Sunday, January 6, 2008

சிறகின்றி பூமிக்கு வந்தவளோ?

இதழ்கள் பரிமாறும்
தேகம் பசியாறும்
பாவை இத‌ழோர‌ம் க‌விதை அர‌ங்கேறும்
மூங்கில் இலை மேல் பனி நீர் உறங்கிடும் வேளை
அங்கமிதா மின்னிடும் தங்கமிதா
பாவையிவள் வான் தேவதையா
துணையின்றி ,சிறகின்றி பூமிக்கு வந்தவளோ?
நூலாய் தோன்றிடும் கொடியிடை,பிடியிடையே
மின்ன‌ல் வெட்டுத‌ற்போலொரு தோற்ற‌ம் த‌ந்திடுதே

நெஞ்ச‌ள்ளும் வான‌வில்லே பெண்ணுருவில் வ‌ந்த‌ தா?

வ‌ந்திங்கு எந்த‌ன் நெஞ்சை கொள்ளைதான் கொண்ட‌தா?கொடி நீதான் ம‌ல‌ர் நீ தான் நான் வ‌ண்டுதான்