Sunday, January 24, 2010

செக்ஸால் ப்ரக்ஞை மேம்படும்

"ஏங்க உங்க எழுத்துக்கள்ள ஒரு விதமான அவசரம்,எரிச்சல், ரெஸ்ட்லெஸ் தனம், பர்வெர்ஷன் இருக்கு?"

"எழுத்துன்னா என்ன ? மவுன உரையாடல். வெறும் உரையாடல்ல கிடைக்கிற சுகம் என்ன தெரியுமா? வாய்க்கும், ஆசன வாய்க்கும் நேரடி தொடர்பு இருக்கு. ஒரே குழாயோட ஆரம்பமும் முடிவும் தான் வாயும், ஆசன வாயும். வாய்ல ஏற்படற அதிர்வுகள் ஆசனவாயை தாக்கி இனஉறுப்பையும் தொடுது. இதுல ஒரு சுகத்தை அனுபவிக்குது சனம்"

"அய்யய்யே என்ன சார் அசிங்கமா பேசறிங்க? எவனுமே உடலுறவு கொள்றதே இல்லையா? இப்படி பேசித்தான் அந்த சுகத்தை அனுபவிக்கனுமா என்ன?"

"ஏங்க நான் என்ன இல்லாததையா சொன்னேன். ஏன் வாயும்,ஆசனவாயும் வெவ்வேறு குழாய்களோட ஆரம்பம் முடிவா இருக்கா ? இல்லே பல மைல் தூரத்துல இருக்கா? நான் என்ன உண்மைய மாத்தி சொன்னேனா? இதிலென்ன அசிங்கம்? உடலுறவு கொள்றவனோட கதைய பின்னாடி பேசுவோம். 13 வயசுல உடலுறவுக்கு தயாராகிட்ட ஆண்,பெண்ணுக்கு எந்த வயசுல கல்யாணம் பண்றோம்? டைவோர்ஸுக்கு காத்திருக்கிற கேஸ் எத்தினி ? டைவோர்ஸ் ஆன கேஸ் எத்தினி? விடோயர் எத்தினி ? "

"நீங்க சொல்றதை பார்த்தா சனத்தொகைல பாதி பேரு செக்ஸ் இல்லாம இருக்கிறாப்ல இருக்கே ஆமாம் கல்யாணமான கேஸை பத்தி சொல்றேன்னிங்க?"

"சொல்றேன் அதையும் சொல்றேன். பெண்ணுறுப்புல ஆணுறுப்பு இன்செர்ட் ஆன பிறகு 7 தடவை அசைஞ்சா ஆணுக்கு வீரிய ஸ்கலிதமாயிருது. பெண்ணுக்கு 27 தடவை அசையனுமாம் ! அப்பத்தான் அவளுக்கு உச்சம் கிடைக்கும். இந்த சின்ன சூட்சுமம் எத்தினி பேருக்கு தெரியும்? இவன் உடலுறவு கொண்டானா? இல்லே டெஸ்ட் ட்யூப்ல இருக்கிற செமனை கவிழ்த்தமாதிரி கவிழ்த்துட்டானானே அவளுக்கு புரியாது. இதனால இவனுக்கு கில்ட்டி.. அவளுக்கு எரிச்சல். இவளை வேறு வகைல திருப்திபடுத்த பெத்தவுகளை ஓல்டேஜ் ஹோமுக்கு அனுப்பறான். இல்லேன்னா லஞ்சம் வாங்கி 54 இன்ச் கலர் டிவி, வாஷிங்க் மெஷின் வாங்கிதரான்"

" அடடா..லஞ்சம் செழிக்க இப்படி ஒரு காரணம் இருக்கா? "

" ஆமாங்க. சைக்காலஜிப்படி பார்த்தாலும், யோக சாஸ்திரப்படி பார்த்தாலும் குழந்தை முதல்ல தன் ஆசனவாய் மேலதான் கான்சட் ரேட் பண்ணுது. 12 அ 13 வயசுக்கு அதனோட பார்வை இன உறுப்பு நோக்கி மாறனும். ஆனா மார்ரதில்லை. மாற இந்த சமுதாயம் விடறதில்லை.சமுதாயத்துல உடலுறவு ஏறக்குறைய தடை செய்யப்பட்டுவிட்ட காரணத்தால் உடல் பலான சுகத்தை இப்படி குறுக்கு வழியில் (வெறும் பேச்சு) தேடுது. வெறுமனே தின்று கழிப்பவனெல்லாம் இந்த ஜாதிதான். பேசுறானே அதெதாவது ஒழுங்கா,உபயோகமா இருக்கா ? இல்லே. நிறைவேறாத செக்ஸ் கோரிக்கைகள் அவனை சேடிஸ்டா மாத்திருது. வெறுமனே பேசறவன் பேச்செல்லாம் குடி கெடுக்கிற பேச்சாவே இருக்கும். அவனெப்படி அவனோட அசலான உடலுறவு கோரிக்கைய மறந்து /மறக்க முயற்சி பண்ணி இன்னபிற பேசறானோ அப்படியே அவன் பேச்சிலும் அசலான பிரச்சினைகள் தலை காட்டாது. உப்பு ,ஊறுகாய்க்கு உதகாத பேச்சுதான் இருக்கும். இத்தனை சின்ன விசயத்தை புரிஞ்சிக்கிடாம "வாய்ப்பேச்சில் வீரரடி பாப்பா " கணக்காய் சனம் இருப்பதை பார்த்தா எரிச்சல் வராதா? துக்கத்துல இருக்கிறவன் துக்கப்படுத்தி தான் பார்ப்பான். பயத்துல இருப்பவன் தான் பயமுறுத்தி பார்ப்பான் "

