Wednesday, January 27, 2010

ஆளுக்கொரு அஞ்சு நிமிசம்

உலகத்துக்கேத்த மாதிரி தன்னை மாத்திக்கிறவன் வியாபாரியாவறான். தனக்கேத்தமாதிரி உலகத்தை மாத்தறவன் தலைவனாவறான். உலக நாடுகளை சேர்ந்த மக்கள் காட்டில் வாழும்போதே ஸ்விம்மிங் ஃபூல் கட்டி முதல்ல தனி குளியலறைல குளிச்சு சுத்தமான பிற்பாடு ஜலகிரீடை பண்ண நாகரீகத்துக்கு சொந்தக்காரவுக நாம. நம்ம நாட்டோட  நிலப்பகுதிகளை பாக்,சீனா ஆக்கிரமிச்சாலும், பாராளுமன்றத்தையே  தாக்க வந்தாலும்,  நம்ம கரன்சிய அவிக ப்ரஸ்ல அச்சாக்கி புழக்கத்துல விட்டாலும் கேட்க நாதியில்லே.

இந்தியா உருப்பட புதுசா எதையோ கண்டுபிடிக்கனும், புதுசா எதையோ இம்ப்ளிமென்ட் பண்ணனுங்கற அவசியமில்லே. வர்ணாசிரம தர்மம், புராண புருடாக்கள் (அவற்றின் உண்மையான அர்த்தம் வேறு ) , மூட நம்பிக்கைகளை  தவிர்த்து நம்ம முன்னோர்கள் வாழ்ந்த  வாழ்க்கையை வாழ்ந்தாலே போதும்.

உலகத்தின் பிச்சை பாத்திரமா மாறிப்போன இந்தியா அட்சய பாத்திரமா மாறிரும்.  காம சாஸ்திரம் தோன்றிய இந்த நாட்ல பிறந்த ஒவ்வொரு ஆண்,பெண்ணும் தங்கள் சக்தியை காம இச்சைகளை  மறைத்துக்கொள்வதிலும், அடக்குவதிலும்,  நிறைவேற்றிக்கொள்ள முயல்வதிலுமே இழந்து கிட்டிருக்காக.

ஆட்சியாளர்களே காம நோய் மறைக்க  மன நோய்  கொண்டவர்களா மாறிட்டிருக்காங்க.

புதுசா பிடிக்கவேண்டிய அவசியமில்லே. விட்டதை பிடிச்சாலே போதும். ஆனால இவுக அமெரிக்காவோட ஷூ லேசை பிடிச்சு தொங்கிக்கிட்டிட்டிருக்காக. சிறார் முதல் கிழவாடிகள் வரை காமம் மறுக்கப்பட்டதால் மன முதிர்ச்சி இன்றி சில்லறை விளையாட்டுகள் மூலம் நாட்டு முன்னேற்றத்துக்கு கல்லறை கட்டிக்கிட்டிருக்காக.

நாட்டுவளங்களும், அரசாங்க பணமும், சக்தியும்,நாட்டு மக்களோட உழைப்பும், நேரமும் ,அறிவும் உதவாக்கரை விசயங்களில் விரயமாகிக்கொண்டிருக்கின்றன.  ஜஸ்ட் அந்த 5 நிமிச "விளையாட்டுக்கு" ஒரு பெண்ணை தயார் பண்றதுக்காக ஒரு வேலை வெட்டியில்லாத இளைஞன் லட்ச ரூபாய் பைக்கை வாங்கி, வெறும்
பெட்ரோலுக்கு மட்டும் ஆயிரக்கணக்குல செலவழிக்கிறான். அந்த ஒரு லட்ச ரூபாய்ல நாலு ஏழைக்குடும்பத்துக்கு வீட்டையே கட்டிக்கொடுக்கலாம். அந்த இளைஞன் மூலம் விரயமாகிற அன்னிய செலாவணி க்ரிமினல் வேஸ்டு.

