Saturday, November 13, 2010

வேட்டி வரிஞ்சு கட்டி

அண்ணே ..வணக்கம்ணே,

ஹரியும் சிவனும் ஒன்னு இதை அறியாதவன் வாயில மண்ணுங்கறது பெரியவுக சொன்னது.

ஆத்திகமும் நாத்திகமும் ஒன்னு. இது ரெண்டுமே  நீசத்துல இருக்கும்போது கடவுளை பத்தி பேசும். (உளன் -இலன் விவாதம்) ,உச்சத்துக்கு போகும்போது மனிதனை பத்தி பேசும்.

அதனால அம்மன் அருள் வேண்டி நாம செய்த சாதனையை அதிலான நம்ம அனுபவத்தை ரிவீல் பண்றதுல நமக்கு எந்தவிதமான குற்ற உணர்வும் கிடையாது.  "அவாள்" மாதிரி சீக்ரெட் மெயின்டெய்ன் பண்றதுல எனக்கு சம்மதமில்லை.

தனி மனிதனுக்கு கிடைக்கிற காசு பணமே ஒட்டுமொத்த மனிதசமுதாயத்துக்குரியது. காந்தி நீ ஜஸ்ட் ஒரு கர்த்தா -டரஸ்டி தாங்கறார்.  இந்த நிலைல இந்த மாதிரி மிஸ்டிக் சைன்ஸ் எல்லாம் நிச்சயமா என் மூலமா மனித குலத்துக்கு வழங்கப்பட்டதாவே தான் நினைக்கிறேன்.


பைபிள் கூட பன்றிகள் முன் முத்துக்களை போடாதிருங்கள்னு சொல்லுது. என்னோட சித்தாந்தம் என்னன்னா நாம வீசறது ஒரிஜினல் முத்தா இருந்தா (அதுக்குரிய கிரகம் சந்திரன் - அவர் மனோகாரகன் - எனவே) பன்றியோட மனசும் மாறனும்.


சரிங்கண்ணா ..ஆத்தாளோட நமக்கேற்பட்ட உறவு -அதிலான திருப்பங்கள் எல்லாத்தையும் சொல்லிரனும்னு 10 வருஷ கதைய  நீட்டி முழக்கி சொல்லத்தான் இந்த தொடரை ஆரம்பிச்சேன். ஆனால் கடந்த அத்யாயத்துலயே  2000 டு 2010 ன்னு லாங் ஜம்ப் அடிச்சுட்டன்.

இதுக்கும் காரணம் இல்லாம இல்லை. என்னங்கடா இது ஆத்தா ஆத்தான்னு கிட்டு ஒரே இம்சையா போச்சு .. ஓகே ஆத்தாள வச்சி என்னத்த கிழிச்சேனு கேட்டுருவாய்ங்களோனு ஒரு உதைப்பு அதனாலதான் இந்த ஜம்ப்.

தீபாவளிதினம் லட்சுமி பூஜைக்கு ஹெல்ப் பண்ணேன். ரூ 900 வாடகைக்கு வசந்த மாளிகை கிடைச்சுதுனு சொன்னா அதுக்கும் சப்பை கட்ட சனமிருக்கு.

நாம எதையாவது புதிதாய் பெற்றால் அதன் மதிப்பை கூட உணரமுடியாத அளவுக்கு நம்ம மனசு,புத்தி எல்லாமே மரத்து போயிருக்கு. எதையாவது இழந்தால் தான் உறைக்குது.

நாம பெற்றாலே இந்த கதி. மற்றவர் பெற்றால் கேட்கவே தேவையில்லை. இந்த kavithai07 வலைப்பூவையே எடுத்துக்கங்களேன். kavi -குரங்கு- ஆஞ்சனேயர்- "மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்" thai - தாய் (ஆத்தா) நீங்களே பார்த்திருப்பிங்க டஜனுக்கு மேல ப்ளாக் க்ரியேட் பண்ணி வச்சிருக்கேன். எதுவுமே பேர் சொல்லலை.
இது மட்டும் தான் ஒர்க் அவுட் ஆச்சு. எந்த ரேஞ்சுக்குன்னா ஆத்தாவுக்கு சர்வ ஸ்வதந்த்ராயை ஸ்வாஹானு ஒரு பேர் உண்டு. யத்பாவம் தத்பவதி. நானும் சுதந்திரனாயிட்டன்.

