Tuesday, November 10, 2009

கானிப்பாக்கம் வினாயகர் கோவில் நகைகளை ஸ்வாகா செய்த அய்யர்

வினாயகர் கோவில்: 169 கிராம் தங்கம், 27 கிலோ வெள்ளி அய்யர் ஸ்வாகா ?
ஆந்திரமானிலம் , சித்தூர் மாவட்டம், சித்தூரை அடுத்துள்ள கானிப்பாக்கம் வினாயகர் கோவிலுக்கு சொந்தமான 169 கிராம் தங்க நகைகள் , 27 கிலோ வெள்ளி பொருட்கள் தலைமை அர்ச்சகர் பொறுப்பில் இருந்ததாகவும் அவற்றை அர்ச்சகர் ஸ்வாகா செய்துவிட்டதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.

திருப்பதி கோவிந்த ராஜ ஸ்வாமி கோவில் நகை அடகுக்கடைக்கு போனதை அடுத்து கானிப்பாக்கம் கோவிலிலு நகைகள் சரி பார்க்க முடிவு செய்யப்பட்டது. இதில் மேற்கண்ட சமாச்சாராம் (!) வெளியாகியுள்ளது. தலைமை அர்ச்சகர் தங்க நகைகளும் ,வெள்ளிச்சாமான் களும் தன் பொறுப்பில் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதிகாரிகள் கேட்டால் (?) கொண்டுவந்து (?) ஒப்படைப்பேன் என்று கூறி வருகிறார்.

கோவில் நகைக்கு இவிங்க என்னய்யா நாட்டாமை. ஒரு பார்ப்பானாவது கோவிலுக்கு நகை கொடுத்திருக்கானா ? கொடுக்கிறதெல்லாம் சூத்திரன் அமுக்கறதுக்கு மட்டும் அய்யரா ?

அடங்கொங்கா மக்கா !

பத்து கேள்விக்கு பதில் வரலன்னா ..
கடந்த பதிவில் ஓம்கார் ஸ்வாமிகளை கேட்டிருந்த பத்து கேள்விக்கு பதில் வரலன்னா .. என்ன பண்றது ? பாவம் விட்ருவம். வேலைய பார்ப்பம்னா.

நமக்கு நிறைய வேலையிருக்கு. விலை வாசி ஏறிப்போச்சுனு கும்மியடிக்கிறாங்க .. கடந்த 10 வருசத்துல விலைவாசி விழுந்து போன ஐட்டம் மனித உயிர்கள். கொலை, தற்கொலை, விபத்து, கடன் தொல்லை, முதலாளி கொடுமை, மாமியார் கொடுமை.

உசுரோட இருந்தா உப்பு வித்து பொழச்சுக்கலாம்னு மின்னாடி சொல்வாங்க. இப்போ அதை கூட டாட்டா விக்கிறானேனு தான் சனம் செத்துப்போவுதோ ? இனி பத்து நாளைக்கு மனித உயிர்களை காப்பது பற்றியே பதிவுகள் போடலாம் என்று இருக்கிறேன். ஓம்கார் ஸ்வாமிகள் பதில் தர முன் வந்தால் நம் வலைப்பூவிலயே இடம் தர நான் தயார். (கமெண்ட் போட்டாலே தூக்கிர்ர சனத்துக்கு இதான் நம்ம எதிர்வினை) பதில் தரலைன்னா ஓஞ்சு போட்டும்னு விட்ருவம்.

பத்துகேள்விகள் பதிவுக்கு மறுமொழிபோட்டவங்களுக்கு பதில் மொழி போட்ருவம் ஓக்கேங்களா ?