வெறுமனே வரி வசூல் செய்ய மட்டுமே லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் வேலை செய்யறாங்க. வரி விதிப்பை குறைச்சு, எளிமைப்படுத்தி,லாஜிக்கலா மாத்தி , கட்டறதுக்கு செலவாகிற நேரத்தை குறைச்சு  ப்ளான் பண்ணினா , வரி வசூலை மோட்டிவேட் பண்ற வேலைய வரி கட்டுவோர் சங்கங்களுக்கே கொடுத்து தொலைச்சா ஆன் லன்லயே க்ரெடிட் ஆயிரும்.

அப்படியும் வரி கட்டாத  நாயை விளக்குகம்பத்துல கட்டி வச்சு தெரு நாய்களை ஒன்னுக்கடிக்க வச்சுரனும். இதையெல்லாம் இப்படி உடுப்பி ஓட்டல் சர்வர் கணக்கா பட்டியல் போட காரணம் சனம் செத்துப்போகுதய்யா.  நாளைக்கு
எந்த கம்னாட்டிக்கு பிறந்த கம்னாட்டி முதல்வர்/பிரதமரானாலும் ஆள மக்கள் வேணமில்லியா.இது கூட உறைக்க மாட்டேங்குது பாஸு.

சனம் சாகுது. தற்கொலை பண்ணிக்குது,கொலையாகுது,விபத்துல சாகுது, அட இந்த 20 ஆம் நூற்றாண்டுல கூட காலரால சாகுதய்யா சனம்.  வயித்து பாட்டுக்கு தனக்கு உரிமையான தன் உடலை வச்சி அஞ்சு பத்து சம்பாதிக்கிற செக்ஸ் தொழிலாளி போலீஸ்கிட்ட லத்தி அடி வாங்குறா. ஆனால் மக்கள் பிச்சையளித்த அதிகாரத்தை வச்சுக்கிட்டு பாரதமாதாவையே ரூட்ல விடற நாய்களுக்கு அதே போலீஸ் பாதுகாப்பு கொடுக்குது.

சமத்துவம் , சமோசானு பீலா விடறானுங்க.குடியரசாகி 60 வருசமாகுது . என்னத்த சமத்துவம் வாழுது. அரசியல் சாசனப்படி  இந்தியனுக்கு உயிர்வாழும் உரிமை இருக்காம். குடிக்க சரியான தண்ணி கிடையாது, தப்பித்தவறி சோறு கிடைச்சி சாப்டு தொலச்சா மலம் கழிக்க சரியான கழிவறை கிடயாது. ரோட்ல இறங்கி நடந்தா போக வேண்டிய இடத்துக்கு போய் சேருவோங்கற கியாரண்டி கிடையாது. இன்னைக்கு விக்கிற விலைவாசில வாழறது அப்புறம் உயிரோட கிடக்கவாவது முடியுமா?

எதிர்காலத்தை நினைச்சு பார்க்கிற ஆண்கள்ள ஆண்மை குறைஞ்சு போச்சு, மெனோஃபஸ் வந்தாலன்றி பெண்ணுக்கு திருமணமாகமாட்டேங்குது. வேலை கிடையாது. கிடைச்ச வேலைக்கு கியாரண்டி கிடையாது. குந்த சொந்த வீடு கிடையாது ( சில குள்ள நரிகளுக்கு மட்டும் ஊருல பாதி சொந்தமா இருக்கு. அவன் எவன் நிலத்துலயாவது ரோட் போடலாம். எவன் பெண்டாட்டியவாவது பெண்டாளலாம்) கத்திக்குத்து, வெடிகுண்டு வீச்சு இல்லாத பேப்பர் வருதா? இதுக்கெல்லாம் என்னதான் தீர்வு?

