Thursday, November 19, 2009

ஆழமான உடலுறவு மூலம் உலக அமைதி

உலகம் இன்று அழிவின் விளிம்பில் உள்ளது. துருவபிரதேச பனி உருகி வருகிறது. க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட் காரணத்தால் உஷ்ண நிலை பெருகிவருகிறது. போர் மேகங்கள் தலைக்கு மேலே சூழ்ந்திருக்கின்றன. இதற்கெல்லாம் தீர்வு ஆழமான உடலுறவே என்றால் சிலர் அடிக்கவே வருவீர்கள் என்று தெரியும் . இருந்தாலும் " நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்று துணிவுடன் இந்த பதிவை இடுகிறேன். பெண் இந்த இயற்கையின் பிரதி. பெண்ணை புரிந்து கொண்டவன் நிச்சயம் அவளை பூசித்தே தீருவான். பெண்ணை புரிந்து ,பூசிப்பவன் அவளது மூல வடிவான உண்மை வடிவான இயற்கையை நிச்சயம் நேசிப்பான் பூசிப்பான்.

பெண்ணை புரிந்து கொள்வதை தடுப்பது உடலுறவிலான அதீத நாட்டமே. அந்த அதீத நாட்டத்துக்கு காரணம் அவன் உடலுறவில் ஆழமாக ஈடுபடாமையே. உடலுறவில் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். இயல்பான பிரம்மச்சரியம் கைவரும். மனிதன் மிருகம். அவனிலான மிருகம் அமைதி பெற்றாலன்றி அவன் மனிதனாக தொடரமுடியாது. அது அமைதி பெறுவது ஆழமான உடலுறவில் மட்டுமே.


அவனிலான மிருகம் அடி மனதில் கை ,கால் கட்டப்பட்டிருகிறது. அந்த கட்டுக்கள் சட்டம், நாகரீகம் , இத்யாதியாக இருந்தால் அது டுபாகூர் கட்டு. எந்த கணமேனும் கட்டுக்கள் சிதறி மிருகம் பதறி வெளிவரும்.


இயற்கை மனிதனுக்கு இட்டுள்ள கட்டளை உயிரை காப்பாற்றிக்கொள்வதும், இனப்பெருக்கம் செய்வதுமே. இனப்பெருக்கம் கு.க. இத்யாதியால் கட்டுப்படுத்தப்படுவதால் அந்த சேதி ஜீன்களில் பதிவாகி தலைமுறைக்கு தலைமுறை ஆண்மை குறைந்து வருவது ஒரு புறம். நாற்பதில் திருமணம், மென்ஃபஸ் ஆரம்பித்த பிறகே திருமணம் இத்யாதி நிலைகளால் இயற்கையின் முதல் கட்டளையான உயிர் வாழ்வதையே உயிர்கள் மீறும் நிலை ஏற்படுகிறது. தற்கொலைகளில் அதிக சதவீதம் டீன் ஏஜர்ஸ், மற்றும் செக்ஸை அனுபவிக்கும் நிலையிலிருப்போரே.


இவை இரண்டும் இரட்டை மாதிரி செக்ஸுக்கு வாய்ப்பிருந்தால் தான் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் உணர்வு வலுப்படும். செக்ஸுக்கே வாய்ப்பில்லாத நிலையில்தான் தற்கொலை உணர்வுகள் ஏற்படுகின்றன. சுய இன்பம் கூட மனோதத்துவ அடிப்படையில் ஒரு தற்கொலை முயற்சியே. தன் சக்தியை, உயிரை தன் இன உறுப்பின் வழி வெளியேற்ற (அவனறியாதே) முயற்சிக்கிறான். தைரியமுள்ளவன் ஒரே தடவையில் சாகிறான். அது குறைவாய் இருப்பவன் தவணையில் தற்கொலை செய்கிறான். (ஸ்மோக்கிங், மது, போதை ஊசி,கஞ்சா , ஒரு தலை காதல், விலை மாதர் (சட்ட அங்கீகாரம், பயிற்சியற்ற) சகவாசம், தகாத உறவு கள்ள உறவு இதெல்லாம் தற்கொலை முயற்சிதான்)

சந்தோசத்தில் இருப்பவன் அடுத்தவரையும் சந்தோசப்படுத்தப்பார்ப்பான்.
துக்கத்தில் இருப்பவன் ? அடுத்தவரையும் துக்கப்படுத்திதான் பார்ப்பான்.
சிம்பிள் தர்க்கம் இது.

மனிதன் உடலுறவை ஆழமாய் அனுபவிக்கும்போது அவனுள்ளான காம்ப்ளெக்ஸுகள் தவிடு பொடியாகின்றன. மிருகம் அமைதி பெறுகிறது. பெண்ணின்பால்/ இயற்கையின் பால் நன்றி பொங்குகிறது. அவனால் சமுதாயமே பலன் பெறுகிறது.

