Monday, August 3, 2009

ஜட்ஜுங்களுக்கு சினிமா நடிகைங்கள எல்லாம் சப்ளை பண்ணி

எஸ்.முருகேசன்: சார் வணக்கம் !
என்.டி.ஆர் : நமஸ்தே தம்முடு எலா உன்னாவ் ? எலாகோ நா ஆதர்ஸ் பதக்காலனு அமலு சேஸ்துன்னந்துக்கு ராஜசேகர் ரெட்டினி மள்ளி சி.எம்.சேசே பணிலோ பாகானே கஷ்ட படினட்டுந்தி ..தேங்க்யூ தேங்க்யூ
எஸ்.முருகேசன்: சார் சார் .. சின்ன ரிக்வெஸ்ட் இந்த உரையாடலை என் வலைபூவில் வைக்கிறதா சின்ன ப்ளான் ..நீங்க தமிழ்லயே பேசினா நல்லாயிருக்கும்.
என்.டி.ஆர் : அட அதுக்கென்ன பேசிட்டா போவுது. எனக்கென்ன தமிழ் தெரியாதா ? இல்லே மெட்ராஸ் என்ன புதுசா ? தெலுங்கு கங்கை மூலமா தண்ணி கூட கொடுத்திருக்கமே
எஸ்.முருகேசன்: முதல்ல நீங்க தெலுங்குல பேசினதை நானே தமிழ்ல டப்பிங் பண்ணிடறேன் சார்
என்.டி.ஆர் :டப்பிங்க் எல்லாம் எதுக்கு தம்பி நானே பேசிடறேன். "எப்படியோ என்னோட நல்ல திட்டங்களை தொடர்ந்து அமல் படுத்தின ராஜசேகர் ரெட்டிய மறுபடி சி.எம். ஆக்குறதுக்கு உன்னால முடிஞ்சதை செய்தாப்ல இருக்கு ..ரொம்ப நன்றிப்பா" ... எப்படி நம்ம டப்பிங் ?
எஸ்.முருகேசன்: தூள் தலைவா !
என்.டி.ஆர் :சரி தம்பி..நான் செத்து இத்தனை காலத்துக்கப்புறம் ஏன் இப்படி சந்தியில நிறுத்தற ..
எஸ்.முருகேசன்:இல்லே தலைவா ! இந்த தமிழ் நாட்டு மக்கள் எல்லாம் உங்களை ஒரு நடிகனா அதுவும் எம்.ஜி.ஆரை பார்த்து அரசியலுக்கு வந்த நகலாவே பார்க்கிறாங்களா .. அதான் உங்க வாயையே கிளறி உண்மைய வெளிய கொண்டாறலாம்னு சின்ன ஆசை
என்.டி.ஆர் :ஆமா உங்க சூப்பர்ஸ்டார் எப்படி இருக்கிறாரு. நான் ஒரு மடையன். இந்த ஆசாமிய நான் ப்ளான் பண்ணின தேசிய கட்சியான பாரத தேசத்துக்கு தமிழ் நாட்டு பொறுப்பாளராக்கலாம்னு இருந்தேன்
எஸ்.முருகேசன்:என்ன தலைவா உங்களுக்கு ஆப்பு வச்சவன் எவனாவது மானமா வாழ்ந்திருக்கானா என்ன நாயடிதான். சூப்பர் ஸ்டார் இப்போ சூப்பற ஸ்டாராயி ரொம்பகாலமாகுது. தனியா ஒரு பதிவே போட்டு கிழிச்சு தொங்க விட்டுட்டன். அதுல ஒரு முக்கியமான பாயிண்ட் மறந்துட்டன் தலைவா ! சந்திரபாபு 1994 ஆகஸ்ட்ல உங்களுக்கு ஆப்பு வச்ச சமயத்துல இந்த சூப்பர் ஸ்டார் சூரியவம்சம் சரத்குமார் மாதிரி சொம்பை தூக்கிக்கிட்டு பஞ்சாயத்து பண்ண வந்து என்னா சொன்னாரு.. லட்சுமிபார்வதி துஷ்ட சக்தியாம் .. நீங்க நல்லவராம். அதனால கட்சில தலைவர் நாற்காலிய காலியா வைக்கனுமாம் நீங்க லட்சுமிபார்வதிய விட்டுட்டு வந்தா அந்த நாற்காலில உக்கார்த்தி வச்சுக்கணுமாம்..எங்க தலைவா காலியா விட்டானுங்க உங்களையே காலி பண்ணிட்டானுங்களே ..இந்த சூப்பர் ஸ்டார் அப்ப விரலை சூப்பிக்கிட்டு இருந்தாராக்கும் ..அதனாலதான் அவருக்கு இந்த டைட்டிலயே கொடுத்தேன். டைகர் சினிமா ஞா. இருக்கா தலைவா.. இந்த ஆசாமிக்கு அந்த அளவுக்கு நீங்க ஹோப் கொடுத்து ஸ்கோப் கொடுத்திங்க என்னமா நன்றிய காட்டினாரு பார்த்திங்களா ?