ஆப்பரேஷன் இந்தியா 2000  இது ஒரு ஆக்ஷன் ப்ளான். இந்தியாவை பணக்கார நாடாக்க நான் போட்ட திட்டம்னு உங்கள்ள பலருக்கு தெரிஞ்சிருக்கலாம். தெரியாதவக இங்கே ***********அழுத்தி ஒரு பாட்டம் படிச்சுருங்க.  பூஸ்ட் விளம்பரத்துல சச்சின் சொல்றாப்பல " ஆப்பரேஷன் இந்தியா 2000 ஈஸ் சீக்ரெட் ஆஃப் எனர்ஜி".

 கடவுளுக்கு நமக்கும் உள்ள அக்ரிமென்டே என்னடான்னா "பாஸு! நீங்க என்னை பார்த்துக்கங்க, நான் தாய் மண்ணை பார்த்துக்கறேங்கறதுதான். இந்த திட்ட பிரச்சாரத்துக்காகவும் அமலுக்காகவும்  24 மணி நேரம்,365 நாள் உழைச்சேங்கறதெல்லாம் டுபுக்கு. சில பல நேரங்கள்ள இடைவெளி வந்தது நிஜம் தான். ஆனால் அதுக்கு காரணம் ரெண்டாதான் இருக்கும். ஒன்னு அந்த சமயம் சோற்றுக்கில்லாம பட்டினி கிடந்திருப்பேன். இல்லே செம வசதில இருந்திருப்பேன். ஆனால் எப்பல்லாம் நான் இந்த திட்டத்துக்காக குரல் கொடுத்தேனோ அப்பல்லாம் ஆத்தா என் கஜானவ தங்க காசுகளால நிரப்பலன்னாலும் என் தட்டை சோறாலயும், பாக்கெட்டை பணத்தாலயும் நிரப்பியிருக்கா.

1986ல ஒரு சின்ன சம்பவம் இந்த திட்டத்துக்கான விதையா அமைஞ்சது. அத இதே பதிவுல சொல்லியிருக்கேன். 1989 ல ஒரு காதல் திருமணம்.  ஊரே ஒன்னு கூடி பிரிச்சாச்சு ,1991ல இன்னொரு காதல் திருமணம் "சாவுடா மகனே "னு விட்டுட்டாங்க. 1986ல நான் தீட்டின திட்டம் ஜஸ்ட் ஒரு அருள்வாக்கு மாதிரிதான். அதுக்கு லாஜிக்கோ,தியரியோ, ஆதாரமோ கிடையாது. ஆனால் அதுக்கு பின்னாடி என் வாழ்க்கைல  நடந்த ஒவ்வொரு சம்பவமும் அந்த திட்டத்தை பட்டை தீட்டற ஸ்டஃபை எனக்கு கொடுத்துக்கிட்டே இருந்தது. இது ஒரு புறம்னா 100 வருஷம் இமயமலைல தபஸ் பண்ணா கூட கிடைக்கும்னு சொல்லமுடியாத மிஸ்டிக் நாலட்ஜெல்லாம், அதிசய சக்தியெல்லாம் திக்குமுக்காட வச்சது.

நான் ஒரு விசித்திர கலவை. நம்ம ஹெடர் இமேஜை பார்த்தாலே புரிஞ்சிருக்கும் உச்சில ஓம் கீழே பார்த்தா பெரியார். நான் ஒரு நல்ல அப்சர்வர். நல்ல தொகுப்பாளன். நல்ல இணைப்பாளன். (என்னால் ஒரே சமயத்தில்  ராமசாமி நாயக்கரையும், இராமாயண காவிய நாயகன் ராமனையும் ஒரு சேர போற்றிப்புகழ முடியும், பக்தி செய்யமுடியும்) நான் ஒரு   நல்ல விரிவுரையாளன்.  எதுலயும் என் ஈகோவையோ, என் கொள்கைகளையோ திணிக்கவே மாட்டேன். உண்மையை உள்ளபடி ஏத்துக்க தயங்கினதே இல்லை. (ஏற்கெனவே என் நினைவுகளில் பொதித்து வைத்துள்ள பரீட்சிக்கப்பட்ட  அக்மார்க் உண்மைக்கு 100 சதம் எதிரான உண்மை எதிர்பட்டாலும் என் நினைவு கஜானாவில் வரவு வைத்துவிடுவேன்.  இந்த கல்யாண குணங்களெல்லாம் வந்தது "மாதவ சேவா "என்று நம்பி நான் செய்த  "மானவ சேவா"காரணமாகவே என்று திடமாக நம்புகிறேன்.