கவனூர் எக்ஸ்பிரஸ் அவர்களே ! மீன் துள்ளியான் அவர்களே !பாராட்டுக்கு நன்றி. டவுசர் பாண்டி அவர்களே ! டைனோசர் மாதிரி பில்டப் கொடுத்த ஸ்வாமிகள் பல்லியாகி வாலை கழட்டி விட்டுட்டாரோ என்னவோ ?
அவங்க பதில் சொல்லனும்னா எழுதறோம். நம்ம ஆளுங்க கேள்வி கேட்கனும்னுதானே எழுதறோம்.
கல்வெட்டு அவர்களே !,
ஆயிரம் கோடி கவிஞர்கள் ஆனால் கவிஞர் என்றால் அது கண்ணதாசன் ஒருவர்தான். சித்தூர் டவுன் ஜனத்தொகை வரை ஒரு லட்சம். வேண்டுமானால் உங்களுக்கு ஒரு சவால் சித்தூர்.எஸ்.முருகேசன், சித்தூர் ஆ.பி என்று ஒரு போஸ்டு கார்டு எழுதுங்கள். அது நிச்சயம் டெலிவரி ஆகும். நம் நாட்டுக்காக /அதை பணக்கார நாடாக்குவதற்காக 10 நாள் உண்ணாவிரதம் இருந்த கேணையன் நான் ஒருத்தன் தானே அதனால . சித்தூர் மட்டும் இல்லேன்னா இந்த நாடே என் ப்ராப்பர்ட்டி. இது என் தேசம். நான் உயிரோட இருக்கறச்ச இது மானங்கெட்டுப்போககூடாதுனுதான் இத்தனை அவதி.

பி.கு: முருகேசன் என்ற பெயர் நாய்க்கு பாபு போல் அத்தனை சுலபமான பேர் . சித்தூரில் குறைந்தது ஆயிரம் முருகேசன்கள் இருக்கலாம். ஆமாம் கல்வெட்டு ! நாய்களுக்கெல்லாம் (முக்கியமா தெரு நாய்கள்) பாபுன்னே பேர் வைக்கிறாங்க ஏன்?

//ஆன்மீக சிடி,தகடு, ஜோசிய‌ பிசுனசுக்கு ஸ்வாமிதான் பொருத்தமான பெயர். சிரி சிரி சிரி மாதிரி. நோ டென்சன் ப்ளீஸ். ஸ் வா மி என்ன காப்புரிமை/பதிவி செய்யப்பட்ட ட்ரேட் மார்க்கா? என்ன கொடுமை ??
நீங்கள்கூட ஸ் வா மி என்று பட்டம் போட்டுக்கொள்ளலாம்.//

பேருக்கும் பிசினசுக்கும் தொடர்பில்லே நைனா! செந்திலுக்கு ரஜினினு பேர் வச்சிருந்தா அவர் சூப்பர் ஸ்டார் ஆயிருப்பாரா? ரஜினி ஃபீல்டுக்கு வந்த புதுசுல பல ஆயிரம் குழந்தகளுக்கு அவர் பேரை வச்சாங்க அவங்கெல்லாம் சூப்பர் ஸ்டாராயிட்டாங்களா?

நான் சொல்ல வந்தது என்னன்னா.. நான் விபச்சாரத்துக்கே சட்ட அனுமதி தரனும்னு குரல் கொடுக்கிற சாதி. நீ பொழப்ப பார்க்கிறியா பொழப்ப மட்டும் பாரு. நீ பொழைக்கறதுக்காக லட்சோபலட்சம் மக்களை மிஸ் கைட் பண்ணாதே. நீ விபச்சாரம் பண்றதாயிருந்தாலும் எனக்கு சம்மதமே. ஆனால் அதுக்கு சட்ட அனுமதி இருக்கிற நாட்டுக்கு போ வீட்டு முன்னாடி சிவப்பு விளக்கை மாட்டு. தொழில் செய். அதை விட்டுட்டு பத்தினி வேடம் போட்டுக்கிட்டு அந்த தொழில் செய்தா கேட்போம் ..கேள்வி கேட்போம்..

ஸ்வாமிங்கறது பட்டமில்லே சார். அது ஸ்டேஜ்(மேடை இல்லை, ஒரு நிலை) மனிதன் சுதந்திரனாகும் போது, தனக்கு தானே எஜமானனா மாறும்போது மக்கள் அப்படி அழைப்பாங்க. ப்ரொஃஃபசர்னு போட்டுக்க, டாக்டர்னு போட்டுக்க (இப்பல்லாம் இந்த மாதிரி பட்டம் வாங்கறது ரொம்ப சீப்பாமே )