என்.டி.ஆர் :அடடே அதயெல்லாம் விடுப்பா.. நான் நீங்கற வித்யாசம் , பகை விரோதமெல்லாம் உடம்போட இருக்கறச்ச தான்.. இப்ப நான் ஆன்ம வடிவத்துல இருக்கேன். நீ சொல்றதெல்லாம் யாருக்கோ நடந்த மாதிரிதான் இருக்கு
எஸ்.முருகேசன்: நான் உடம்போட இருக்கேனே ! ஆமாம் தலைவா உங்களை பர்சனலா ஒன்னு கேக்கணும் நீங்க நடிகரா இருந்தப்பவும் சரி அரசியலுக்கு வந்தப்புறமாவும் சரி எந்த சாமியாருக்கும் கும்பிடு கூட போடாம எப்படி தலைவா சமாளிச்சிங்க ..முக்கியமா இந்த புட்டபர்த்திய எப்படி அவாய்ட் பண்ணிங்க
என்.டி.ஆர் : உன் பாக்கெட்ல ஆயிரம் ரூபா நோட்டிருக்குனு வை ..ரோட்ல விழுந்து கிடக்கிற சில்லறைய பொறுக்குவியா
எஸ்.முருகேசன்: நான் சென்ஸ்.. நான் ஏன் பொறுக்க போறேன்
என்.டி.ஆர் :அதை மாதிரிதான் நானும். என் மனசுல கடவுள்ங்கற ஆயிரம் ரூபா நோட்டிருக்கிறப்ப சில்லறைங்க கிட்டே ஏன் ஒதுங்க போறேன்
எஸ்.முருகேசன்:உங்க மாப்பிள்ளை சந்திரபாபு மட்டும் பாபாவை விழுந்து விழுந்து கும்பிடறாரே..
என்.டி.ஆர் :அப்பனுக்கு பிள்ளை தப்பாமனு சொல்லுவாங்க அதுவே அப்பப்ப வொர்க் அவுட் ஆகமாட்டேங்குது . இவரு மா...பிள்ளை தானே ..அதெல்லாம் வியாபாரம் தம்பி ! சந்திரபாபுவை ரொம்ப கம்மியா எஸ்டிமேட் பண்ணாதே அவர் பயங்கர அறிவாளி.