காலமும், படைப்பும் தம்  ரகசிய பெட்டகங்களை விரிய  திறந்து காட்டின. சூட்சுமத்தில் மோட்சம் என்பார்களே அந்த சூட்சுமம் எனக்கு காட்டிக்கொடுக்கப்பட்டது. ஜஸ்ட் லைக் தட் ஸ்பார்க் ஆகிக்கொண்டே  இருக்கும். நான் ஜஸ்ட் ஒரு ஸ்டெனோ கணக்காய் தட்டச்சிகொண்டே போவதுதான் வேலை.

இந்த அண்ட சராசர பிரபஞ்சங்கள்  இல்லாத நாளே கிடையாது. இது மறுபடி மறுபடி அழிந்து மறுபடி மறுபடி உருவாகிக்கொண்டே இருக்கிறது. மகா வெடிப்பின் காரணாமாய் ஏற்பட்ட வெப்பத்தால் அண்டம்  விரிவடைந்துகொண்டே இருக்கிறது. கடைசி  கட்டத்தில் இந்த வெப்பம் வேகமாக வெளிப்பட்டு   ஒரேயடியாய் குளிர்ந்தும் போகலாம். மீண்டும் ஒரு வெடிப்பு நிகழலாம். அல்லது இரண்டுமே ஒரேசமயத்தில் நடந்து கொண்டும் இருக்கலாம். ஆனால் நாம் இல்லாத நாளே கிடையாது. இன்று நான் சொல்லும் விசயங்களை பல பிறவிகளாய் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறேன். காதுள்ளவர் கேட்க கடவர்.

எதிர்கால சம்பவங்கள் அனைத்தும் பால்வீதியில் நினைவுகளாய் மிதந்து கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு ஏதுவான மூளைகளை அடைகின்றன். இணக்கம் படைத்த மூளைகள் அவற்றை ஏற்றுக்கொண்டுவிடுகின்றன. ஏற்றுக்கொண்ட மூளைகளுக்கு மூலை,முடுக்கு,இருட்டு,சந்தேகம் எல்லாம் ரத்து செய்யப்பட்டுவிடுகின்றன.

சரி பதிவு ரொம்பவே மிஸ்டிக்காக போகிறது. விபூதி கேட்டு மெயில் போட்டுர போறிங்க விசயத்துக்கு வந்துர்ரேன்.

