Wednesday, January 27, 2010

உங்கள் முன், பின் பிறவிகள் என்ன?

என்னடா இது ஓம்கார் ஸ்வாமிகள் மரம் சி.டியை ரீட் பண்ணும், பசுவை கொன்னா நரகத்துக்கு போவிகனு சொன்னதையெல்லாம் டார் டாரா கிழிச்ச பார்ட்டி "உங்கள் முன், பின் பிறவிகள் என்ன?"ன்னு ஒரு பதிவை போட்டிருக்கு. கிழிச்சு தொங்க விட்டுரவேண்டியதுதானு பரபரக்காதிங்க.

இங்கே நான் சொல்லப்போறதெல்லாம் நான் படிச்ச, அப்சர்வ் பண்ண , கெஸ் பண்ண லேப் லெவல்ல இருக்கிற சில விசயங்களை தான். இதெல்லாம் எந்த வேதத்துலயும் சொல்லப்படலை. எந்த சாமியாரும் அருள் வாக்குல சொன்னதில்லை.

ராசி சக்கரத்துல 12 ராசிகளை கவனிச்சிருப்பிக. ஒன்னொன்னுத்துக்கு ஒரொரு சிம்பல் கொடுத்திருப்பாக.( இந்த சிம்பல்ஸை சூட்சும புத்தியோட பார்த்தாலே அந்த ராசிக்காரக சரித்திரத்தையே சொல்லிரலாம்) தங்களோட ராசிகளை தெரிஞ்சுக்கிட்டு கிளி ஜோசியர்கிட்டேருந்து இன்டர் நெட் வரை ராசிபலனை தெரிஞ்சிக்க தவிக்காத ஜன்மமே கிடயாது. இங்கே நான் சொல்லப்போறது ராசிபலனில்லே. பிறப்பின் ரகசியம். மறு பிறவிகளின் இருண்மையை. ஸ்ருஷ்டியின் ரகசியத்தை.

ரிஷிகள் ,மகரிஷிகள் காலத்துல டெலஸ்கோப் இல்லே.விண்வெளி ஓடங்கள் இல்லே. இருந்தும் அண்டை வெளியை அவதானித்து ஒவ்வொரு நட்சத்திர கூட்டத்தையும் ஐடன்டிஃபை பண்ணி "ஓ இந்த நட்சத்திர கூட்டம் குதிரை முகத்துல இருக்கு இந்த க்ரூப்புக்கு அஸ்விணினு பேரை வைப்போம் (அஸ்வினி என்றால் குதிரைனு அர்த்தம்) மொத்த 27 நட்சத்திர கூட்டங்கள் இருக்கு. இப்படியாக படிப்படியாக முன்னேறி கிரக சஞ்சாரங்களால் ஏற்படும் கிரகணம்,அமாவாசை,பவுர்ணமி இத்யாதிய துல்லியமா கணக்கிட்டாங்கன்னா அது அண்டை வெளிய ஆராய்ச்சி பண்ணித்தான்னு நான் நம்பலை.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு. நமக்குள்ள ஒரு பேரண்டம் இருக்கு. நட்சத்திர கூட்டங்களிருக்கு. கிரகங்கள் இருக்கு. கிரக சஞ்சாரம் இருக்கு. அமாவாசை நடக்குது,பவுர்ணமி நடக்குது. ஈகோ என்பது வலுவுறாத காலம். மக்கள் குழுக்களாய்,குழுவின் நலத்தை மட்டும் நாடி வாழ்ந்த காலம் .எனவேதான் அந்த ரிஷிகள் மகரிஷிகள் தமக்குள் இருந்த பேரண்டத்தை வேறொரு அலைவரிசையில் தரிசித்தே ஜோதிஷ சித்தாந்தங்களை உருவாக்கியிருக்க வேண்டும்.

ராசிச்சக்கரம் என்பது வெறுமனே மக்களை 12 மந்தையா பிரிச்சு பலன் சொல்லத்தான்னு நான் நம்பலை. அதுல சூட்சுமம் இருக்கு. அதை ஊன கண்ணால அகங்காரத்தோட, சுய நலத்தோட பார்த்தா ஒர் ல...வும் புரியாது. ஆனால் அதுல அடங்கியிருக்கு சூட்சுமம். அதை தெரிஞ்சிக்கிட்டா அதனோட நோக்கத்தை புரிஞ்ச்சிக்கிட்டா முக்தி தான். அதுல பரிணாம தத்துவம் அடங்கியிருக்கு. ஆன்மீகத்தின் சாரம் இருக்கு.

