Friday, December 11, 2009

உடலுறவு மீதான நாட்டமே உடல் நலத்துக்கு வழி


இவையிரண்டும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். உடல் நலமே உடலுறவை நாட்டத்தை தரும். உடலுறவு மீதான நாட்டமே உடல் நலத்துக்கு வழி வகுக்கிறது.

லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு " பிறக்க விருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை நிர்ணயிக்கும் ஜீன் தான் அக்குழந்தையின் குண நலன்களையும் நிர்ணயிக்கிறது" என்பதாகும். எனவே உடல் நலம் உடலுறவு மீதான நாட்டத்தை மட்டுமல்ல உங்கள் குண நலன்களையும் நிர்ணயிக்கவல்லதாகும்.


செக்ஸிலிருந்து பிறந்த மனிதனுக்கு, செக்ஸ் மறுக்கப்படும்போது, அல்லது அதற்கான உடல் தகுதிகள் குறையும்போது அவன் சேடிஸ்டாக மாறுகிறான். இதைதான் நாற்பதுக்கு நாய் புத்தி என்பார்கள் போலும் . So மனிதனின் வாழ்க்கை படகு தடையின்றி ஓட அது காமம் எனும் நதி அலைகளின் மீது பயணிக்க வேண்டும்.

இயற்கையை கவனியுங்கள் ? ஆண் யானைக்கு ஸ்பெஷலாக தந்தம் ஏன் ? ஆண் மயிலுக்கும் மட்டும் தோகை ஏன்? மனிதன் சாலைகளை ஏன் போட்டான். வீடுகள் ஏன் கட்டப்பட்டன? எல்லாவற்றிற்கும் ஊக்கம் தருவது செக்ஸ் செக்ஸ் செக்ஸ் தான். உடல் நலத்தை நாம் அலட்சியப்படுத்தும்போது உடலுறவின் மீதான நாட்டம் மட்டுமல்ல உயிர் வாழ்தலின் மீதான பற்றும் பற்றாக்குறையாகிவிடுகிறது

இயற்கை மனிதனுக்கு (உயிர்களுக்கும்) கொடுத்துள்ள வேலைகள் மூன்று
1.உயிர் வாழ்தல்
2.உடலுறவு கொள்ளுதல்
3.இனப்பெருக்கம் செய்தல்
இந்த 3 கடமைகளில் இருந்து மனிதன் தவறும்போது இயற்கை அவனுக்கு தான் தந்திருக்கும் கொடைகளை ஜப்தி செய்ய ஆரம்பிக்கிறது. மனிதன் தன் புத்தி சாலித்தனத்தால் கு.க வை கண்டு பிடித்தான் இயற்கை ஆண்மையின்மையை பெருக்கி வருகிறது.

எனவே உடல் நலம் என்பது அனைத்துக்கும் அடிப்படையானது. எனவே கீழ்காணும் விடயங்களை சற்றே பொறுமையுடன் படியுங்கள்.

உடல் நலம் என்றால் என்ன ? நோயற்றிருப்பதா ? இல்லை இது நெகட்டிவ் அவுட் லுக். நோயற்றிருப்பது உடல் நலம் என்றால் சிலருக்கு உடலின் இம்யூன் சிஸ்டம் முழுக்க செயலற்றிருப்பதால் நோய்களே வராது. நோய் என்பதே நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பதற்கான அடையாளம்.
மயக்கமா ? கலக்கமா ?

இது தீர முதலில் உடலின் இயற்கையை புரிந்து கொள்ளவேண்டும். உடலில் இன் கமிங் ( உட் சுவாசம் , நீர் அருந்துதல் , உணவருந்துதல்) அவுட் கோயிங்
( வெளி சுவாசம், சிறு நீர் கழித்தல், மலம் கழித்தல் ) ஒழுங்காக நடைபெறவேண்டும். இதில் லொள்ளு ஏற்பட்டால் உடலில் மலினங்கள் சேர்ந்துவிடுகின்றன. இவற்றை உடல் எரித்தோ (ஜுரம்), ஓரிடத்தில் குவித்தோ (கட்டி) பரவலாக்கியோ ( சொறி , சிரங்கு) , டைல்யூட் செய்தோ ( வயிற்றுப்போக்கு, வாந்தி, வியர்வை வெள்ளம்) வெளியேற்ற முயற்சிக்கிறது. இந்த முயற்சியைதான் நோய் என்கிறார்கள்.

இப்போ சொல்லுங்க ? நோய் என்பது உடல் ஆரோக்கியத்துக்கான அறிகுறிதானே ..நோயே வரக்கூடாதென்றால் அது இரண்டு நிலைகளில் சாத்தியம். ஒன்று உடலின் உயிர் சக்தி மந்தமோ மந்தமாய் இருக்கவேண்டும். உடலில் சேரும் மலினங்களை வெளியேற்றும் சக்தியற்றதாய் இருக்கவேண்டும். இரண்டாவது சுவாசம் (உள்,வெளி) தீர்கமாக நடைபெற வேண்டும். நுரையீரலில் அடிச்சுவர் வரை காற்று உள்ளிழுக்கப்பட்டு முழுக்க வெளியேற்றப்பட வேண்டும். தண்ணீர் அக்மார்க் சுத்தமானதாய் இருக்கவேண்டும். சிறு நீர், மலம் வெளியேறுவதும் இன் கமிங் அத்தனை அவுட் கோயிங் பர்ஃபெக்டாக இருக்கவேண்டும்.

