Monday, August 24, 2009

செக்ஸ் Vs பொருளாதாரம்

1.பதிமூன்று வயதில் செக்ஸுக்கு தயாராகிவிடும் மாணவன் அ மாணவி செக்ஸ் மீதான நாட்டத்தால் தன் அறிவில் பாதியை தான் கல்வி பயில செலவழிக்க வேண்டியுள்ளது. பாதி அறிவு செக்ஸை அடையவோ அ அந்த உணர்வுகளை அடக்கவோ செலவழிந்து விடுகிறது

2. அதிர்ஷ்ட வசமாக சுய இன்பம் இத்யாதி மாற்று வழிகளின் உதவியால் காதல் கத்திரிக்காய் என்று டைவர்ட் ஆகாதிருந்தால் அ புத்தி சாலித்தனமாக கணக்கு போட்டு காதலித்தால் பிரச்சினை இல்லை. தெய்வீக காதல் இத்யாதியில் இறங்கிவிட்டால் ஷெட் (திவால்)

3.அட எப்படியோ வேலை கிடைத்துவிட்டது உடனடியாக ஒரு திருமணம் நடந்துவிடுமா ? ஊஹூம் சந்தையில் மாடு பிடித்த கணக்காய் பெண்ணையோ ,பிள்ளையையோ பிடித்து கட்டி வைப்பதற்குள் அவளுக்கு முலைக்காம்பே சுருங்க ஆரம்பித்துவிடும். இவன் இழந்த சக்தி வைத்தியர்களை சுற்றி அலைந்து கொண்டிருப்பான்.





சரி ஒழியட்டும் கதம் கதம் !
அவர்களிடையே உடலுறவு என்பது இயல்பானதாக இருந்து விட்டால் பிரச்சினை இல்லை. அவ்வாறன்றி அதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டு விட்டால்..

1.அவருக்கு உடலுறவு என்றால் என்னவென்றே தெரியவில்லை
2.பார்த்ததுமே எல்லாம் முடிஞ்சி போகுது
3.அவர் மீசை மட்டும் தான் வச்சிருக்கார்

என்றெல்லாம் அந்த பெண் குறை சொல்லி தாய் வீட்டுக்கு வந்துவிட முடியாது. காரணம் தெரிந்ததே..நம் சம்பிரதாயம்,கலாச்சாரம்,பெண்ணின் அடக்கம் கழுதை முட்டை என்று ஆயிரம்.


தன் மனக்குறை இது என்று வெளியில் சொல்ல முடியாத நிலையில் அந்த பெண் அந்த குடும்பத்தில் பிரச்சினைகளை க்ரியேட் செய்ய ஆரம்பித்து விடுகிறாள். சரி அதுலதான் ஒன்னும் கழட்ட முடியலை இதையாவது செய் என்று அவனுக்கு டார்கெட் வைக்கிறாள். (54 இஞ்ச் கலர் டிவி முதல் டபுள் பெட் ரூம் ப்ளாட் வரை.

ஆணின் கதை வேறு. அவனுக்கு அந்த விஷயத்தில் மனைவி சரிப்பட்டு வரவில்லை என்றால் நிறைந்த சபையில் உடைத்து சொல்லி விடுகிறான்.

ஒருவேளை இவனால் அவளை திருப்திப் படுத்த முடியாத நிலை இருந்தால் அதை மட்டும் வாயால் சொல்ல் முடியாது வேறு வகையில் பிரச்சினைகளை உருவாக்கி அவளை தாய் வீட்டுக்கு அனுப்பி விட முயல்கிறான்.

இவன் தான் பெரிய ஆண்பிள்ளை சிங்கம் ,மதன காமராஜன் என்ற நினைப்புடன் முதலிரவு அறைக்குள் நுழைகிறான். ஏதோ காரணத்தால் தோற்று போய்விட்டால் அவள் முகத்தை மறுநாள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. இதை எப்படி சபையில் வைத்து சொல்வது..


