Sunday, August 9, 2009

பெண்கள் இரண்டுவிதம் : கோகுல் அவர்களுக்கு மறு(ப்பு ) மொழி

கோகுல் அவர்களே !
//முதலில் என்னை 18 வயதாக நினைத்ததற்கு ஒரு நன்றி , ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் அந்த வயதை கடந்து விட்டேன் !//

தங்கள் விரிவான மறுமொழிக்கு நன்றி. தங்களில் ஒரு வித தேடுதல் தெரிகிறது (அதான் 18 ஐ கடந்தாச்சுனு சொல்லிட்டிங்களே !


// நீங்கள் சொல்வது எல்லாம் படிப்பதற்கு மிகவும் இன்பகரமானதாக இருக்கிறது, குடும்பத்தில் அடங்கி போகிறவர்கள்தான் உண்மையில்
அடக்குகிறார்கள் , ஆஹா , ஆனால் பாருங்கள், நம் நாட்டில் குடும்ப நீதிமன்றங்களில் வரும் வழக்குகள் இந்த மாயாவாதத்தை விட்டு மிக மிக விலகி இருக்கின்றன.//

வாதமில்லே பக்கவாதமில்லேண்ணா ! நான் சொல்றது சத்தியம். பெண்ணை உங்க ஆண்மையாலயோ, உடல்பலத்தாலயோ வெல்லவே முடியாது. அவள் போய் ஒழியட்டும்னு சகிச்சுக்கறா அவ்ளதான். அந்த கருணைக்கும் ஒரு எல்லை உண்டு இல்லியா. மேலும் நீங்க சொல்ற கோர்ட்டு ,கேஸு பார்ட்டிங்க எல்லாம் அவங்களுக்குள்ள இருக்கிற அன்புக்கு ஏங்குற ஆத்மாவை தொலைச்சுட்டவங்க அல்லது தொலைக்க வைக்கப்பட்டவங்க. அவங்க எண்ணிக்கைய இன்றைய ஜனத்தொகையோட ஒப்பிட்டா ரொம்ப குறைச்சல். இதெல்லாம் மாறிவரும் வாழ்க்கை முறைக்கு நாம கொடுக்கிற விலை. ஆண் ஆணா இல்லாதப்ப (பான்பராக்,சுய இன்பம்,இறுக்கமான உள்ளாடைகள் இப்படி நூற்றுக்கணக்கான காரணங்களால் ஆண் ஆண்மையை இழந்து பெண்ணாவே மாறி அவளோட ஏட்டிக்கு போட்டியா மாறிப்போறான். ஆண்மையின் சிகரமா இருக்கிறவனுக்கு அவளோட இன் செக்யூரிட்டி,பொசசிவ் நெஸ் இதெல்லாம் ஜஸ்ட் லைக் தட் புன்முறுவல் பூக்க வைக்கிறதா இருக்கும்"

இங்கே நடக்கறது என்னன்னா .. ரெண்டு பேரும் பெண்களே.. அதான் இத்தனை லொள்ளு. ஆண் ஆண் மாதிரி வாழ்ந்தா பெண் அவனை அட்மைர் பண்ணுவா . ஒரு பெண் பெண்ணையோ, ஒரு ஆண் ஒரு ஆணையோ அட்மைர் பண்றதுக்கெல்லாம் உயிரியல் சம்பந்தமான காரணங்கள் இருக்கலாம்.

//மேலும் இதை எழுதும்போது தோன்றுவது என்னவென்றால் உங்களுடைய இரண்டு பதிவுகளுக்கும் இடையே பெரும் இடைவெளி
இருக்கின்றது. முதல் பதிவில் மிகவும் காத்திரமாக 'ஆர்காசம்' பற்றியெல்லாம் மிகவும் யதார்த்தமாக ஆரம்பித்து உங்கள் அடுத்த பதிவில்
அதற்கு நேர்திசையில் சென்று விட்டீர்கள் ஏன் என்று தெரியவில்லை.//

இடைவெளி என்று ஏன் நினைக்கிறீர்கள். இரண்டு கோணங்களையும் வெளிச்சமிட்டு காட்டினேன். உண்மை எப்பயும் ஒரே கட்சிலயோ, காட்சிலயோ கிடைக்காது. ரெண்டு பதிவுமே ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான்.