ராசிச்சக்கரத்தை பத்தி இத்தனை பில்டப் கொடுத்தாலும் செய்தில வருமே நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல் படினு இந்த பதிவை அந்த கேட்டகிரில வச்சிக்கங்க.

நாடி ஜோசியத்துல உங்க முன் பிறவி,பின் பிறவி பத்தியெல்லாம் வருதுனு பேசிக்கிறாங்க. நான் போன சின்ன காஞ்சிவரத்துல பாவம் என் கிட்டே வசமா மாட்டிக்கிட்டு காசை கூட திருப்பிக்கொடுத்துட்டாக.

என்னை பொருத்தவரை படைப்பு,பிறப்பு, வாழ்க்கையெல்லாத்தயுமே ஒரு மெகா தொடரா உணர்ரேன். இதையெல்லாம் சொல்லி எனக்கு வேட்டியோ இல்லே ஆத்துக்காரிக்கு புடவையோ தானம் கேட்க போறதில்லை. ( சுயலாபமில்லேனு சொல்லவரேன்) இந்த மெகா தொடர் இன்றைய தொடர்கள் மாதிரி டி.ஆர்.பி ரேட்டிங்கை பொறுத்து யு டர்ன் எல்லாம் அடிக்காம நூல் பிடிச்ச மாதிரி போவுது. (அதுவும் கோல்டன் த்ரெட் ).

இதுக்கான விடை ராசி சக்கரத்துல அடங்கியிருக்கிறதா நான் நினைக்கிறேன். இன்னைக்கு ஒரு கன்னிராசி பார்ட்டி புட்டுக்குச்சு. தொழில் லேப் டெக்னீஷியன். ஆர்.எம்.பி சர்ட்டிஃபிகேட்டை கைல வச்சிக்கிட்டு வெள்ளை வெட்டைக்கெல்லாம் ஹெவி டோஸ் ஆன்டிபயாடிக்ஸ் கொடுத்துக்கிட்டு காலத்த ஓட்டுச்சு.

கன்னியா ராசிக்காரவுக நம்ம கிட்ட வந்தா அவிகளுக்கு சொல்ற

முத பாயிண்ட்
"நீங்க பிறந்து வளர வளர உங்களை சுத்தி இருந்தவுகள்ள ஒருத்தர் நோயாளியாவும், இன்னொருத்தர் கடன் காரராவும், இன்னொருத்தர் கோர்ட்டு கேஸுனு அலையறவராவும் மாறிட்டாரா'ங்கறதுதான்.

ரெண்டாவது பாயிண்ட்:
நீங்க கோடிகள்ள டர்ன் ஓவர் பண்ணாலும் கடன் தான் மிஞ்சுதா, ஆயிரக்கணக்கில் ஃப்ரெண்ட்ஷிப் பண்ணாலும் விரோதம்தான் மிஞ்சுதா? எத்தனை ஆரோக்கிய சூத்திரங்களை பின்பற்றினாலும் நோய்தான் மிஞ்சுதா?

மூனாவது பாயிண்ட்:
நீங்க எந்த வேலை எடுத்தாலும் வாய்தா, லிட்டிகேஷன்,ஓவர் பட்ஜெட்டோடதான் முடியுதா?

என்னடா இது முன்,பின் பிறவிகள் பத்தி சொல்றேன்னிட்டு யாரோ ஒரு போலி டாக்டரை பத்தி ரீல் ரீலா விடறான்னு சலிச்சிக்காதிங்க விசயத்துக்கு வரேன். இந்தாளோட வாழ்க்கைய ஒரு ஓட்டு ஓட்டிபார்ப்பம்.

