Friday, August 26, 2011

சோனியாவுக்கு தூக்கு தண்டனை

சோனியாவுக்கு தூக்கு தண்டனை

அண்ணே வணக்கம்ணே !

சர்வ நிச்சயமா இந்த பதிவுல மொக்கை தான் போட போறேன். இதுபிடிக்காதவுக ஸ்ட்ரெய்ட்டா அவன் அவள் அது தொடருக்கும் , ஜோதிட பால பாடம் பதிவுக்கும் போயிரலாம். மொக்கை தான் எங்கள் சாய்ஸுங்கறவுக இந்த பக்கத்துல நில்லுங்க.

கிட்ண பரமாத்மா ஜொல்வாரு " பரதர்மம் எவ்ள உயர்ந்ததா இருந்தாலும் சுதர்மம் எவ்ள தாழ்ந்ததா இருந்தாலும் சுதர்மமே பெஸ்டு" அது நெஜம் தான்.. வழக்கம் போல அவன் அவள் அது -ஜோதிட பால பாடத்தோட நின்னிருக்கலாம்.

ஆத்தாவுக்கு லீவு விட்டு - ரா முச்சூடும் மன்னாடி அல்லாருக்கும் ஆட் சென்ஸ் பதிவை ஒர்க் அவுட் பண்ணினது தண்டமா போச்சு.( வெட்டி ..லு நித்திரைக்கு கேடு மாதிரி)

இண்ட்யாராக்ஸ் மூலமா கூகுல் ஆட்சென்ஸ் அக்கவுண்ட் வாங்கற மேட்டர் ( நேற்றைய பதிவு) அல்லாருக்கும் தெரிஞ்ச மேட்டரா? அல்லது சனம் அசால்ட்டா இருந்துட்டாய்ங்களா தெரியலை. மொத்தத்துல நேரம் வீணாபோச்சு. ஹிட்ஸில் எள்ளளவு கூட வித்யாசமில்லை.

என்ன ஒரு ஆறுதல்னா இரண்டு புதுவரவுகளின் மறுமொழிகள்.

ரா தூக்கம் போச்சு.காலையில தூங்க முடியலை.மதியம் தூங்கமுடியலை. சாயந்திரம் 5மணிக்கு தூங்கி ராத்திரி 9 மணிக்கு எந்திரிச்சன். நமக்கு சனங்களோட இன்டராக்ட் ஆகறது ரெம்ப முக்கியம் . வெளிய இறங்கினம் சரக்கடிக்கிற பார்ட்டி தான் கிடைச்சாரு. கூட போயி ஒரு ஃபேண்டாவும் ரெண்டு சிகரட்டும் அடிச்சுட்டு வீட்டுக்கு வந்தேன்.

பால பாடம்ங்கற பேர்ல இந்தாளு கட்டற துணுக்கு தோரணத்தை படிக்க இத்தீனி சொந்தகதையை கேட்கனுமான்னு கோச்சுக்காதிங்கண்ணா. பாரதி சொன்னாரு " நமக்கு தொழில் நாட்டுக்குழைத்தல் ,கவிதை" நம்ம ஸ்டேட்மென்ட் " நமக்கு தொழில் நாட்டுக்குழைத்தல் ,ஜோதிடம்.

ஆன்லைன் ஜோதிட ஆலோசனையில சில்லறை தாராளமாகவே புரண்டாலும் நமக்கு தொழில் ஆன் லைன் ஜோதிட ஆலோசனைங்கற ரேஞ்சு வந்தது ஒரு குடும்ப தலைவனா சந்தோசத்தை தந்தாலும் நாட்டுக்குழைத்தல் எல்லாம் பெண்டிங் ஆயிட்டே வருது. இது கில்ட்டிய தருது. ஆக இன்னைலருந்து இங்கே - இப்பம் - நாட்டுக்கு உழைக்க முடிவு பண்ணியிருக்கன்.

இந்தியாவுக்கு இது ஒரு சந்தியாகாலம். ( சூரியாஸ்தமனத்துக்கும் சந்திரோதயத்துக்கும் இடையிலான இடைவெளி) இந்த சமயம் நம்மை கருத்தை பதிவு செய்யலின்னா எதிர்காலத்துல ரெம்ப மொக்கையாயிருவம். இந்த காலத்துலயே இந்த நிருபர் பசங்க கேட்கிற வில்லங்கமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம அரசியல்வாதிங்க பேந்த பேந்த முழிக்கிறாய்ங்க.

நாம நேரிடை ஜன நாயகத்துல ஜனாதிபதி ஆனா கொத்துபரோட்டா போட்டுருவாய்ங்க போல. " இன்னிக்கு கிழிச்சுக்கறியே 2009 - 2011 பீரியட்ல ஆன்லைன்ல சோசியம் சொல்லி கல்லா மட்டும் தானே கட்டினேன்னு கேட்டுட்டா என்ன பண்றது?

அதனாலதேன் கருத்து கந்தசாமி கணக்கா நம்ம கருத்துகளை அவ்வப்போது சொல்லிரலாம்னு உத்தேசம்.

1. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு செப் 9 அன்று மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு.

மனிதர்கள்னாலே குறைபட்ட சிந்தனை ( ஈகோ) - இயற்கையிலருந்து விலகி வந்துட்டதால குறைப்பட்ட உயிரியல் திறன் ( ஐ மீன் கில்மாலருந்து - மோப்பம் - கேட்புத்திறன் வரை) . இதுல தாளி மனிதனால் ஏற்படுத்தப்பட்ட எல்லா அமைப்புமே குறைபட்டதுதேன்.

