பசுமாடை ஓட்டிக்கிட்டு போயிட்டிருந்தே"
"அட! ஆமா சாமி.. நீங்க எங்கே பார்த்திங்க..?"
"எங்கயோ பார்த்தேன்யா.. நீ பசுமாட்டை ஓட்டிக்கிட்டு எங்கே போயிட்டிருந்தே?"
"வெட்டினரி ஹாஸ்பிடலுக்கு"
"எதுக்கு?"
"பசு மாட்டுக்கு ஊசி போட"
"மாட்டுக்கு ஜுரமா?"
"அட என்னங்க நீங்க விவரம் புரியாத ஆளா இருக்கிங்க.. மாட்டை சினைப்படுத்தறதுக்குங்க"
"இதென்னய்யா லொள்ளு உங்க கிராமத்துல இல்லாத காளை மாடா?"
"அடடா என்ன நீங்க இப்படி விவரமில்லாம கேட்கிறிங்க.. நம்ம கிராமத்து காளைமாடுங்களோட விட்டா அரை படி பால் கறக்கற கன்னுதான் கிடைக்கும். ஆஸ்பத்திரில ஸ்விட்ஜர்லாந்து காளை கிட்டருந்து சேர்த்த வீரியத்தை ஊசி மூலமா ஏத்தி விட்டா பத்து படி பால்கறக்கற கன்னு பொறக்கும் சாமி"
"ஏன்யா .. கேவலம் மாட்டுக்கு நல்ல கன்னு பிறக்கனும்னு எந்த ஜாதி, எந்த நாடுனு தெரியாத காளை மாட்டோட வீரியத்தை ஊசி மூலம் செலுத்துவிக .. நீ பெத்த புள்ளைக்கு நல்ல அறிவு,உடல் வலிமை உள்ள குழந்தை பிறக்க சாதிவிட்டு சாதி கல்யாணம் பண்ணமாட்டே.. ஒன்னுக்குள்ள ஒன்னு ஒன்னுக்குள்ள ஒன்னு நெருங்கிய சொந்தங்கள்ள கல்யாணம் பண்ணி உங்க வமிசாவளியினருடைய நோய்கள் உங்க வமிசத்தை விட்டுடாம இருக்க எந்தளவுக்கு கஷ்டப்படறிங்கய்யா சூப்பர் லாஜிக் இது"
"இன்னா சாமி சொல்றே?"
" ஆ சொல்றேன் சொரைக்காய்க்கு உப்பில்லேனு.. போய் அந்த பொண்ணை பத்தி, பொண்ணு வீட்டுக்காரவுக பத்தி நாலு தெருவுல விசாரி. கல்யாணத்த பேசி முடி.அப்பத்தான் உண்மையான வம்ச விளக்கு பிறக்கும். இல்லேன்னா தேஞ்சு போன விளக்குமாறுதான் பிறக்கும் .போ போ ..போய் வேலைய பாரு"

விட்டுக்கொடு

விட்டுக்கொடு நின் பிடிவாதம் என்றேன்
நீயோ விட்டுக்கொடுத்தாய் என்னை என் எதிரிகளிடம்
என் வறுமையை எரி என்றேன்
நீ என்னை எரிக்க முனைந்தாயோ?
உன் திட்டப்படி பிரளயம் என்றோ வரும்
என் திட்டப்படி சுபிட்சம் நாளையே வரும்
பிரளயம் உறுதி எனும்போது
இந்த கட்டத்திலேனும் ஒரு நல்லாட்சி வழங்கிடக்கூடாதா?
மரண தண்டனை கைதிக்கு தரப்படும் வென்னீர் குளியல் போல்,புத்தாடை போல், நல்லுணவு போல், இனிப்பு போல் நல்லாட்சி தருவாய் தாயே
ஒரு மாற்றம் கொண்டுவர ஏற்றம் கண்டிடவே
காற்றை உணவாக்கி என்னுள் ஊற்றை உருவாக்கினேன்
என்னில் தடுமாற்றம் வரலாமோ?
உனை குறித்த மருமமெல்லாம் விளக்கி
அந்தண‌ர் பிற்சேர்க்கை தமை விலக்கி
தருமமே நின் வடிவென்று நீயே தருமமென்று
தர்கம் செய்து வந்தேன்
சீட்டு மாளிகை போல் சின்ன சித்தாந்தம் செய்துவைத்தேன்
மனிதமே மதம்
இயற்கையே இறை என்று
மக்கள் சேவையே மறையென்று
முறை செய்துவைத்தேன்
நான் பிறையே ஆனாலும்
நின் மகுடத்தில் பிறை என்றேன்
என்னை பிணவறையின் பிறை செய்தாய்
முறையாமோ சொல்லம்மா !
மக்கள் உயிர் குடித்தோர் உல்லாசமாய் வாழ்ந்திருக்க
அதற்கோர் விளக்கம் சொன்னேன்
விட்டுப்பிடிப்பதுவே உன் பழக்கம்
என்றிட்டேன்
எமை கைவிட்டு போவதுவே உன் வழக்கமாமோ
சொல்லாது சொல்லுகின்றாய் சூத்திர சுருக்கங்களை
பௌலிங்கும் நீயே
பேட்டிங்கும் நீயே
ஃபீல்டிங்கும் நீயே
அம்பயரும் நீயே
அம்பிகை நான் என்று அலட்டல் அதிகமாச்சு
ஜன நாயகம் வந்துற்று பல காலம் ஆனதடி
மக்கள் கருத்தையும் மாதா நீ மனதில் கொண்டு
நல்லாட்சி பிறந்திடவே
மீனாட்சி அருள் புரிவாய்
நல்லாட்சி அமைந்திடவே நாவலன் நான் குரல் கொடுத்தேன்
அம்மா நின் விரலசைந்தால்
என் சொல்லே வில்லாகும்
பாடு பொருள் அம்பாகும்
அல்லவை எரிந்து போகும்
நல்லவை செழித்தோங்கும்
இவ்வுலகே நாய் கூட்டம்
என்னை பிடுங்க பார்க்குதடி
மெய் நடுங்க வைக்குதடி
பை நிறைய எலும்பிருந்தால்
ஓரிரண்டை வீசி விட்டால்
வால் வீசி வந்திடுமே
அம்மா நீ அருள் புரிவாய்
மனமருள் சிதைத்திடுவாய்