Friday, August 28, 2009

கோவில் நகை அடகு வைப்பு

பிட்டா படிங்க !
1. நான் ராவணனின் ரசிகன் /கமல் பேச்சு
இதென்னடா வம்பா போச்சு ஒரு காலத்துல ரஜினி கூட இதே டயலாகை சொல்லி தன் மகளுக்கு மண்டோதரினு பேருவச்சதா ஞா

2.விஜய் காங். கட்சியில் சேர்ந்தார்
ஆகா இனி தமிழக காங்கிரசில் புதிய ரத்தம். விஜய் கண்ணா பார்த்து நைனா ! கலைஞர் அழகிரிக்கு சிக்னல் கொடுத்தாருன்னா ரசிகர் மன்றமே காலி

3.ஆந்திரத்தில் ரேஷனில் கடலைப்பருப்பு(கிலோ 30க்கு) பட்டாணி(கிலோ 20க்கு) வழங்க முடிவு. (ஏற்கெனவே தரப்படும் துவரம்பருப்புக்கு கூடுதலாக.
கலைஞரய்யா உங்களுக்கெதுக்கு இந்த தலைவலி எல்லாம்.. ஜானகியம்மா யாரோட மனைவி அவர் எப்படி வாத்தியாருக்கு மனைவியானாருன்னு ஒரு எக்ஸ்க்ளூசிவ் முரசொலில கொடுத்தா தீர்ந்தது கதை
4.மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களில் 55 வயது நிறைந்த பெண்களுக்கு ஓய்வு தொகை திட்டம்( அபய ஹஸ்தம்) நவம்பர் முதல் துவக்கம். தலா ரூ. 500 முதல் 2,500 வரை கிடைக்கும்
5. கிராம சபைகளில் கலந்து கொள்ளவிருக்கும் ஒய்.எஸ். கலைஞருக்கென்ன ஹாலில் வந்து உட்கார்ந்தால் குடும்ப உறுப்பினர்களில் பாதி பேர் சுற்றி உட்கார்ந்தால் கிராம (ட்ராமா ?) சபை தான்

6.திருப்பதி கோதண்ட ராமர் கோவில் நகைகளை அடகு வைத்த அர்ச்சகர். அர்ச்சகர்கள் சம்பளங்களை உயர்த்த சிரஞ்சீவி கோரிக்கை
7.ஆப்பரேஷன் ஆகர்ஷா பெயரில் எதிர்கட்சி தலைவர்களை காங். கட்சிக்கு இழுத்து வரும் ஓய்.எஸ். பார்த்துங்கண்ணா சந்திரபாபுவை மட்டும் இழுத்துராதிங்க அவர் சொந்த மாமனாரை இழுத்து தள்ளினவர்
8. ஆப்பரேஷன் ஸ்வக்ருஹா என்ற பெயரில் கட்சியிலிருந்து வெளியேறிய தலைவர்களை இழுக்க சந்திரபாபு திட்டம்.(ஹூம்..தப்பித்தவறி ஜெயிச்சாலும் ஜெயிச்சுரவங்கற சந்தர்ப்பத்துலயே ஓடிப்போனவங்க இப்பயா வரப்போறாங்க‌
9.கூகுல் டென் டு 100 ப்ரோஜக்டு என்ன ஆனது ? உலக அளவில் உலகத்தில் பெரும் மாற்றத்தை விளைவிக்க வல்ல ஐடியாக்களை வரவேற்று ஒரு போட்டியை அறிவித்தார்கள் . என்னப்போல் பல கேணையர்கள் ஐடியா அய்யாசாமிகள் ஐடியாக்களை அனுப்பினார்கள் . முடிவுதான் இன்னும் அறிவிக்கப்படலை http://www.project10tothe100.com/

10.இலங்கை விவகாரம் பற்றி நான் எழுதிய பதிவுக்கு 4 மறுமொழிகள். அதில் இரண்டு ஆங்கிலத்தில்

11.ஜெயலலிதா திமுகவின் பணபலம் இத்யாதியை காரணம் காட்டி தேர்தலை புறக்கணித்துள்ளார். ஆந்திர மானிலம், சித்தூரில் பிரஜாராஜ்ஜியம் கட்சி வேட்பாளர் ரூ.40 கோடி வரைசெலவழித்தார். காங்கிரஸ் வேட்பாளரோ அதைப்பற்றி கவலையே படவில்லை சம்பிரதாய பிரச்சாரத்தையே மேற்கொண்டார். முடிவு என்னாச்சு தெரியுமோ ? காங் வேட்பாளர் 1,600 வாக்கு வித்யாசத்தில் வெற்றி

12.ஆந்திரத்தில் உயர்ரக அரி்சிவிலை ஏகத்துக்கு உயர்ந்ததை அடுத்து அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டு பதுக்கல் சரக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. முதல்வர் உயர் ரக அரிசியைவிட மட்ட அரிசியில் தான் சத்து அதிகம் என்று அதையே தம் வீட்டில் சமைக்க சொல்லி சாப்பிட ஆரம்பித்துவிட்டார். அவர் மகனும் எம்.பி.யுமான ஜகன் மோகன் ரெட்டியும் அதே.