1993ல இந்த திட்டத்தோட சாராம்சத்தை ஜனசக்தி இதழுக்கு எழுதி அனுப்ப அது பிரசுரமுமாச்சு. 1991 முதல் 1997 வரை வேலையில்லாத நடுத்தர குடுபத்து இளைஞசனாக ( காதல் கடிமணம் கொண்ட புது மாப்பிள்ளை வேறு) சம்சார சாகரத்துல அலை பாஞ்சுக்கிட்டே இருந்தாலும் ஆ.இ குறித்த முயற்சிகள் தொடர்ந்துக்கிட்டேதான் இருந்தது. என்.டி.ஆர் மூனாவது முறை சி.எம்.ஆனப்ப ஆ.இ வை அவருக்கு அனுப்பினேன். அப்போ அவர் நேஷ்னல் ஃப்ரண்ட் சேர்மன்னு நினைக்கிறேன். நேஷ்னல் ஃப்ரண்ட் ஆட்சிக்கு வந்தா கங்கை காவிரி இணைப்பை மேற்கொள்வோம்னு அறிக்கை கூட விட்டார் ( நம்ம கடிதத்துக்கு பிறகு) மத்திய மந்திரியா இருந்த வாழப்பாடி ராமமூர்த்திக்கும் அனுப்பினேன் அவரோட செக்ரட்டரி ராமர் கோவில் சுண்டல் மாதிரி ஒரு பதிலை கூட அனுப்பியிருந்தார். இதெல்லாம் உதிரி உதிரியா செய்த முயற்சிகள். 1994ல அப்பா செத்துப்போக , 1997 நவம்பர்ல அப்பா சொத்து சேல்ஸ் ஆகி ரூ.1,02,000 என் பங்கா கைக்குவர அதை இரண்டு வட்டிக்கு வெளிய விட்டு வேட்டிய வரிஞ்சுகட்டினேன். என் திட்டத்துக்கு எழுத்துவடிவம் கொடுத்தேன். ரோனியோ போட்டு 200 பிரதிகள் தயார் செய்து 1998 ஜூன் 11 ஆம் தேதி பார்லெமெண்ட் ஸ்பீக்கர் பாலயோகிக்கு ஆர்.பில அனுப்பினேன். அங்கிருந்து ப்ராசஸ் ஆரம்பமாச்சு. ஏன் சரித்திரம்னு கூட சொல்லலாம். இந்த சரித்திரத்தையும் இந்த தொடர்பதிவுல சொல்லாம விடறதாயில்லை.

 2004 தேர்தலின் போது தெலுங்கு தேசத்தை தோற்கடிங்கனு துண்டுபிரசுரம் அச்சிட்டு குட்டித்தலைவர் ரேஞ்சுல பிரச்சாரம்லாம் பண்ணினேன். தேர்தல்ல ராஜசேகர் ரெட்டி முதல்வராகியும் 100 நாள்வரை அவருக்கும் நம்ம  திட்டத்தோட பிரதிகளையும் ரிமைண்டர்களையும் அனுப்பிக்கிட்டேதானிருந்தேன். அதுக்கு பிறகு 2004  அக்டோபர்ல 12 நாள் உண்ணாவிரதம், 2005 ஏப்ரல்ல தலை நகருக்கு பாதயாத்திரை அறிவிப்பு வரை ஆ.இ என் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அம்சமா இருந்தது.

ஒய்.எஸ்.ஜலயக்னத்தை அறிவிச்சாரு. இந்த ஒரே ஒரு அறிவிப்பால  அவரு நம்மாளா போயிட்டாரு. ஒய்.எஸ்.ஆருக்கு அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே  ஈ நாடு,ஆந்திர ஜோதிங்கற ரெண்டு பத்திரிக்கைகளும் ஆப்பு வைக்க முயற்சி பண்ணிக்கிட்டே இருந்தாங்க. நான் என் மோரல் சப்போர்ட்டை ஒய்.எஸ்.ஆருக்கு தொடர்ந்து தரணும்னு முடிவு பண்ணிட்டேன். ஒய்.எஸ்.ஆர் மரணம் வரை நதிகளை இணைச்சா என்ன அணைகளை கட்டினா என்னா நீர்பாசன பற்றாக்குறை தீரப்போகுது. ஆந்திராவை பார்த்து இன்ன பிற மானிலங்களும் இதை காப்பியடிக்கும்னு கொஞ்சமா சுஸ்தாயிட்டேன்.