வவ்வால் அவர்களே !
வழக்கம் போல பாயிண்டைப்பிடிச்சிட்டிங்க, ஓம் கார் ஸ்வாமினு போட்டா என்ன போடாட்டி என்ன? அவர் சொல்ற கருத்து தப்புனா அதோட வாதம் செய்தால் போதுமே, கோவி பதிவிலும், இங்கேயும் ஸ்வாமி ஏன் என்றே பெரிசா வாதம் வளர்ந்து என்ன டாபிக் பேசுறோம் என்பதே தடம் மாறிடுச்சு.//

ஸ்வாமினு போட்டுக்கறதை அப்ஜெக்ட் பண்ணலைங்கண்ணா.. 24 மணீ நேரம் சாராயக்கடைலயே மிதக்கற ஆசாமி கூட சபரிமலைக்கு மாலை போட்டுட்டான்னா தன் நிகழ்ச்சி நிரலை மாத்திக்கிறான். குறைஞ்சது திருட்டு தனமா குடிக்கிறான். திருட்டு தம் அடிக்கிறான். ஆனால் காவி கட்டின பண்ணாடைங்க பப்ளிக்கா கொள்ளையடிக்குதே.. அதைதான் நான் அப்ஜெக்ட் பண்ணேன்.

இந்த ஸ்வாமிங்கற அடைமொழி, காவி உடை இதெல்லாம் எதுக்கு உதவும்னா நாளைக்கு தப்பா தண்டா நடந்து உள்ளே போனா மெஜாரிட்டியா இருந்தும் அபத்திரமா உணர்ர இந்து மக்கள்ள வழி தவறின இளைஞர்கள் சிலர் பா.ஜ.க , வி.ஹெச் .பி இப்படி பத்து பேரு தர்ணா பண்ண உதவும் தட்ஸால்.


ஸ்வாமி என்ன .. பகவான் என்று போட்டுக்கொள்ளட்டும். குரூபிக்கு சுந்தரி என்று பெயர் வைத்த மாத்திரத்தில் அவள் ஐஸ்வர்யா ஆகிவிடப்போவதில்லை.


// தென் ஆப்பிரிக்காவில் சாமினு சொன்னா இந்திய கூலிகளாம் அப்படினு காந்தி சுய சரிதைல சொல்லி இருக்கார், எனவே அப்போ காந்திய சாமினு கூப்பிடுவதை அவர் விரும்பவில்லைனு சொல்லி இருப்பார் //
நல்ல தகவல். அப்போ காவி கட்டினகேசெல்லாம் சாமிங்கற பேரை தூக்கிருமா ? கேட்டுச்சொல்லுங்க.

நான் அடிமைனு ஏற்கெனவே சொல்லிட்டேன். பிச்சைக்காரன் கூட தான் பெத்த குழந்தைய ராஜானு கொஞ்சற மாதிரி எங்க ஊர்ல என்னை சாமினு கூப்டு பழகிட்டாங்க. நான் தலை தலைக்கு " நான் பார்ப்பானில்லே பார்ப்பானில்லேனு" சொல்லி சலிச்சும் இது தொடருது. சாமி என்ற பேருக்கு கூலி என்று ஒரு பொருள் இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

நான் என் மக்களின் சேவகன். அவர்கள் கூலி தராவிடினும்.

பி.கு:
நாம இத்தனை பேர் இருக்கம். வலைப்பூவழில வருமானம்னா கூகுல் ஆட்சென்ஸ், ப்ளாக் லேபிள்ஸ்னு ஜொள் விடறதை விட.. ஒரு 500 பேர் ஒரு அமைப்பா ஏற்பட்டா "ஒரு கட்டணத்தில் உங்கள் விளம்பரம் 500 வலைப்பூக்களில்" என்று ஒரு கான்செப்ட் வச்சு ஒர்க் அவுட் செய்தா என்னங்கண்ணா? சிறு துளி பெருவெள்ளம்னு ஒரு வலைப்பூவுக்கு 750 வருகைகள்னா 500 வலைப்பூவுக்கு ? கூட்டி கழிச்சு கணக்கு போட்டு யாரேனும் முன்னெடுக்கவேண்டும் என்பது என் அவா! சென்னை வாழ் அன்பர்கள் 21 பேர் கொண்ட க‌மிட்டியாக ஏற்பட்டு வொர்க் அவுட் பண்ணலாமே . மற்றவர்கள் விளம்பரங்களை பிரசுரித்து உதவலாமே ..