Monday, December 14, 2009

கேட்க விரசமாக இருந்தாலும்

காதலில் வெற்றிக்கு அயனான டிப்ஸ்
என்னைப்பொருத்தவரை காதல் என்பதே முட்டாள்தனம். அந்த அஞ்சு நிமிசத்துக்காக மைனர் செயின் போட்டு, டூ வீலரை போட்டுக்கிட்டு, இன்ன‌ம் என்னென்ன இழவோ செய்து அல்லாடுவதை விட தன் கையே தனக்குதவினு வாழ்ந்து , ஒழுங்கா படிச்சு, வேலை வெட்டி தேடிக்கிட்டா பாதம், பிஸ்தா, தாது புஷ்டி லேகியம் வாங்க வரதட்சியணையும் தந்து ஒரு பெண்ணையும் கட்டிக்கொடுப்பாங்க.
இல்லே நான் காதலிச்சுத்தான் தீருவேன்னு அடம் பிடிக்கிறிங்களா உங்களுக்கு சில டிப்ஸ்

1.உங்களுக்கு எவளை பார்த்ததும் இவள் இல்லாம வாழ்க்கையே இல்லைனு தோணுதோ அவ பக்கம் கூட திரும்பாதிங்க.( இது ரிவர்ஸ் எஃபெக்ட்) எவளை பார்த்ததுமே இது டம்மி பீஸுனு தோணுதோ அவளை லவ்வுங்க‌

2.மீனைப்பிடிக்கிறவன் கரை மேல தான் இருக்கனும். அதை போல காதல்ல விழுந்துராம தூண்டில் போடுங்க. வந்தால் வரவில் வைப்போம், போனால் செலவில் வைப்போம்னு உறுதிப்படுத்திக்கனும்

3.காதலிச்சு என்னத்த கிழிக்க போறிங்க அவளையே கட்டிக்கிட்டா ஒரு இம்சை, காதல் பிரிக்கப்பட்டா வேறுவித இம்சை. இது ரெண்டையும் ரோசிச்சு பார்த்து இறங்குங்க.

ஒரு ஜோக்:

ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரி. ரெண்டு ரூம்லயிருந்து ஒரே அலம்பல், கூச்சல் . ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த டாக்டரோட ஃப்ரெண்ட் டாக்டரை கேட்டார் . " என்ன சார் கேஸு ?"

"வாங்க போய் பார்க்க‌லாம்"

முதல் அறை . சுவற்றில் ஒரு அழகான பெண்ணின் படம். டாக்டர் சொன்னார் " இவன் இந்த பெண்ணை லவ் பண்ணான் . காதல் தோல்வி பைத்தியமாயிட்டான்"

அடுத்த அறைக்கு போனாங்க. அந்த அறை சுவரிலும் அதே பெண்ணின் படம் நண்பர் கேட்டார்" என்ன டாக்டர் இங்கயும் அதே பெண்ணோட படமிருக்கு. இவனும் அவளை லவ் பண்ணி தோத்தவனா?"

டாக்டர் சொன்னார் " இல்லே அவளை கல்யாணம் கட்டிக்கிட்டவன்"

இதான் காதலோட போஸ்ட் மார்ட்டம். சரித்திரத்தை கி.மு ,கி.பினு பிரிக்கிறாப்ல காதலியோட குணத்தையும் ரெண்டா பிரிக்கலாம். தி.மு, தி.பி இன்னம் புரியலயா? திருமண‌த்துக்கு முன், திருமணத்துக்கு பின். அவள் எவளா இருந்தாலும் சரி. கல்யாணம்னு கட்ன பிறகு பெண்டாட்டி தட்ஸ் ஆல்.

இவளுக எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி அப்பனை அத வாங்கி தா இத வாங்கிதானு தாலியறுத்து பழக்கப்பட்டவளுக. கல்யாணத்துக்கப்பறம் அப்பன் ரோலை கணவன் தான் ப்ளே பண்ணனும்.



இந்த நரகத்ல இருந்து தப்ப வழி நீங்க அரை டிக்கெட்டாயிருங்க அவள் தாயாயிருவா. அவளுக்கு தேவை ஒரு தகப்பன் அல்லது மகன். தகப்பனா இருந்தா டாரா கிழிஞ்சுரும் ஸோ மகனாயிருங்க (பொறுப்பில்லாத)



ஜோதிட டிப்ஸ்:





ஆண் குழந்தை தன் தாயிடம் பெரும் ஒட்டுதலுட‌ன் வளர்கிறது. அந்த குழந்தை சிறுவனாகி,சிறுவன் டீன் ஏஜை அடைந்து இளைஞனாகும் போது தாய் எட்டிப் போகிறாள். முதிர்ச்சியற்ற ஆண் குழந்தைகள் இந்த சமயத்தில் தாய் தம்மை விலக்கி வைக்க காரணம் தந்தைதான் என்ற இனம் புரியாத காழ்ப்புணர்வுக்கும் உள்ளாவதுண்டு.தாயுடனான இந்த பிரிவால் அந்த இளைஞனின் மனதில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. ஒரு ஆதர்ஸ பெண்ணின் பிம்பம் உருவாகி அதை நிரப்ப பார்க்கிறது.



உண்மையில் கேட்க சற்று விரசமாக இருந்தாலும் அந்த ஆதர்ஸ பெண்ணின் உருவத்துக்கும்,அவனது தாயின் பிம்பத்துக்கும் அநேக ஒற்றுமைகள் இருக்கும். இதை அந்த இளைஞனே உணர்ந்திருக்க மாட்டான். ஆக ஒரு இளைஞன் உள்ளூற விரும்புவது தன் தாயைத்தான். அவள் அந்த இளைஞனை விலக்கி வைப்பதால் அவளுக்கு மாற்றாக ஒரு பெண்ணை விரும்ப ஆரம்பிக்கிறான். இது மனோதத்துவ உண்மை. ஜோதிடப்படி பார்க்கும் போது அவரவர் ராசிக்கு 4ஆமிடம் தாயை காட்டுவதாகும். எனவே இளைஞர்கள் அதிலும் முதிர்ச்சியற்று,தந்தை மீது காழ்ப்புணர்வு கொள்ளும் இளைஞர்கள் தம் ராசிக்கு நான் காவது ராசியை காதலிக்க ஆரம்பித்தால் அந்த காதல் நிச்சயம் அவர்களது அடிமனதிலான ஆவலை நிறைவேற்றும்.



அதே நேரத்தில் சில இளைஞர்கள் தமது ஜீன் காரணமாகவோ,வளர்ப்புச்சூழல் காரணமாகவோ இளம் வயதிலேயே ஒருவித முழுமையை முதிர்ச்சியை பெற்று விடுகிறார்கள். இவர்கள் தம் தந்தையை ஆதர்ஸ புருஷர்களாக வரித்து வாழ்வார்கள். இவர்களின் இந்த போக்கு தாய்மார்களின் மனதில் ஒரு வித பொறாமையை தோற்றுவித்து சிறுபிள்ளைத்தனமாக செயல்படவைப்பதும் உண்டு. தம் கணவ்ரை தம்மிடம் இருந்து பிரிப்பதாகவும் உள்ளூற கருதி குமைவார்கள். இந்நிலையில் மேலே குறிப்பிட்ட வகையை சார்ந்த இளைஞர்கள் தமது ராசிக்கு 5 ஆவது ராசியில் பிறந்த பெண்ணை காதலிப்பது நன்மை தரும்.