இப்போ மறுபடி ஆ.இ மேல ஃபுல்லா கான்சன்ட் ரேட் பண்றதா உத்தேசம். நிற்க
இன்று படித்து,பட்டங்கள் வாங்கியும் வேலை கிடைக்காது ஒர்க்லெஸ் மைன்ட் ஈஸ் சேட்டன்ஸ் (மலையாள சேட்டன் இல்லிங்கோவ் சைத்தான் என்ற பொருளில் எழுதியுள்ளேன்)  ஒர்க்ஷாப் என்ற கதையாய்  பொழுது போகாத உளு உளா காட்டி உத்தமர் அப்துல் கலாம் சொன்னாரென்று  கனவுகளிலேயே கரைந்து,  காமாக்னியால் சாம்பலாகிவரும்  ஒவ்வொரு இந்திய இளைஞனுக்கும் , விவசாயத்துறையை சார்ந்து வாழும் 70 சதவீதம் பேருக்கும், அவர்களை சார்ந்து வாழும் மிச்சமுள்ள ஜனத்தொகைக்கும் உயிர் பாதுகாப்பு, உணவு, உடை, இருப்பிடம், செக்ஸுக்கு உறுதி வழங்கும் கவுரவமான வாழ்வை வழங்கிட இந்தியாவை ஞானத்திலே பரமோனத்திலே மட்டுமல்லாது  அனைத்து துறைகளிலும் நெம்பர் ஒன் ஆக்க   ஆப்பரேஷன் இந்தியா 2000 குறித்த கம்ப்ளீட் பயோடேட்டாவை இனி பார்ப்போம்..

பதிவுகளின் எண்ணிக்கையை பொருத்த அளவில்  750 ஐ தாண்ட்ம்போதும்  கூட இந்த பதிவை போடலன்னா எனக்கும் ரஜினிகாந்துக்கும் வித்யாசமில்லாம போயிரும். அவர் அப்படித்தான் தூக்கிவிட்ட சின்ன சின்னப்ரொட்யூசரையெல்லாம்  கழட்டிவிட்டுட்டு சன் டிவிக்கு அடகு போயிட்டார். அவரை தூக்கி விட்ட தலித், மற்றும் பி.சி இளைஞர் கூட்டத்தை நட்டாற்றில் விட்டு பார்ப்பன கூட்டத்தின் பிணைக்கைதியாகிவிட்டார்.

 நாம அந்த அளவுக்கு க்ளிக்கும் ஆகவில்லே. அப்படியே ஆனாலும் வேர்களை மறக்கிற ஜாதி நாம இல்லே.  மறக்க நம்மால முடியவும்  முடியாது சாமி. சாதாரணமாவே நள்ளிரவு ரெண்டரைக்கு மேலதான் தூக்கம் வரும் இந்த மாதிரி துரோகங்கள் வேற மண்டைக்குள்ள வண்டா குடைஞ்சிக்கிட்டு இருந்தா வாரக்கணக்குல தூக்கம் வராம கண்கள் இடுங்கி  கை நடுங்கி சாகணும்.

எப்படியும் மரியாதையான வாழ்க்கையை தான் வாழலே தாளி மரியாதையான சாவாவது வரட்டுமே. இத்தனைக்கும் ஆப்பரேசன் இந்தியா 2000 என்றால் என்னவென்று தெரியாத புதிய வருகைகள் திட்டத்தின் முக்கிய அம்சங்களை வாசிக்க இங்கு அழுத்தவும்*********.

இத்தனைக்கும் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் எப்படி க்ளிக்காச்சுனு இந்த பதிவுல சொல்றேன். அது 1985ன்னு நினைக்கிறேன். அப்போ ஒரு டெயிலர் கடை தான் கேர் ஆஃப். இத்தனைக்கும் நத்தம்,நாடோடி,புறம்போக்கு, பிக் பாக்கெட் , ஃபோர் ட்வன்டி சேர்ர ஜமா இல்லே. எல்லாம் மரியாதைக்குரிய குடிமகனுகளோட வாரிசுகள் போது போகாத சமயம் கூடற ஜமா அது.