குறைபட்ட திறன் கொண்ட - குறைப்பட்ட மனிதர்கள் ஏற்படுத்தின - குறைப்பட்ட அமைப்பு தரும் தீர்ப்புகள் மனித உயிரை பறிக்கும்னா அதை ஏத்துக்க முடியலை.

தூக்கு தண்டனைங்கறது சோனியாவுக்கு விதிக்கப்பட்டாலும் மொத ஆளா எதிர்ப்பு தெரிவிப்பேன் என்பதை இங்கன பதிவு செய்ய விரும்புகிறேன்.

மேலும் இத்தினி காலம் சிறையில் வாடிய அந்த பார்ட்டிங்களை தூக்குலயும் போட்டா ரெட்டை தண்டனை ஆயிருமில்லியா? குற்றத்திலான அவர்கள் பங்கை அரசு தரப்பு நிரூபிச்சதுலயே நிறைய ஓட்டை இருக்கிறதா சொல்லும் போது தூக்கு தண்டனைல்லாம் கொலைக்குற்றம்யா.


2.ஜன் லோக் பால்

இந்த மேட்டர்ல ரெஸ்பாண்ட் ஆற சனத்தை ரெண்டு க்ரூப்பா பிரிக்கலாம். அன்னா அசாரே உலகத்தை உய்விக்க வந்த ரட்சகர் - அன்னா வாக்கெல்லாம் அருள் வாக்குங்கறது க்ரூப் நெம்பர் ஒன்.

இன்னொரு பகுதி சனம் ஹசாரே பின்னாடி பா.ஜ.க /மதவாத சக்திகள் இருக்கு. அமெரிக்கா இருக்கு. பார்லிமெண்ட் தான் சுப்ரீம். பார்லிமெண்டை ஹசாரே ப்ளாக் மெயில் பண்றாரு - அசாரே அத்வானிக்கு ஒன்னு விட்ட மச்சினன் - சாதி அமைப்பை ஆதரிக்கிறவர்னு கிழிச்சுட்டு இருக்காய்ங்க.

ரெண்டுமே பார்ஷியலா நெஜமா இருக்க வாய்ப்பு இருக்கு. பார்லிமென்டு தான் சுப்ரீமுன்னு பதர்ராய்ங்க. பார்லிமெண்டுன்னா என்ன? எம்.பிங்க. இவிகளை பார்லிமென்டுக்கு அனுப்பினது சோனியா ,ராகுலுக்கு ஜல் ஜக் போடவோ - துட்டுக்கு ஓட்டு போடவோ , கேஷுக்கு கேள்வி கேட்கவோ இல்லை.

இந்திய சனத்தொகை மொத்தமும் பார்லிமெண்டுக்குள்ள நுழைய முடியாது -அக்காமடேட் பண்ணமுடியாதுன்னு தான் இவிகளை அனுப்பினோம். இவிக சதா சர்வ காலம் நம்மோட இன்டராக்ட் ஆகி நம்மை கருத்து என்னனு தெரிஞ்சுகிட்டே இருக்கனும். இதையெல்லாம் பார்லிமென்டுல பேசனும் -சட்டமாக்க ட்ரை பண்ணனும்.

இவிக பொதுசனத்தோட சேவகர்கள் - வேலைக்காரவுக. வேலைக்காரன் சரியில்லை . தினம் தினம் சரக்கடிச்சுட்டு மட்டையாயிர்ரான்னா அவனை வேலைக்கு வச்ச எஜமான வாய்ல விரல் போட்டுக்கிட்டு உட்கார முடியுமா?

சரி கொய்யால இவனை நம்பினா வேலைக்காகாதுன்னு தன் வேலைய தானே செய்துக்க கோதாவுல இறங்கிர்ரான். ஜன நாயகத்துல ஜனம் தேன் சுப்ரீம். ( சுப்ரீம்கோர்ட்டு கூட சுப்ரிம் கடியாதுங்கோ)

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. நம்மில் குற்றம் குறை இல்லாதவர்கள் ஆருமில்லை. அதனால ஒட்டு மொத்தமா ஜானகிராமன் உத்தமர். முருகேசன் அராத்துன்னு தீர்ப்பு சொல்ல முடியாது. சிவயசிவாவில் பதிவு போடும் போது ஜா.ரா நல்லவர். போலி முருகேசனா கழிசடை கமெண்டு போடும்போது கெட்டவர்.

ஆன்மீக பதிவுகள் போடும்போது முருகேசன் நெல்லவரு. கில்மா ஜோக்கு போட்டு ஹிட் பொறுக்கறச்ச கெட்டவரு. அந்த மேரி அசாரே ஊழலை எதிரிக்கிறப்ப ஆதரிப்போம். சாதியை சப்போர்ட் பண்ணா கிழிப்போம்.


3.மத்திய அரசின் ஆயுள் -இடை தேர்தல்கள்

நாட் நாட் பீரியட்லயே சோனியா ஆட்டம் க்ளோஸுன்னு சோதிட பதிவு போட்ட பார்ட்டி நாம இன்னைக்கு உள்ள அரசியல் சீதோஷ்ண நிலைய பார்த்தா மத்திய அரசு இந்த நவம்பர் 8 வரை கூட தாங்காது போல. சீக்கிரமே இடைத்தேர்தல் வரும்னு பட்சி சொல்லுது.