ஊர்ல ரெண்டு க்ரூப்.ரெட்டி க்ரூப் ஒன்னு, வன்னியர் க்ரூப் ஒன்னு வெட்டு குத்து கொலை அனு நித்தியம் நடக்கிற ஊரு நம்ம ஊரு. இந்த டாக்டர் ஊர்ல இருக்கிற நத்தம் , நாடோடி ,புறம்போக்கு ,ஃபோர் ட்வன்டி எதுக்கு வி.டிவந்தாலும் வைத்தியம் பார்த்து ஒரு நெருக்கத்தை மெயின்டெயின் பண்ணிக்கிட்டிருக்கும். இதனால் ரெண்டு க்ரூப்லயுமே அறிமுகங்கள். இதை வச்சு ஊர் பஞ்சாயத்தெல்லாம் பண்ணும். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி இன்னைக்கு புட்டுக்குச்சு.

1989ல கூட கூட்டம் சும்மா அம்மும். (பஞ்சாயத்துக்கு வர கும்பல்) பக்கத்து வீட்டு ரிட்டையர் பெண் டீச்சருக்கு வாரிசு கிடையாது,தனிக்கட்டை. வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை க்ளினிக்ல பூஜை போட்டு வாழப்பழம் கொடுத்தே அந்த பார்ட்டிய கைல போட்டுக்கிட்டு அந்த வீட்டை தன் பேருக்கு எழுதி வாங்கிருச்சு கன்னிராசி.

அப்புறம் சந்துல ஒரு வீட்டை வாங்கி பக்கத்து வீட்டுக்காரனோட வில்லங்கம். அதுல ரெட்டி க்ரூப் ஒன் சைட் செட்டில் மெண்ட் செய்துர ( நியாயப்படி பார்த்தா நியாயமானதுதான்) கன்னிராசி ரெட்டி க்ரூப்பை கழட்டி விட்டுருச்சு. கூட்டம் குறைய ஆரம்பிச்சுருச்சு. இதுல சாதி வெறி வேற. கட்சி மாறி கூட தேர்தல் வேலை செய்துச்சு.

ஏரியால பந்தா மட்டும் அப்படியே மெயின்டெயினென்ஸ். தீபாவளிக்கு ஏரியால இருக்கிற பொறுக்கி பசங்களுக்கெல்லாம் கவர்ல காசு போட்டு பக்ஷீஸ். தெரு நீளத்துக்கு பட்டாசு. இந்த செலவெல்லாம் பட்ஜெட்ல துண்டு விழ ரெண்டாவது பெண்ணுக்கு கொடுக்க வரதட்சிணை காசு இல்லாம அக்கா பெத்த நொண்டி +பொறுக்கிக்கு கட்டி வச்சுருச்சு.

அந்த வம்சத்துலயே தப்பி பிறந்து வாய் நிறைய சிரிக்கிற ஒரே பையனை விபத்துல அள்ளி கொடுத்துருச்சு. டீச்சர ஏமாத்தி வாங்கின வீடு சேல்ஸ் ஆயிருச்சு. வாலண்டரி ரிட்டையர் மெண்ட் வாங்கியாச்சு. போலி வைத்தியர்களா பெருகி போயிட்டாங்க தொழிலும் டல்லடிக்க,பஞ்சாயத்துகளும் குறைஞ்சி போக பொழப்பு நாறிப்போயிட்டாலும் வெத்து வேட்டு விட்டுக்கிட்டு இருந்த பார்ட்டி இன்னைக்கு புட்டுக்குச்சு.

பார்ட்டியோட வாழ்க்கையை ரீவைண்ட் பண்ணி ஸ்லைட் ஷோவா பார்த்தா காணக்கிடைக்கிறதெல்லாம் நம்பி வந்தவுக கிட்டல்லாம் பொய் ,திருடு,பித்தலாட்டம்,ஏமாத்து, சதி, கடன்,வழக்கு, விவகாரம், இதான் தெரியும்.


இந்தமாதிரி வாழ்க்கைய வாழ்ந்த ஒரு பார்ட்டி சாகற கணத்துல என்ன நினைச்சிருக்கும்? சாகற செகண்டுல நீங்க என்ன நினைக்கிறிங்களோ அது தொடர்பான பிறவிதான் கிடைக்குங்கறத மனசுல வச்சு யோசிங்க.

