Wednesday, August 5, 2009

என்.டி.ஆர் எம்.ஜி.ஆருக்கு டூப்பில்லே

என்.டி.ஆர் :அதென்ன தம்பி எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் அப்படி என்னதான் வித்யாசம் .. நீயே சொல்லி தொலை
எஸ்.முருகேசன்: எம்.ஜி.ஆர் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தவர். கேரளாவில் செட்டில் ஆனவர். இதையெல்லாம் மறைக்கவோ என்னவோ தமிழ், தமிழகம்னு குரல் கொடுத்துக்கிட்டிருந்தார். உங்களுக்கு இந்த தலையெழுத்து கிடையாது. இயல்பாவே உங்க மனசுல தாய் மொழி மேல் ஒரு பாசம் இருந்தது. எந்த வித அரசியல் நோக்கம் இல்லாத காலத்துலயே இயல்பாவே தாய் நாடு, தாய்மொழி பற்றிய பாடல்கள்,வசனங்கள் தொடர்ந்து வந்துக்கிட்டிருந்தது. எம்.ஜி.ஆர் ஒரு திட்ட வட்டமான அரசியல் திட்டத்தோட இருந்தார். அவர் படம்,பாட்டு,பாத்திரம்வசனம் எல்லாமே செயற்கை. அரசியலிலும் அவரோட பங்கேற்பு,செயல்பாடு எல்லாமே சுய பாதுகாப்பு,சுய வளர்ச்சியை நோக்கமாக கொண்டவையே. பொதுவாழ்வில் அவர் காட்டிய பிம்பத்துக்கும் , உண்மைக்கும் ரொம்பவே வித்யாசம் இருந்தது. ஸ்ப்லி பெர்சனாலிட்டினு கூட சொல்லலாம்.
என்.டி.ஆர் :இதை தான் சின்ன பய புள்ள பேச்சுனு கிராமப்புறங்கள்ள சொல்வாங்க. நோக்கம் எதுவா இருந்தா என்ன ..அவர் செய்ததெல்லாம் நல்லதாதானே முடிஞ்சது
எஸ்.முருகேசன்: இல்லே தலைவா ! ஜெயலலிதால முடிஞ்சது.
என்.டி.ஆர் : நோ நோ .. உன் பேச்செல்லாம் அன் பார்லெமென்டரியா இருக்கு நான் போறேன்
எஸ்.முருகேசன்: தலைவா ! நான் தமிழனா தெலுங்கனான்னு எனக்கே சந்தேகம் வர்ர அளவுக்கு தெலுங்குல தேர்ச்சியும், என்னை நான் நம்பறதுக்கு பயிற்சியும் கொடுத்த குருநாதர் நீங்க. எம்.ஜி.ஆரை கலைஞர் கட்சிலருந்து கட்டம் கட்டினப்ப சத்யா ஸ்டுடியோவுல பதுங்கிட்டாராம் .ஏதோ அந்த காலத்துல மக்களுக்கு சொந்த பிரச்சினைங்க குறைவுங்கறதால கூட்டம் கூட்டமா வந்து வாத்தியாருக்கு ஆறுதல் சொன்னாங்களாம் ..அதுக்கப்புறம்தான் சார் ஓப்பன் டாப் ஜீப் ஏறி ஸ்பீச் கொடுத்தாராம். ஆனால் நீங்க அப்படியா தலைவா ! சந்திரபாபு ஏதோ மந்திரியா இருந்தாரேனு பெண்ணை கொடுத்திங்க. காங்கிரஸ் கட்சி கலாச்சாரம் தெரிஞ்சது தானே . தூக்கிப்போட்டுட்டாங்க. நீங்க இந்திரா லெலவல்ல போய் பேசிப்பார்த்திங்க மந்திரியில்லே கந்திரியில்லே எந்திரின்னுட்டாங்க . உடனே நீங்க கலகக்குரல் எழுப்பினிங்க. தனிப்பட்ட இழப்பை தூக்கி ஓரமா வச்சுட்டு காங்கிரசுக்கு எதிரா போர் கொடி தூக்கி மானிலமெல்லாம் பிரச்சாரம் செய்திங்க ஆட்சிய பிடிச்சிங்க . இந்த வெற்றிக்கும் உங்க சினி வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் கிடையாது அது ஒருவேளை உங்களுக்கு மானிலம் தழுவிய அறிமுகம், மீடியா கவனத்தை கொடுத்திருக்கலாம். தட்ஸ் ஆல். ஏனா நீங்க தரிச்ச பாத்திரங்கள் அப்படி. நீங்க ராமன் வேடம் மட்டும் போடலை ராவணன் வேடத்தையும் போட்டிங்க, கிருஷ்ணன் வேடம் மட்டும் போடலை துரியோதனன் வேடம் கூட போட்டிருக்கிங்க ,வுமனைசரா, பீடி,சிகரட் என்ன கஞ்சா அடிக்கிற பார்ட்டியா,குடிகாரனா,அப்பா வச்சிருக்கிற பெண்ணோடயோ டூயட் பாடற கேரக்டர்ல கூட நடிச்சிருக்கிங்க..
என்.டி.ஆர் :அது சரி இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே
எஸ்.முருகேசன்: நம்ம மானிலத்துல தெரியும் தலைவா ..தமிழ் நாட்டுல தெரியாது . உங்க கதைய சொல்லிட்டேன். எம்.ஜி.ஆர் கதை தெரியாத தலைமுறை ஒன்னிருக்கே அவங்களுக்காக 4 வார்த்தை . வாத்தியார் படத்துல ஒரே ஹீரோயின்,ரெண்டாவதா ஒன்னிருந்தாலும் அவளை க்ளைமாக்ஸ்ல தங்கச்சின்னிருவாரு. பீடி நோ..சிகரட் இல்லே தண்ணி இல்லவே இல்லே அவர் ஒரு ப்ளான் படிதானே படம் பிடிச்சு படம் காட்டி தமிழக அரசியலை பப்படமாக்கிட்டாரு
என்.டி.ஆர் :அப்படி அமைஞ்சதுனு கூட சொல்லாமில்லையா
எஸ்.முருகேசன்:உன் லொள்ளு தாங்க முடியலை தலை! என்னதான் அவர் உங்க உடன்பிறவா சகோதரரா இருந்தாலும் இப்படியா தாங்கு தாங்குனு தாங்கறது. அடமுக்கியமான விஷயத்தை விட்டுட்டேன். நீங்க எத்தினியோ ஹோரோயினோட நடிச்சிருந்தாலும் அந்த மாதிரி கிசு கிசு மட்டும் வந்ததே இல்லை . பெரியார் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டப்ப அண்ணா மாதிரி தலைவர்கள் கூட ஜீரணிச்சுக்க முடியாம போயிருச்சு . ஆனால் நீங்க இன்னொருத்தர் மனைவியா இருந்த லட்சுமி பார்வதியை "இவதாண்டா என் மனைவி"னு கைகாட்டினா மானிலமே ஒத்துக்குச்சு. இந்த வகைல கூட நீதான் தலை சூப்பர்
என்.டி.ஆர் :மொத்தத்துல நீ என்ன தான் சொல்ல வரே
எஸ்.முருகேசன்: நீங்க எம்.ஜி.ஆருக்கு டூப்பில்லே ரெண்டு பேருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசமிருக்குனுதான்
என்.டி.ஆர் :அதை இவ்ள காலம் கழிச்சு இப்பத்தான் சொல்லனுமா என்ன !எஸ்.முருகேசன்: Better late than never தலைவா !