கருத்து சுதந்திரம் மட்டுமில்லே பொருளாதார சுதந்திரம் கூட தினத்தந்தியை விட்டாச்சு. வீட்டண்டை ஜோசியம் சொல்றதை 90% குறைச்சாச்சு. ஏதோ பக்தாள் ரேஞ்சுல  நம்மையே நம்பி உள்ளவுகளை மட்டும் அன்பு காரணமா வெட்டிவிடாம இருக்கேன். ஆன்லைன்ல கூட நமக்கு பிடிச்சிருந்தாதான் ஜோதிட ஆலோசனை. இல்லைன்னா இன்னொரு சமயம் பார்ப்போம்னு கழட்டிவிட்டுர்ரதான். செலக்ட் பண்ண க்ளையண்டுக்கு கூட கட் ரைட்டா சொல்லிர்ரன் ..வாரமாகலாம் பத்து நாளாகலாம் காத்திருக்கும் பொறுமையிருந்தா காசு போடுங்க.. இல்லாட்டி டாட்டா..

இப்படியெல்லாம் நடக்குமான்னு கனவு கண்டுக்கிட்டிருந்தேன். கனவு நனவாயிருச்சு.
இப்படி கனவு கண்டது என்னோட சுய நலத்துக்காக இல்லே. டு டூ பெட்டர் இன் மை ஜாப்.  நாட் ஒன்லி டு மை க்ளையண்ட்ஸ் பட் ஆல்சோ டு மை மதர் லேண்ட்.

ஆக கவிதை07 மூலமா ஆத்தா என்னை எக்கனாமிக்கலா சுதாரிச்சுக்க வச்சு சுதந்திரனாக்கி (அவிழ்த்து விட்ட மாடு மாதிரினு சொல்லலாம்) விட்டிருக்காள்.

நீ நீர்த்து போயிட்ட, கொண்ட கொள்கைய காத்துல விட்டுட்ட.. (ஆப்பரேஷன் இந்தியா2000) ன்னுட்டு யாரும் சொல்ல தேவையில்லை. நானே ஒத்துக்கிடறேன். ஆனால் காரணம் வேற..

1997ல வேட்டி வரிஞ்சு கட்டி கோதாவுல இறங்கினப்ப  நாம சிங்கிள்.. போக போக ஆத்தா வந்து சேர்ந்துக்கிட்டா பாஸ்..2004ல ஆப்பரேஷன் இந்தியா2000 விஷயமா தலை நகருக்கு பாதயாத்திரை அறிவிச்சாச்சு. ( பட்டை உரியற ஏப்ரல்ல) BC,SC,ST அமைப்பினர் வந்து அன் கண்டிஷ்னல் சப்போர்ட் கொடுத்து பஸ் யாத்திரை ப்ளான் பண்ண சொன்னாய்ங்க. பாத யாத்திரை  ட்ராப் ஆயிருச்சு. அப்போ நான் பேசின காட்சியை பத்திரிக்கைகாரவுக ஃபோட்டோ பிடிச்சாய்ங்க. அதை பார்த்தா ஒரு இனிய அதிர்ச்சி.

நீங்களும் பாருங்க. ( நம்ம பின்னாலே ஒரு ஷக்தி இருக்கு)

நான் அந்த காலகட்டத்துல சனங்கிட்டே  நம்ம ப்ளானை பத்தி பேசறச்சே சனம் " நீ சிங்கிள் ஆளு என்னப்பா பண்ணமுடியும்" னு கேட்டா ஒரு பஞ்ச் விடறது வழக்கம் " "கண்ணா ..உன் கண்ணுக்கு நான் சிங்கிளா தெரியறேன். ஆனால் என் பின்னாடி ஒரு ஷக்தி இருக்குது . அது பார்த்துக்கும். யு டோண்ட் ஒர்ரி"

ஒய்.எஸ்.ஆர் ஜலயக்னம் ஆரம்பிச்சுட்டதால ஆ.இ க்கு அவசியமே இல்லாம போயிருச்சு.இப்ப உள்ள ரோசய்யாவுக்கு மனு கொடுக்கிறதை விட எதுனா கோவில் தெப்பக்குளத்துல போட்டா வெய்ய காலத்துல "அதுக்கானா" ஒதகும்.