அய்யய்யோ என்ன லைஃபுடா இது. நம்.பி வந்தவனெல்லாம் எக்ஸ்ப்ளாயிட் பண்ணிட்டமே வாழ் நாளை எல்லாம் வம்பு,வல்லடி,வழக்கு விவகாரத்துக்கே செலவழிச்சுட்டமே . ஷிட் அடுத்த பிறவியிலயாவது ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஷிப். ஃப்ரெண்ட்ஷிப் தவிர வேற எதுக்கும் ப்ராமினென்ஸ் இல்லாத வாழ்க்கைய வாழனும்னுதானே நினைச்சிருக்கும்.

அந்த எண்ணம் ஈடேறனும்னா அந்த பார்ட்டி அடுத்த பிறவில துலா ராசிலதான் பிறந்தாகனும். ஏன்னா துலாராசிகாரவுக வாழ்க்கைய பார்த்திங்கனா அவிக வாழ்க்கைய தொடர்ந்து ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் தான் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுவாக.

இப்படியாக ஒவ்வொரு ராசிக்காரனும் அடுத்த ராசிலதான் மறுபிறவி எடுப்பான்னு ஆணித்தரமா என்னால சொல்லமுடியும். இப்போ முத ராசிலருந்து ஆரம்பிப்போமா.

மேஷம்:
இந்த ராசிக்காரவுக ரொம்பவே சுறுசுறுப்பா இருப்பாக. எதிரி யாரு என்னனு பார்க்கமாட்டாக படக்குனு மோதிருவாங்க. ஒரு ப்ளான் இருக்காது. மளமளனு செயல்பட்டுகிட்டே போவாக ஒரு ஸ்டேஜ்ல திக்குதெரியாம நின்னுருவாக. பணம்,குடும்பம்,பேச்சு,வார்த்தை,சரசம்,சல்லாபம்,ரசனை, தீனி, நொறுக்குதீனி இதுக்கெல்லாம் இவிக லைஃப்ல இடமே இருக்காது. சதா தன்னை பத்தி, தன் முயற்சிகளை பத்தி,தன் முன்னேற்றத்தை பத்தியே சிந்தனை இருக்கும். இந்த சோம்பேறி உலகத்துல சுறுசுறுப்பா துடிப்பா இருந்த ஒரே காரணத்தால எதிரிகளை சம்பாதிச்சு லொள்ளுக்குள்ளாகி நாறியிருப்பாக . இவிக அடுத்த பிறவில ரிஷபராசிலதான் பிறக்க நினைப்பாங்க ஏன்னா.........

ரிஷபம்:
இவிகளுக்கு பணம்னா உயிரு. இவிக நட்பு,விரோதம் எல்லாத்துக்கும் பணம்தான் காரணமா இருக்கும். கூடப் பிறந்தவுகளை கூட மறந்து குடும்பம் குடும்பம்னு மாடு மாதிரி உழைப்பாங்க. பேச்சுன்னா வெல்லம். நல்ல ரசனை இருக்கும். தீனின்னா முதல்ல நிப்பாங்க. சமையல் பக்குவம்லாம் மாஞ்சு மாஞ்சு சொல்வாங்க. செக்சுல நிறையவே கிழிக்கனும்னு நினைப்பாங்க ஆனா துரித ஸ்கலிதம் மொக்கையாக்கிரும். இதனால கூட கில்ட்டியால பெண்டாட்டி தாசர்களாயிருவாக. இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் உண்டு. பயம் இருக்கும்.. லேசான மிரட்டல் இருந்தாலே ஒடச்சி திருப்பிக்குவாங்க. ரிஸ்க் எடுக்கமாட்டாங்க. இவிக வாழ்க்கை செக்கு மாடு மாதிரி சுத்தி சுத்தி வருமே தவிர வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டாங்க. மாற்றத்தை விரும்பாத ராசி இதான்.

இவிக தான் அடுத்த ஜென்மத்துல மிதுன ராசில பிறப்பாங்க. ஏன்னா மிதுன ராசிக்காரவுக பணவிசயத்துல சூதாட்டத்தனமா இருப்பாங்க. சகோதரர்கள்,பயணங்கள் ,செக்ஸ் இதான் முக்கியத்துவம் வகிக்கும். பேச்சு மாறுவாக. குடும்பத்தை விட்டு ஈசியா பிரிவாக. தேவையிருந்தா மானாவரியா பேசுவாக. தேவையில்லன்னா முத்து உதிருமே தவிர பேச்சு வராது. பயங்கர ரிஸ்க் எல்லாம் ஃபேஸ் பண்ணுவாங்க.