இன்றைய நிலையில் இது சாத்தியமா ? நகரப்பேருந்து கடக்கும் போதெல்லாம் கைகுட்டையை உபயோகிக்கிறோம், உடற்பயிற்சி என்பது பல்தேய்ப்பதொன்றே. படியேற லிஃப்ட், இட்லி, சட்னி அரைக்க கிரைண்டர்,மிக்ஸி , பக்கத்து தெருவுக்கு போகவேண்டுமென்றாலும் டூ வீலர்.

உடலை பெண்ட் எடுத்தால் சுவாசம் தீவிரமாக நடைபெறும். இன்னைக்கு நம்ம பிழைப்பெல்லாம் அலேக் மே ரஞ்சனாயிருச்சு. தண்ணி விசயத்துக்கு வந்தா ச்சும்மா ச்சும்மா தண்ணி குடிச்சிட்டிருந்தா ஒன் பாத்ரூம் போறது பிரச்சினை. ஆண்களானாலு பரவாயில்லை. பெண்கள் ? உணவு விசயத்தை பார்த்தால் நொறுங்க தின்றால் நூறுவயது என்பார்கள். எவன் நொறுங்க தின்கிறான். அதிலும் காலங்கார்த்தால ஒரு முறம் எண்ணை ஊத்தி தோசை, இட்லின்னா அதுக்கு மிளகாய் பொடி எண்ணை, பூரி .

இதனால் அஜீரணம், வயிற்றில் எரிச்சல், மந்தம், பசியின்மை, அசிடிட்டி ( இதுல லாலா அதாங்க டாஸ்மாக் பார்ட்டிங்க/ மசாலா பார்ட்டிங்க ப‌த்தி சொல்லவே தேவையில்லே

அறுசுவை என்றார்கள். அறு சுவையையும் சமானமாக சாப்பிடவேண்டும். நம்மால் எங்கே சாப்பிட முடிகிறது. கம்பு, சோளம், கேழ்வரகு, அகத்திக்கீரை, பாகற்காய் இதெல்லாம் எங்கே கிடைக்கிறது? எவன் சாப்பிடுகிறான் ?


மூணு வேளையும் அரிசி. அதுல கார்போ ஹைட்ரேட் இருக்கு. அது க்ளூக்கோசா மாறுது. அதிகப்படி க்ளூக்கோஸை க்ளைக்கோஜனா மாத்த இன்ஸுலின் தேவை. இன்ஸுலின் குறைஞ்சா ஷுகர் வரும். ஷுகர் வந்தா உடலுறவின் மீது நாட்டம் குறையும்

புரோட்டீன் தேவைதான், கொழுப்பும் தேவைதான். அளவுக்கு மீறினா தொந்தி விழுது. ஹைப்போதலாமஸுக்கும், இன உறுப்புக்கும் கேபிள் இருக்காம். அதை கட்டுப்படுத்ததான் அரணா கயிறு ( அரை ஞான் கயிறு) கட்டுவாகளாம். இப்போ தொந்தியே அதை கட்டுப்படுத்திருது. நம்ம தாய்குலம் லோஹிப் சேரி கட்டறத பார்த்து இந்த பயல்களும் லோ ஹிப் ஜீன் போட ஆரம்பிச்சாச்சு. அரணா கயிறு கட்டறதே கிடையாது . இதனால என்னாகுது ? கேபிள்ள எக்கச்சக்க டேட்டா பாசாகி அதை கிளப்பி விட்டுர்ரது.

நான் பலமுறை சொல்வேன்
செக்ஸ் பற்றிய நினைவுகள்தான் உடலுக்கும்,மனதுக்கும் கேடுவிளைவிக்கின்றனவே தவிர உடலுறவு கிடையாது. கிடையவே கிடையாது. ஜீரண மண்டலம், உடலுறவு மண்டலம் இவையிரண்டும் ஒன்று வேலை செய்யும்போது அடுத்தது வேலை செய்யாது. இதுல வீட்டோ பவர் உடலுறவு நாட்டத்துக்கே. வயிறு முட்ட தின்ன பிறகும் ( ரத்தமெல்லாம் வயிற்றுப்பகுதில பாயும்போதும், மூளை மந்தமா இருக்கும்போதும் உடலுறவு சாத்தியமாகிறது. ஆனால் ஜீரண மண்டலம் வேலை நிறுத்தம் செய்துவிடுகிறது.

(To be continued
குறிப்பு:
அன்பர்கள் இது குறித்தே அல்ல எது குறித்தும் கேள்விக்கணைகள் தொடுத்தால் பதிலளிக்க தயார்