ஆனாலும் ஆ.இ 2000 ஐ விடறதா இல்லை. நிச்சயம் கலக்குவம்ல. வெயிட் அண்ட் சீ!  மொதல்ல திட்டத்தை பத்தி ஆர்ட் பேப்பர்ல 16 பக்கத்துல  மன்மத மருந்துக்கான புக்லெட் கணக்கா கவர்ச்சியா  அச்சடிச்சு தில்லி, அல்லது ஹைதராபாத்ல ப்ரஸ் மீட் வைக்கறதா ஒரு ஐடியா இருந்தது. இப்ப ஜர்னலிசம் இருக்கிற இருப்புல ஸ்டார் ஹோட்டல்ல ப்ரஸ் மீட் ஃபாலோட் அபை லஞ்ச் வச்சாதான் வேலைக்காகும் போல.கொஞ்சம் போல காசு புரட்டிக்கிட்டு பார்ப்போம்.

விளக்கம்:

மந்திரோபதேசம் நடந்ததே டிசம்பர்23 ஆம் தேதிதான். கவிதை07 வலைப்பூ ஆரம்பிச்சது 2000,ஜூலை,31 ( தகவல்:அலெக்ஸா) இதெப்படி? அதான் சொன்னேனே..சாக்தேயத்துக்கான  விதைகள் ஏற்கெனவே தூவப்பட்டிருந்தன. சிவசக்தி பூசனை எட்செட்ரா.

"இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே ..இன்பத்தில் ஆடுது என் மனமே" -ன்னுட்டு உடலின் ஒவ்வொரு  அணுவும் குதியாட்டம் போடுமாம். அப்ப அறிவு க்ராஸ் பண்ணி  இதனால என்ன லாபம்னு கேட்குமாம்.(ஓஷோ)  சனம் மட்டும் " இந்த பைத்தியக்காரனுக்கு வேற வேலையே இல்லப்பா" னுட்டு சந்தோஷ பலூன்ல ஊசி குத்திரும்.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்புன்னாரு வள்ளுவரு. மனிதனோட எல்லையற்ற காலவெளியோட ஒப்பிடறப்ப பத்துவருசம்லாம் ச்சொம்மா ஜுஜுபி.

நான் கூட இவிகளை மாதிரியே அரச மரத்தை சுத்திட்டு அடி வயித்தை தொட்டுப்பார்த்துக்கன மாதிரி பிஹேவ் பண்ண பார்ட்டிதான். 2001 நவராத்திரிக்கே ஆத்தா இந்த ஒன்பது நாள்ள ஒன்பது ஃபீல்டுல நம்மை உச்சாணிக்கொம்புக்கு தூக்கிட்டு போகப்போறானு கனவு கண்ட பிக்காலிதான் நானு.


கடந்த பதிவுல ஒரு குரல்  "விஜயவாடா நித்யானந்தம்"னு காதுல சொன்னது.. "கொலுசு சத்தம் கேட்டது" தன்னோட  என்ட்ரியை அக்கம்பக்கத்து  போர்ஷன்ஸ்ல பெரிய ஜாமானா தள்ளி சத்தம் பண்ணி தெரிவிக்கிறது, சூல மேடைக்கு எதிர் வாசல்லயே நம்மை குடி வச்சது..மாதிரி  நூத்துக்கணக்கான அற்புதம்லாம் நடந்தது வாத்யாரே..எல்லாத்தயும் சொல்லத்தான் போறேன்"ன்னு பில்டப் கொடுத்திருந்தேன். அதுல சிலதை இப்பம் பார்ப்போம்.

மொதல்ல கொலுசு சத்தத்துக்கு வந்துருவம்.(ஒரு பார்ட்டி பாவம் இந்த கேள்விக்கான பதிலுக்காகவே இந்த பதிவை ஆவலா எதிர்ப்பார்த்துக்கிட்டிருக்கு.) கொலுசுங்கறது முத்தின கேஸு. அதுக்கு மிந்தி குழந்தை குவா குவானு கத்தற சத்தம் கேட்டிருக்கும்.( நமக்கு கேட்டுதுங்கண்ணா)

இதனோட தாத்பரியம் என்னடான்னா நம்மளோட மந்திரம்,ஜபம், தியானம் இத்யாதியோட பொட்டன்ஷியாலிட்டிய க்ராஸ்ப் பண்ணிக்கிட்டு ஆத்தா நமக்குள்ளயே பிறந்து வராங்கறதுதான்.