இவிக அடுத்த ஜன்மத்துல கடக ராசில பிறப்பாங்க. ஏன்னா கடக ராசிக்காரங்க தாயையே சுத்தி சுத்தி வருவாக.( அன்போ விரோதமோ எதுவா இருந்தாலும் அம்மாக்கிட்டேதான். பெண்டாட்டிய கூட வேலக்காரிதனமாதான் பார்ப்பாங்க. வீடு வீடுனு வீட்டையே கட்டிக்கிட்டு அழுவாங்க. பிடிவாதமிருக்கும். மாற்றத்தை ஆரம்பத்துல எதிர்த்தாலும் பேஷா செட் ஆயிருவாங்க.

இந்த கடக ராசிக்காரங்கதான் அடுத்த பிறவில சிம்மராசில பிறப்பாங்க. ஏன்னா.. சிம்மராசிக்காரன் வீட்டு வேலைய கூட விட்டுட்டு ஊர் வேலைய செய்வான். வீட்ல இருக்கிறவக "அவனா அவன் தண்டத்தீனி தாண்டவராயன்"னுவாங்க. ஊர்ல இருக்கிறவகளோ அந்த தம்பியா நல்ல ஹெல்பிங்க் நேச்சரும்பாங்க. ஆனால் இவிகளுக்கும் செக்ஸ் மேல தணியாத ஆர்வமிருக்கும். அதே சமயத்துல தாய் மேல நல்ல மரியாதை வச்சிருப்பாங்க. தாய் சொல்லை தட்டாத தனயன்னா அது இவிகதான். கடக ராசில பிறந்து அட்ஜஸ்ட் ஆகியே வாழ்ந்த வாழ்க்கைக்கு கொயட் ஆப்போசிட்டா இந்த பிறவில கலகக்காரர்களா இருப்பாங்க. நம்பி வந்துட்டா உசுரை கூட கொடுத்து காப்பாத்துவாக. ஆனால் உலகம் இவங்களோட தன்னம்பிக்கைய ஆணவமாவும், தான குணத்தை திமிராவும், உதவும் தன்மையை இளிச்ச வாய்த்தனமாவும், பொதுவேலைல இறங்கறத உருப்படாத குணமாவும் ட்ரீட் பண்ணி ரொம்பவே நோகடிப்பாங்க. இவிக மனசுல வாரிசுகள் குறித்த அனேக கனவுகள் இருக்கும். ஆனால் இவிகளுக்கு ஆண்வாரிசு இல்லாம போகலாம். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணேனு குழந்தை பிறக்கும் . அதுவும் நாமர்தாவா மாறி கவலைய குடுக்கும்

இப்படி நொந்து நூடுல்ஸ் ஆன பார்ட்டிகள்தான் அடுத்த பிறவில அண்டினவனை எல்லாம் எக்ஸ்ப்ளாயிட் பண்ற கன்னிராசில பிறப்பாங்க. கன்னிராசிக்காரவுக தங்களோட மித்ர துரோகத்தை நினைச்சு அடுத்த ஜன்மத்துல நட்புக்கு முக்கியத்துவம் தர்ர துலா ராசில பிறப்பாங்க. துலா ராசில பிறந்து நட்பு,காதல்,மனைவினு சுத்தி சுத்திவந்து நொந்து போனபிறகு அடச்சீ இந்த மென்மையான உணர்வுகளே வேணாம்னு ராசிச்சக்கரத்துல அஷ்டம ராசியான விருச்சிகத்துல பிறப்பாங்க.

விருச்சிக ராசியோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா.. இவங்களை சேட்டிஸ்ஃபை பண்ண கடவுளால கூட முடியாது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைம்பாங்களே அப்படி சுற்றத்துல குற்றம் பார்க்கிறதும் தேள் கொட்டற மாதிரி அந்த குற்றங்களை பட்டியல் போடறதுமே இவிக வேலையா இருக்கும்.

(சரி இந்த தியரிய பத்தி உங்க கருத்தை தெரிவிங்க.. அடுத்தபதிவுல மத்த ராசிகளை பத்தி சொல்றேன்)