" அப்போ மனிதன் ஆசன வாய் பருவத்துல இருந்து மாறமாட்டேங்கிறாங்கிறிங்க. "

"அவன் ரெடி. சமுதாயம் விட மாட்டேங்குது. அய்யா! அப்பா, அம்மா, ஆசிரியர்கள்,சமுதாயம் கரப்ட் பண்ணிட்ட அகங்காரம் நிறைஞ்ச உன் மூளைய விட உன் உடல் இயற்கையோட ஆழ்ந்த தொடர்பை வச்சிருக்கு. அதுக்கு தேவை என்ன? அதனோட தேவைய பூர்த்தி செய்துட்டா மனுஷன் மனுஷனா இருப்பான். மிருகமா மாற மாட்டான். இவனுக இத்தனை பணம் சேர்க்க காரணமே பணமிருந்தா பத்து ஃபிகரை கணக்கு பண்ணலாம்னுதான். என்னடா சோகம்னா பணம் பண்ற டென்ஷன்ல இவனோட ஆண்மையே அழிஞ்ச்சு போகுது. அப்புறம் வயாக்ராவுக்கு செலவழிக்கிறான். இவனுக பதவிக்கும்அதிகாரத்துக்கும் அலைய காரணமே இன்னம் பத்து ஃபிகரை முடிக்கலாம்னுதான். கவர்னர் திவாரி கதை தெரியுமோல்லியோ? அந்த 5 நிமிச சுகத்துக்காக இவன் எத்தனை கோடி மைனிங்க் லீஸ்களை ஃபேவர் பண்ணானோ யாருக்கு தெரியும்? விபச்சாரத்தை லீகலைஸ் பண்ணி தொலைங்கப்பா ன்னிட்டு எழுதினா உடனே கூவ எழுது ,பாவ எழுத்துனு கூவ சனமிருக்கு"

"நான் என்ன அதுலயே மூழ்கியிருங்கன்னா சொல்லறேன். உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் பணம்,பதவி,அதிகாரத்துக்கு அலைய வைக்குது. பணம் பதவி கிடைச்சா செக்ஸுக்கு அலைய வைக்குது. இதென்ன சுத்துவழி? காலம் வீணாகுது, ஹ்யூமன் ரிசோர்ஸஸ் வீணாகுது. சமுதாயம் ஸ்பாயில் ஆகுது. பொருளாதாரம் கரப்ட் ஆகுது. அரசியல் விபச்சாரத்தை விட மோசமாகுது. சுருக்கமா முடிச்சுக்க. அப்பத்தான் அடுத்து என்னங்கற கேள்வி எழும்னு நான் உபதேசிக்கிறேன். "

"ஓஹோ சனம் வளர மாட்டேங்குது , அவிக எண்ணம்(குண்டலி) அடுத்த நிலைக்கு பெயர மாட்டேங்குதுன்னுதான் இப்படி ரெஸ்ட் லெஸா பதிவு போடறிங்களா. அதான் உங்க எழுத்துக்கள்ள அவசரம் தொனிக்குதா?

"ஆமாங்கண்ணா.. "

"செக்ஸ்,அதுக்கு மாற்றா நாம உபயோகிக்கிற பேச்சு, உண்டு ,கழிதல்,பணம்,பதவி ,அதிகாரம் எல்லாத்துக்கும் அப்பாற்பட்டு இன்னொரு வாழ்க்கை இருக்கு. அதுக்கு தயாராகத்தான் இந்த பிறவியே. இது போன்ற பல்லாயிரம் பிறவிகளை எடுத்தோம். ஒவ்வொரு பிறவிக்கப்புறமும் ரெவ்ய் பண்ணி எதெல்லாம் நம்ம முன்னேற்றத்துக்கு
தடையா இருந்ததோ அதையெல்லாம அவய்ட் பண்ற மாதிரி ஒரு வாழ்வை டிசைன் பண்ணி அந்த வாழ்வை தரக்கூடிய கிரக ஸ்திதி, அந்த என்விரான்மென்டை தரக்கூடிய தாய் ,தந்தைகளை தேர்வு பண்ணிதான் பிறந்தோம். ஆனா இந்த பிறவியலயும் ஆசனத்தை ,இன உறுப்பை தாண்டி வர முடியாம தேங்கிப்போறோம்."