நாம நம்ம சாதனையில முன்னேற முன்னேற ஆத்தாளும் வளர்ரா வளர்ந்து சித்தாடை கட்டி நம்மை சுத்தி நடமாட ஆரம்பிச்சுர்ரா. நாம தியானத்துலயோ மந்திர ஜபத்துலயோ ஆழும்போது அவ நடமாடற கொலுசு சத்தம் கேட்குது. மனசுலாயி?

இந்த விஜயவாடா மேட்டரை பார்ப்போம்.

வாணியம்பாடி - முஸ்லீம் நண்பர் அனுப்பி வச்ச ஜின் (தேவதை) -கவுசருக்கும் நமக்கும் ஒத்துவராம பேக் டு தி பெவிலியன்லாம் ஞா இருக்கில்லை.

வேலையில சேர்ந்த புதுசுல மொதல்வாரம் கவுசர் கிட்டே பேட்டா வாங்கிக்கிட்டு சித்தூர் வந்தா பொஞ்சாதி சேமிப்பு வாரம் கொண்டாடி வீட்டை காலி பண்ணி சாமான் செட்டையெல்லாம் கொண்டு போய் அம்மா வீட்ல போட்டு வச்சிருந்தா. நாமதான் தன்மான சிங்கமாச்சே. உடனே காசு புரட்டி வீடு தேட ஆரம்பிச்சேன்

வாடகைக்கு வீடு தேடறது ஒரு கலை. பேசிக்கலாவே நமக்கு நெட் ஒர்க் உண்டு. ( அர்த ராத்திரில சுடுகாட்டுக்கே போனாலும் " சாமேய்! இன்னா இந்த நேரத்துல"ன்னு ரு குரல் வரும். மேலும் எங்கன காலியிருக்கும், எங்கன நம்ம ரேஞ்சுக்கு இருக்கும்ங்கற குன்செல்லாம் நமக்கு உண்டு. வீடு தேட ஆரம்பிச்சா மினிமம் அரை மணி நேரம்.. மேக்சிமம் ஒரு மணி நேரம் அட்வான்ஸ் தட்டிட்டு சாவி வாங்கிக்கிட்டு வந்துருவம்.

ஆனால் பாருங்க இந்த தாட்டி ஹார்ட் ஆஃப் தி டவுனெல்லாம் முடிச்சாச்சு. 1 கி.மீ தாண்டியாச்சு தேனபண்டானு ஒரு ஏரியா (தேன் பாறை). அங்கன ஒரு புராதன கோவில். கோவில் பக்கத்துல இடம் பிடிச்சு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் ஒரு கோவில் (?) கட்டியிருக்காய்ங்க. அதுக்கு எதிரே ஒரு மேடை அதுல சூலம். அங்கன வந்து உட்கார்ந்துட்டன். கூட பொஞ்சாதி வேற.

அப்போ ஒரு பொம்பளை வந்து விஜாரிக்க நான் மேட்டர் சொல்ல அந்த மாராஜி க்ளூ கொடுக்க வீட்டை பிடிச்சேன். தெற்கு வாசல்தான்.ஆனால் வடக்குல ஆறு.
( இழந்த ராஜ்ஜியத்தையே பிடிச்சுரலாமாம்)

நம்ம போர்ஷனுக்குள்ளார ஒரு ஆள் உள்ள உட்கார்ந்துக்கற மாதிரி சைஸ்ல ஒரு தொட்டி வேற.கவுசருக்கு உப்பு தீர்ந்த பிறவு இங்கனதான் சாதனைய முழுமூச்சா துவங்கினேன்.

அந்த காலகட்டத்துலதான் ஜெபம்,தியானம்லாம் முடிஞ்சு ஓஞ்சு சாஞ்சப்ப காதுல "விஜயவாடா நித்யானந்தம்"ங்கற வரி கேட்டுது. எப்படியெல்லாமோ அனலைஸ் பண்ணி பார்த்தும் இது ஒன்னுதான் இன்னைவரைக்கும் ரிசால்வ் ஆகல்லே.