எஸ்.முருகேசன்:இதையெல்லாம் மறக்க முடியுமா தலைவா ..ஜட்ஜுங்களுக்கு சினிமா நடிகைங்கள எல்லாம் சப்ளை பண்ணி உங்க கட்சி பேரை,சின்னத்தை ,கொடிய எல்லாமே ஹைஜாக் பண்ணிட்டதா லட்சுமி பார்வதியம்மா தான் ஒரு டி.வி.பேட்டில சொன்னாங்களே..நானும் பார்த்தேனே
என்.டி.ஆர் :சூ...சூ அதையெல்லாம் ஏன் இங்கே பேசிக்கிட்டு நீதிமன்ற அவமதிப்பாயிரபோகுது
எஸ்.முருகேசன்:அட அப்படி ஒன்னு இருக்கா என்ன ! நீங்க "சமுதாயமே என் கோவில் ..ஏழை மக்களே என் தெய்வங்கள்"னு சொல்லிட்டிருந்திங்க ..உங்க வாக்கு தான் வேதவாக்காச்சே ! அந்த இன்ஸ்பிரேஷனோட ஆப்பரேஷன் இந்தியா 2000 ம்னு ஒரு திட்டம் தயாரிச்சேன் அதை இந்த நாதாரிக்குதான் முதல்ல அனுப்பினேன். அங்கே பிடிச்சது சனி அங்கே இங்கேனு அங்காடி நாயா அலைஞ்சேன். ஜீசஸ் பாட்டுக்கு சொல்லி வுட்டுட்டாரு. தட்டுங்கள் திறக்கப்படும்னிட்டு . ஊர்ல இருக்கிற கதவை எல்லாம் தட்டி அலுத்துட்டு ஹை கோர்ட்டு சுப்ரீம் கோர்ட்டு கதவுகளையெல்லாம் பதிவு தபால் மூலமாவே தட்டிட்டன். எந்த கதவும் திறக்கலை. So இந்த பதிவை நீதிமன்ற அவமதிப்புனு நோட்டீஸ் விட்டா பராசக்தில சிவாஜி மாதிரி வள்ளாண்டுட மாட்டேன்
என்.டி.ஆர் :அதென்னப்பா ஆப்பரேஷன் இந்தியா 2000 ?
எஸ்.முருகேசன்:கீழ் காணும் சுட்டிய க்ளிக் பண்ணி பாருங்க தலைவா !
என்.டி.ஆர் :அடடே நல்ல விஷயமாத்தான் இருக்கே ! இதை ஏன் யாரும் கண்டுக்கலை
எஸ்.முருகேசன்:இப்போ ஆந்திராவுல ஜலயக்னம்ங்கற பேர்ல ஒய்.எஸ்.ஆர் ஒரு லட்சம் கோடில அணைகள் கட்ட ஆரம்பிச்சிருக்காரு. விவசாயிகள் ஒத்துக்கிட்டு முன் வந்தா கூட்டுறவு பண்ணை விவசாயத்தையும் கொண்டு வரப்போறாராம்
என்.டி.ஆர் :அது சரி. இத்தனை அணைகளை எப்போ கட்டி முடிக்கிறது . நேரு கட்டி முடிச்ச அணைகளால அதை கட்ட வந்த கூலிகள் அவங்க ஊர்களுக்கு ரிட்டர்ன் போகாததாலேயே பெரிய பெரிய சேரிங்க உருவாகிப்போச்சு.
எஸ்.முருகேசன்:அதுக்குதான் தலைவா ! தலைவர் எவ்வழி தம்பி அவ்வழினு நம்ம திட்டத்துல நதிகளை கால்வாய்கள் மூலமா இணைக்கனும் . அதுவும் நாட்டின் 10 கோடி வேலையில்லா வாலிபர்களை கொண்டு அமைத்த சிறப்பு ராணுவத்தை இதுக்கு உபயோகிச்சுக்கனும்னு சொல்லியிருக்கேன்
என்.டி.ஆர் :அதென்னவோ சொல்லி பேச்சை ஆரம்பிச்சே எங்கயோ போயிருச்சு பேச்சு
எஸ்.முருகேசன்:கில்லாடி தலைவா நீங்க ! பட்டுனு பாயிண்டை பிடிக்கறிங்க . அதாவது எம்.ஜி.ஆர் நடிகர்,அவர் அரசியல்ல குதிச்சு ஜெயிச்சாரு..அதை பார்த்து நீங்க குதிச்சிங்க மக்கள் மனசுல இருந்த சினிமா மோகத்தால சி.எம் ஆயிட்டிங்கனு தேஞ்சு போன ரிக்கார்டு மாதிரி ஒரே பல்லவி.

(To be continued