"நீங்கள் சொல்வது போல ஆணோ பெண்ணோ முழுமை அடைவது உடலுறவின் மூலமாக என்று வைத்துக்கொண்டால், ஆர்காசம் வந்த உடலுறவின் மூலமாகவா அல்லது அது வராத உறவு மூலமாக கூட முழுமை அடைவார்களா? ஏனெனில் நீங்கள் சொன்னது போல பல பேர் 23 (அல்லது 22.5) அசைவு வரை தாங்குவதில்லை.//

முழுமை அடைவது உடலுறவு மூலமாதான்னு நான் சொன்னதா பட்டிருந்தா அது என் எழுத்தின் குற்றம். நம்ம பெரியவங்க கடவுளை நினை, கடவுளை ஜபினு சொன்னது சாகும்போது பழக்க தோஷத்துல அந்த கடைசி கணத்துல அது நடந்துராதாங்கற அற்ப ஆசைலதான். அதே மாதிரி உடலுறவுங்கறது தொடர்ந்த ப்ராசஸ். இந்த ப்ராசஸால ஏதோ ஒரு கட்டத்துல கணவன் மனைவி ஒன்றுபட ஆரம்பிக்கிறாங்க.(தம் அகந்தையை விட்டு, அல்லது இழந்து ). இது வேறு எந்த வழியிலயும் அசாத்தியம்.

//நீங்கள் சொல்வதை கூட்டி கழித்து பார்த்தால், ஆண்கள் காதல் செய்ய வேண்டும் ஆனால் அதன் பிறகு (அல்லது முன்பே) வரும்
உடலுறவில் அந்த பெண்ணை திருப்தி செய்ய முடியாது , ஆனால் நாம் முழுமையடைய வேண்டும் (அய்யய்யோ ... ) //

இந்த பகுதிக்கான என் விளக்கம் ஏற்கெனவே என் விளக்கத்தில் இருப்பதால் இதை தவிர்க்கிறேன். பெண்ணை திருப்தி செய்ய ஒரு வைப்ரேட்டர் போதும். அவளுக்கு தேவை அன்பு, நான் இருக்கேன்டா என்ற அரவணைப்பு. அது கிடைச்சுட்டா மூச்சா போன ரேஞ்சுல இருக்கிற உடலுறவை கூட கருணையோட மன்னிச்சுர்ரா.( நெப்போலியனோட உடலுறவு பாணி இப்படித்தான் இருக்குமாம். வலம்புரி ஜான் தாய் பத்திரிக்கைல எழுதியிருக்காரு)



//அதன் பிறகு லஞ்சம் வாங்கி அவளை திருப்தி படுத்த வேண்டும். , அல்லது அவள் மன ஆழத்தில் இருக்கும் அன்பை தொட வேண்டும்//
அன்பையோ, உடலுறவில் முழுமையையோ தராவிட்டால் இது தான் ஆண்குலத்தின் தலையெழுத்து

// (நமது பரம்பரையை ரட்சிக்க ..) அது 54 இன்ச் கலர் டி.வீ மூலம் சாத்தியம் ...கிம்பளம் அதிகம் வாங்க வேண்டும் ... //


பரம்பரை என்ற வார்த்தையே என் பதிவில் கிடையாது. பரம்பரை ,வாரிசு இத்யாதியில் எல்லாம் எனக்கு நம்பிக்கையே கிடையாது. சி.எம்.சில போய் பாருங்க .ஒரு நாளைக்கு நூறு குழந்தை பிறக்குது. இவற்றை அடையாளம் காண்பது மணீக்கட்டில் கட்டியுள்ள சீட்டால்தான். எவனாவது/எவளாவது அதை மாற்றிக்கட்டிட்டான்னா கோவிந்தா . மேலும் நமக்கே பிறந்தது கூட அது நம்மோட நிழல் தானே தவிர வேறு ஒரு இழவும் கிடையாது. நாம் குழந்தை பெறுவது நம் மரணத்துக்கு பெப்பே காட்டத்தான் . ஆனால் நம்ம நோக்கம் நிறைவேறுவதில்லே. மரணத்துக்கு பூச்சாண்டி காட்ட பெத்த, சரியா வளர்க்காத பிள்ளையே மரணமாகிடறதும் உண்டு


//போங்கையா போய் குழந்தை குட்டிகளை படிக்க வையுங்க (தப்பா நினைச்சுக்காதிங்க தேவர் மகன் கிளைமாக்ஸ்-இல் வசனம்) டென்சன் டென்சன் டென்சன் (கவுண்டமணி குரலில் படிக்கவும்)//

படிக்க வைங்க என்பதோடு செக்ஸ் கல்வியையும் சேர்த்திக்கிடறதா இருந்தா ஜே !

இயற்கைக்கு புறம்பா போகும் போதுதான் டென்ஷன் டென்ஷன்.. இயற்கையோட இயைந்து நடந்தால் ..

ரிலாக்ஸ் ! ரிலாக்ஸ் ! ரிலாக்ஸ் !