இன்னொரு அதிர்ச்சி தரும் உண்மை என்னவென்றால் செக்ஸை ஆழமாக அனுபவிப்பவன் அதை பற்றி சிந்திப்பதே இல்லை. அது கிடைக்காதவன்/அதில் தோற்றவன் அதை சிந்திக்காமல் இருப்பதே இல்லை. மனித உடலில் இரண்டு மண்டலங்கள் உள்ளன. இனப்பெருக்க மண்டலம், ஜீரண மண்டலம் ஒன்று வேலை செய்யும்போது அடுத்தது வேலை செய்வதில்லை.

"பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது" ஏனென்றால் அப்போது இனப்பெருக்க மண்டலம் வேலை செய்துகொண்டிருக்கும். சப்போஸ் ஒருவன் செக்ஸ் இல்லை/செக்ஸில் தோற்றுவிட்டான் (எழுச்சி இன்மை, துரிதஸ்கலிதம் ) அவன் 24 மணி நேரம் செக்ஸை பற்றி சிந்திப்பான். அதே நேரம் சாப்பிடுவதை நிறுத்தமாட்டான். வயிற்றுக்கு போன உணவு செரிக்க ஜீரண மண்டலம் வேலை செய்யவேண்டும். இனப்பெருக்க மண்டலம்/அது குறித்த யோசனைகள் வேலை செய்யும்போது ஜீரண மண்டலம் வேலை செய்யாது. அப்போ என்ன ஆகும்?

உணவு செரிக்காது. அழுகும். கேஸ் ஃபார்ம் ஆகும்,அசிடிட்டி வரும் மலச்சிக்கல் வரும்,டோட்டல் பாடி காட் பாடி ஆகிவிடும்.(Ref: Sound Mind in Sound Body ) ஏற்கெனவே இருந்த ஓரளவு ஆண்மை கூட ஃபணால் ஆகிவிடும். உள்ளடக்கிவைக்கப்பட்ட செக்ஸ் கோரிக்கைகளே / நிறைவேறாத செக்ஸ் எண்ணங்களே, செக்ஸ் வக்கிரமாக, கற்பழிப்பாக, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையாக,அதிகார வெறியாக, சேடிசமாக,மசாக்கிசமாக‌ ,மனோ வியாதியாக வெளிப்படுகிறது.

பெண்ணின் மீதான கோபம் ( இதுக்கு காரணம் இவன் இயலாமை) இயற்கையின் மீதான கோபமாக வெளிப்படுகிறது. இப்படிப்பட்ட நிலை பெண்ணுக்கு வரும்போது ? முன்னெல்லாம் அது பேய்,பிசாசு தொல்லையாக வெளிப்படும். இப்போது ? மாறிவிட்ட சமூக சூழலாம் வேசியாகிறாள், ஃப்ளிர்ட் ஆகிறாள் . ஒரே நேரத்தில் பத்து பேருக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்து எவனோ ஆசிட் அடித்து விடுகிறான்.

இந்த லொள்ளெல்லாம் எதுக்குன்னுதான் நான் உடலுறவை பற்றி இவ்ள தூரம் எழுதறேன். "உருள் பெருந்தேருக்கு அச்சாணி அண்ணாருடைத்துனு வள்ளுவர் சொன்னாப்ல இந்த சின்ன விசயத்தால பெரிய பெரிய பிரச்சினைகளை ஏன் வரவிடனும்.

என்னைக்கேட்டால் ஒவ்வொரு தம்பதிக்கு கவுன்சிலிங் கொடுத்து ஆழமான உடலுறவுக்கு வழி செய்வது ரொம்ப கஷ்டம். எனவே செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு
(ஆண்,பெண் இரு பாலாருக்கும்) உயர்தரபயிற்சி கொடுத்து பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி வழங்கி விடலாம் .

இதனால் குற்றம்/செக்ஸுவல் குற்றங்கள்/ லஞ்சம் ஊழல்/அதிகார வெறி/வன்முறை/பிரிவினை வாதம்/தீவிர வாதம்/பிராந்திய வாதம்/ ஈவ் டீசிங் இத்யாதி எல்லாமே கட்டுப்படுத்தப்படும்.

செக்ஸ் ஒர்க்கர்ஸுடன் தொடர்பு கொள்ளும் ஆண் பெண்கள் ஆழமான உடலுறவு குறித்து விழ்ப்புணர்வை பெற்றால் ஆட்டோ மேட்டிக்கா தம்பதிகள் அனைவருமே ஆழமான உடலுறவை பெற வழி ஏற்படும்

ஒவ்வொரு நாடும் தன்னளவி இவ்வாறு அமைதி காணும்போது உள் நாட்டு பிரச்சினைகளில் இருந்து மக்கள் கருத்தை திசை திருப்ப போர்களை தூண்டும் அவசியமோ/ அவற்றில் ஈடுபடும் அவசியமோ இருக்காது.

உலக அமைதியே சாத்தியமாகிவிடும். என்ன சொல்றிங்க ?