இந்த நிலையில் தான் என் அம்மாவை ம‌திக்கிற‌தில்லே..
க‌ல்யாண‌த்துக்கு போட்ட‌ ந‌கை எடை குறைவா இருக்கு
மெத்தை த‌ர‌லை,க‌ட்டில் த‌ர‌லை எல்லாம் ச‌பையில் வைக்க‌ப்ப‌ட்டு க‌தை காவ‌ல் நிலைய‌த்துக்கோ, குடும்ப‌ கோர்ட்டுக்கோ செல்கிற‌து.
மேற்படி ஆணோ பெண்ணோ வெத்து ஆட்கள் அல்லவே அவர்களில் ஒருவர் ஆசிரியராக இருக்கலாம் ஒருவர் டாக்டராக இருக்கலாம் லாயர்,ஆடிட்டர் இத்யாதி வேலைகளில் ஏதோ ஒன்றாக இருக்கலாம்.

பாதிபேர் அது பாட்டுக்கு அது இது பாட்டுக்கு இது என்று தம்மை தாமே வடிவமைத்து கொண்டு விடுகின்றனர். இந்த நிதானம்/ ஹிப்பாக்ரஸி/கோழைத்தனம் இல்லாதவர்களால் தான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

இது போன்ற கணவன் மனைவி பொருளாதார விஷயங்களில் பைத்தியம் பிடித்தாற்போல் நடந்து கொள்வார்கள். ஒன்று வடிகட்டின கஞ்சத்தனம் வந்துவிடும். (எதிராளியை பழி வாங்குகிறார்களாம்) அல்லது ஊதாரித்தனமாக செலவழிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இங்கே ஒரு தத்துவம்:
மனிதனில் இருப்பது ஒரே சக்தி. அது காம சக்திஅது மேல் நோக்கி போனால் யோக சக்தி. கீழ் நோக்கி வந்தால் காம சக்தி. அது படைப்பின் சக்தி. ஒரு உயிரை படைக்கத்தான் காம சக்தி. தன்னை இழக்கத்தான் (தன் ஈகோ) காமசக்தி , அதில் இழக்க முடியாதவன், படைக்க முடியாதவன் உடைக்க ஆரம்பித்துவிடுகிறான். சட்டத்தை, பொருளாதார அமைப்பை உடைக்கிறான். தூள் பண்ணுகிறான்.

நான் சவாலிட்டு கூறுகிறேன் . எவனொருவனுக்கு செக்ஸ் தொடர்பான பிரச்சினைகள் இருக்கிறதோ அவன் பாதுகாப்பற்று இருப்பதாய் உணர்கிறான். பெரும் பணம் சேர்க்கிறான்.

தன் "பவிசு" தெரியாத அ புரிந்து கொள்ள முடியாத சிறுமிகளை சீரழிக்கிறான். அ ஹோமோவாகிறான் , மனிதன் தான் ஒரு வேலையை திருப்திகரமாக முடித்து விட்டால் மீண்டும் அதில் ஈடுபாடு பிறக்க நாள் பிடிக்கும். அரை குறைகள் தம் அரை குறைத்தனத்தை மறைக்க மீண்டும் மீண்டு ஈடுபட்டு இருக்கும் கொஞ்ச நஞ்ச சக்தியையும் இழந்துவிடுகின்றன.

எனவே அரசாங்கம் முதற்கண் தம் மக்களின் செக்ஸ் லைஃபை சீர்திருத்த வேண்டும் .

இல்லாவிட்டால் மேற்படி அரை குறைகள் படைக்கும் சக்தியை படைப்பில்

செலவழிக்காது உடைப்பில் செலவழிக்க ஆரம்பித்துவிட்டால் கதை கந்தல் தான். ஒரு கள்ளக்காதல், மனைவி வெட்டிக்கொலைக்கு மட்டுமல்ல சத்யம் ஊழல் முதல் ஸ்பெக்ட்ரம் ஊழல் வரை இதுவும் ஒரு காரணம். இதுவே காரணம்.