ஆனால் அவாள் பண்ற அட்டூழியங்களை காரண காரியங்களோட விளக்கி நோண்டி நுங்கெடுத்து நான்  பதிவு போடற சமயங்கள்ள, உள்ளதை சொல்லிர்ரதால நொள்ளைக்கண்ணுக நோப்பாளத்துக்கு இலக்காகறப்ப நமக்கு கொஞ்சம் போல பேஸ்தடிச்சாப்ல ஆயிரும். அந்த மாதிரி சந்தர்ப்பத்துல ஓம் தும் துர்காயை ஸ்வாஹானு கொஞ்ச  நாழி ஜெபிச்சா ப்ராப்ளம் சால்வ். அடுத்து ஒரு வார காலத்துக்கு அந்த பிக்காலிங்க ரெட் மார்க்கோடயோ,புத்தூர் கட்டோடயோ எதிர்படறது வழக்கமா இருக்கு.(விஜயவாடால உள்ளது துர்காதானே)

அதுக்கு முந்தி சின்ன சுய விளக்கம். வழக்கமா இந்த அம்மன் விவகாரம்லாம் எங்கன போயி முடியும்டான்னா அருள் வாக்குலதான். பங்காரு அடிகளார்ல இருந்து நாராயணி பீடம் வரை பண்றது இந்த பிசினஸ்தான். ஆனால் நான் இந்த மேட்டர்ல மட்டும் பக்காவா இருக்கேன்.

நம்மகிட்டே பலன் கேட்டுக்கிட்ட பலர் "அப்படியே அருள் வாக்கு மாதிரி சொன்னிங்களே.. ஒரு வாக்கு அட அட"ன்னு ஜும் ஏத்தினாலும்  நாம மட்டும் "த பாரு இந்த டகுலெல்லாம் வேணா.. ஜோசியன் சொன்ன 100 மேட்டர்ல 96 நடந்திருக்காது. ஒரு நாலு குத்து மதிப்பா நடந்திருக்கும்.  ஆனா நீங்க   நடக்காததை எல்லாம் விட்டுருவிங்க .. நடந்ததை மட்டும் வச்சி அவனுக்குள்ள இருக்கிற நாலணா ஜோசியனை கூட காட் மேன் ரேஞ்சுக்கு கொண்டு போயிருவிக.
நான் சொன்னது ஜோசியம். வாட்ச் இருந்து  டைம் பார்க்க தெரிஞ்சா டைம் சொல்லலாம். பஞ்சாங்கம் இருந்து  நேரம் பார்க்க தெரிஞ்சா ஜோசியம் சொல்லலாம். வேணம்னா நீ வா ஜஸ்ட் 15 நாள்ள கத்து கொடுத்துர்ரன்..ஓடிப்பூடு"னுட்டு கழட்டிவிட்டுர்ரம்.

பின்னே என்ன ம..ருக்கு சாக்தேயம் ,,சால்னான்னு கேப்பிக. சொல்றேன். எந்தெந்த காலகட்டத்துல என்னோட தகுதி என்ன, எனக்கு கிடைச்ச அங்கீகாரம் என்னனு எனக்கு தெரியும். தகுதிக்கும் அங்கீகாரத்துக்கும் சம்பந்தமே கிடையாது.

நான் சந்திச்ச அவமானங்களுக்கோ, பெற்ற சன்மானங்களுக்கோ லாஜிக்கே கிடையாது. ஒரு ஆங்கிள்ள பார்த்தா என்ன மாதிரி சாதனையாளனை சரித்திரத்துல பார்க்க முடியாது. இன்னொரு ஆங்கிள்ள பார்த்தா என்னை மாதிரி சோம்பேரிய  துரதிர்ஷ்டம் பிடிச்சவனை பார்க்கவே முடியாது.

இப்படி ஒன்னுக்கொன்னு தொடர்பே இல்லாததையெல்லாம் நான் அனுபவிச்சிருக்கேன். அனுபவிச்சிக்கிட்டும் இருக்கேன். ஒரு ரூட்ல போயிருந்தா போதை ஊசி ரேஞ்சுக்கு வளர்ந்து புதைச்ச இடத்துல புல்லே முளைச்சிருக்கனும். இன்னொரு ரூட்ல போயிருந்தா என் கவுண்டரே ஆயிருக்கனும்.