(1978)அஞ்சாம் வகுப்பு படிக்கும்போதே எட்டணா குடுத்து பருவம் மாதிரி புத்தகங்களை வாசிச்சு தியரில  தேர்ந்திருந்தாலும் அசலான செக்ஸ் என்பது 1984லதான் சாத்தியமாச்சு. நமக்கு தான் எதிலயும் ஆராய்ச்சி மனப்பான்மை உண்டே. அதனால முழுக்க முழுக்க இதாண்டா வாழ்க்கைனு அனுபவிக்கவும்  முடியாம, "எத்தனை பேர் தொட்ட முலை.. எத்தனை பேர் நட்ட குழி"னு முழுக்க முழுக்க விலகவும் முடியாத தவிச்ச  காலகட்டம்.  நம்ம கொலிக்ஸ் எல்லாம் பாவம் அந்தந்த வயசுக்குரிய மனவளர்ச்சி மட்டுமே கொண்டவங்கங்கறதால நாமதான் நம்ம ஜமாவுக்கு  கௌரவ ஆலோசகரா குப்பை கொட்டிக்கிட்டு இருந்தம்.

அப்போ அந்த தெருவுக்கு  பிரம்பு நாற்காலி பண்ணி விக்கிற பையன் ஒருத்தன் ஒரு பெண்ணோட வந்து வீடெடுத்து தங்கியிருந்தான். ஆக்சுவலா அது ஓடிவந்த சோடி. கல்யாணத்துக்கு தேதி குதிராம வெயிட்டிங்ல இருக்கு. அவிகளை பத்தி அப்பப்போ டாபிக் வரும். பேச்சு நடக்கும் அப்பறமா டைவர்ட் ஆகி எங்கயோ போயிரும்.

சம்பவ தினத்தன்னு ஜமால  ஒருத்தன் (இத்தனைக்கும் கவுரவமான குடும்பத்து பையன்.) "மச்சி ! அவனை பாரேன் நாய் கொண்டாந்து போட்ட காஞ்சிப்போன எலும்பு மாதிரி இருக்கான். அவனுக்கு இந்த மாதிரி கட்டை மாட்டியிருக்கு. இவனும்  நம்ம ஏரியாலயே வச்சு  தினசரி ...க்கிறான். நாமளும் வாய்ல விரல போட்டுக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்கோம். இன்னைக்கு ராத்திரி அவன் வீட்டுக்குள்ள  நுழையறோம். அந்த பேந்தா மகன் ஒரு புடிக்கு தாங்கமாட்டான். ஆளுக்கொரு அஞ்சு நிமிசம் என்னா சொல்றிங்க" என்றான்.

அண்ணா சொன்னது போல " நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனல்லதான்" ஆனால் அந்த பையன் சொன்னதை கேட்டு மண்டைக்குள்ள அப்டியே தேனி பறக்குது. அவனை பச்சையா ஏதோ சொல்லி திட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டன். அப்போதான் எனக்கு ஸ்ட்ரைக் ஆச்சு "அய்யய்யோ இவனுக மோசமான பார்ட்டிங்க இவனுகளை  வெட்டியா வச்சா, கால தூக்கிக்கிட்டு அலையுற எருதை விட மோசமாயிருவானுக, காதல்,கல்யாணம், குடித்தனம்  எல்லாமே நாஸ்தி ஆயிரும். முதல்ல இவனுகளுக்கு ஒரு ஓட்டைய காட்டிரனும்,  அப்படியே கை நிறைய வேலைய கொடுக்கனும்" வேலைய கொடுத்தே தீரனும்னு முடிவு பண்ணேனே தவிர என்ன வேலை ,எப்படியாப்பட்ட வேலை, யார் கொடுக்கிறது, சம்பளம் எப்படிங்கற கேள்விக்கெல்லாம் பதிலில்லை.

இந்த கேள்விகளுக்கு பதிலா என் மூளை பெற்றெடுத்த குழந்தை தான் ஆப்பரேஷன் இந்தியா 2000

(அடுத்த பதிவில் தொடரும்