Saturday, August 1, 2009

நான் மட்டும் விஜய காந்தா இருந்திருந்தா

1.நான் மட்டும் கர்ணனா இருந்திருந்தா திரவுபதி வஸ்திராபரணம் நடக்கும்ப்தே வெளி நடப்பு செய்திருப்பேன்
2.நான் மட்டும் காந்தியா இருந்திருந்தா முதல் பிரதமரா நானே பொறுப்பேற்று நான் கனவு கண்ட கிராம ராஜ்ஜியத்தை வடிவமைச்சிருப்பேன்
3.நான் மட்டும் என்.டி.ஆரா இருந்திருந்தா சந்திரபாபுவை பார்ட்டியிலயே சேர்த்திருக்கமாட்டேன்
4.நான் மட்டும் ஜவஹரா இருந்திருந்தா அணைகள் கட்டறத விட்டு நதி நீர் இணைப்பை மேற்கொன்டிருப்பேன்
5. நான் மட்டும் ராஜீவா இருந்திருந்தா விடுதலை புலிகள் இல்லாத ஒப்பந்தத்துல கையெழுத்தே போட்டிருக்க மாட்டேன்
6.நான் மட்டும் வி.பி.சிங்கா இருந்திருந்தா ரத யாத்திரை போன அத்வானிய கைது செய்யாமயே விட்டிருப்பேன்
7. நான் மட்டும் இந்திரா காந்தியா இருந்திருந்தா சீக்கியர்கள் கொலை சதி தெரிய வந்ததுமே பெர்சனல் செக்யூரிட்டிலருந்து அவுங்களை தூக்கியிருப்பேன்
8. நான் மட்டும் விஜய காந்தா இருந்திருந்தா ஜெ வை தவிர்த்த அனைத்து சக்திகளையும் கலைஞருக்கு எதிரா திரட்டியிருப்பேன்
9.நான் மட்டும் கலைஞரா இருந்திருந்தா முத்துவை சினிமாவுக்கே கொண்டு வந்திருக்க மாட்டேன்