"அதுக்கு பின்னாடி என்னண்ணே இருக்கு?"

"மஸ்தா கீதுங்கண்ணா? அதுக்கு முன்னாடி இந்த ரெண்டையும் தாண்டியே தீரணும்னா"

"அதுக்கு என்ன வழி?"

"முதல்ல விபச்சாரத்தை லீகலைஸ் பண்ணிரனும். செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு செக்ஸ் கல்வி, நோய் தடுப்புக்கான ,கர்ப தடுப்புக்கான வழிமுறைகள், ஏற்பாட்டை தரனும். இது நடந்தா மனித குலத்தோட பிரக்ஞை ஆசன பருவத்தை தாண்டி இன உறுப்பு மையத்துக்கு வரும். தொடர்ந்து எவ்வித குற்ற மனப்பான்மையும், பரபரப்பும், பயமும் இல்லாமல் செக்ஸில் ஈடுபட்டு வரும்போது நாளடைவில் இவர்களின் பிரக்ஞை இன உறுப்பு மையத்தையும் தாண்டும். ஆசனப்பருவத்தின் போது இருக்கக்கூடிய தர்கத்துக்கு ஒவ்வாத பிடிவாதம், சுய நலம் , ஹென் பெக்ட்னெஸ், போஸசிவ்னெஸ் எல்லாம் குறையும். செக்ஸில் தொடர்ந்து ஈடுபடும்போது பிரக்ஞை மேலும் உயர் நிலைக்கு சென்று கேள்வி எழும். சஞ்சலம் அதிகரிக்கும். ஆனால் செக்ஸ் மீது குறிப்பாக வீரிய ஸ்கலிதத்தின் மீது கட்டுப்பாடு ஏற்படும். "

"சரி பாஸு..இந்த தே.தனத்துக்கு லீகல் சேங்க்ஷன் கொடுக்காம இந்த பிரச்சினை தீராதா?"

"தீரும். ஆனால் இப்ப அமல்ல இருக்கிற உதவாக்கரை கல்வியை ரத்து பண்ணி பதினெட்டு வயசுக்கெல்லாம் ஒரு இளைஞன் தன் சொந்த கால்ல நின்னு பணமீட்டியபடி மனைவியையும் போஷிச்சுக்கிட்டு, உயர் கல்வியையும் தொடர்ர ஏற்பாடு செய்யனும்"

"இது நடக்கிற வேலையா?"

"மனமிருந்தா மார்கமுண்டு. உதாரணத்துக்கு நம்ம ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துல ரெண்டாவது, மூனாவது அம்சங்களான 10 கோடி இளைஞர்களை கொண்டு சிறப்பு ராணுவம், சிறப்பு ராணுவத்தின் உதவியுடன் நதிகளை இணைத்தல் என்ற வேலையை எடுத்துக்கிட்டா போதுமே.."

" அது சரி.. ஆப்பரேஷன் இண்டியாவ விடமாட்டிங்க.."

" என் வாழ்க்கையின் சாரமே இதுதான். இதை என் வாழ்க்கைலருந்து எடுத்துட்டா அது வெறும் குப்பை. அப்புறம் என் வாழ்வுக்கும் , கலைஞர் வாழ்வுக்கும் வித்யாசமே இருக்காதே"

" அப்ப கலைஞர் வாழ்க்கை கிரிமினல் வேஸ்டுங்கறிங்க?"

"நீண்ட ஆயுள் கொண்ட சாதனையாளர்கள் வாழ்க்கைல இப்படி ஒரு ரிஸ்க் உண்டு. விவேகானந்தர் 39 வயசுல புட்டுக்கினாரு. ஹீரோவாவே ஃப்ரீஸ் ஆயிட்டாரு. அவரும் கலைஞர் மாதிரி சக்கர நாற்காலில வாழ்ந்திருந்தா நாறிப்போயிருப்பார். "

" சரி பாஸு.. நீங்க என்னென்னமோ சொல்ரிங்க.கேல்லாம் லாஜிக்கலா தான் இருக்கு.

"லாஜிக்கலா மட்டுமில்லே சைக்காலஜிக்கலாவும் கரீட்டு தம்பி !"

"சரி தலை.. நீங்க சொல்றதெல்லாம் நிஜம் போலவே தோணுது. நம்பனும்போலவும் தோணூது ஆனா..."

"ஆனா போனா கதையெல்லாம் இங்கே கிடையாது. ஆமா கண்ணு.. இதெல்லாம் ஏட்டுச்சுரைக்காய் இல்லே . முதல்ல என் அனுபவத்துல தெரிஞ்சிக்கிட்ட பின்னாடி தியரியோட கம்பேர் பண்ணி உறுதிப்படுத்திக்கிட்ட சமாச்சாரம் இது"

"சரி தலைவா ! இதுக்கடுத்த ஸ்டேஜ் என்ன?"

"அடுத்த பதிவுல பார்ப்போம்... உடு ஜூட்"