ஒரு தனி மனிதனுக்கு இத்தனை நாலட்ஜ் தேவையில்லாத ஒன்னு.( மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ் இல்லேன்னாலும்.. எந்த சப்ஜெக்ட்ல நீங்க புலியா இருந்தாலும் அதே சப்ஜெக்ட்ல உங்க கண்லை விரலை விட்டு ஆட்டற கப்பாசிட்டி நமக்கு இருக்குதுங்கோ.

எப்படியோ என் மைண்ட்ல நான் ஒரு பொது சொத்துங்கற பாயிண்ட் விதைக்கப்பட்டுருச்சு.  நான் உயர்ந்தா இந்த நாடு உயரும்ங்கற ஓவர் கான்ஃபிடன்ஸ் பில்டப் ஆயிருச்சு.

பாபா படத்துல பேஸ்தடிச்ச ரஜினி "சக்தி கொடு"னு பாடறாரே அந்த மாரி கிடையாதுங்கோ..

நமக்கும் ஆத்தாளூக்கும் இருக்கிற அண்டர்ஸ்டாண்டிங்கே வேற "ஆத்தா நீ என்னப்பார்த்துக்க நான் இந்த நாட்டை பார்த்துக்கறேன்"

என் சிந்தனை,திட்டம்,செயல்பாடு மேல எல்லாம் எனக்கு நம்பிக்கை உண்டுதான். இல்லேங்கலை.இதையெல்லாம் வச்சு நான் ஒழுங்கு மரியாதையா என் சூ... மட்டும் கழுவியிருந்தா அம்பானி ரேஞ்சுக்கு இல்லைன்னாலும் நம்ம ஓம்கார் ஸ்வாமிகள் ரேஞ்சுக்கு அட்லீஸ்ட் டோண்டு ராகவன் ரேஞ்சுக்கு  இருந்திருப்பேன்.

ஆனால் நம்ம டிமாண்ட் ஒன்னுதான் "ஆத்தா நீ என்ன பார்த்துக்கலைன்னா நான் என்னை பார்த்துக்கறதுலயே பொயப்பு பூடும். என்னால எவனுக்கும் எந்த நன்மையும் நடக்காது. ஸோ நீ என்னைப்பாரு.. நான் இவிகளை பார்க்கிறேன்"

சுப்பிரமணிய பாரதி கேட்டாரே " வல்லமை தாராயோ நா( மா) நிலம் பயனுற வாழுதற்கே"ன்னுட்டு.. நாமளும் அதே டைப்தான்.

நவம்பர் எட்டாம் தேதி வீட்டை காலி பண்ணதால ஃபோன் ஷிஃப்ட் பண்ண வேண்டியதாயிருச்சு. மறு நாளே அப்ளை பண்ணியும் பிக்காலி பசங்க இன்னம் ஷிஃப்ட் பண்ணலை. இத்தனைக்கும் நாம ப்ரஸ் ரிப்போர்ட்டருனு பெத்த பேரு.
இந்த அழகுல ஊதிய உயர்வு,போனஸுனு ஸ்ட்ரைக் வேற பண்ணுவாய்ங்க. இந்த நாலு நாள்ள ஒரு நாளைக்கு ரூ 20 மேனிக்கு இன்டர் நெட் சென்டருக்கும் அழனும், நாளைக்கு இவிக பில் போடறச்ச இந்த 4 நாளை லெஸ் பண்ணப்போறதில்லை.

(625/30X4 லெஸ் பண்ணுவாய்ங்களா ? ம.......ரு கூட பண்ணமாட்டானுங்க. அதுவும் க்ஷவரம் தான்.யாரோ பண்ற தப்புக்கு  நாம தண்டம் அழவேண்டி வர்ரதான் பெரிய  சோகம்)

பதிவுகளோட தொடர்ச்சி, வேகம், இத்யாதில ஏற்பட்டிருக்கிற  இடைவெளிக்கு  இதான் காரணம் . அதுவும் இன்னைக்கு சால்வ் ஆயிரும்னு ஒரு ஜொள்.பார்ப்போம். உடு ஜுட்.